tag:blogger.com,1999:blog-18675072.post7922889746675640589..comments2024-03-18T10:37:56.593+05:30Comments on எண்ணங்கள்: கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-18675072.post-34666071956943148302013-04-07T18:11:39.881+05:302013-04-07T18:11:39.881+05:30நல்லதொரு பதிவு. பல விஷயங்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்ச...நல்லதொரு பதிவு. பல விஷயங்களைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.<br /><br />பகட்டான பட்டுப்புடவைகள் கட்டினால் பெண்களுக்கு ஓர் அழகாக உள்ளதே தவிர, அதில் உள்ள அவஸ்தைகள் பற்றி, பெண்களுக்கு மட்டுமே மிக நன்றாகத்தெரியும். [எனக்கும் நன்றாகத் தெரியும் - மடித்து எடுத்துப்போய் அழகாக பொறுமையாக அயர்ன் செய்துகொண்டு வரும் எல்லா ஆண்களுக்குமே தெரியும்]<br /><br />பத்திரிக்கை அடிப்பதிலிருந்து, அழைப்பதிலிருந்து, பல விஷயங்களிலும் ஆடம்பரங்கள் தான் உள்ளன. ஒவ்வொன்றையும் பற்றி நாம் எவ்வளவோ பதிவுகள் எழுதலாம் தான். <br /><br />ஆனால் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த இனி இயலாது எனத் தோன்றுகிறது.<br /><br />பணம் படைத்தவர்களுக்கும், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கும், செலவு செய்து, தங்களை விளம்பரப் படுத்திக்கொண்டு பெருமைப்பட இவைகளெல்லாம் உதவக்கூடும்.<br /><br />கடன் வாங்கி பணத்தை எப்படி எப்படியோ புரட்டி திருமணங்கள் செய்யும், நடுத்தர வர்க்கம் + ஏழை பாழைகளுக்குத்தான் மிகவும் கஷ்டம்<br /><br />நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-46956317885364543692013-02-28T15:33:27.311+05:302013-02-28T15:33:27.311+05:30//அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பா...//அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பாதிக்கு மேல் சாப்பிடாமலேயே வீணாக்கிவிடுகிறார்கள்.<br />குழந்தைகளின் பக்கத்தில் பெற்றோர் அமர்ந்துகொண்டு சிறிய அளவில் குழந்தைக்கு போடச் சொல்ல வேண்டும்.<br />பெரியவர்களே இலையில் போட்டுக்கொண்டு சாப்பிடாமல் எறிந்து விட்டுப் போவது மிகவும் வருந்தத்தக்கது.//<br /><br />வாங்க ரஞ்சனி, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. பல விஷயங்களில் ஆடம்பரம் குறைய வேண்டும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-48735006876925562402013-02-28T15:32:29.018+05:302013-02-28T15:32:29.018+05:30//அடுத்த நாள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கும் கல்யாண...//அடுத்த நாள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கும் கல்யாணம் //<br /><br />எங்க வீடுகளில் முதல்நாளே விரதம், நாந்தி, பாலிகை கொட்டல் எல்லாம் நடக்கும். மறுநாள் கல்யாணம் விரிவாக நடக்கவேண்டுமென்பதால் விரதத்தையும், நாந்தியையும் கல்யாணத்தன்று வைத்துக்கொள்வதில்லை. பெண் கல்யாணம் ஆனாலும், பிள்ளை கல்யாணம் ஆனாலும் எதுவானாலும் நாந்தி உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79663936856954941402013-02-28T15:30:15.276+05:302013-02-28T15:30:15.276+05:30//நிறைய புத்திசாலிப் பெண்கள் நல்ல வேலை கிடைத்தவுடன...//நிறைய புத்திசாலிப் பெண்கள் நல்ல வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்திற்கு பகிர்ந்து கொண்டது போக, தங்கள் திருமணத்திற்காக சேர்க்கத் தொடங்கிவிடுகின்றனர். முக்கியமாக தனக்கு வேண்டிய முக்கியமான நகைகள். அதிபுத்திசாலியான பெற்றோர்கள், சிக்கனமாக குடும்பத்தை நடத்தி பெண் சம்பாதிப்பதில் பங்கு கேட்காமல் இருக்கிறார்கள். எல்லோருடைய குறிக்கோளும் வரப்போகும் அந்தத் திருமணத்தைக் குறித்தே.//<br /><br />பெற்றோருக்கும் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் என விருப்பம் இருக்க வேண்டும். மாற்றிச் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். பெரும்பாலும் பெற்றோருக்குப் பெண் சம்பாதிப்பதால் விரைவில் திருமணம் செய்து அனுப்புவதில் தயக்கமும் இருக்கிறது. வசதி படைத்த பெற்றோரும், விபரமான பெற்றோரும் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் ஒரு சில அனுபவங்கள்! :((((( மனமே கசந்துவிடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56858019590827339972013-02-28T15:28:19.911+05:302013-02-28T15:28:19.911+05:30//அலுவலக நண்பர்கள், நண்பிகள், நெருங்கிய சொந்தங்கள்...//அலுவலக நண்பர்கள், நண்பிகள், நெருங்கிய சொந்தங்கள் அல்லாத பொதுவான நண்பர்கள் கலந்து கொள்ளும் சந்தோஷ விழா போல இப்பொழுதெல்லாம் ரிஷப்ஷனை எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெண்களும் அலுவலங்களுக்குச் செல்வதால் தங்கள் நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சொல்லப்போனால் இதில் தான் மணமக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்//<br /><br /><br />இது இருவீட்டார் விருப்பம் தான் என்றாலும் முதல்நாளே வருவதை விட மறுநாள் வருவது இன்னும் சிறப்பு. வரும் நண்பர்கள் அன்றும் வருவார்கள். அன்றும் இதில் கவனம் செலுத்தலாம். பெண்கள் தங்கள் நண்பர்களைத் திருமணம் ஆனதும் நடைபெறும் ரிசப்ஷனுக்கும் அழைக்கலாம். சொல்லப் போனால் எங்க பொண்ணு இதில் பிடிவாதமாய் இருந்தாள். முதல்நாள் ரிசப்ஷன் வைத்துக் கொண்டு என் சிநேகிதர்கள் கிட்டே நாளைக்கு இவரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்லியா அறிமுகம் செய்வேன்? கல்யாணம் ஆயிடுச்சுன்னா, என் கணவர் என்று அறிமுகம் செய்யலாமே? எனக் கேட்டாள். அதோடு இதில் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-68541941645207880062013-02-28T15:24:35.998+05:302013-02-28T15:24:35.998+05:30//நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டே எல்லாவற்றையும் ...//நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டே எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது. இதெல்லாம் அவரவர் விருப்பப்படி. அவரவர் செளகரியப்படி.<br />ரிசப்ஷனே இல்லாமல் திருமணத்தோடு கூட இருவீட்டாரும் விரும்பினால் முடித்துக் கொள்ளலாம். ரிசப்ஷன் எல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்தான்.//<br /><br />நம்ம வீட்டுக் கல்யாணத்திலே நாம் தான் முன்னிலை. ஆகையால் எங்க பொண்ணு, பையர் இரண்டு பேர் கல்யாணத்திலும் அவங்களோட சம்மதத்தின் பேரிலும், பெண், பையர் வீட்டுக்காரங்க சம்மதத்தின் பேரிலும் கல்யாணம் ஆனப்புறமே ரிசப்ஷன். அதே போல் ரிசப்ஷனுக்குக் கச்சேரியோ, மெல்லிசையோ வைக்கக் கூடாது என்றும் எங்கள் அன்பான கட்டளை. கச்சேரி வைத்து பாடகர்களை அவமானம் செய்வதோ, (யாருமே கேட்க மாட்டாங்க, பேச்சுக் கச்சேரிதான் நடக்கும்.) மெல்லிசை என்ற பெயரில் சத்திரமே அதிர்ந்து வாய் வார்த்தை கூடப் பேச முடியாமல் தத்தளிப்பதும் பல கல்யாணங்களில் அனுபவித்தது. அதெல்லாம் நம்ம வீட்டிலே வேண்டாம்னு நாங்க கூடிப் பேசி முடிவெடுத்தோம். வந்தவங்களுக்கும் ஒருத்தரோடு ஒருத்தர் பார்த்துப் பேசிக்கவும், தகவல்கள் பரிமாறிக்கவும் வசதி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-49651888186619406412013-02-28T11:32:17.254+05:302013-02-28T11:32:17.254+05:30அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பாதி...அத்தனை செலவு செய்து தயார் செய்யும் சாப்பாட்டை பாதிக்கு மேல் சாப்பிடாமலேயே வீணாக்கிவிடுகிறார்கள்.<br />குழந்தைகளின் பக்கத்தில் பெற்றோர் அமர்ந்துகொண்டு சிறிய அளவில் குழந்தைக்கு போடச் சொல்ல வேண்டும்.<br />பெரியவர்களே இலையில் போட்டுக்கொண்டு சாப்பிடாமல் எறிந்து விட்டுப் போவது மிகவும் வருந்தத்தக்கது.<br /><br />திருமணத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஆடம்பரத்தை கட்டாயம் குறைக்க வேண்டும்.<br /><br />பின்னூட்டங்கள் சூப்பர்!<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62817338655957263502013-02-27T21:49:14.401+05:302013-02-27T21:49:14.401+05:30//முதல்நாள் ரிசப்ஷன் என்பதே எங்க வீட்டிலே யாருக்கு...//முதல்நாள் ரிசப்ஷன் என்பதே எங்க வீட்டிலே யாருக்கும் பிடிக்காத ஒன்று. கல்யாணம் ஆனப்புறம் தான் ரிசப்ஷன்.//<br /><br />நம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டே எல்லாவற்றையும் பார்க்கக் கூடாது. இதெல்லாம் அவரவர் விருப்பப்படி. அவரவர் செளகரியப்படி.<br />ரிசப்ஷனே இல்லாமல் திருமணத்தோடு கூட இருவீட்டாரும் விரும்பினால் முடித்துக் கொள்ளலாம். ரிசப்ஷன் எல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்தான். <br /><br />அலுவலக நண்பர்கள், நண்பிகள், நெருங்கிய சொந்தங்கள் அல்லாத பொதுவான நண்பர்கள் கலந்து கொள்ளும் சந்தோஷ விழா போல இப்பொழுதெல்லாம் ரிஷப்ஷனை எடுத்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் பெண்களும் அலுவலங்களுக்குச் செல்வதால் தங்கள் நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சொல்லப்போனால் இதில் தான் மணமக்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். நிறைய புத்திசாலிப் பெண்கள் நல்ல வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்திற்கு பகிர்ந்து கொண்டது போக, தங்கள் திருமணத்திற்காக சேர்க்கத் தொடங்கிவிடுகின்றனர். முக்கியமாக தனக்கு வேண்டிய முக்கியமான நகைகள். அதிபுத்திசாலியான பெற்றோர்கள், சிக்கனமாக குடும்பத்தை நடத்தி பெண் சம்பாதிப்பதில் பங்கு கேட்காமல் இருக்கிறார்கள். எல்லோருடைய குறிக்கோளும் வரப்போகும் அந்தத் திருமணத்தைக் குறித்தே.<br /><br />அடுத்த நாள் விரதத்திலிருந்து ஆரம்பிக்கும் கல்யாணம் இருபகுதிக்குமான நெருங்கிய உறவினர்களுக்கானது. ரிஷப்பனுக்கு வரும் கூட்டத்தில் கால்வாசி கூட கல்யாணத்திற்குத் தேறாது. அது சிறுகச் சிறுகக் குறைந்து கட்டுசாத கூடையின் போது 50 பேர்களாகி விடும். <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21256313994563526102013-02-27T16:33:29.775+05:302013-02-27T16:33:29.775+05:30 இப்போதைய செலவை நினைச்சால்.........மயக்கமே வருது! ... இப்போதைய செலவை நினைச்சால்.........மயக்கமே வருது! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44227588312833887482013-02-27T16:31:14.392+05:302013-02-27T16:31:14.392+05:30எல்லாச் செலவுகளையும் செய்த பின்னர் பெண் வீட்டுக்கு...எல்லாச் செலவுகளையும் செய்த பின்னர் பெண் வீட்டுக்கு இதன் மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்க மாட்டாங்களா? <br /><br />ஸமாவர்த்தனம் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருப்பது ஆச்சரியமில்லை. ஆனால் பெரும்பாலோருக்குத் தெரியவில்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84874877367004482312013-02-27T16:30:01.104+05:302013-02-27T16:30:01.104+05:30//முதல் நாள் ரிஷப்ஷன்; அடுத்த நாள் கல்யாணம் இரண்டி...//முதல் நாள் ரிஷப்ஷன்; அடுத்த நாள் கல்யாணம் இரண்டிற்கும் சேர்த்து குறைந்த பட்சம் 1000 பேர் வந்து வசதியாக இருந்து சாப்பிட்டு கழித்துப் போவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்யத் தயாராய் இருக்க வேண்டும் என்பது உங்கள் யூகத்திற்கே.//<br /><br />முதல்நாள் ரிசப்ஷன் என்பதே எங்க வீட்டிலே யாருக்கும் பிடிக்காத ஒன்று. கல்யாணம் ஆனப்புறம் தான் ரிசப்ஷன். குறிப்பாய்ச் சென்னையில் சாப்பாட்டுச் செலவு மிக மிக அதிகம் தான். சாதாரணமாக நிச்சியதார்த்தத்துக்கேக் குறைந்த பட்சமாக ஒரு இலைக்கு 200ரூ வாங்கறாங்க. :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32565574105827081062013-02-27T14:45:59.524+05:302013-02-27T14:45:59.524+05:30//ஸமாவர்த்தனம் என்றால் என்னனே புரியலை! தெரியலை! :(...//ஸமாவர்த்தனம் என்றால் என்னனே புரியலை! தெரியலை! :( //<br /><br />பிள்ளைகள் குருகுல வாசம் செய்த அந்தக் காலத்தில் அவர்களின் குருகுல வாச காலத்தை பிரம்மச்சரிய காலமாகவும், அதை முடித்து அவன் வீட்டுக்குத் திரும்புவதை ஸமாவர்த்தனம் என்றும் அழைத்தனர். <br />பிரம்மச்சரியம் முடிந்தவுடனே, விவாஹம் செய்வித்து அவன் கிரகஸ்தாஸ்ரமத்தை மேற்கொள்ள வேண்டும். அதனால் ஸமாவர்த்தனத்திற்கு முன்னேயே திருமணம் நிச்சயக்கப்பட்டதாகக் கொண்டு ஸ்மாவர்த்தனம் செய்து பிறகு விவாக சடங்குகளை சிலர் மேற்கொள்கின்றனர். <br /><br />இதில் இன்னொரு முரண்பாடும் இருக்கிறது.ஸமாவர்த்தனம் செய்த பிறகு அவன் திருமணத்திற்கு தயாராக வேண்டுமே தவிர, தன்னை நைஷ்டிக பிரம்மச்சாரியாகக் கருதிக் கொண்டு காசி யாத்திரை என்னும் பரதேச கோலம் பூணக்கூடாது. <br /><br />ஆனால் குருகுலவாசமே இல்லாத இக்காலத்தில் ஒவ்வொரு சடங்கையும் ஆப்டாக அப்படி அப்படியே இருந்தாக வேண்டும் என்று நுணுகிப் பார்க்கவும் கூடாது. திருமணத்தை நடத்தி வைக்கும் ஆசிரியரே சரியென்று ஏற்றுக்கொண்டு அவர் எவ்வழியோ அதுவே நம்வழியாகக் கொள்ள வேண்டும். இதனால் அதற்கு மேல் அப்பீல் இல்லை என்றில்லை; அவர் தான் அந்த நேரத்தில் அந்த இடத்தில்<br />எல்லாவற்றையும் தீர்மானிப்பவர். அது சரியாக இருக்கும் என்று எடுத்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்பது தான்.<br /><br />நான் சொல்ல வந்தது வேறே. எல்லாருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்று சொன்னது, லெளகீக விஷயங்களில். பெரியவர்களும் ரொம்ப அடிச்சுப் பிரண்டாமல் இளைஞர்களை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போய்விடுகின்றனர். இதற்குக் காரணம் 'இவன் எவ்வளவோ பரவாயில்லை!'<br />என்று திருப்தி கொள்வது தான்.<br /><br />அந்த திருப்தி தான் முக்கியமும் கூட.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72939881624924105572013-02-27T13:55:28.267+05:302013-02-27T13:55:28.267+05:30//ஜீவி சார், நீங்க சொல்லுகிற மாதிரிச் சத்திரங்கள் ...//ஜீவி சார், நீங்க சொல்லுகிற மாதிரிச் சத்திரங்கள் வாடகையெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! இல்லையா? நடுத்தர வர்க்கத்துக்குச் சத்திர வாடகையே 3 லக்ஷத்தில் இருந்து 5 வரை கொடுக்கணுமா? தேவையா? //<br /><br />எனது சென்ற பின்னூட்டம் கீதாம்மா கேட்டதிற்கானது. தவறாக GMB சார் என்று விளித்து விட்டேன்! Sorry GMB Sir!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-56312289614375712542013-02-27T13:43:43.519+05:302013-02-27T13:43:43.519+05:30ஜிஎம்பீ சார்!
திருமணத்திற்கு கல்யாணச் சத்திரம் தா...ஜிஎம்பீ சார்!<br /><br />திருமணத்திற்கு கல்யாணச் சத்திரம் தான் Base; அடிப்படையான சமாச்சாரம். அது நீங்கள் அழைக்கக் கூடிய விருந்தினர்களைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். <br /><br />இரண்டு நாள் பாதுகாப்பாக; மணமகன்-மணமகள் குடும்பம் தங்குவதற்கு பாதுகாப்பாக. எதற்கெல்லாம் பாதுகாப்பை நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்களோ, அதெற்கெல்லாம்.அதற்கேற்ப வசதிகளுடன் கல்யாண மண்டபம். <br /><br />முதல் நாள் ரிஷப்ஷன்; அடுத்த நாள் கல்யாணம் இரண்டிற்கும் சேர்த்து குறைந்த பட்சம் 1000 பேர் வந்து வசதியாக இருந்து சாப்பிட்டு கழித்துப் போவதற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்யத் தயாராய் இருக்க வேண்டும் என்பது உங்கள் யூகத்திற்கே. <br /><br />கணக்குப்போட்டால் ஆச்சரியமாக இருக்கும்.<br /><br />இப்பொழுது விடியோ, போட்டோ ஆல்பம் (மணமகன், மணமகள் வீட்டார் தனித்தனியே) இதற்காக செலவாகும் தொகைx8= கல்யாண சத்திர வாடகை இரு நாட்களுக்கு.<br /><br />தேவையா?.. என்று கேட்டால் என்ன சொல்வது?.. ஆடம்பரம், கெளரவம் இந்த இரண்டும் இல்லாது கூட செலவு செய்தே ஆக வேண்டிய சில தேவைகள் ஏற்பட்டு விடுவது உண்டு.<br />அதெல்லாம் மணமகனின் வேலை, தகுதி இவற்றின் அடிப்படையில் அமைந்து விடும். <br /><br /> <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26866657515782579352013-02-27T11:58:19.051+05:302013-02-27T11:58:19.051+05:30வாங்க ஜெயஸ்ரீ, நீங்க சொல்லி இருக்கும் விஷயம் இன்று...வாங்க ஜெயஸ்ரீ, நீங்க சொல்லி இருக்கும் விஷயம் இன்று வரை கேட்டதே இல்லை. படிக்கையிலேயே மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து விட்டது. இப்படி எல்லாருக்கும் நடந்தால்! நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. அந்த நாளும் வரட்டும். :)))))) பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சுட்டிக் காட்டும் மஹான் யாரென ஊகிக்க முடிகிறது. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55640331464378209752013-02-27T11:57:09.629+05:302013-02-27T11:57:09.629+05:30வாங்க கோவை2தில்லி, கொஞ்சம் வீட்டுப்பாடம் படிச்சுக்...வாங்க கோவை2தில்லி, கொஞ்சம் வீட்டுப்பாடம் படிச்சுக்கறேன். அப்புறமா எழுத ஆரம்பிக்கிறேன். முன்னாடி சமயபுரப் பயணத்தையும் அதைத் தொடர்ந்த பயணத்தையும் முடிச்சுக்கறேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88789894735674676292013-02-27T11:56:24.212+05:302013-02-27T11:56:24.212+05:30வாங்க மாதேவி, நிதானமா வரும். மெதுவா வந்து படிங்க....வாங்க மாதேவி, நிதானமா வரும். மெதுவா வந்து படிங்க. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-22226677617348574182013-02-27T11:55:49.822+05:302013-02-27T11:55:49.822+05:30இந்தக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் சரி, ...இந்தக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் சரி, பிள்ளையைப் பெற்றவர்களுக்கும் சரி, ஏதோ ஒரு வகையில் ஹரிபரி என்னும் அழுத்தம் இருக்கவே செய்கிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-42113549850889413502013-02-27T11:54:59.462+05:302013-02-27T11:54:59.462+05:30//பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்தக்கால திருமணங்களில்...//பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்தக்கால திருமணங்களில் இருந்த ஹரிபுரி இந்தக்கால திருமணங்களில் இல்லை. ஹாயாக இருக்கிறார்கள். சிஸ்டமேடிக்காக எல்லாம் நடப்பதற்கு நிறைய ஏற்பாடுகள் வந்துவிட்டன.<br />எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்பது தான் விசேஷமே.//<br /><br />ஜீவி சார், நீங்க சொல்லுகிற மாதிரிச் சத்திரங்கள் வாடகையெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! இல்லையா? நடுத்தர வர்க்கத்துக்குச் சத்திர வாடகையே 3 லக்ஷத்தில் இருந்து 5 வரை கொடுக்கணுமா? தேவையா? அதோடு நீங்க சொல்ற மாதிரி இப்போல்லாம் யாருக்கும் எந்த விஷயமும் பூரணமாய்த் தெரியவில்லை என்பதே உண்மை. ஏதோ தெரிஞ்சாப்போல் நடந்துக்கலாம்! பல கல்யாணங்களிலும் பார்த்துட்டேன். ஸமாவர்த்தனம் என்றால் என்னனே புரியலை! தெரியலை! :(<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-71198486732267189152013-02-27T10:48:21.036+05:302013-02-27T10:48:21.036+05:30படோடபம் இல்லாமல்! வைதீகமாகவும், ஆன்மீகமாகவும் வரன்...படோடபம் இல்லாமல்! வைதீகமாகவும், ஆன்மீகமாகவும் வரன்வதுவுக்கு பிடித்தும் தாய் தந்தையர் ஆசிர்வாதத்துடன் ஒரு பைசா கூட கல்யாண மண்டபத்துக்கு , சமையல் இடத்திற்கோ வாங்காம எளிமை அதே சமயம் எல்லா சம்பிரதாயங்களுடன் எல்லா வகுப்பினருக்கும் அவரவர் வழக்கங்களுக்கு குறைவில்லாமல் கல்யாணம் இன்னும் சென்னையில் ஒரு விளம்பரமும் இல்லாம ஒரு அமைப்பில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . மண்டபம் நா பிரம்மாண்ட மான் கற்பக விநாயகர் கோவில் மண்டபம் தான் நிச்சிய தார்த்தத்துக்கு !, கல்யாணம் பூர்ண பிரமம் கோவில் வளாகத்தில் யாக சாலை மண்டபத்தில்? பெண் வீட்டுக்காரர் சம்பிரதாயங்கள்துர்க்கை கோவில் யாக சாலைல! கல்யாண உற்சவம் தாயாருக்கும் பெருமாளுக்கும் பெரிய கோவிலில் !, சாப்பாடு , ஏர்கண்டிஷன் செய்யப்பட டைனிங் ரூம்ஸ் ல! இது பொருளாதார நிலை சம்பந்தப்பட்டதில்லை?சமீபத்தில் நடந்த திருமணம் வசதி உடைய மிடில் class வீட்டு கல்யாணம் தான். வைதீக சம்பிரதாயங்கள் நன்கு வேதம் வைதீகம் அறிந்த பெரியவர்களால் ஒரு குறையும் இல்லாமல் செய்ததுடன் சாயந்திரம் கல்யாண உற்சவம் வேற FREE யாகவே நடந்து காலனியில் இருந்த தெரிந்தவர் தெரியாதவர் கட்டிட வேலை செய்யும் ஆட்கள் எல்லாருக்கும் அன்னதானமும் மணமக்கள் ஆசிர்வாதத்தோடு இருக்கணும்னு அந்த அமைப்பு காரர்களே செய்தார்கள் ஒரு மகானின் வாக்குக்கு பணிந்து. சம்பந்தி வீட்டுக்காரர்களுடைய விருப்பமாய் இருந்ததால் அந்த மகானே அவா இஷ்ட்டம் நா ஆள் போட்டு சமையலுக்கு செஞ்சுக்கோங்கோ இல்லைனா நம்ப ஆளுங்களே பண்ணிடலாம்னார்? கல்யாணம் பண்ணின தந்தை அவருக்கு DEVOTEE ?சம்பந்திக்கு முன்ன பின்ன தெரியாது .அவர் தான் பெண்ணின் அப்பா!! ரெண்டு பேரும் செலவான காசை தருகிறோம்னு கொடுத்தபோது சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் அந்த மகான்! சம்பந்தி காலில் விழுந்து ஓன்னு அழுதுட்டார் இந்த பெருந்தன்மையை பாத்ததில்லைன்னு?உலகத்தில் ஒவ்வொரு ஜீவனும் கடவுள் தான் சார்? அடுத்த தடவை ஏதாவது ஏழைப்பொண்ணுக்கோ , பையனுக்கோ கல்யாணம்நோ படிக்கணும்னோ உங்களை அண்டி யாராவது வந்தா மீனாட்சிக்கு படிக்கணும்! துர்க்கைக்கு கல்யாணம் பண்ணனும்னு ஈஸ்வரன் படிக்க வைக்கனும்னு எண்ணத்தோட முடியற அளவு மனசாற பண்ணிடுங்கோ! இதுதான் பொருளைஅருள் ஆக்கற வித்தை சார் நு சிரிச்சுண்டே சொல்லிட்டு போய் விட்டார்?ஈஸ்வரன் அளக்கறான் செய்யறோம்?யாரையும் எதிபார்த்து இல்லைன்னு சொன்ன அந்த மகான் இப்ப வாழற ஆன்மீக வாதிகளில் இருந்து மாறுபட்டு உயரத்தில் உள்ளவர்னு பட்டது?? Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-20198047707154865112013-02-26T19:55:50.925+05:302013-02-26T19:55:50.925+05:30வீண் ஆடம்பரம் தான் இப்போ எல்லா இடத்திலயும்...:(
இ...வீண் ஆடம்பரம் தான் இப்போ எல்லா இடத்திலயும்...:(<br /><br />இன்னும் சொல்லுங்கோ மாமி...படிக்க காத்திருக்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-35431045045374186712013-02-26T16:57:14.980+05:302013-02-26T16:57:14.980+05:30நடக்கட்டும் டும்...டும். :)
படித்து ரசிக்க வருகின...நடக்கட்டும் டும்...டும். :)<br /><br />படித்து ரசிக்க வருகின்றேன்..... மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-54575905986983988542013-02-26T15:53:16.603+05:302013-02-26T15:53:16.603+05:30//சத்திர வாடகை மட்டுமின்றி திநகர், மயிலாப்பூர் போன...//சத்திர வாடகை மட்டுமின்றி திநகர், மயிலாப்பூர் போன்ற நகருக்குள்ளே நடைபெறும் திருமணச் சத்திரங்கள் சுத்தத்தைப் பார்த்தால்! :(((((((( //<br /><br />நகரில் நல்ல சத்திரங்கள் இருக்கின்றன. (கார்பார்க்கிங் வசதிகளோடு)சமையற்கூட லட்சணம் கேட்டரிங்காரர் கைவசப்படுத்திய பிறகு அவர் பராமரிப்பு சம்பந்தப்பட்டது..<br />நல்ல கேட்டரிங் சர்வீஸ்காரர்கள் விசிட்டிங் கார்டு கையில் வைத்துக் கொண்டு பிரமாதப்படுத்தி விடுகிறார்கள். அவர்களுக்குத் தெரியும், ஒரு கல்யாண சர்வீஸ் பல கல்யாணங்களுக்கு அச்சாரம் என்று தொழில்திறமை காட்ட ஒவ்வொரு கல்யாணத்தையும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறார் கள். <br /><br />கல்யாணங்களில் விருந்தினர் உபசரிப்பு தான் ரொம்ப முக்கியம். அதைச் சரிவரச் செய்யவில்லை என்றால்<br />என்ன செலவழித்தும் நிறைவில்லை.<br />பெண் வீட்டார் தான் திருமணத்தை நடத்துவது. அவர்களுக்கு பிள்ளை வீட்டாரைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால், சில கேட்டரிங்காரர்கள் விருந்தினர்களை விசாரிக்கவே ஆண்-பெண் ஊழியர்களை அமர்த்தியிருக்கிறார்கள்!<br /><br />அலுவலக நண்பர்கள், தெருக்காரர்கள்,<br />ப்ளாட்காரர்கள், சொந்தங்கள் இவர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே வாத்தியார்கள் கூட <br />'போய் விசாரித்துவிட்டு வா' என்று <br />அதற்காக மந்திர உச்சாடனத்திற்கு இடை இடையே நேரம் ஒதுக்கித் தருகிறார்கள்.<br /><br />பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்தக்கால திருமணங்களில் இருந்த ஹரிபுரி இந்தக்கால திருமணங்களில் இல்லை. ஹாயாக இருக்கிறார்கள். சிஸ்டமேடிக்காக எல்லாம் நடப்பதற்கு நிறைய ஏற்பாடுகள் வந்துவிட்டன.<br />எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது என்பது தான் விசேஷமே.<br /><br />கல்யாணத்திற்கு அப்புறம் இருக்கிறது,<br />மாப்பிள்ளை-பெண் வீட்டார் பங்கு போட்டுக்கொள்வது, இழைவது- இழையாமல் போவது எல்லாம்.<br />அப்புறம் வாழ்க்கை பூராவும் செலவுகளைப் பகிர்ந்து கொள்வதில் பிஃப்டி பிஃப்டியாக இருந்து விட்டுப் போகட்டும். யார் கேட்டார்கள்? அவர்கள் வீட்டுக்கல்யாணம் என்று வரும் பொழுது தங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு பல சொந்த சிரமங்களை ஒத்தி வைத்துவிட்டு வாழ்த்த வருகிறவர்களை இந்த இரு வீட்டாரும் சேர்ந்து வரவேற்று அவர்களை முகம் மலர அனுப்பி வைப்பது தான் முக்கியம்.<br /><br /> <br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57215593682144847282013-02-26T15:38:29.574+05:302013-02-26T15:38:29.574+05:30வாங்க ஜிஎம்பி சார்,
கேரளத்திருமணங்கள் இப்போதெல்லா...வாங்க ஜிஎம்பி சார்,<br /><br />கேரளத்திருமணங்கள் இப்போதெல்லாம் ஆடம்பரமாகவே நடக்கின்றன. எங்காவது ஒரு சிலர் எளிமையாக நடத்தலாம். தெரியலை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84020933281037946762013-02-26T15:05:00.433+05:302013-02-26T15:05:00.433+05:30
பல கேரளத் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடக்கின்ற...<br /> பல கேரளத் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடக்கின்றன. பட்டுப் புடவை பற்றி காஞ்சி பெரியவர் சொன்னதை மறந்து. பத்திரிக்கைகளில் பெரியவர் ஆசியுடன் என்று எழுதுவார்கள். இருப்பவர் செலவு செய்யட்டும். இல்லாதவரும் செலவு செய்ய வற்புறுத்துவது தவறு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com