tag:blogger.com,1999:blog-18675072.post8756669026913341541..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: சம்ப(ம)ந்தி சாப்பிடவே மாட்டாள்! இட்லியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறுGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-18675072.post-86113925462277320632013-05-07T13:58:32.642+05:302013-05-07T13:58:32.642+05:30நேற்று கும்பகோணத்திலே காந்தி பார்க் அருகே பார்த்த...நேற்று கும்பகோணத்திலே காந்தி பார்க் அருகே பார்த்தேன். மல்லிகை அரும்புகள் பச்சைப்பசேல் காம்புகளு டன் ஒரே சீறான அளவில் கொட்டிக் கிடந்த காட்சி கண்கொள்ளா காட்சி..<br /><br />காந்தி பார்க்கில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். தி.ஜா, கு.ப.ரா. எம்.வி.வி. கரிச்சான் குஞ்சு அத்தனை பேரும் நினவில் வந்தனர். அந்தக் குழாம் இங்கே தானே உட்கார்ந்து பேசிக் களித்திருக்கும் என்கிற நினைவே மேலோங்கியது.<br />சொல்லப் போனால் அந்த நினைவைக் கொள்வதற்காகத்தான்<br />காந்திப் பார்க்கினுள் நுழைந்தேன் என்பதே உண்மை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-91373133060531628552013-05-07T13:48:22.556+05:302013-05-07T13:48:22.556+05:30திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை பூராவுக்கும் ஆன ...திருமணம் என்பது இருவரின் வாழ்க்கை பூராவுக்கும் ஆன ஒன்று.<br /><br />எதற்கானதுக்கான லைசன்ஸ் என்பதோ வாழ்க்கை பூராவுக்கும் ஆன ஒன்றில்லை. இடைக்காலத்தி- லேயே காலாவதி ஆகக்கூடிய ஒன்று.<br /><br />அப்படி அதுவே நிர்ணயிக்கக் கூடியதாக இல்லாமலிருக்கும் பொழுது, அதற்கான லைசன்ஸ் தான் இது என்று திருப்பித் திருப்பிச் சொல்வதில் அர்த்தம் இல்லை அல்லவா, ஜிஎம்பீ சார்?..<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30917036443685253482013-05-07T13:10:36.865+05:302013-05-07T13:10:36.865+05:30எங்க மின் தமிழ்க் குழுமத்தின் இளம் நண்பர் உதயனின் ...எங்க மின் தமிழ்க் குழுமத்தின் இளம் நண்பர் உதயனின் கோலங்கள் குறித்த தளம். உதயன் மிக அருமையானக் கோல வித்தைக்காரர்.<br /><br />http://tinyurl.com/cuhhj8o<br /><br />மேற்கண்ட சுட்டியில் போய்ப் பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-24531608826385317542013-05-07T12:59:32.280+05:302013-05-07T12:59:32.280+05:30வாங்க ஜீவி சார்,
கோலம் போடுவதால் மன ஒருமைப்பாடும்...வாங்க ஜீவி சார்,<br /><br />கோலம் போடுவதால் மன ஒருமைப்பாடும் கணக்குப் போடும் திறனும் அதிகரிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் எல்லாம். இதை எல்லாம் நாகரிகமான வேலைகளாகவும் கருத மாட்டார்கள். பூத்தொடுக்கிறதும் ஒரு கலை. வித விதமான வர்ணங்களில் உள்ள பூக்களை நம் ரசனைக்கேற்பக் கதம்பமாகத் தொடுப்பதில் உள்ள சந்தோஷத்தை அனுபவித்தால் தெரியும்.<br /><br />மதுரையில் இருந்த வரை மல்லிகைப் பூக்களை மூன்று மூன்றாகச் சேர்த்துச் செண்டாகத் தான் கட்டுவேன். இப்போவெல்லாம் அதற்கேற்ற குச்சிகள் கிடைப்பதில்லை. இங்கே அநேகமாக இப்போது உதிரிப்பூக்கள் வாங்கித் தான் தொடுக்கிறேன். பத்து ரூபாய்க்கு 100 கிராம் மல்லிகைப் பூ வாங்கினால் நான்கு, ஐந்து முழத்துக்கும் மேல் வரும். இதையே பூக்காரியிடம் முழம் பத்து ரூபாய் என்று வாங்குவாங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31503881953086614742013-05-07T11:27:52.319+05:302013-05-07T11:27:52.319+05:30போன வாரம் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற போது க...போன வாரம் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற போது கண்ணால் கண்ட காட்சி. மல்லிகைப்பூ அருமையாக இருக்கிறதே என்று தொடுத்து சாமி படத்திற்குப் போடலாம் என்று வாங்கியிருக்கிறார் கள். புது மருமகளைத் தொடுக்கச் சொல்லி விட்டு, மாமியார் சமையல் அறையில் பிஸியாக இருந்தார்கள். <br /><br />நூலில் வண்டைக் கட்டித் தொங்க விட்டார் போல, மல்லிகையை நூலில் இடைவெளி விட்டு சுருக்கிட்டுக் கொண்டிருந்தது அந்த பெண். பார்த்த எனக்கே பொறுக்க வில்லை. <br /><br />இன்னொரு நாள் இன்னொரு நண்பர் வீட்டில் தெரிந்து கொண்டஇன்னொரு பாடமும் உண்டு. வெளியூரில் இருக்கும் மருமகள் நாலு வயது குழந்தையோடு மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார். மருமகளுக்குக் கோலம் போடத் தெரியாது என்று மாமியாரே வீட்டு வாசலில் வழக்கம் போல சின்னதாக தினப்படிக் கோலத்தைப் போட்டிருந்தார்கள்.<br />நாலு வயது குழந்தை, வந்த நாலு நாளில் பாட்டி கோலம் போடும் பொழுது தானும் கூடச் சேர்ந்து விளையாட்டாக கோலம் இழுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அவர்கள் வீட்டிற்குப் போயிருந்த பொழுது பேத்தி இழுத்திருந்த கோலத்தைக் காட்டி பாட்டி என்னிடம் மகிழ்ந்து போய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.<br />இந்த மாதிரி அந்தப் பெண்ணிற்கு அவள் தாய் சொல்லித் தந்திருந்தால்<br />புகுந்த வீட்டில் ஜமாய்த்திருக்கலாமே என்று தோன்றியது.<br /><br />சில விஷயங்கள் பெண்களுக்காகவே அமைந்தது. கோலம் போடுவது, இலை பார்த்துப் பரிமாறுவது, சுமங்கலிகள் தன் வீட்டு வந்து போகும் பொழுது குங்குமம் கொடுத்து வழி அனுப்புவது என்று நிறைய. இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. பார்த்துப் பார்த்து பழக்கமாவது. <br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21896375337709382202013-05-06T15:07:07.697+05:302013-05-06T15:07:07.697+05:30"ஆ" இல்லை ஶ்ரீராம், அது "அ" த..."ஆ" இல்லை ஶ்ரீராம், அது "அ" தான் நல்லாப் பாருங்க. கடைசி வார்த்தை "தி" யின் கால் வாங்குவது ஹிந்தி/சம்ஸ்கிருதத்தில் குறிலாக உச்சரிக்கப் படுவதால் "அ"வுக்குப் பக்கத்தில் வந்திருக்கு. நெடில் என்றால் முடியும் இடத்தில் காணப்படும். <br /><br />अस्ती//<br /><br />இது போல! இப்போ இரண்டையும் பார்த்தீங்கன்னா வித்தியாசம் தெரியும். :)))) ஹிஹிஹி, இன்னிக்கு க்ளாஸ் எடுத்துக் களைச்சுப் போயாச்சு, ஒரு ஜோடா ஆ ஆ ஆGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81041625996134929472013-05-06T15:02:49.920+05:302013-05-06T15:02:49.920+05:30//अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆ...//अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக<br /><br />अस्थि= bone kennel or stone(seed) of a fruit (noun)//<br /><br />பதில்களைத் தேடிக் கொடுக்கும் உங்கள் பொறுமைக்கும் பொறுப்புணர்வுக்கும் வணக்கங்கள். அதுசரி, இரண்டிலுமே ஆவன்னா தானே வருகிறது?!<br /><br />//ஊர்க்குளத்தில் தயிர்ப்பானையை மிதக்க விடுவது ---//<br /><br /> பழைய பாடல் ஒன்று அரைகுறையாக நினைவுக்கு வருகிறது. குட்டி யானைக்கும் கொம்பு முளைச்சுதாம் என்று 2 பாடல்களை இணைத்து,<br /><br />அம்மா பொண்ணுக்குக் கல்யாணம்<br />அவரவர் வீட்டுல சாப்பாடு<br /><br />கொட்டுமேளம் கோவில்ல...<br />------------------------------------<br /><br />என்று வரும்.<br /><br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2753282763775124062013-05-06T14:41:30.442+05:302013-05-06T14:41:30.442+05:30@ஸ்ரீராம்,
अस्ति= to be, to live to exist (verb)...@ஸ்ரீராம்,<br /><br /><br />अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக<br /><br />अस्थि= bone kennel or stone(seed) of a fruit (noun)<br /><br />ஹிஹிஹி, அகராதியை எங்கேயோ வைச்சுட்டுத் தேட இரண்டு நாள். ரங்க்ஸ் தினமும் புத்தக அலமாரியை ஒழிச்சு வைனு சொல்றார். எங்கே? எனக்குப் பிடிச்ச விதத்திலே கலைச்சு வைச்சிருக்கேன். எது எங்கே இருக்கும்னு எனக்குத் தான் தெரியும். அப்படியும் அகராதியைக் கண்டு பிடிக்க முடியலை!<br /><br />இங்கே சொல்வது முதல் அஸ்தி. வெர்பல் ஃபார்ம். இரண்டாவது அஸ்தி இல்லை. அப்பாடா! யாரங்கே , ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10832806092190312262013-05-06T13:49:53.123+05:302013-05-06T13:49:53.123+05:30திருமணங்களில் நடக்கும் தவறுகளைச் சுட்டினால் தானே த...திருமணங்களில் நடக்கும் தவறுகளைச் சுட்டினால் தானே திருமணங்கள் தவறுகளில்லாமல், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருமனங்களை இணைக்கும் பந்தமாக இருக்கவேண்டும் என்பது புரியவரும். ஆகவே சில நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப் பட்டன. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-72577919422061625592013-05-06T13:49:05.030+05:302013-05-06T13:49:05.030+05:30//திறுமணம் இருவர் இணைந்து வாழ உலகம் வழங்கும் லைசென...//திறுமணம் இருவர் இணைந்து வாழ உலகம் வழங்கும் லைசென்ஸ் என்பது உண்மை என்று எல்லோருக்கும் தெரிகிறது என்றாலும் அதை ஒப்புக்கொள்ள ஏனோ ஒரு false ப்ரெஸ்டிஜ் தடுக்கிறது.//<br /><br />எந்த ப்ரெஸ்டிஜும் இல்லை. எதுக்குத் தடுக்கணும்?? எங்க சாம வேதத்தில் மனைவி இல்லைனா சிராத்தத்தில் ஹோமம் செய்ய முடியாது. இளைய மகன் இருந்து அவனுக்கு மனைவி இருந்தாலும் மூத்த மகனின் மனைவி இல்லைனா யாருக்கும் அதிகாரம் இல்லை. மூத்த மகனின் காலம் ஆகி இளைய மகன் பொறுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே அப்போதும் அவர் மனைவி இருந்தால் தான் ஹோமமே. இல்லைனா இல்லை. இதை விவரிப்பது என்றால் இந்தப் பதிவுகளின் நோக்கம் மாறும்.<br /><br /><br />// இல்லாமலா நேரங்காலம் குறித்துச் சாந்தி முஹூர்த்தம் என்று முதலிரவுக்கு வழி செய்கிறார்கள்.? //<br /><br /><br />நேரம் காலம் குறிப்பது நல்ல ஆயுள், புத்தி உள்ள குழந்தை பிறப்பதற்கும், வம்ச விருத்திக்காக ஆண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை நல்ல நேரத்தில் ஜனிக்க வேண்டும் என்பதற்காகவும். லைசென்ஸ் வாங்கி வாழ்க்கை நடத்த காரா ஓட்டறோம். வாழ்க்கை ஐயா வாழ்க்கை. <br /><br />//திருமணம் என்பது ஒரு லைசென்ஸ் இல்லாவிட்டால் பெற்றதுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது.?//<br /><br />நம் குழந்தைகளுக்குப் பொறுப்பு ஏற்க லைசென்ஸா?? இது என்ன காலாவதியா ஆகிறது? வாழ்நாள் முழுதும் கூடவே வரும் பெண்ணையும், அவள் மூலம் பெறும் குழந்தைகளையும் சுமையாக நினைத்தால் அல்லவோ லைசென்ஸ் என்றெல்லாம் தோன்றும்! :(((((<br /><br /><br />// இந்த அறவாழ்க்கையே பொறுப்புகளைச் சுமப்பது அல்லவா.?திருமணத்துக்கான காரணங்களைச் சொல்கிறேன் சொல்கிறேன் என்று எத்தனை நாட்களுக்கு கீரி பாம்பு சண்டை காட்ட முடியும்.?//<br /><br />எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பொறுப்புகளைச் சுமந்தே ஆகவேண்டும். பொறுப்புகளைச் சுமக்கப் பயப்பட்டால் திருமண வாழ்க்கையையே ஏற்கக் கூடாது. திருமணத்துக்கான காரணங்களை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். கீரி, பாம்பு சண்டையெல்லாம் இருக்கிறது என்று காட்டத் தான் சொல்லப் படுகிறது. இரு குடும்பங்களின் இணைப்பை அவ்வளவு சுலபமாக நினைத்து விட்டுப்போகக் கூடாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33475102087542484602013-05-06T13:41:28.901+05:302013-05-06T13:41:28.901+05:30வாங்க ஜிஎம்பி சார், அது ஒரு நையாண்டிப் பாடலின் வரி...வாங்க ஜிஎம்பி சார், அது ஒரு நையாண்டிப் பாடலின் வரிகள். அதை அப்படியே அர்த்தம் கொள்ளுவீங்கனு எதிர்பார்க்கலை. :))) முழுப்பாடலையும் இன்னிக்குக் கொடுத்திருக்கேன் பாருங்க. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-55654917548659803882013-05-06T13:40:47.046+05:302013-05-06T13:40:47.046+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
நன்றிங்க.வாங்க ராஜராஜேஸ்வரி,<br /><br />நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-88024887866550394892013-05-06T13:40:25.595+05:302013-05-06T13:40:25.595+05:30//இட்லி வகையறாக்களுக்கு பழையது வற்றல் வடாம் பரவாயி...//இட்லி வகையறாக்களுக்கு பழையது வற்றல் வடாம் பரவாயில்லை என்று தோணுதே?//<br /><br />ஆமா இல்ல?? எத்தனை பாரம்பரியங்கள் இழந்திருக்கோம்?? ஹிஹிஹி, இதுக்கு உங்க பதிலைத் தெரிஞ்சுக்க ஆசை. :))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-77903074662832504152013-05-06T13:39:37.154+05:302013-05-06T13:39:37.154+05:30வாங்க அப்பாதுரை,
// மோர்ப்பானையில தவளை விழுந்திரு...வாங்க அப்பாதுரை,<br /><br />// மோர்ப்பானையில தவளை விழுந்திருந்தா அதை எடுத்துப் போட்டும் சாப்பிட்டிருக்கலாம். (எனக்கு இப்படித் தான் தோணுது)//<br /><br />ஹாஹா, இதான் அப்பாதுரையோரியல் டச்!:))) அதெல்லாம் தவளை விழும்படி போட மாட்டாங்க. நல்லா சீல் வைச்சுடுவாங்களாம். அநேகமாக மூடி உள்ள மரக்குடுவைகள் மட்டுமே.<br /><br />அது சரி, தவளை மட்டுமா இருக்கும்?? மீன்?? அதை விட்டுட்டீங்களே? :)))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-92145436825826424742013-05-06T13:37:59.434+05:302013-05-06T13:37:59.434+05:30ஸ்ரீராம், இந்த அஸ்தி, ஆஸ்தி ஒரு விவாதமாகக் குழுமத்...ஸ்ரீராம், இந்த அஸ்தி, ஆஸ்தி ஒரு விவாதமாகக் குழுமத்தில் நடக்கிறது. சம்ஸ்கிருத அகராதியைப் பார்த்துட்டுச் சொல்றேன். எனக்குத் தெரிந்தவங்க எல்லாம் அஸ்தி தான் சரினு சொன்னாங்க. இல்லைனு தி.வா. மற்றும் சிலர் சொல்றாங்க. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-74498103654522888762013-05-06T13:37:00.821+05:302013-05-06T13:37:00.821+05:30கல்யாணமாகிற பெண்களுக்கு குறைந்த பட்ச குடும்பம் நடத...கல்யாணமாகிற பெண்களுக்கு குறைந்த பட்ச குடும்பம் நடத்துகிற பாங்கைக் கூடக் கற்று தராத பெற்றோர்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு தயாராக இருக்கிற பெண்களுக்கு கோலம் போடத் தெரியாது, பூத்தொடுக்கத் தெரியாது, துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது என்று நிறைய தெரியாதுகளையும் தெரிய வைக்கிறவர்களாய், அவர்களை அடுப்பங்கரையில் புழங்க வைக்கிற பெற்றோர்களாய் இருக்க வேண்டும்.//<br /><br />ஐயா, ஏற்கெனவே இது குறித்து நிறையச் சொல்லிட்டேன். தமிழ் ஹிந்துவில் எழுதப் போய் எனக்கு இந்தக் காலப் பெண்களைக் கண்டால் பொறாமைனு சொன்னாங்க. இப்போதைய பெண்கள் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டும் தடுமாறுகின்றனர். பூத் தொடுக்கிறது என்ன? பூ வைத்துக்கொள்ளவே மறுக்கின்றனர். எங்க உறவினர் வீட்டுத் திருமணங்களில் எல்லாம் பந்து பந்தாய்ப் பூச்சரங்கள் நடுத்தர, முதிய பெண்களின் தலைகளை மட்டுமே அலங்கரித்தன. முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களில் இருந்து அதற்குக் கீழே உள்ள பெண்கள் வரை யாரும் பூவே வைத்துக்கொள்ளவில்லை, கல்யாணப் பெண் உட்பட. :((((((( ஒரே சென்ட் வாசம். என்னோட ஆஸ்த்மாவை அதிகமாக்கியது. :(((( பூ வாசம் இல்லை.<br /><br /><br /><br />//இக்காலத்தில் பேச்சுலர்களாய் இருக்கையிலேயே வேலை நிமித்தம் வெளியூர்களில் தங்கும் இளைஞர்கள் சமையல் அனுபவம் கூட கற்றுத் தேர்ந்திருந்திருக்கிறார்கள். ஆனால் பெண்களோ கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பாவனையில் வளர்கிறார்கள். 'இதற்குத் தானா ஆசைப்பட்டேன்' என்று நொந்து போகும் இளைஞர்கள் பற்றி யார் எழுதப் போகிறார்களோ தெரியவில்லை.//<br /><br />கெட்டிக்காரப் பையர்கள் மனைவியை மெல்ல மெல்ல தாஜா செய்து பழக்குகின்றனர். சாமர்த்தியம் இல்லாதவர்கள் நொந்து போகின்றனர். மேலும் இப்போதைய துரித உணவு தான் பெண்களுக்கு வசதியாக இருக்கிறது. அதில் உள்ள கேடுகளைக் குறித்து நினைப்பதில்லை. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-82374194240047087002013-05-06T13:30:37.650+05:302013-05-06T13:30:37.650+05:30வாங்க "இ"சார், எங்க வீட்டிலேயும் இப்படிக...வாங்க "இ"சார், எங்க வீட்டிலேயும் இப்படிக் கடைசிப் பந்தியிலே வேலை செய்யும் ஆட்களுடன் உணவு உட்கொண்டவர்கள் உண்டு. இப்போவும் நடக்கிறது.<br /><br />//அதையெல்லாம் மிகைப்படுத்தி, புனைந்துரையுடன் கலந்து அளிக்கலாம் என்றால், நீங்கள் பொறுப்பாக எழுதி, எம்மை அண்டவிட மாட்டேன் என்கிறீர்கள்!//<br /><br />நீங்கள் எழுதுங்கள் ஐயா, படிக்கக் காத்திருக்கோம். உங்களை அண்டவிடாமல் இருப்பேனா? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-9951455012853422022013-05-06T13:28:41.929+05:302013-05-06T13:28:41.929+05:30வாங்க ஜீவி சார்,
//பல தடவை இதேயே சொல்லிச் சொல்லி ...வாங்க ஜீவி சார்,<br /><br />//பல தடவை இதேயே சொல்லிச் சொல்லி வெறுத்துப் போய் இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை என்கிற மாதிரி வெளிப்பட்ட விளக்கம். திருமணத்தின் தாத்பரியத்தை மனசில் தைக்கிற மாதிரி எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்.//<br /><br />எத்தனை முறை சொன்னாலும் தங்கள் அபிப்பிராயத்தை யாரும் அவ்வளவு சுலபமா மாத்திக்கறதில்லை. :))))) மனைவி என்பவள் இல்லைனா எந்த நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யவும் அனுமதி இல்லை என்பதையும் யாரும் புரிந்து கொள்ளவே இல்லை. அக்னி ஹோத்ரம் பண்ணறவங்களுக்கு திடீர்னு உடல்நலமில்லாமல் பண்ண முடியலைனா அவருக்காக மனைவி அதைச் செய்தே தீர வேண்டும். அவள் இல்லைனா அக்னி ஏது? இதைக் குறித்துச் சொல்ல ஆரம்பிச்சால் பெரிசாப் போகும். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36794546966538355162013-05-06T13:25:48.155+05:302013-05-06T13:25:48.155+05:30கீழே ஜீவி சார் சொல்லி இருப்பதையும் கவனிங்க.கீழே ஜீவி சார் சொல்லி இருப்பதையும் கவனிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7124251989754855142013-05-06T13:25:35.182+05:302013-05-06T13:25:35.182+05:30இப்போதெல்லாம் நீங்க சொல்றாப்போல் பெண்ணைப் பெற்ற அம...இப்போதெல்லாம் நீங்க சொல்றாப்போல் பெண்ணைப் பெற்ற அம்மா, அப்பாக்களை விடப் பிள்ளையைப் பெற்ற அப்பா, அம்மாக்கள் தான் கஷ்டப்படறாங்க. இதான் நிஜம், யதார்த்தம், பெண்கள் சுலபத்தில் வளைந்து கொடுப்பதில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-16507709098100162712013-05-06T13:24:45.673+05:302013-05-06T13:24:45.673+05:30அதுக்காகப் பெண்கள் தனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் ...அதுக்காகப் பெண்கள் தனக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கறதில்லை. நிச்சயமாத் தெரியும். எங்க உறவுகளிலேயே பார்த்திருக்கேன். அந்த நேரம் அவங்களுக்கு அப்படி ஒரு தீர்மானம் எடுக்கும்படி எது தூண்டுகிறது எனத் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து இப்படிக் கல்யாணம் செய்து கொண்ட மூன்று பெண்கள் பின்னர் வருந்துகின்றனர். ஒருத்திக்கு விவாகரத்தே ஆயாச்சு. :((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-11341277377916276342013-05-06T13:23:11.535+05:302013-05-06T13:23:11.535+05:30//இத விட பெரிய கலாட்டாக்கள் எல்லாம் நடக்கறது.
வெள...//இத விட பெரிய கலாட்டாக்கள் எல்லாம் நடக்கறது. <br />வெளிப்படையா சொன்னா கம்யூனிடியோட ஃபால்ஸ் ப்ரெஸ்டிஜ்<br />மெட்ராஸ் காட்டன் மாதிரி வெளுத்துப்போகும்.//<br /><br />இப்போவுமா??? இப்போல்லாம் அப்படி நடக்கிறதாத் தெரியலையே சூரி சார்??? இப்போ இரண்டு பக்கமும் அவங்க அவங்க மனிதர்களை அவங்க அவங்க கவனிச்சுக்கறதோடு காடரிங் மாஸ்டர் தான் எல்லாரையும் உபசரணைகள் செய்யறதும். காலம் மாறிப் போச்சு சார். :)))))<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-18215432403990393432013-05-06T13:21:26.474+05:302013-05-06T13:21:26.474+05:30வாங்க டிடி, இது மாதிரிக் கேள்விப் பட்டிருக்கேன். :...வாங்க டிடி, இது மாதிரிக் கேள்விப் பட்டிருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-164215124881770382013-05-06T13:21:01.441+05:302013-05-06T13:21:01.441+05:30வாங்க கோமதி அரசு, கிராம மக்கள் உதவும் மனத்தோடு இரு...வாங்க கோமதி அரசு, கிராம மக்கள் உதவும் மனத்தோடு இருந்தாலும் இப்போல்லாம் நகரங்களில் திருமணம் செய்யவே விரும்பறாங்களே! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-64708434388260175932013-05-06T13:20:28.378+05:302013-05-06T13:20:28.378+05:30வாங்க வல்லி, இந்தத் தயிர்ப்பானையை மிதக்க விடறது பத...வாங்க வல்லி, இந்தத் தயிர்ப்பானையை மிதக்க விடறது பத்தி தமிழ்த்தாத்தா கூட எழுதி இருக்கார்னு நினைக்கிறேன். :)))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com