Sunday, December 08, 2013

வால்மீகி ஆசிரமத்தில்---படப்பதிவு!


அறிவிப்புப் பலகை.  இந்த அறிவிப்புப் பலகையில் உள்ள வாசகங்கள் கீழ்க்கண்டவாறு:


புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது.  அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார்.  சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர்.  அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள்.  இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.

இங்கே இருக்கும் வால்மீகி கோயிலின் ஜீர்ணோத்தாரணம் பேஷ்வா பாஜிராவ் 2 மூலமாக  19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்றது.  கோயிலின் கர்பகிருஹத்தில் கறுப்புக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கமும்  மத்தியகாலத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் பிரதிமையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  பேஷ்வா காலத்தில் அமைகப்பட்ட இங்குள்ள தீபஸ்தம்பமும்  காண்பதற்கு அரிய ஒன்று.

உத்தரப்பிரதேச மாநில  தொல்பொருள் துறை, லக்னோ.



நுழை வாயில்.  இதைத் தாண்டி வரும் சின்னத்தோட்டத்துக்குப் பின்னர் மேலே ஏறும் படிகள்.



இந்தப் படிகளில் மேலேறிச் செல்ல வேண்டும்.




உள்ளே காணப்பட்ட அறிவிப்புப் பலகை.  இந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டவை கீழே:


ஆசிரமத்தின் உள்ளே உள்ள மேற்கண்ட அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.

ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது.  இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர்.  இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர்.  உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.





9 comments:

  1. நல்ல படங்கள்... தொடர்கிறேன் அம்மா...

    ReplyDelete
  2. படங்களில் ஜாங்கிரி ஜாங்கிரியாக எழுதப் பட்டிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கா விட்டாலும் அறிவிப்பு எதைப் பற்றி என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம்! :)))

    ReplyDelete
  3. ஶ்ரீராம், முழிபெயர்த்துட்டேன், போய் மறுபடி பாருங்க. :))))

    ReplyDelete
  4. நன்றி டிடி. :))

    ReplyDelete
  5. அருமையான புராண சரித்திரக் கதைகளைச்சொல்லும் இடங்கள், தகவல் பலகைகள்.

    மெய்சிலிர்க்க வைக்கின்றன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. படங்கள் நன்று.

    முழிபெயர்த்ததும் நல்லதாகப் போயிற்று - ஹிந்தி படிக்கத் தெரியாதவர்களுக்குப் பயன்படும்.

    ReplyDelete
  7. ஆங்.... இப்போ விவரம் தெரிந்தது. நன்றி ஹை!

    ReplyDelete
  8. வாங்க வெங்கட், நம்ம முக்கிய வேலையே முழியைப் பெயர்க்கிறது தானே! :)))

    ReplyDelete
  9. வாங்க ஶ்ரீராம், நன்றிக்கு நன்றி.

    ReplyDelete