tag:blogger.com,1999:blog-18675072.post9167200923853692404..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: மாதங்கி மெளலிக்காகச் சில எண்ணங்கள்.Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-18675072.post-63087612595282978212011-07-17T19:44:14.115+05:302011-07-17T19:44:14.115+05:30'மக்கள் பேசிக்கொள்வார்கள்' என்ற காரணத்தினா...'மக்கள் பேசிக்கொள்வார்கள்' என்ற காரணத்தினால் ராமன் கேட்டான் என்பது சால்ஜாப்பு :) ராமன் காட்டுக்குப் போகவில்லையென்றாலும் மக்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அப்படியே மக்கள் பேசுவார்கள் என்று நினைத்தாலும் அதையல்லவா சீதையிடம் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்? அதைவிட்டு ராமன் பேசிய பேச்சு!! <br /><br />எழுதியவர் என்ன நினைத்து இந்தச் சம்பவத்தை சேர்த்தாரோ தெரியாது - ஆனால் பெண் ஒழுக்கம் பற்றிப் பேசும் நாமெல்லாம் சூர்ப்பனகையிடம் திருமணமான ராம-லட்சுமணரின் flirting பற்றி மறந்து விடுகிறோமே ஏன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30283104535382189632011-07-17T19:39:42.985+05:302011-07-17T19:39:42.985+05:30விசுவாமித்திரன் வசிசஷ்டர் தொடங்கி விபீஷணன் முடிய ப...விசுவாமித்திரன் வசிசஷ்டர் தொடங்கி விபீஷணன் முடிய பலர் வாயால் ராமன் கடவுளின் அம்சம் என்கிறார்கள் வால்மீகி ராமாயணத்திலும். <br /><br />ஒரு தலைவன் பரந்த மனப்பான்மைக்கும் புரிதலுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தீக்குளித்தாலும் மாற்றான் இல்லத்தில் இருந்தது மாறப் போவதில்லையே? சீதை தீக்குளித்ததால் ராமனுடைய சந்தேகம் தீர்ந்ததா? இல்லையே? திரும்பவும் வந்ததே? சீதை தீக்குளித்தது ராமனுடைய சந்தேகத்தைப் போக்க அல்ல - ஒரு ஆணுடைய கேவலமான எண்ணத்தைச் சுட்டிக் காட்ட என்றே நினைக்கிறேன். <br /><br />இந்தக் காலக் கட்டத்தில் என்னென்னவோ கேட்கத் தோன்றுகிறது என்றாலும், அந்தக்காலக் கட்டத்திலும் இது முறையென்று தோன்றவில்லை. <br /><br />ராமனிடம் எத்தனையோ பாராட்டத்தக்க குணங்களைக் காண முடிந்தாலும், சில குறைகளையும் காண முடிகிறது. அதனால் தான், நீங்கள் சொல்வது போல், இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறோம். வால்மீகி, வியாசர்களின் வெற்றியென்றால் இது தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-61273910214935340572011-07-16T21:06:47.637+05:302011-07-16T21:06:47.637+05:30இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்து கொண்...இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம் எனில் எவ்வளவு ஆழமான பதிவுகள் இருக்க வேண்டும்?//<br /><br />மன்னிக்கவும், இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்கிறோமென்றால் ராமனைப் பற்றிய நம் கருத்துக்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும், என வந்திருக்கணும். தப்பாய்த் தட்டச்சிட்டேன். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-83585722333253966782011-07-16T21:04:48.157+05:302011-07-16T21:04:48.157+05:30உண்மையில் பாவப்பட்ட ஜன்மம் என்றால் அது ராமன் தான்....உண்மையில் பாவப்பட்ட ஜன்மம் என்றால் அது ராமன் தான். இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் விமரிசனம் செய்து கொண்டிருக்கிறோம் எனில் எவ்வளவு ஆழமான பதிவுகள் இருக்க வேண்டும்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73068813563609942092011-07-16T21:04:06.587+05:302011-07-16T21:04:06.587+05:30நான் ராமனை எங்கும் ஆணின் பார்வையில் இருந்து பார்க்...நான் ராமனை எங்கும் ஆணின் பார்வையில் இருந்து பார்க்கவே இல்லை. இப்போது கேட்கும் இந்தக் கேள்விகளைச் சின்ன வயசில் கேட்டுக் கொண்டிருந்தவள் தான் நானும். ஆனால் இந்த தர்மத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்ததும், யாருக்கு எப்போது எது தர்மம் என்பது அவரவர் எடுக்கும் சரியான முடிவில் தான் இருக்கிறது என்பது புரிந்த பிறகு ராமன் மேல் கோபம் வரவில்லை. அரச தர்மத்தை அவன் கடைப்பிடித்தான். மனைவியை மட்டுமல்லாமல் தன் அருமைத் தம்பியான லக்ஷ்மணனையும் துறக்க நேரிடுகிறதே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-73261272805016650772011-07-16T21:01:50.365+05:302011-07-16T21:01:50.365+05:30ராமன் செய்தது தவறு இல்லை என எங்கும் சொல்லவில்லை. வ...ராமன் செய்தது தவறு இல்லை என எங்கும் சொல்லவில்லை. வால்மீகியும் சொல்லவில்லை. ஒரு அரசனாகச் சில சட்டதிட்டங்களை அவன் மதித்தே ஆகவேண்டும். நாட்டிற்காக மனைவியைத் தியாகம் செய்கிறான். <br /><br />AANDHI படம் பார்த்திருக்கீங்க இல்லை?? அதிலே மனைவி அரசியல் வாழ்க்கைக்காகக் கணவனைத் துறப்பாள். அவளுக்குக் கணவனிடம் அன்பில்லையா? ஆனால் அவள் எடுத்துக்கொண்ட பாதை அவளுக்கு மிக முக்கியம். ஆகவே குடும்ப வாழ்க்கையைத் தியாகம் செய்கிறாள் இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-65447705355855904732011-07-16T20:57:09.492+05:302011-07-16T20:57:09.492+05:30யு.எஸ்ஸிலும் அதிபராக வரப் போகிறவர்கள் ஆணானாலும், ப...யு.எஸ்ஸிலும் அதிபராக வரப் போகிறவர்கள் ஆணானாலும், பெண்ணானாலும் அவர்கள் ஒழுக்கம் முக்கியமாய்ப் பார்க்கப் படுகிறது அல்லவா?? இந்தக்கால கட்டத்திலும், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாய், மனைவி ,மக்களோடு வாழ்பவர்களாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் அல்லவா? அப்போ ராமாயணக் கால கட்டத்தில் இருந்திருக்கக் கூடாதா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-29410011322691716242011-07-16T20:54:11.789+05:302011-07-16T20:54:11.789+05:30ராமன் சீதையை சந்தேகப் படவே இல்லை. பெண்ணாசையில் பி...ராமன் சீதையை சந்தேகப் படவே இல்லை. பெண்ணாசையில் பிறன் வீட்டில் இருந்த மனைவியை ராமன் ஏற்றுக்கொண்டு விட்டான் என மக்கள் பேசிக்கொள்வார்கள் என்று தான் யோசிக்கிறான். ஒரு அரசனாக வேறு எவ்வகையில் முன்னுதாரணம் காட்டி இருக்க வேண்டும்?? அரசன் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்று குடிமக்கள் நினைப்பார்கள் அல்லவா? அரசன் மட்டும் ஒழுக்கத்துடன் இருந்தால் போதுமா? அரசி? அதிலே தான் சந்தேகம் வந்துவிடக் கூடாதே என ராமன் கவலைப் படுகிறான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32497093784447164442011-07-16T20:51:54.124+05:302011-07-16T20:51:54.124+05:30ஹிஹிஹி, என்னோட ப்ளாகே என்னை அநானி நீனு சொல்லி அநும...ஹிஹிஹி, என்னோட ப்ளாகே என்னை அநானி நீனு சொல்லி அநுமதிக்க மாட்டேன்னு சொல்லுது. ஒரு வழியா அநுமதி வாங்கிண்டு உள்ளே வந்தேன். :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-84168660204861019122011-07-16T20:51:15.360+05:302011-07-16T20:51:15.360+05:30ராமன் சீதையை சந்தேகப்பட்டது தவறு என்றே நினைக்கிறேன...ராமன் சீதையை சந்தேகப்பட்டது தவறு என்றே நினைக்கிறேன். ராமன் அரசனாக, ஒரு முன்னுதாரணமாக நடந்து கொண்டிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. அரசனைத் தொடரும் பாமரனுக்கும் பரந்த மனப்பானமை வந்திருக்குமே? ராமன் செய்கையினால் சீதை தவறு செய்தாள் என்ற களங்கம் நிரந்தரமாகிவிட்டதே? //<br /><br />அப்பாதுரை, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க. வாங்க, மாதங்கியின் பதிவிலேயும் உங்கள் கருத்துக்களைப் படிச்சேன். :))))<br /><br />ராமன் குழப்பவாதியே அல்ல. எப்படி சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்கணும்னு சொல்றாங்களோ அதே நடைமுறை தானே இங்கேயும். வால்மீகி எங்கேயுமே ராமனைக் கடவுள்னு சொல்லலை. ராமனைக் கடவுளாகக் காட்டி எழுதியது துளசிதாசர், கம்பர் போன்றவர்கள். இவங்கல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வந்தவங்க. இவங்க பார்வை தான் நமக்கு மனசிலே பதிஞ்சிருக்கு. அதனால் ராமனைக் குழப்பமாய்ப் பார்க்க நேரிடுகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13096902643430429592011-07-16T20:12:38.147+05:302011-07-16T20:12:38.147+05:30அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆழமான சிந்தனைகள். ச...அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஆழமான சிந்தனைகள். சிலவற்றை ஏற்கமுடியவில்லை. ராமன் சீதையை சந்தேகப்பட்டது தவறு என்றே நினைக்கிறேன். ராமன் அரசனாக, ஒரு முன்னுதாரணமாக நடந்து கொண்டிருக்கலாமென்று தான் தோன்றுகிறது. அரசனைத் தொடரும் பாமரனுக்கும் பரந்த மனப்பானமை வந்திருக்குமே? ராமன் செய்கையினால் சீதை தவறு செய்தாள் என்ற களங்கம் நிரந்தரமாகிவிட்டதே? தீயில் குளித்தால் மட்டும் சரியாகி விடுமா? உதாரணத்தில் சொல்லப்படும் சாதாரண ஆண்களின் மனைவிகளும் தீக்குளித்து தங்கள் "கற்பை" வெளிப்படுத்த வேண்டுமா?<br /><br />வாதத்துக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ராமன் செய்தது தவறு என்று என்று ஏற்க மறுக்கிறோம் - அது தான் உண்மை என்று தோன்றுகிறது. அதற்கான விளக்கம் ராமாயணத்திலேயெ சூட்சுமமாக இருப்பதாக நினைக்கிறேன். மானிட அவதாரம் எடுத்த கடவுள் மானிடரின் அல்பங்களுக்கும் பலியாகிறான் - குறிப்பாக ஆண்கள். ராமனும் சாதாரண மானிட ஆண் போல் சந்தேகமும் வரட்டு கௌரவமும் கொண்டான். கணத்தில் அதை உணர்த்தி சீதை குளித்த தீ அதை அழித்தது. இந்தப் பார்வை பொருந்துவதாக நான் நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-63317466321828668542011-07-09T20:22:39.398+05:302011-07-09T20:22:39.398+05:30வாங்க ஏடிஎம், நல்வரவு. ரசனைக்கு நன்றி.வாங்க ஏடிஎம், நல்வரவு. ரசனைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-58763991672765925372011-07-08T20:22:56.191+05:302011-07-08T20:22:56.191+05:30புனைவோ புராணமோ... படிக்க நல்லா இருக்கு உங்க எல்லோர...புனைவோ புராணமோ... படிக்க நல்லா இருக்கு உங்க எல்லோரின் விவாதங்களும்... மாதங்கியின் தமிழ் அழகுனா, கீதா மாமியின் விளக்கங்கள் அழகு... எங்களுக்கு ட்ரீட் தான்...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-39922911341583682012011-07-08T09:51:44.849+05:302011-07-08T09:51:44.849+05:30வாங்க மாதேவி, நன்றிம்மா.வாங்க மாதேவி, நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-67396822627865866452011-07-08T09:51:27.942+05:302011-07-08T09:51:27.942+05:30எல்கே, சந்தேகமே இல்லாமல் புனைவு தான். :Dஎல்கே, சந்தேகமே இல்லாமல் புனைவு தான். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-47841225676667825232011-07-08T09:50:59.896+05:302011-07-08T09:50:59.896+05:30ஸ்ரீநி, அங்கேயும் படிச்சேன், நான் விரிவாய் எழுதாதற...ஸ்ரீநி, அங்கேயும் படிச்சேன், நான் விரிவாய் எழுதாதற்குக் காரணம் கண்ணன் கதை எழுதி வருகிறேன் அல்லவா? அதிலே அடுத்துத் திரெளபதியின் பிறப்பு, சுயம்வரம் குறித்தே வரும். அப்போது எழுத வேண்டி இருக்குமே. இப்போச் சில குறிப்புகள் கொடுத்தால் போதும்னு விட்டுட்டேன். என்றாலும் விரிவாய்க் குறிப்பிட்ட உங்களுக்கு நன்றி.:)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-62130567249985383782011-07-08T09:49:16.731+05:302011-07-08T09:49:16.731+05:30வாங்க ஜெயஸ்ரீ, உண்மைதான் , இதெல்லாம் எத்தனை யுகங்க...வாங்க ஜெயஸ்ரீ, உண்மைதான் , இதெல்லாம் எத்தனை யுகங்கள் ஆனாலும் அலுக்காமல் விவாதிப்போமோ என்னமோ. நீங்க சொன்ன புத்தகம் படிக்கலை. பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7730196550771373012011-07-08T09:48:16.620+05:302011-07-08T09:48:16.620+05:30கர்ணனின் பாத்திரப் படைப்பு எப்படி இன்று ஒரு தியாகி...கர்ணனின் பாத்திரப் படைப்பு எப்படி இன்று ஒரு தியாகியாகவும் கொடைவள்ளலாகவும், செய்நன்றி மறக்காதவனாகவும் சித்திரிக்கப் படுகிறதோ, அது போல் திரெளபதியும் ஆணாதிக்கவாதிகளால் கொடுமைப் படுத்தப் படும் ஒரு பெண்ணாகச் சித்திரிக்கப் படுகிறாள்.<br /><br />அதே சமயம் கடைசி வரையிலும் அரியணையே ஏறாத துரியோதனன் தன் மக்களுக்கு நல்லாட்சியைத் தகப்பன் சார்பாக வழங்கினான் என்றும் நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்யத் துணையாக இருந்தான் எனவும் பாரதம் கூறும்.<br /><br />ஏகலவ்யனும் இப்படியாகச் சித்திரிக்கப் பட்டவனே.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13574424960739364112011-07-08T09:45:57.699+05:302011-07-08T09:45:57.699+05:30அந்தப் பழம் மரத்தினில் போய் ஒட்டுவதும் கேள்வி ஞானம...அந்தப் பழம் மரத்தினில் போய் ஒட்டுவதும் கேள்வி ஞானம் தானே தவிர மூலத்தில் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23890218768643645002011-07-08T09:45:29.875+05:302011-07-08T09:45:29.875+05:30முந்தைய husband கூட கழித்த நினைவுகள மறக்கக்கூடிய வ...முந்தைய husband கூட கழித்த நினைவுகள மறக்கக்கூடிய வரம்..."-//<br /><br />virginity குறித்து நானும் சொல்லலை. கழித்த நாட்கள் குறித்தது பற்றித் தான். :))))))) சாதாரணமாகவே கணவனுக்கு ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்யும் பெண்களுக்கு ஊரில் கணவன் இல்லை என்றாலே நினைவுகள் மோதும். <br />அப்படி இருக்கையில் திரெளபதி ஒரு வருஷம் முழுசும் ஒருவனுடன் வாழ்ந்து விட்டுப் பின்னர் அடுத்த வருஷம் இன்னொருவனோடு வாழத் தயாராகின்றாள்.<br /><br />உடல் மட்டுமில்லாமல் மனதையும் அதற்கேற்பத் தயார் செய்து கொண்டதாகவே பாரதம் சொல்லும். யாருடன் வாழ்ந்தாலும் உண்மையாக அவர்களுக்கு மனைவியாகவே வாழ்ந்திருக்கிறாள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் நிலைமையைக் குறித்து அவள் இகழ்ச்சியாகவோ, தன்னிரக்கம் கொண்டதாகவோ பாரதத்தில் காண முடியாது.<br /><br />இன்று தன்னிரக்கவாதியாக திரெளபதியைச் சித்தரிக்கிறவர்கள் அவளுடைய பாத்திரப் படைப்பின் ஆழத்தையும், கம்பீரத்தையும் முழுமையாக உணர முடியாதவர்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-33662592159487517462011-07-08T09:41:43.998+05:302011-07-08T09:41:43.998+05:30மாதங்கி, இது புத்தக விமரிசனம் என்ற அளவிலே தான் நான...மாதங்கி, இது புத்தக விமரிசனம் என்ற அளவிலே தான் நானும் படித்தேன். அதோட நான் purist னு எல்லாம் சொல்லிக்கலை. நீங்க குறிப்பிடும் இந்தப் புத்தகமோ, ஜெயஸ்ரீ சொல்லி இருப்பதோ படித்ததில்லை என்றாலும் திரெளபதி குறித்த இந்த விமரிசனங்களை மற்றச் சில எழுத்தாளர்கள் எழுதியதை ஆங்கிலத்திலும், தமிழிலும் படித்திருக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12792504892655389132011-07-08T09:39:31.413+05:302011-07-08T09:39:31.413+05:30வாங்க் அஷ்வின் ஜி, அத்தி பூத்திருந்தப்போவே நினைச்ச...வாங்க் அஷ்வின் ஜி, அத்தி பூத்திருந்தப்போவே நினைச்சேன். ஏதோ அதிசயம் நிகழ்ந்திருக்குனு. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-81836835576756514722011-07-08T09:38:55.896+05:302011-07-08T09:38:55.896+05:30வாங்க ராம்வி, வரவுக்கு நன்றி. பொதுவாக நாத்திகர்கள...வாங்க ராம்வி, வரவுக்கு நன்றி. பொதுவாக நாத்திகர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கூட சீதையின் அக்னிப்ரவேசம், காட்டுக்குச் சென்றது இரண்டையும் குறித்தும், திரெளபதியின் நிலைமை குறித்தும் அலசி ஆராய்ந்து துவைத்துக் காயப்போடுகிறார்கள். <br /><br />ஆனால் அதன் உள்ளார்ந்த பொருளை யாருமே புரிந்து கொள்வதில்லை. ஒரு நல்லாட்சி நடைபெற குடிமக்களின் நலனுக்காகவே ஒரு அரசனும், அரசியும் சொந்த வாழ்க்கையையும் பணயம் வைக்க வேண்டி இருந்தது என்பது இன்றைய தினங்களில் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றாகி விட்டது. :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-69532211292178021052011-07-08T09:02:38.177+05:302011-07-08T09:02:38.177+05:30விளக்கங்கள் தெரிந்துகொண்டேன். அருமை.விளக்கங்கள் தெரிந்துகொண்டேன். அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-31183985094788447712011-07-08T07:48:02.317+05:302011-07-08T07:48:02.317+05:30--எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com