tag:blogger.com,1999:blog-18675072.post7474101741459347067..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: விவசாயிகள் போராட்டம்! ஒரு பார்வை! மத்திய அரசின் வஞ்சனை! :)Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18675072.post-31175326870018750152017-04-11T01:59:46.917+05:302017-04-11T01:59:46.917+05:30ரயிலில் தண்ணீர் கொண்டு விநியோகம் செய்து கொண்டிருந்...ரயிலில் தண்ணீர் கொண்டு விநியோகம் செய்து கொண்டிருந்த மஹாராஷ்டிரா லதோரில் இப்போது தடுப்பணைகள் கட்டியதன் மூலம் தண்ணீர்ப் பிரச்னை ஓரளவுக் கட்டுப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அப்படி ஆக்கபூர்வமான முயற்சிகளை நம் விவசாயிகள் செய்திருக்கின்றனரா?தஞ்சை ஜில்லா தவிர மற்ற மாவட்டங்களில் நஞ்சை நிலம் தனியாகவும் புஞ்சை நிலம் தனியாகவும் உண்டு. புஞ்சை நிலத்தில் புஞ்சைப் பயிர்கள் தான் உற்பத்தி செய்யப்படுகின்றனவா? நஞ்சை நிலத்தில் நஞ்சைப்பயிர்கள் தான் உற்பத்தி செய்கின்றனரா? தஞ்சாவூர், கும்பகோணம், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தான் நெல் அறுவடை ஆனதும் வயலில் பயறு, உளுந்து தெளிப்பார்கள். அதுவும் வரப்புக்கரை ஓரமாகத் தான் இருக்கும். கரை உளுந்து மிகவும் ருசியாக இருக்கும் என்றும் சொல்வார்கள். இப்போதெல்லாம் அப்படித் தான் செய்கிறார்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61580727089962949332017-04-11T01:56:30.983+05:302017-04-11T01:56:30.983+05:30ஜேகே அண்ணா, தேசிய நதிநீர் ஆணையமே அமைக்கப்படவுள்ளதா...ஜேகே அண்ணா, தேசிய நதிநீர் ஆணையமே அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. அப்படி எனில் அதில் காவிரி நதியும் சேர்ந்தது தான்! தனி ஆணையம் தேவையில்லை. ஆந்திராவைப் போல் உள்நாட்டு நதிகளை இணைக்காமலும், குஜராத்தைப் போல் தடுப்பணைகள் கட்டாமலும், ராஜஸ்தானைப் போல் மழைநீரைச் சேகரிக்காமலும், கர்நாடகத்தைப் போல் இருக்கும் நதிகளின் அணைகளைப்பராமரித்துப் பாதுகாக்காமலும், கேரளாவைப் போல் மணல் அள்ளுவதைத் தடுக்காமலும், மத்தியப் பிரதேசத்தைப் போல் மண் பரிசோதனை செய்து பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தாமலும், மஹாராஷ்டிராவைப் போல் வளர்ச்சிக்காப்பீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டாமலும் இருக்கும் வரை, இலவசங்களை அள்ளித் தரும்வரை ஆறு, குளங்கள், ஏரிகள் தூர்வாராமல் இருக்கும்வரையிலும் தமிழகம் முன்னேற்றப்பாதையில் செல்லாது! இதை ஒத்துக்கொள்ளவும் மனம் வேண்டும்! நம்மிடம் அதுவும் இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45221738699467074422017-04-07T05:45:23.456+05:302017-04-07T05:45:23.456+05:30ஆமாம், கீதா! நானும் இன்னும் எடுத்து வைத்திருக்கிறே...ஆமாம், கீதா! நானும் இன்னும் எடுத்து வைத்திருக்கிறேன். என்றாலும் எல்லாவற்றையும் சொல்லவில்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-89203391596442664952017-04-07T05:44:48.909+05:302017-04-07T05:44:48.909+05:30@தில்லையகத்து/துளசிதரன்/கீதா, நாங்க சிகந்திராபாதி...@தில்லையகத்து/துளசிதரன்/கீதா, நாங்க சிகந்திராபாதில் இருந்தபோதும் காய்கள், பால், அரிசி எல்லாமும் விலை மலிவாகவும் நல்ல தரமாகவும் கிடைத்தது! இப்போதெல்லாம் அப்படி இருக்காது! வறட்சியான தெலுங்கானாவோடு சேர்ந்து விட்டதே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8025350142171342922017-04-07T05:43:16.350+05:302017-04-07T05:43:16.350+05:30நமக்குத் தான் ஏமாளிப்பட்டம் எப்போவுமே தயார் நிலையி...நமக்குத் தான் ஏமாளிப்பட்டம் எப்போவுமே தயார் நிலையில் உள்ளதே கில்லர்ஜி! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19332630221410930712017-04-07T05:42:43.471+05:302017-04-07T05:42:43.471+05:30வாங்க ஶ்ரீராம், இம்மாதிரி விஷயங்களை எழுதும் முன்னர...வாங்க ஶ்ரீராம், இம்மாதிரி விஷயங்களை எழுதும் முன்னர் தகவல்கள் சேகரிப்புத் தான் முக்கியம் இல்லையா? சந்திரபாபு நாயுடுவின் நதிநீர் இணைப்பில் நெகட்டிவ் இல்லை. அமராவதியைத் தலைநகராக்குவதில் செழிப்பான விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதில் பலருக்கும் வருத்தம் என்று கேள்வி! :( அதைத் தான் நம் சகோதரியும் சொல்லி இருக்கிறார். :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48975108149910936482017-04-07T05:40:42.481+05:302017-04-07T05:40:42.481+05:30வாங்க நன்மனம்! என்ன வீராவேசமோ போங்க! :(வாங்க நன்மனம்! என்ன வீராவேசமோ போங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23330664392907152662017-04-07T05:40:19.904+05:302017-04-07T05:40:19.904+05:30தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை என்பது சுத்தமாக மறந்து...தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை என்பது சுத்தமாக மறந்து போன ஒன்று @தில்லையகத்து துளசிதரன்/கீதா! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87866934188555125282017-04-07T05:39:33.944+05:302017-04-07T05:39:33.944+05:30பெங்களூரில் ஏரி, குளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமில...பெங்களூரில் ஏரி, குளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமில்லை. ஒரு கிரவுண்ட் நிலத்தில் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பு எழுப்ப முடியாது! இரண்டே இரண்டு குடியிருப்புகள் தான் ஒரு கிரவுண்ட் நிலத்தில் கட்டலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் முன்னர் தண்ணீர் வசதி, மின்சாரம், பாதாளச் சாக்கடை, சாலை வசதி போன்றவற்றை உறுதி செய்தால் தான் கார்ப்பொரேஷனின் அங்கீகாரம் கிடைக்கும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74140845163790873262017-04-07T05:37:42.872+05:302017-04-07T05:37:42.872+05:30வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. ஆற்றாமை தாங்கவில்ல...வஞ்சப் புகழ்ச்சி எல்லாம் இல்லை. ஆற்றாமை தாங்கவில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1402700524284816732017-04-07T05:37:19.521+05:302017-04-07T05:37:19.521+05:30காவிரி மேலாண்மை வாரியத்துக்கான அதிகாரங்களே முதலில்...காவிரி மேலாண்மை வாரியத்துக்கான அதிகாரங்களே முதலில் வரையறுக்கப்படவில்லை. குறைந்த பட்ச அதிகாரத்தைக் கொண்டு செயல்படும் மேலாண்மை வாரியத்தின் முடிவுகளைக் கர்நாடக அரசு ஏற்குமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மதிப்பதில்லை! ஆகவே மத்திய அரசு பாராளுமன்றக் குழு கூடித் தான் மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பிரச்னை ஒவ்வொரு வருஷத்தையும் போல் ஜூன் மாசம் ஆரம்பிச்சு செப்டெம்பர் வரை பேசப்பட்டுப் பின்னர் அக்டோபரில் மழை வந்ததும் வழக்கம் போல் மறக்கடிக்கப்படும். தண்ணீர் இல்லாமல், மழை இல்லாமல், பயிர் செய்யாமல் வறட்சி நிவாரண நிதி கிடைக்கும்! ஆடி காரில் பயணம் செய்யும் ஏழை விவசாயியான திரு அய்யாக்கண்ணு அதைத் தான் தில்லியில் தங்கிக் கேட்டுக் கொண்டிருக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44725530747800100662017-04-06T21:38:10.537+05:302017-04-06T21:38:10.537+05:30நெல்லைத் தமிழன் நீண்டகாலத் திட்டங்களை மனதில் கொள்ள...நெல்லைத் தமிழன் நீண்டகாலத் திட்டங்களை மனதில் கொள்ளும் ஆட்சியாளர்கள் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்போமே. அந்த வல்லமை எல்லாம் கிடையவே கிடையாது...<br /><br />நீங்கள் சொல்லியிருப்பது போல் நாம் பக்கத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா பார்த்து நீர் மேலாண்மைக்குக் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளதுதான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23541582983734284512017-04-06T21:34:04.497+05:302017-04-06T21:34:04.497+05:30சர்க்காஸ்டிக் பதிவு!!! நானும் விவசாயத்தில் கொஞ்சம்...சர்க்காஸ்டிக் பதிவு!!! நானும் விவசாயத்தில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதால் நீர்மேலாண்மை பற்றி பார்த்து தகவல்கள் எடுத்து வைத்திருக்கிறேன். எழுத மூட் இல்லாமல் அப்படியே பதிவுகள் பாதியில் கிடப்பில்...ஹிஹிஹீஹ்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57331438414300509712017-04-06T21:29:18.196+05:302017-04-06T21:29:18.196+05:30ஆமாம் அங்கு சந்திரபாபு நாயுடு நன்றாகவே செய்திருக்க...ஆமாம் அங்கு சந்திரபாபு நாயுடு நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் அங்கு அதிருப்தி கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்த அமராவதி விவசயாத்தில் மிக மிக வளர்ந்த இடம்...கொழிக்கும் இடங்கள் எல்லாம் இப்போது தலைநகரம் என்ற வளர்ச்சிக்குக் கையகப்படுத்தப்பட்டது அதிருப்தி மக்களிடையே இருப்பதாகத் தெரிகிறது. அங்கு விவசாயம் நன்றாகவே இருப்பதாகத் தெரிகிறது. மகனின் கூடப்படித்த நண்பன் அங்கு அரசு வேலையில் இருக்கிறார். மாடுகள், கிராமம் என்று...நானும் முன்பு அடிக்கடி சென்றிருக்கிறேன். காய் எல்லாம் மிக சீப். ஆரஞ்சு, கரும்பு வயல் என்று அதுவும் ஆரஞ்சு எல்லாம் மிகவும் சுவையாக இருந்தது. நீர்வளமும் இருக்கிறது ஆந்திரப் பகுதியில். தெலுங்கானாதான் வறட்சி...அதுதான் பிரிந்துவிட்டதே..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-53386921372521528102017-04-05T09:36:01.808+05:302017-04-05T09:36:01.808+05:30இவ்வளவு எழுதியும் நீங்கள் காவிரி நீர் மேலாண்மை வார...இவ்வளவு எழுதியும் நீங்கள் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பற்றி ஒன்றுமே எழுதவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லியும் ஆணை இட்டும் நீதி மன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக உறுதி மொழி கொடுத்திட்டும் இது வரை அமைக்காதது ஏன் என்று உங்கள் பதிலை சொல்லுங்களேன்.<br /><br />பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் என்பது பயிர் செய்த நிலங்களுக்குத்தான் என்பது உங்களுக்கு தெரியும். தண்ணீர் இல்லாமல், மழையும் பெய்யாமல் பயிர் செய்யாமல் இன்சூரன்ஸ் துகை கிடைக்க ஏதாவது வழி உண்டோ?<br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26655418980775698642017-04-04T11:49:27.947+05:302017-04-04T11:49:27.947+05:30இது முதலில் விளங்கவில்லை பிறகுதான் தெரிந்தது வஞ்ச...இது முதலில் விளங்கவில்லை பிறகுதான் தெரிந்தது வஞ்சப் புகழ்ச்சி அணியில் ஒரு வகையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13950919365625669182017-04-04T10:55:34.410+05:302017-04-04T10:55:34.410+05:30நீங்கள் எழுதியிருப்பது அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடி...நீங்கள் எழுதியிருப்பது அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. பொதுவாக மக்கள் மனநிலை, 'சித்த மருந்து, பத்தியம்' ஒரு 10 மாத காலம் இருந்து, ஆரோக்கிய உடம்பைப் பெறலாமா, அல்லது அலோபதி மருந்து சாப்பிட்டு 3-4 நாளில் நிவாரணம் பெறலாமா என்ற கேள்வி வந்தால், அலோபதி மருந்து சாப்பிட்டுவிடுவோம் என்பதுதான் பதிலாக இருக்கும். எல்லோருக்கும் இலவசக் கல்வி, நிறைய பள்ளிகளைத் திறந்தது, மதிய உணவுத் திட்டம், இவற்றையெல்லாம் மக்களுக்காகச் செய்த காமராசரை, கண்மூடித்தனமாகத் தோற்கடித்தது விருது'நகர் மக்கள். இப்படி மக்கள் மனநிலை இருக்கும்போது, ஆட்சியாளர்கள், எந்த நீண்டகாலத் திட்டங்களையும் மனதில் கொள்வதே இல்லை. இந்தத் தேர்தலுக்கு 'இலவசம், காசு' என்று குறுகியகாலத் திட்டங்களையே போடுகின்றனர். எனக்கு, இந்தமாதிரி நீண்ட காலத் திட்டங்களைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நம்ம ஆட்சியாளர்களுக்கு அனுபவமும் திறமையும் இருக்கா என்றே சந்தேகம்.<br /><br />மாநில அரசால் செய்யக்கூடிய, 'ஏரி, குள ஆக்கிரமிப்பு தவிர்த்தல்', 'தூர் வாருதல்', 'ஆறுகள், நீர் நிலைகள் மாசுபடுவதைத் தவிர்த்தல்' கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நிதி உதவி மற்றும் தன் பகுதியைத் தானே பார்த்துக்கொள்ளும் அளவு தன்னிறைவுக்கான தகுதியை வளர்த்தல் போன்றவற்றையே ஒன்றும் செய்யாமல், எப்போப் பார்த்தாலும் மத்திய அரசு காரணம் என்று அரசியல் செய்துகொண்டிருந்தால், மக்களுக்கு என்ன பிரயோசனம். உங்கள் ஆதங்கம் உண்மை.<br /><br />பக்கத்திலிருக்கும் பெங்களூரில், ஏரிகளைப் பாதுகாப்பதும், அவைகளைச் சுற்றி வேலி எழுப்புவதும், ஆக்கிரமிப்பை முடிந்த அளவு தடுப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. நம்மால இதைப் போல ஒன்றுமே செய்யமுடியவில்லையே?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69982201649756710332017-04-04T08:46:54.086+05:302017-04-04T08:46:54.086+05:30ரௌத்திரம் பழகு!!!
வீராவேசமான பதிவு ரௌத்திரம் பழகு!!!<br /><br />வீராவேசமான பதிவு நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79499164835664641052017-04-04T07:29:23.014+05:302017-04-04T07:29:23.014+05:30என்னமோ நடக்குது அதிகாரத்தை நாமதான் கொடுக்கிறோம் அத...என்னமோ நடக்குது அதிகாரத்தை நாமதான் கொடுக்கிறோம் அதன் பிறகு ஊமையாகிறோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21714215774641206892017-04-04T06:33:44.460+05:302017-04-04T06:33:44.460+05:30ஏகப்பட்ட விவரம் சேகரித்துக் கொடுத்திருக்கிறீர்கள்....ஏகப்பட்ட விவரம் சேகரித்துக் கொடுத்திருக்கிறீர்கள். மாநில அரசு - மத்திய அரசு அரசியல்கள் ஒரு பக்கம். நதிநீர் இணைப்புப் பற்றி ஏன் அப்புறம் பெரும் தலைகள் யாருமே பேசுவதில்லை? சந்திரபாபு நாயுடு வெற்றிகரமாக அவர் மாநிலத்தில் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். நதிநீர் இணைப்பில் நெகட்டிவ் பார்ட்டும் உண்டு என்றும் படித்த நினைவு. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com