Wednesday, August 17, 2011

அருமை நண்பர் வந்தார், வந்தாரே!

சங்கடஹர சதுர்த்திநண்பரோட கொண்டாட்டங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகப் போகுது. எனக்கு உயிர் நண்பர் இவர் ஒருத்தர் தான். இவரோட பேச நேரம், காலம் பார்க்க வேண்டாம். எப்போ வேணாப் பேசிக்கலாம்; நல்லா சண்டையும் போடலாம். எதுக்கும் ஒண்ணும் சொன்னதில்லை. நல்லா வாங்கிக் கட்டிப்பார். ஆனாலும் என்னைக் கைவிட்டதில்லை. இன்று அவருக்கு உகந்தநாள். மஹாசங்கடஹர சதுர்த்தி. ஆகவே இன்று வீட்டில் ஒரு கணபதி ஹோமம் நடந்தது. பிரத்யக்ஷமாய் வந்து காட்சி கொடுத்தார். நீங்களும் காண வேண்டுமானால் மேற்கண்ட சுட்டிக்குச் செல்லுங்கள்.

15 comments:

  1. ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு... தோர்பிகரணம் போட்டுக்கறேன்....

    ReplyDelete
  2. வந்துட்டாரா!!...குட் குட் ;-))

    ReplyDelete
  3. நான் நீங்க சாம்பசிவம் சாரைத் தான் சொல்றீங்கன்னு முதல்லே நினைச்சேன். நானும் ஒரு ம.ம.ன்னு தான் உங்களுக்கும் தெரியுமே! :))))

    ReplyDelete
  4. பிரத்யக்ஷமாய் வந்து காட்சி கொடுத்தார்.//

    பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் வந்து காட்சி கொடுத்ததை பார்த்தேன் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. பிள்ளையார் என்னிக்குமே வரப்பிரசாதி’
    நாம் அழைக்கும் முன்பே வந்துடுவார்.

    ReplyDelete
  6. நல்லாப் போடுங்க திவா"ஜி" அவர்களே! சிறந்த உடல் பயிற்சி.

    ReplyDelete
  7. வாங்க கோபி, ஆளையே காணோம். குட் குட் இல்லை குட்டு குட்டு, தலையிலே குட்டிக்குங்க! :)))

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, பார்க்கவே முடியலை. ஆனால் நானும் எங்கே வர முடியுது?? மதியம் ஒரு 2, 3 மணி நேரம் உட்கார்ந்தா எழுத்துவேலையே சரியாப்போயிடும். அப்புறம் வந்தாலும் பதிவுகளைப் படிக்க முடியறதில்லை! :(

    ReplyDelete
  9. ஆமாம், பிள்ளையார் பிரத்யக்ஷமாய் வந்துவிட்டார் தான்.

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, பிள்ளையார் அனைவரும் எளிதில் அணுக முடிந்த ஒருவர். பெரிசா ஒண்ணும் தரவும் வேண்டாம். :))))

    ReplyDelete
  11. வாங்க அஷ்வின் ஜி, பிள்ளையாருக்காக வந்தீங்களா? கொழுக்கட்டைக்கா??

    ReplyDelete
  12. @வேதா,
    ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா! என்ன சொல்வேன்! எப்படிச் சொல்வேன்! நல்வரவு, நல்வரவு.

    ReplyDelete
  13. @ஜெயஸ்ரீ, இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமாம்?? :P

    ReplyDelete
  14. சித்திதரும் விநாயகனே! வணக்கம்.

    ReplyDelete