Monday, July 02, 2012

வாங்கப்பா, சீக்கிரமா, யானையார் தங்கக் குடத்தைத் தூக்கிட்டு ஓடிட போறார்!

யானையார் தங்கக்குடத்திலே ரங்கனுக்கு காவிரி நீர் எடுத்துட்டுப் போகத் தயாரா நிக்கிறார். இது நாங்க எடுத்தது இல்லை.  மழலைகள் குழும நண்பர் திரு புஷ்பா ராகவன் அவர்கள் எடுத்தது.  நேற்று நான் எழுதிய பதிவைப் படித்ததும் இருவரும் அம்மாமண்டபம் வந்து காலை எடுத்து இதைக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். நாங்க போறதுக்குள்ளே யானையார் அம்மாமண்டபத்திலிருந்து தெருவுக்கு வந்துட்டார். வேகமாப் போறச்சே தான் பார்க்கமுடிந்தது.  காலை நேரம் கொஞ்சம் கஷ்டம் தான். வீட்டு வேலைகளை மறந்துட்டுப் போகணும். :)))))) இதை அப்லோட் செய்ய உதவிய திரு வா.தி. அவர்களுக்கு என் நன்றி.  தெரியாதவங்க அவரோட இந்தப் பதிவிலே விளக்கம் சொல்லி இருப்பதைப் பார்க்கலாம்.  கணினி பத்தின எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் இங்கே விளக்கம் கொடுத்திருப்பார்.

https://techforelders.blogspot.in/2012/07/blog-post.html நன்றி.  லிங்கை அப்படியே கொடுத்திருப்பதற்கு மன்னிக்கவும்.  காப்பி, பேஸ்ட் பண்ணிக்குங்க. :))))))))) வீ.வே. அவசரம்



8 comments:

  1. யானையார் தங்கக்குடத்திலே ரங்கனுக்கு காவிரி நீர் எடுத்துட்டுப் போவதை பார்த்து விட்டேன் உங்கள் பதிவின் மூலம். திரு புஷ்பா ராகவன் அவர்களுக்கு நன்றி.

    திரு வா.தி. அவர்களுக்கும் நன்றி.

    உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வாங்க கோமதி அரசு, ரசித்தமைக்கு நன்றி.

    வாங்க லக்ஷ்மி, வரவுக்கும் பார்த்ததுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. Arumaiyaana kaatchi paarppadharkku udhaviya ungalukkum thiru pushpaa raagavanukkum miga miga nandri chennaiyil irukkum engalukku idhellaam ariya katchigaldhaanb

    ReplyDelete
  5. எங்களுக்கும் காணக் கொடுத்ததற்கு நன்றிம்மா....

    ReplyDelete
  6. தாசரதி, முதல் வருகையோ? வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  7. வாங்க வெங்கட், நன்றிப்பா.

    ReplyDelete
  8. அன்பு கீதா ,அருமையாக இருந்தது அம்மா.
    யானையின் அழகும் அதன் மணி யோசையும்,காலைசூரியனில் பளபளக்கும் குடங்களின் அழகும் பார்த்தது ரொம்ப சந்தோஷம். அளித்த ஸ்ரீ புஷ்பாராகவன் அவர்களுக்கு தம்பி வாசுதேவனுக்கும் நன்றி.

    ReplyDelete