tag:blogger.com,1999:blog-18675072.post8894153228684156541..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: "திங்க"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-18675072.post-79110675269816255652018-11-05T16:12:54.155+05:302018-11-05T16:12:54.155+05:30ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் //ஒரு கரண்டி அளவு கடலை...ஜீரா எப்படியும் ஒரு டம்பளர் //ஒரு கரண்டி அளவு கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன்//<br /><br />படத்துடன் அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு எப்போதுமே கண்ணளவு தான். அதுக்குத் தான் ஜீரா அளவையும் கடலை மாவு அளவைப் படத்துடனும் காட்டி இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-51179648207607549182018-11-05T13:46:38.910+05:302018-11-05T13:46:38.910+05:30அளவு ஒன்றும் போடலை. ஒரு அவசரத்துக்கு ரெஃபர் பண்ணவு...அளவு ஒன்றும் போடலை. ஒரு அவசரத்துக்கு ரெஃபர் பண்ணவும் வழியில்லை. <br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா சாம்பசிவம் மேடம். இப்போ நீங்க தேங்காய் பர்பிக்கு கடலை மாவு சேர்த்தீங்கன்னு சொன்னீங்க இல்லையா? அதைத் தேடி வந்தேன்.<br /><br />ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாத அளவுல வச்சிருக்கீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37635442298209572162018-08-15T09:19:16.212+05:302018-08-15T09:19:16.212+05:30கமலா ஹரிஹரன் மேடம்... தைரியமாக நீங்களே செய்து அனுப...கமலா ஹரிஹரன் மேடம்... தைரியமாக நீங்களே செய்து அனுப்புங்க. நான் பெங்களூர் சென்றால், மாமனார் வீட்டில் செய்துகொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். இங்கு செய்தால் நான் சாப்பிடவேண்டி வரும். இன்னும் எவ்வளவுநாள் இனிப்பே இல்லாமல் இருக்கமுடியும் என்று சோதனை செய்துகொண்டிருக்கிறேன் (வெற்றிகரமான 6வது நாள்). அதனால இப்போதைக்குச் செய்வேன் என்று தோணலை (பெண் சாப்பிடமாட்டா. மனைவி சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது)<br /><br />பெங்களூரில் ஒரு ஐயங்கார் பேக்கரியில் மைசூர்பாக் பார்த்தேன். (ஸ்ரீகிருஷ்ணாவின் மைசூர்பா பதம். ஆனால் அகலமா பிரவுன் மஞ்சள் கலந்து அட்டஹாசமா பார்ப்பதற்கு இருந்தது. எப்படி இந்தமாதிரி செய்யமுடியும் என்று யோசித்தேன். கிளறினப்பறம் தட்டுல கொட்டிடறோம். அப்போ யூனிஃபார்ம் கலர்தானே இருக்கும்? இது 7 கப் ஸ்வீட் இல்லையே, பல கலர்களில் கிளறி மேலே மேலே கொட்டுவதற்கு. ஒரு பீஸ் 25 ரூ என்று சொன்னான். எதற்கு எண்ணெய் உடம்புக்கு என்று வாங்கவில்லை)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-38901725410554763392018-08-15T06:18:08.218+05:302018-08-15T06:18:08.218+05:30அனுப்புங்கள். 27-8-18 அன்று வெளியிடுகிறேன்.அனுப்புங்கள். 27-8-18 அன்று வெளியிடுகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26644007278101012642018-08-15T06:14:01.206+05:302018-08-15T06:14:01.206+05:30ஹாஹாஹாஹா! :)))))ஹாஹாஹாஹா! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21786863626459935032018-08-15T06:13:33.371+05:302018-08-15T06:13:33.371+05:30நீங்க உங்க சமையல் குறிப்பை அனுப்புங்க. நெ.த.வும் அ...நீங்க உங்க சமையல் குறிப்பை அனுப்புங்க. நெ.த.வும் அனுப்பட்டும். இரண்டிலும் வித்தியாசம் இருக்குமே! அப்போ ஏதேனும் புதுசாச் செய்யத் தோணும். :))) சும்மா அனுப்பி வைங்க கமலா! ஆனால் எப்போ வருதுனு ஶ்ரீராமுக்குத்க் தான் தெரியும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66440025778669107982018-08-15T06:11:58.096+05:302018-08-15T06:11:58.096+05:30வாங்க கமலா, பொதுவாக வீணாகும் பொருட்களை மீண்டும் சா...வாங்க கமலா, பொதுவாக வீணாகும் பொருட்களை மீண்டும் சாப்பிடும் வகையில் செய்துடுவேன். சாதம் மத்தியானம் வடிச்சது மிஞ்சினால் இரவுக்கு அதைப் பொங்கல் அல்லது வெஜிடபுள் சாதமாக மாத்துவேன். குழந்தைங்க இருந்தால் அதையே சாம்பார் சாதமாகவும் மாத்திடுவேன். இப்போ ரெண்டே பேர் தான் என்பதால் பார்த்துப் பார்த்துத் தான் சமைக்கிறேன். அப்படியும் மிஞ்சும்போது என்ன செய்வது. வத்தக்குழம்பு மிஞ்சினால் மறுநாளைக்குப் பழையது சாப்பிடலாம் என்றிருந்தால் அன்று வத்தக்குழம்பு சாதமாக்கி நல்லெண்ணெய் ஊற்றிக் கறுவடாம் வறுத்துச் சேர்ப்பேன். அன்னிக்குக் குழம்பு ஏதும் வைக்காமல் பச்சடி ஏதேனும் செய்து ரசம் வைத்துக் காய் பண்ணுவேன். அம்பத்தூரில் இருந்தவரை வீட்டு வேலை செய்யும் பெண் வருவாள். தோட்டம் பெருக்க, மாடி பெருக்க என வைச்சிருந்தோம். அவளிடம் அன்றைய சமையல் மிச்சத்தை அன்றே கொடுத்துடலாம். இங்கே அப்படிக் கொடுக்க யாரும் இல்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65892686781418187062018-08-15T06:05:20.392+05:302018-08-15T06:05:20.392+05:30நெ.த,பொதுவா எந்தக் கேக் வகைகளுக்குமே கைவிடாமல் கிள...நெ.த,பொதுவா எந்தக் கேக் வகைகளுக்குமே கைவிடாமல் கிளறுவதே நல்லது. அதிலும் மைசூர்ப்பாகு, கிளறுவதில் தான் சூட்சுமம். சொல்லப் போனால் நான் இன்னும் பத்து நிமிஷம் கிளறி இருக்கலாம். போதும்னு எடுத்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-26359725172067956562018-08-15T05:50:17.197+05:302018-08-15T05:50:17.197+05:30பால் போளியெல்லாம் உடனே பயன்படுத்தணும், ஜீரா போளின்...பால் போளியெல்லாம் உடனே பயன்படுத்தணும், ஜீரா போளின்னா இரண்டு மூன்று தான் வரும்! :) கடலை மாவும் சர்க்கரையும் சேர்த்தால் போதுமே, மைசூர்ப்பாகுக்கு! குறைந்தது 20 வில்லைகள் வந்துடும். :) கல்யாணம் ஆன புதுசில் நினைச்சால் மைசூர்ப்பாகுதான்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47697143650124389762018-08-14T21:07:46.042+05:302018-08-14T21:07:46.042+05:30திப்பிச வேலை என்றாலும் பார்க்க நல்லா இருக்கே.... ...திப்பிச வேலை என்றாலும் பார்க்க நல்லா இருக்கே.... பார்சல் ப்ளீஸ்! :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44931214600583741162018-08-14T20:21:31.583+05:302018-08-14T20:21:31.583+05:30வணக்கம் சகோதரி
சூப்பர். மைசூர் பாகு பதிவு அமர்க்க...வணக்கம் சகோதரி<br /><br />சூப்பர். மைசூர் பாகு பதிவு அமர்க்களமாக வந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.<br />ஜீராவை வைத்து செய்யலாமென்று அறிந்து கொண்டேன். படங்கள் மிக அழகு. வெண்கல உருளி போட்டோக்கள் என் அம்மாவை நினைவுபடுத்தியது. மலர்ந்த நினைவுகளோடு, இனிப்பான மைசூர் பாகு மிக அருமை.<br /><br />இதுல என்ன ஒரு வேடிக்கை யென்றால். நானும் ஒரு மைசூர் செய்து அதை படங்கள் எடுத்து பதிவு எழுதி, எ. பி யா, என் பதிவா, என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.( என்ன ஒரு பிளாடிங் பேப்பர் போங்கள்...) அதிசயமாக இருக்கிறது. இப்போ அதை என்ன செய்வதென்று இன்னும் குழப்பம் மிகுந்து விட்டது. இடையில் சகோதரர் நெல்லை தமிழன் வேறு அவர் பங்குக்கு செய்யப் போகிறேன் என பயமுறுத்துகிறார். ஐயோ.. என்ன செய்வேன்... கடவுளே.. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-79544626084932508292018-08-14T17:27:54.712+05:302018-08-14T17:27:54.712+05:30வாங்க மனோ! ஜீரா 200 மிலி. இருக்கும். பொதுவா நான் க...வாங்க மனோ! ஜீரா 200 மிலி. இருக்கும். பொதுவா நான் கண்ணளவு தான் எனினும் ஜீராவை ஊற்றும்போது பார்த்ததில் 200 இருக்கும்னு தெரிஞ்சது! ஒரு குழிக்கரண்டி கடலைமாவு குவித்து எடுத்துக் கொண்டேன். நெய் ஒரு சின்னக் கிண்ணம் அல்லது கடலைமாவு எடுக்கும் கரண்டியால் தலை தட்டி ஒரு கரண்டி. உங்களுக்கு மைசூர்ப்பாகு சிவந்த நிறம் வேணும்னா நெய்யை நன்கு புகை வரும்படி காய்ச்சிச் சேர்க்கவும். இல்லை மஞ்சள் நிறமே போதும்னா அப்படியே விடலாம். நான் மனப்போக்குக்கு ஏற்றாற்போல் இரு முறையிலும் செய்வேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-21719303426340164792018-08-14T17:22:05.160+05:302018-08-14T17:22:05.160+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏற்கெனவே கல்கத்தாச் சட்டி...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏற்கெனவே கல்கத்தாச் சட்டி படம் வந்திருக்கு. ஆனால் மைசூர்ப்பாகு கிளறும் பெரிய சட்டி தான் போடலை! அவ்வளவு பண்ணறது இல்லையே! மேலே இருந்து எடுக்கும்போது போடறேன். :) இன்னொரு பெரிய சட்டியை என் தம்பி மனைவிக்குக் கொடுத்துட்டேன். :) இங்கே தேவை இல்லைனு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-45679920536484631942018-08-14T17:20:56.690+05:302018-08-14T17:20:56.690+05:30நெ.த. நாங்க எப்போவும் தித்திப்பு பக்ஷணங்கள் வீட்டி...நெ.த. நாங்க எப்போவும் தித்திப்பு பக்ஷணங்கள் வீட்டில் தான் செய்து கொண்டு இருந்தோம். அவருக்கு நீரிழிவு பிரச்னை வந்ததும் யாரானும் வந்தால் செய்யணும்னா செய்யறதுனு ஆயிடுச்சு. பண்டிகை நாட்களில் கூட இப்போல்லாம் பாயசம்னு சாதத்தை நெய் விட்டு மிக்சியில் காய்ச்சிய பாலோடு சர்க்கரை சேர்த்து அடித்து வைப்பது தான்! பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் போன்ற நாட்களில் இதைவிடச் சின்னதா ஒரு வெண்கலக் குண்டு இருக்கு. அதில் பாயசம். பொங்கலுக்கு இதைப் போல் ஓர் வெண்கலப்பானை அதில் தான் பொங்கல்! இனிப்பு சாப்பிடும் நாட்களில் எப்போ தோணுதோ அப்போச் சாப்பிட்டிருக்கோம். :))) இப்போ அப்படி இல்லை. சாப்பிட்டதும் ஓர் துண்டை இரண்டு பேருமாப் பிரிச்சுப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32881426363179799152018-08-14T17:17:54.277+05:302018-08-14T17:17:54.277+05:30வாங்க அனு! பாராட்டிற்கு நன்றி. செய்து பாருங்க!வாங்க அனு! பாராட்டிற்கு நன்றி. செய்து பாருங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67721168461341968092018-08-14T17:17:34.798+05:302018-08-14T17:17:34.798+05:30வாங்க டிடி. இன்னும் சிலவும் செய்யலாம். மேலே படிச்ச...வாங்க டிடி. இன்னும் சிலவும் செய்யலாம். மேலே படிச்சுப் பாருங்க! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84189581849693709562018-08-14T17:17:09.617+05:302018-08-14T17:17:09.617+05:30ஶ்ரீராம், இந்த உருளியே சின்னது. இந்த அளவு உருளி இப...ஶ்ரீராம், இந்த உருளியே சின்னது. இந்த அளவு உருளி இப்போ வாங்கப் போனாங்க என்னோட சிநேகிதி ஒருத்தர். 2,000 ரூபாயாம் இங்கே மங்கள்&மங்களில்! பேசாமத் திரும்பிட்டாங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-25105267066565001582018-08-14T17:16:49.963+05:302018-08-14T17:16:49.963+05:30காலா ஜாமூன் என் மனைவிக்கு ரொம்பப் பிடிக்கும். அது ...காலா ஜாமூன் என் மனைவிக்கு ரொம்பப் பிடிக்கும். அது பஹ்ரைன் உ.பிரதேசத்துக் கடைகள்ல எப்போவும் கிடைக்கும். தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது, ஸ்டஃப் பண்ணின ஸ்பெஷல் காலா ஜாமூனும் கிடைக்கும். 'காலா மைசூர்பாக்' கேள்விப்பட்டதில்லை.ஹாஹா. ஆனா ஹோட்டல்ல கண்டதையும் சேர்த்து, 'ஹார்லிக்ஸ் மைசூர்பாக்', 'பூஸ்ட் மைசூர்பாக்', 'ரோஸ் மைசூர்பாக்' என்று கலந்து கட்டறாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-1708649061053404742018-08-14T17:16:09.203+05:302018-08-14T17:16:09.203+05:30நெ.த. நீங்க சொல்வது கலப்படம். நானும் படிச்சிருக்கே...நெ.த. நீங்க சொல்வது கலப்படம். நானும் படிச்சிருக்கேன். ஆனால் உண்மையான சில்வர் ஃபாயில் விலை ஜாஸ்தி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40854547436504427152018-08-14T17:15:26.366+05:302018-08-14T17:15:26.366+05:30ஹிஹிஹி ஶ்ரீராம், அது யாரு பெரியவங்க? இங்கே குழந்தை...ஹிஹிஹி ஶ்ரீராம், அது யாரு பெரியவங்க? இங்கே குழந்தைங்க தான் ஜாஸ்தி! :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-4782653687696370042018-08-14T17:14:50.470+05:302018-08-14T17:14:50.470+05:30ஜீராவில் பாலைக் காய்ச்சி ரோஸ் எஸென்ஸ் சேர்த்துக் க...ஜீராவில் பாலைக் காய்ச்சி ரோஸ் எஸென்ஸ் சேர்த்துக் கலந்து வைக்கலாம். எலுமிச்சம்பழங்கள் வாங்கிச் சாறு எடுத்துக் கொண்டு லெமன் சால்ட் போட்டுக் கலந்து மஞ்சள் கலர் அல்லது லெமன் எஸ்ஸென்ஸ் விட்டு இந்த ஜீராவோடு கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வந்தால் பாயசத்துக்குப் பயன்படுத்தலாம். ஒண்ணும் இல்லைனா மைதாமாவு பிஸ்கட் செய்து இந்த ஜீராவைச் சூடு செய்து போட்டு ஊற வைச்சு எடுத்து வைக்கலாம். இல்லைனா பாதாம், முந்திரிகளை நெய்யில் வறுத்து இவற்றில் போட்டுச் சிக்கி மாதிரி செய்யலாம். எதுக்குக் காசு கொடுத்து வாங்கிட்டுத் தூரக் கொட்டறீங்க? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-40844975393629610622018-08-14T17:11:59.184+05:302018-08-14T17:11:59.184+05:30நெல்லைத் தமிழரே, உண்மையிலே காலா ஜாமூன் அப்படினு ஒண...நெல்லைத் தமிழரே, உண்மையிலே காலா ஜாமூன் அப்படினு ஒண்ணு உண்டு. வெங்கட்டைக் கேளுங்க சொல்லுவார். ஸ்டஃப் பண்ணின ஜாமூனும் உண்டு! ஏன் மதுரை சமையல் எழுதி இருக்கேன். கும்பகோணம் எங்க மாமியார் வீட்டுப் பாரம்பரியச் சமையல் எழுதி இருக்கேன். நெல்லை சமையலும் எழுதி இருக்கேனே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-36613853441798442022018-08-14T17:10:23.556+05:302018-08-14T17:10:23.556+05:30//அவருக்குத் தான் ஒரு கைப்பிடி சாதம் கூடப் போனாலும...//அவருக்குத் தான் ஒரு கைப்பிடி சாதம் கூடப் போனாலும் எகிறும். :)// சாரி சாரி, மன்னிக்கவும். அது உங்களைச் சொன்னது இல்லை. ரங்க்ஸைச் சொன்னேன். அங்கே அந்த வார்த்தை விடுபட்டிருக்கு. "நம்ம ரங்க்ஸ் இருக்காரே, அவருக்குத் தான்" என வந்திருக்கணும். அந்த வார்த்தைகள் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது விடுபட்டிருக்கு. மன்னிச்சுக்குங்க! :( தவறான பொருளில் வந்திருப்பதையே இப்போத் தான் பார்க்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-8043819815341242952018-08-14T17:07:58.118+05:302018-08-14T17:07:58.118+05:30இல்லை. சிலர் வீட்டில் பண்ணினதுன்னா கொஞ்சம் மேலும் ...இல்லை. சிலர் வீட்டில் பண்ணினதுன்னா கொஞ்சம் மேலும் கீழும் பார்ப்பாங்க! அதையும் பார்த்திருக்கேன். :) கோயிலுக்குப் போனால் பிரசாதம் தான் நினைப்பா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-6435820329044363162018-08-14T17:05:41.924+05:302018-08-14T17:05:41.924+05:30அப்போ வெங்கட்டும் ரிஷபன் சாரும் கூட வந்தாங்க. மைசூ...அப்போ வெங்கட்டும் ரிஷபன் சாரும் கூட வந்தாங்க. மைசூர்ப்பாகை ரசிச்சுச் சாப்பிட்டாங்க! பார்க்கிறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com