Wednesday, November 02, 2011

மிஸ்ஸியம்மா


அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போல் ஆடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ நிலவே!


தன் பிடிவாதம் விடாது
என் மனம்போல் நடவாது
தனக்கென எதுவும் சொலாது
நம்மையும் பேச விடாது!


வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே

8 comments:

  1. இந்தப்பாட்டு இப்பகூட ரசிக்கமுடிகிரது.

    ReplyDelete
  2. ஹை.. மிஸ்ஸியம்மா.. மதுரையில் தான் 12 வயதில் படம் பார்த்த நினைவு..

    A.M. ராஜா தான் பின்னணி. இருந்தாலும் அந்த 'கதையே' என்று இழுக்கும் பொழுது அது கண்டசாலா மாதிரித் தெரியும்.

    ReplyDelete
  3. நீங்க அங்க ஆரக்ஷணும் மிஸியம்மாவும் பாத்தா நாங்கஇங்க சபாஷ் மீனா பாக்க மாட்டோமா !!!:))சித்திரம் பேசுதடி .... காணா இன்பம் கனிந்த தேனோ... அந்த காலப்பாட்டுக்கள் இனிமையோ இனிமை தான்

    ReplyDelete
  4. வாங்க லக்ஷ்மி, எத்தனையோ முறை பார்த்தாச்சு, இருந்தாலும் மறுபடி பார்த்தேன்.

    ReplyDelete
  5. ஜீவி சார், கண்டசாலாவும், ராஜாவும் கலந்து பாடினாப்போல் குரல். ஆனால் நீங்க சொல்றாப்போல் ராஜா தான் பாடி இருக்கணும்னு நினைச்சேன். பெண்குரல் ஜிக்கினு புரிஞ்சது.

    ReplyDelete
  6. வாங்க ஜெயஶ்ரீ, ரொம்ப பிசி போல! பார்க்கவே முடியறதில்லை! அதோட ப்ளாகர் வேறே அனுமதிக்குதே, அதுவே பெரிய விஷயம்.

    சபாஷ் மீனாவா? சபாஷ்! பார்த்துடுவோம், சந்திரபாபு ஒருத்தர் போதுமே! :)

    ReplyDelete
  7. என்னோட one of the most favourite movies! ஜெமினி-சாவித்திரி-ரெங்காராவ்-ஜமுனா-தங்கவேலு-"லோஹிதாசன்" :) எல்லா கதாபாத்ரங்களும் அட்டகாசம்! அவளோ natural ஆன நடிப்பு!
    என்னோட favoutire song உம் கூட! ஆனா இந்த பாட்ட விட-- "மாயமே நான் அறியேன்" எனக்கு இன்னும் ஜாஸ்தி பிடிக்கும்... :)

    ReplyDelete
  8. என்னம்மா,திடீதென்று பாட்டில் இறங்கி
    விட்டீர்கள்.சீரியஸ் பதிவுகளுக்கு
    இடையே ஒரு இண்டர்லூடா?
    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது
    எல்லா பாடல்களுமே
    வாராயோ வெண்ணிலாவே பெண்குரல்
    பி.லீலா.ஜிக்கி இல்லை லீலாவின்
    குரலை எப்படி மறந்தீர்கள்?
    பை தி பை,'' சுப்ரதீபத்தில்''சின்னதாக
    விளக்கு ஏற்றியுள்ளைன். வந்து
    வாழ்த்துங்களேன்
    நன்றி சகோதரி(அம்மா என்றால்
    கோபிக்கிறீர்கள்)

    ReplyDelete