tag:blogger.com,1999:blog-18675072.post1763157526707506621..comments2024-03-24T17:36:13.849+05:30Comments on எண்ணங்கள்: அடுத்தடுத்த இரு மரணங்கள் சொல்லும் செய்திகள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18675072.post-73139021202135454712018-03-06T18:16:05.884+05:302018-03-06T18:16:05.884+05:30ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய சுருக்கமான ஆனால...ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய சுருக்கமான ஆனால் தகவல் நிறைந்த பதிவுக்கு பாராட்டுக்கள். <br /><br />ஊடகங்களில் ஜெயேந்திரர் மறைவுக்கு பலரும் இரங்கல்/வருத்தம் தெரிவிப்பது எதற்காக என்று புரியவில்லை. அப்படி செய்வது மகான்களையும் மற்ற சாதாரண மனிதர்கள் போல நினைப்பதையே காட்டுகிறது. மகான்கள் இறப்பதில்லை. ஸ்தூல ரூபத்தை விட்டு சூக்ஷும ரூபத்திற்கு சென்று நம்மை வழிநடத்துகிறார்கள்.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-76657213040858898042018-03-06T15:46:04.682+05:302018-03-06T15:46:04.682+05:30//ஆனால் அந்த வாழ்க்கையை அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட...//ஆனால் அந்த வாழ்க்கையை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டு நல்லாத்தான் வாழ்ந்தார்// இல்லை! :( விடுங்க! போயாச்சு! இனிமே என்ன!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-44583848027531902172018-03-06T15:27:27.993+05:302018-03-06T15:27:27.993+05:30ஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புரிந...ஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புரிந்திருக்குமோ? - இருக்கலாம். ஒரு சம்பவத்தைப் பற்றி நான் எண்ணுவதற்கும், என் மனைவி சொல்வதற்கும் வித்தியாசத்தை நான் கண்டிருக்கிறேன். அவள், பெண் பக்கம் (Ladies side) பரிந்து பேசுவதாக எனக்குத் தோன்றும்.<br /><br />இருந்தாலும், ஸ்ரீதேவி, தான் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட எல்லா நிர்ப்பந்தங்களும் அவர் விரும்பிப் போன வாழ்க்கை கொடுத்தது. அவர் தன் வாழ்கைப் பாதையில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கலாம், ஆழ் மனதில் சந்தோஷமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த வாழ்க்கையை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டு நல்லாத்தான் வாழ்ந்தார். இப்போ அமலா, ஏற்கனவே திருமணமான நாகார்ஜுனாவைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். நடிகைகள் லைம் லைட்டில் இருக்கிறார்கள். ஒரு பக்கம் ரசிகர், புகழ் வெளிச்சம். அதற்குப் பின்னால் மன வருத்தம், காம்பிரமைஸ், தன் உழைப்பை உறிஞ்சி வாழும் குடும்பம் (ஸ்ரீவித்யா, ராஜகுமாரி, காஞ்சனா-உங்கள் காஞ்சனா, நயனதாரா, தேவிகா இன்று இந்த லிஸ்டுக்கு முடிவே கிடையாது) தியாகம் செய்யாத ஒரு மனிதப் பிறப்பு சுட்டிக் காட்டுங்கள் பார்க்கலாம். எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் தியாகம் செய்தவர்கள்தாம். <br /><br />ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் செய்தது, சமூகத்திற்கான பங்களிப்பு. அது தனித்துவம் உடையது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-3054851784423245192018-03-06T12:53:56.272+05:302018-03-06T12:53:56.272+05:30வாங்க முனைவர் ஐயா! முதலுக்குச் சொன்ன கருத்துக்கு ந...வாங்க முனைவர் ஐயா! முதலுக்குச் சொன்ன கருத்துக்கு நன்றி.<br /><br />இரண்டாவதுக்கு ரொம்ப விரிவாக எழுதணும் என்றாலும் மரபுகளை மீறிய ஒரு மனிதராக உண்மையான ஏழைப்பங்காளராக, பட்டி, தொட்டியெல்லாம் தங்கள் சேவை போய்ச் சேர வேண்டும் என்ற முனைப்பு உள்ளவராக இருந்தார். அது மடத்தில் உள்ளவர்களுக்கே நெருடல் தான்! ஆகவே தான் தனியாகப் போய் இருந்து கொண்டு தொண்டுகளைத் தொடரலாம் என நினைத்தே வெளியே சென்றார். பாதை எல்லாம் மாறவில்லை. அவர் பாதையில் போவதற்காகவே தனியே சென்றார். பின்னால் அப்போதைய குடியரசுத் தலைவர்(?) ஆர்.வெங்கட்ராமன் தலையீட்டில் மீண்டும் மடத்துக்கு வந்தார். ஆனால் தன் காரியங்களை எப்போவும் போல் தொடருவேன் என்னும் நிபந்தனையோடு தான். அப்போது தான் அவசரம் அவசரமாக அவர் இடத்துக்கு விஜயேந்திரர் தேர்வு செய்யப்பட்டார். பெரியவருடனான நிகழ்வுகள், விழாக்கள், விசேஷங்களில் பல ஆண்டுகள் ஜெயேந்திரர் பங்கு கொள்ளாமலே இருந்து வந்தார். இன்னும் எழுதப் போனால் பெரிதாகிவிடும். மடத்தின் ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் ஏற்றத் தாழ்வுகளை மறுத்தவர் ஜெயேந்திரர்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-12095996476805732542018-03-06T12:50:17.531+05:302018-03-06T12:50:17.531+05:30ஜெயேந்திரர் குறித்த தகவல்களை வெகு காலமாகப் பகிர எண...ஜெயேந்திரர் குறித்த தகவல்களை வெகு காலமாகப் பகிர எண்ணிப் பகிர முடியாமல் போனது! இப்போ சமயம் வாய்க்கவே போட்டேன். தனித்தனியாகப் போடணும்னு தோணலை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-13539364851030329192018-03-06T12:49:34.058+05:302018-03-06T12:49:34.058+05:30வாங்க நெ.த. பொதுவான விஷயம் இருப்பதாக நினைக்கலையே! ...வாங்க நெ.த. பொதுவான விஷயம் இருப்பதாக நினைக்கலையே! இருவரும் புகழ் வாய்ந்தவர்கள் அவரவர் வழியில். ஶ்ரீதேவி இறப்பு மர்மம்! இவர் இறப்பு மூப்பு, நோய் காரணம். அவ்வளவே! மற்றபடி இருவருமே ஒரு வகையில் தியாகம் செய்தவர்கள். என்னதான் குடும்பத்துக்காகச் செய்தாலும் அவர் தனக்கென வாழவே இல்லை. ஒரு வேளை நீங்கள் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் புரிந்திருக்குமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-10302161498754514262018-03-06T12:48:04.207+05:302018-03-06T12:48:04.207+05:30நன்றி பானுமதி. உங்கள் பதிவை நானும் எதிர்பார்த்தேன்...நன்றி பானுமதி. உங்கள் பதிவை நானும் எதிர்பார்த்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-57469326430144468252018-03-06T12:47:36.014+05:302018-03-06T12:47:36.014+05:30அதிரடி, மீ குட்டிப்பாப்பாவாக்கும்! பனிரண்டு வருஷமா...அதிரடி, மீ குட்டிப்பாப்பாவாக்கும்! பனிரண்டு வருஷமா ஒரே ஒரு குழந்தைத் தலைவியாக இணையத்தில் வெற்றி உலா வரேன்! தெரிஞ்சுக்குங்க! :))))) நர்சரிப் பாட்டுப் பாடினா என்னவாம்? குழந்தை பாடுதேனு சந்தோஷப்படாமல்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-41512670615711752012018-03-05T10:24:32.151+05:302018-03-05T10:24:32.151+05:301) தென் கோடியில் பிறந்து இந்தியாவில் திரையுலகில் த...1) தென் கோடியில் பிறந்து இந்தியாவில் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர். சிலராலேயே இது சாத்தியப்படும்.2) இவரைப் பற்றிய சாதனைகள் அதிகம் கூறப்பட்டாலும் இடையே சில காலம் இவர் தன் பாதை மாறி வெளியே சென்றதை நினைக்கும்போது சற்றே நெருடுகிறது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-66752300363731451162018-03-05T00:38:25.747+05:302018-03-05T00:38:25.747+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நீங்க இன்னும் நேசறியிலயே இர...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நீங்க இன்னும் நேசறியிலயே இருக்கிறீங்கபோல:) நல்ல வேளை ஹைஸ் ஸ்கூல் க்கு வந்திருந்தா கெட்ட வார்த்தையில திட்டியிருப்பீங்க:) ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-60544798204153563042018-03-04T16:12:50.257+05:302018-03-04T16:12:50.257+05:30சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளை, எதை வைத்து சேர்த...சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளை, எதை வைத்து சேர்த்து ஒரு இடுகையாக்கினீர்கள்?<br /><br />ஸ்ரீதேவி செய்தது, சாதாரணமாக யாரும் செய்யக்கூடியது. தன் குடும்பத்துக்காக உழைப்பது, தான் விரும்பிய வாழ்க்கை வாழ்ந்தது என்று. அதில் நெறி போன்றவற்றை எதிர்பார்க்கவேண்டிய அவசியமில்லை. என்ன.. குறைந்த வயதில் மரணம். ஆனாலும் புகழ் வெளிச்சத்தில்தானே இருந்தார்.<br /><br />ஆனால் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் இரு பாதைகள் இருந்தன. ஒன்று டிரெடிஷனல் பாதை, இன்னொன்று புதிய பாதை (இதில் எல்லோரையும் அரவணைப்பதும், மடத்துக்கான நிதி ஆதாரங்களைக் கவனிப்பதும்). கடினமான பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். அதன் விளைவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டார். இதனை தனி இடுகையாகப் போட்டிருந்தீர்களென்றால் கௌரவமாக இருந்திருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-2492541202962793942018-03-04T15:26:04.610+05:302018-03-04T15:26:04.610+05:30என் மனதில் உள்ளதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.என் மனதில் உள்ளதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-27678819422587464622018-03-04T13:13:51.415+05:302018-03-04T13:13:51.415+05:30வாங்க கோமதி அரசு. மிக்க நன்றி.வாங்க கோமதி அரசு. மிக்க நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-7535923343282325922018-03-04T09:25:32.630+05:302018-03-04T09:25:32.630+05:30 இருமரணத்திற்கும் அஞ்சலிகள்.
இருவரைப் பற்றியும் ந... இருமரணத்திற்கும் அஞ்சலிகள்.<br /><br />இருவரைப் பற்றியும் நல்ல கெட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.<br />நீங்கள் நல்லதை பகிர்ந்த விதம் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-87293203658719650172018-03-04T07:13:21.905+05:302018-03-04T07:13:21.905+05:30வாங்க வல்லி. அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண மு...வாங்க வல்லி. அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண முயன்று அதில் ஓரளவு வெற்றி கண்ட சமயம் அவரால் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள முடியாமல் போயிற்று. :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-90299041113996535712018-03-04T07:11:38.187+05:302018-03-04T07:11:38.187+05:30ஆமாம் ஶ்ரீராம். கருத்துக்கு நன்றி.ஆமாம் ஶ்ரீராம். கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-341873814789136372018-03-04T07:11:08.786+05:302018-03-04T07:11:08.786+05:30ஹிஹிஹி, அதிரடி, ஏமாந்தீங்களா? நல்லா வேணும்! வேணுங்...ஹிஹிஹி, அதிரடி, ஏமாந்தீங்களா? நல்லா வேணும்! வேணுங்கட்டிக்கூ வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-19562352218685826982018-03-04T07:10:31.814+05:302018-03-04T07:10:31.814+05:30அட அதிரடி, ஏதோ கையில் கிடைச்சதைப் போட்டேன்! புதசெவ...அட அதிரடி, ஏதோ கையில் கிடைச்சதைப் போட்டேன்! புதசெவி! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-75866425192946156112018-03-04T07:10:01.056+05:302018-03-04T07:10:01.056+05:30வாங்க ஏஞ்சல், ஆமாம், நிறைய ஏழைகள், இல்லாதோருக்கு இ...வாங்க ஏஞ்சல், ஆமாம், நிறைய ஏழைகள், இல்லாதோருக்கு இலவச அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்றவை ஶ்ரீமடத்தின் செலவுகளில் செய்யப்பட்டு வருகின்றது. பொது வாழ்வில் ஈடுபட்ட துறவிகளில் இவர் அனைவருக்கும் ஓர் முன்னோடி! இவரைக் குறித்து திமுக ஆதரவாளரான யுவகிருஷ்ணா கூட மிகவும் பாராட்டி அஞ்சலி எழுதி இருக்கிறார். அது ஓன்றே போதுமே இவரின் பெருமையைச் சொல்ல! :( என்றாலும்சிலர் தேவையில்லாமல் தேவையில்லாதவற்றையே நினைவு கூர்கிறார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-23820274374020456352018-03-04T07:07:54.428+05:302018-03-04T07:07:54.428+05:30இது குறித்து முகநூலில் கூட வந்தது. முன்னாள் குடியர...இது குறித்து முகநூலில் கூட வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் குமார் முகர்ஜியின் புத்தகத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் படித்தால் புரியும்! புத்தகம் ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் இந்த விஷயம் பெரிசாக ஊடகங்களால் பேசப்படுவதில்லை. வழக்கம்போல் மௌனம் காக்கும் மோசமான ஊடகங்கள்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-37641845016645100352018-03-04T07:06:09.713+05:302018-03-04T07:06:09.713+05:30வாங்க ஜிஎம்பி ஐயா! ஜெயேந்திரர் வழக்கில் சிக்கினார்...வாங்க ஜிஎம்பி ஐயா! ஜெயேந்திரர் வழக்கில் சிக்கினார் என்பதை விட சிக்கவைக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-86356734853806170962018-03-04T07:05:38.306+05:302018-03-04T07:05:38.306+05:30வாங்க தி.கீதா, என்ன நிர்ப்பந்தமோ மகளைத் திரைத்துறை...வாங்க தி.கீதா, என்ன நிர்ப்பந்தமோ மகளைத் திரைத்துறையில் நுழைக்க! நமக்கு என்ன தெரியும்! <br /><br />ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எண்ணற்ற பணிகள் புரிந்திருக்கிறார். பல மருத்துவர்கள், ஆடிட்டர்கள், வக்கீல்கள், தொழிலதிபர்கள் உதவியுடன் சமூகப் பணிகளில் நேரடியாகக் களம் இறங்கினார்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-430765051222463502018-03-04T07:04:21.314+05:302018-03-04T07:04:21.314+05:30வாங்க வெங்கட்! தோன்றவில்லை! :(வாங்க வெங்கட்! தோன்றவில்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-30793306481047401762018-03-04T07:04:04.789+05:302018-03-04T07:04:04.789+05:30இன்னும் எழுத நினைத்தேன். ஓரள்வு விரிவாக! என்றாலும்...இன்னும் எழுத நினைத்தேன். ஓரள்வு விரிவாக! என்றாலும் தவிர்த்து விட்டேன். தனிப்பதிவாகக் கொடுத்திருக்கலாமோ என்றே இப்போது தோன்றுகிறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18675072.post-32341554857129652342018-03-04T07:03:24.796+05:302018-03-04T07:03:24.796+05:30வாங்க துரை சார். அப்படியா? எனக்கு என்னமோ தோணலை! இர...வாங்க துரை சார். அப்படியா? எனக்கு என்னமோ தோணலை! இருவேறு நிலைகளில் பிறருக்காக உழைத்த இருவர் அடுத்தடுத்து மரணம் அடைந்தது பற்றி மட்டுமே யோசித்தேன். ஸ்வாமிகள் பொதுமக்களுக்காகப் பெருமளவில் கடைசி வரை பாடுபட்டார். ஶ்ரீதேவி குடும்பத்துக்காகப் பாடு பட்டார்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com