Monday, October 15, 2012

நோ சுண்டல் கலெக்‌ஷன்! :P

தானம் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பொம்மைகளைக் கொலுவில் வைச்சாச்சு. நாளைக்குச் சுண்டல் உண்டா?  என்ன ஒரு வருத்தம்னா சென்னை, அம்பத்தூரில் இருக்கிறச்சே சுண்டல் கலெக்‌ஷனுக்குப் போறாப்போல இருக்கும்,  ஆனால் இங்கே நோ கலெக்‌ஷன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட சுண்டலையே நானே சாப்பிட்டுக்கணும்.

14 comments:

  1. ஏன்... அங்கே இல்லாத சுண்டலா! கவலையை விடுங்கள்! நாச்சியார் பக்கம் இருக்கு. அங்க போய் தினம் ஒரு சுண்டல் சாப்பிடலாம்!! நான் மூணு நாலு ப்ளாக் தேத்தி வச்சிருக்கேன்... சுண்டல் சாப்பிட! :)))

    ReplyDelete
  2. ஆஹா.. ஸ்ரீராம்... எனக்கு இது வரைக்கும் ஒரு வலைப்பூ [வல்லிம்மாவோடது] மட்டும் தான் கிடைச்சது சுண்டல் சாப்பிட!

    தில்லில நிஜமா சுண்டல் சாப்பிட யாரு கூப்பிடறாங்கன்னு பார்த்துட்டு இருக்கேன்! :)

    ReplyDelete
  3. என்ன இன்னிக்கு பூஜை ஆச்சா? கோவில் எல்லாம் தீக்ஷிதர் கல்யாணம் திம்லோக படும் தான்! கூட்டம் நெரிச்சு தள்ளிடும் இல்ல?

    ReplyDelete
  4. நானும் தில்லியில நிறைய வீடுகளுக்கு சுண்டல் கலெக்‌ஷனுக்கு செல்வேன். பழைய ஏரியாவில் 35 வீடுகளாவது.

    சென்ற வருடம் லலிதா சகஸ்ரநாம சொல்ல தினம் ஒரு வீடு, அப்புறம் அருகில் உள்ள நண்பர் வீடுகள், பழைய ஏரியா என ரவுண்ட் அடித்தேன்.

    இந்த வருடம் எப்படியோ? பார்க்கலாம்....:)

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், இங்கே சுண்டல் இருக்கும்தான். ஆனால் இன்னும் கலெக்‌ஷனுக்கு ஆரம்பிக்கலை. :))) ஆனால் என்னோட க.பருப்புச் சுண்டல் போணி ஆயிடுச்சு. :)))) பயந்துட்டே செய்தேன். சென்னையிலே கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தால் கூட வர மாட்டாங்க.

    ReplyDelete
  6. ஆஹா, இப்போத் தானே உங்க மறுபாதி கிட்டத்தட்ட 35 வீட்டுச் சுண்டலோட ரெசிபி கொடுக்கிறதாச் சொல்லி இருக்காங்க. அதிலே ஏதானும் ஒண்ணுக்குப் போயிடுங்க. போயிட்டு வந்து சுண்டல் பத்திப் பதிவு போடுங்க. :)))))

    ReplyDelete
  7. வாங்க ஜெயஸ்ரீ, நவராத்திரி பூஜை எல்லாம் செய்யறதில்லை. வழக்கம் இல்லை. சும்மா நிவேதனங்களோட சரி. கோயில் பக்கம் ஒரு நாள் போகணும்.

    ReplyDelete
  8. வாங்க கோவை2தில்லி, நம்ம வீட்டுக்கும் ஒரு நாள் வாங்க, உங்க மாமியாரையும் கூட்டிட்டு. உங்களுக்குத் தொலைபேசறேன். என்னிக்கு முடியுமோ அன்னிக்கு மத்தியானமா இருந்தாலும் பரவாயில்லை; வாங்க கட்டாயமா.

    ReplyDelete
  9. கட்டாயம் வரேன் மாமி. அம்மாகிட்டயும் சொல்றேன். முடிஞ்சா நாத்தனாரையும் அழைத்துக் கொண்டு. ஒரு க்ரூப்பா வரோம்......:)

    ReplyDelete
  10. நவராத்திரி வாழ்த்துகள்.

    பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்போது பத்துநாளும் நிவேதனம் வைப்போம்.
    இப்போது ஒன்பதாம் நாள் வீட்டுப்பூசை அன்று பிரசாதங்கள் வைப்போம்.

    ReplyDelete
  11. நவராத்திரி வாழ்த்துகள்..

    ReplyDelete
  12. வாங்க கோவை2தில்லி, நாத்தனாரும் இங்கே தான் இருக்காங்களா? நல்லதாப் போச்சு. கட்டாயமாய் வாங்க. :))))

    ReplyDelete
  13. நன்றிம்மா மாதேவி.

    ReplyDelete
  14. ராஜராஜேஸ்வரி, உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete