Tuesday, April 29, 2008

ராவணன் கை நரம்புகளால் வீணை மீட்டினானா?

தேவாரம்
ஐந்தாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பாடல் ராவணன் தன் கை நரம்புகளை மீட்டிப் பாடியதற்கு ஆதாரம் என நண்பர் திரு சிவசிவா அவர்கள் கூறுகின்றார். எனினும் வால்மீகியில் இப்படி ஒரு கருத்து இருப்பதாய்த் தெரியவில்லை. மீண்டும் பார்க்கின்றேன், நன்றி.

வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணி வார்களின் வினைகள் கெடும் .

1 comment: