Friday, March 08, 2013

பச்சை நிறமும், தேன் சிட்டும்.



பிஐடியிலே இயற்கை வண்ணங்கள் குறித்த போட்டி இந்த மாசம். நமக்கெல்லாம் போட்டியிலே சேரும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும், இருக்கிறதிலே இயல்பான பச்சை வண்ணப் படங்களைத் தேர்ந்தெடுத்தேன்.  இன்னும் நிறைய இருக்கு. என்றாலும் இப்போதைக்கு இது போதும்னு எண்ணம். :))))


இன்னிக்கு பால்கனிக்குத் தேன்சிட்டு வந்தது.  ஒரே கீச் மூச்சுனு சத்தம். கணினியிலே ஆழ்ந்து போயிருந்த நான் நிமிர்ந்து பார்த்தால் அங்கே துணி காயப் போடக் கட்டி இருக்கும் கம்பிக் கொடியிலே உட்கார்ந்திருந்தது.  மெதுவாப் போய் காமிராவைக் கொண்டு வரலாம்னா, உள்ளே இருந்து நம்ம ரங்க்ஸ் குரல் கொடுத்துட்டே வந்தார். அவர் கிட்டே காமிக்கையிலே எதிர் பால்கனிக்குப் போயிடுச்சு. :( பிடிக்கிறது கஷ்டம். தேவுடு காக்கணும். வந்தது கீழே உள்ள நிறத்தில்.  சட்டுனு பார்த்தால் சிட்டுக்குருவிக் குஞ்சு போல இருக்கும்.  தேன்சிட்டு பச்சை வண்ணத்தில் உள்ளது மிக மிக அழகாக இருக்கும்.  இந்த க்ரே கலரில் கூட கழுத்தில் இருந்து வயிறு வரை மஞ்சளாக இருக்கும் தேன் சிட்டுக்களும் உண்டு.  அவை எல்லாம் இங்கே கண்ணில் படவில்லை.



15 comments:

  1. தேன் சிட்டு ஜூப்பரு கீத்தாம்மா..

    ReplyDelete
  2. பறக்கும் நிலையில் படமான தேன் சிட்டு பிரமாதம்.

    1501 வது பதிவுக்கு வாழ்த்துகள். :)

    ReplyDelete
  3. தேன் சிட்டு, குருவியைவிட சின்னதாக ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  4. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அமைதி, என்னோட படத்தை விட்டுட்டுத் தேன்சிட்டையே பார்த்திருக்கீங்க? :)))) தி.வா. ஃபோகஸே இல்லைனு சொல்லி இருக்கார். ரயிலோட வேகத்திலே இந்த அளவுக்கு நான் எடுத்ததே அதிசயம். :)))))

    ReplyDelete
  5. தேன்சிட்டை எடுத்தவங்களுக்கு உங்க பாராட்டுகள் போகணும் ஸ்ரீராம்,

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ஆமாம் ராம்வி, சின்னதாக துளியூண்டுக்கு இருக்கும். உள்ளங்கையில் வைச்சு மூடலாம் போல! :)))))

    ReplyDelete
  7. தேன் சிட்டு அழகு.
    பசுமையும் அழகுதான்.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு !

    ReplyDelete
  9. பச்சைப்பசுமைகள் கண் நிறைத்தன.. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  10. நல்ல படங்கள்...

    தேன் சிட்டு அழகு!

    ReplyDelete
  11. அம்பாளடியாள், வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  12. ராஜராஜேஸ்வரி, நன்றிங்க.

    ReplyDelete
  13. டிடி நன்றி,

    வெங்கட் நன்றி.

    ReplyDelete
  14. 1501 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.சொன்ன ஸ்ரீராமுக்கு நன்றி.

    படம் எடுப்பதற்கு முன்னே ரங்க்ஸைச் சத்தம் போடாம இருக்கச் சொல்லுங்கோ.:)

    ReplyDelete