SANGKUMUHAM said...
//Geetha Sambasivam!
Nice to read the results of your labors. But I dont know why I have read them at all!//
Mr.Sangumuham,
First of all, I never asked you to read them all. And I am not going to people and asking them to read this, or that. If you are interested in the subject, read it. I am not asking people to comment in favour of it also. Always there are two sides. Some are favouring, some are not. So it is completely your desire. Not mine.
//Will it make me a good person? Suppose it does, how can a person who cant read and write, become a good person? Because, he is what he is! Or, a person whose life is consumed in eking out his mean existence on a measly wages, to fill the stomach of an innocent wife and yet more innoncent children?//
இப்போ கொஞ்சம் வசதிக்காகத் தமிழில் மாறிக்கறேனே??? உங்களை இது மாற்றவில்லை எனில் அது ராமாயணத்தின் குற்றம் அல்ல. மாற்றினாலும் அதற்கு அதனால் பெருமை என நீங்கள் நினைத்தால் அது உங்கள் எண்ணம். எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு என்ன பிரயோசனம் என்றால், படித்தவர்கள் யாரேனும் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுவதை அவன் காதால் கேட்க முடியும். அதிலும் என்ன பயன் என்றால் இது வாழ்க்கையில் வாழும் வகை பற்றிச் சொல்கின்றது. எப்படியாவது வாழ வேண்டும், என்று நினைக்காமல் எப்படி வாழ்ந்தால் நல்லது எனப் போதிக்கும் அதே சமயம், கஷ்டமான சூழ்நிலையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும், என்பதையும், நட்பு என்பது எவ்வளவு உன்னதமான விஷயம் என்பதையும்,நட்பையும், நண்பர்களையும் எவ்வாறு போற்றவேண்டும், என்பதையும் கஷ்டமான காலத்தில் நட்பு எவ்வாறு உதவுகின்றது என்றும், மேலும் ஊழியம் செய்பவர்களின் தொண்டின் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றது. நன்கு படித்தவர்கள் மேலும், மேலும் இதைப் படித்தால், முக்கியமாய் ஆட்சி புரிபவர்கள் படித்தால், மக்களுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் பற்றியும், ஆட்சி புரியவேண்டிய முறை பற்றியும், மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நீதி பற்றியும், நேர்மை பற்றியும், நல்லொழுக்கம் பற்றியும் சொல்லுகின்றது. நேர்மையும், திறமையும் இல்லாத அரசுகளே தொடர்ந்து ஆட்சி புரியும் இந்நாட்களில், குறைந்த பட்சம் ஆட்சியாளர்களுக்கு ஒரு "MORAL FEAR" ஆவது ஏற்பட வழி செய்யும், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்தும், அந்த உறுத்தல் தாங்காமல் ஒருவேளை மக்களுக்குக் கொஞ்சம் நல்வழி காட்டவும் முற்படலாம். ஆனால் இன்று ஒருநாளில், ஒரு இரவில் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது தான்.
படிக்கும் பிள்ளைகளுக்கு இன்றைக்கு எந்தவிதமான நீதி போதனைகளும் போதிக்கப் படுவதில்லை. இத்தகைய இதிகாசங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் எடுத்துச் சொல்லப் படும் நீதிக் கதைகளும், நீதிக்காகப் பாடுபட்ட அரசன் பற்றிய விபரங்களும், அவர்களுக்கு நம் நாடு எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதை எடுத்துச் சொல்லும், இனி வரும் தலை முறையாவது அத்தகைய உன்னத நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முயற்சிக்கும். வருங்கால இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுமே நம் நாட்டு இதிகாசங்களிலும், புராணங்களிலும், உபநிஷத்துகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. அருமை தெரியாமல் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்கின்றார்கள் எனில், நாமாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அட, பழைய காக்கை, நரி, பாட்டி, வடை கதையையே எடுத்துக்குங்களேன்?? அதிலேயே கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கின்றது?? பாட்டி வயசு ஆகியும் தன் கையால் உழைத்துப் பிழைக்கின்றாள், யாரையும் எதிர்பார்க்காது. காக்கை, உழைப்பைத் திருடித் தின்க முயற்சிக்கின்றது. உழைப்பே இல்லாமல் அது திருடியதற்காக, நரியிடம் தன் வடையை இழக்கின்றது. வல்லவனுக்கு வல்லவன் உலகிலே உண்டு அல்லவா? அதான் இங்கே நரியாக உருவகம், மேலும் முகஸ்துதிக்கு, அதிலும் பொய்யான முகஸ்துதிக்கு காக்கை மயங்கவும் செய்கின்றது. உழைக்காமல் பிறர் காசில் வயிறு வளர்த்தால், பின்னால் உன்னிலும் சிறந்த ஏமாற்றுக் காரன் உன்னை ஏமாற்றுவான் என்று அந்தக் கதை சொல்லவில்லையா? இந்தக் கதையைத் தள்ளி விட முடியுமா??? அந்தக் கதை கேட்டு வளர்ந்த எங்கள் தலைமுறையைப் போல் இன்றைய தலைமுறை இல்லையே??? அந்த வருத்தமே என்னை இதெல்லாம் எழுத வைக்கின்றது. ஓரிருவர் மாறினாலே போதும், மாற்றம் என்ற சொல்லைத் தவிர, மற்றதெல்லாம் மாறுபடும் அல்லவா? மாறும், மெல்ல, மெல்ல மாறும், காத்திருக்கவேண்டும். எப்போது எனத் தெரியாது!!!!
//Your lucubrations are vizallukku iraththa niir. Or, to put it correctly, a luxury for a people who has nothing else to do?//
நிச்சயமாய் இல்லை. விழலுக்கு இறைத்த நீர் எனச் சொல்லவே முடியாது. வேறு வேலை இல்லாமலும் இதைச் செய்யவில்லை. அதுதான் உங்கள் கருத்து என்றால், அப்படியே இருக்கட்டும். புராணங்களும், இதிகாசங்களும் பொழுதுபோக்குக்கான அம்சங்களே இல்லை, முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான சாதனைகளை வைத்து, நம் அன்றைய நாட்களின் அர்த்தமுள்ள விஷயங்களைப் புறக்கணித்துச் செல்வது முற்றிலும் சரி அல்ல. நமது இப்போதைய அனுபவத்தை அளவுகோலாக வைத்துக் கொண்டு கணிப்பது சரியும் இல்லை. இந்த வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் இவற்றின் தகவல்களை அனுபவங்களோடு சேர்த்துப் பார்த்துச் சிந்தித்து அவற்றின் உள்ளே மறைந்துள்ள உண்மைகளைக் கண்டு உணரவேண்டும் என்பதே அவற்றின் தாத்பரியம். ஐயா, நாம் உணவு உட்கொள்ளுகின்றோம், அந்த உணவில் இருந்து சத்தை மட்டும் நம் உடல் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைக் கழிக்கின்றது அல்லவா?
மேலும் நெல் அறுவடை செய்கின்றோம். நெல்மணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வைக்கோலைத் தள்ளுகின்றோம் அல்லவா? எத்தனை விஞ்ஞான புத்தகங்கள், எத்தனை இலக்கிய, மொழி சார்ந்த, சாராத புத்தகங்கள் படிக்கின்றோம்? அவற்றில் எது நமக்குத் தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம் அல்லவா? என்ன செய்தாலும், எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் நமக்குத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளுகின்றோம். தேவை இல்லாதவற்றைத் தள்ளுகின்றோம். அன்றாட வாழ்வில் இப்படி நமக்குத் தேவையானதையே சிந்திக்கும், நாம் ஏன் புராண, இதிகாசங்களில் மட்டும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்?? அவற்றில் நமக்கு எது தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், அது தான் சரி இல்லையா??
//God is greater than your lucubrations. Let me sincerely ask you this question:
what is the use of all these luxuriating books written by the godmen, the puraanaas, the vedas, the Bible stories, the gimmicks of mohamed etc.?
What is the outcome for an ordinary person? The question is sincere. Please go over it. In case you need a separate blog topic to answer, please try and make it as such; and put in your thoughts therein. You appear to be an intelligent person. I hope your answer will be illuminating.
I am afraid, without knowing where you are going, it is a wanton dissipation of the precious life God has gifted you!//
உங்களது இந்தக் கேள்விக்குப் பதில் எழுதினால் மிகவும் பெரியதாகிவிடும், எனினும் மகான் அரவிந்தர் அவர்களின் சில வரிகளை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தச் சுட்டி, , "Francois Gautier" என்பவரால் எழுதப் பட்ட, "REWRITING INDIAN HISTORY" என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. ஒரு வேளை உங்கள் கேள்விக்கு இது பதிலாக அமையலாமோ என்ற எண்ணத்தில் கொடுக்கின்றேன். மூலப் புத்தகம் என்னிடம் இல்லை.
//ஸ்ரீஅரவிந்தர் சொல்வது என்னவென்றால்:
the ancient and classical literature of the Sanskrit tongue shows both in quality and in body an abundance of excellence, in their potent orginality and force and beauty, in their substance and art and structure, in grandeur and justice and charm of speech, and in the heightened width of the reach of their spirit which stands very evidently in the front rank among the world's great literatures."
"the vedas, the Upanishadas, the Ramayana, the Mahabharatha, as seen earlier, the Vedas represent "a creation of an early and intuitive and symbolic mentality." It was only because the Vedic rishis were careful to clothe their spiritual experiences in symbols, so that only the initiated would grasp them, that their meaning has escaped us, particularly after they got transtated in the last two centuries. The Veda is the WORD discovering truth and clothing in image and symbol, the mystic significance of life"
ராமாயணம் பற்றி அரவிந்தர் சொல்வது என்னவெனில்:
"For Indians, the Ramayana embodies the highest and most cherished ideals of manhood, beauty, courage, purity, gentleness. The subject is the same as in the Mahabharatha: the struggle between the forces of light and darkness. but the setting is more imaginative, supernatural and there is an intensification of the characters in both their goodness and evil. As in the Mahabharatha too, we are shown the ideal man with his virtues of courage, selflessness, virtue and spiritualised mind. ......
The puranas, and the Tantras, which contains in themselves the highest spiritual and philosophical truths, while embodying them in forms that are able to carry something of them to the popular imagination and feeling by way of legend, tale, symbols, miracles and parables."
அரவிந்தரின் பார்வையில் ராமாயணம் இப்படியும் பார்க்கப் படுகின்றது, இதுவும் ஒரு விதத்தில் சரியே!:
"Valmiki moulded the Indian mind with his depiction of Rama, and Sita, another classic of India's love couples and one that has survived through the muth of enduring worship, in the folklore of this country, along with the polular figures of Hanuman and Lakshmanan. His diction is shaped in the manner of the direct intuitive mind as earlier expressed in the Upanishads."
யாருக்குமே தங்கள் மனைவி பற்றியோ, கணவன் பற்றியோ கனவுகளோ, கற்பனைகளோ இல்லாமல் இருக்காது. இல்லையா??கற்பனை கலந்த ஒரு கதையாகவே இருக்கட்டுமே ராமாயணம். அதிலும் வால்மீகி எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்?? பூகோள அமைப்பு, வனங்களின் வளம், நாட்டு வளம், நதி வளம், குடியாட்சி முறை, சாத்திரங்களும், தர்மங்களும் கடைப்பிடிக்க வேண்டிய முறை, இன்னும் நாத்தீக வாதம் என அனைத்துமே பேசப் படுகின்றது. வேறு எங்கேயாவது, எதிலாவது இம்மாதிரியான ஒரு சுதந்திரத் தன்மையுடனும், பெரும்போக்குடனும் கூடிய கதை அமைப்பைக் காண முடியுமா??? வால்மீகியின் விபரமான வர்ணனையினால் ராமனும், சீதையும் இன்று உலகளவில் பேசப் படும் ஆதர்சத் தம்பதிகளாய் மாறி இருப்பதும் உண்மையே! எனினும் அனைத்துக்கும் மேல் ராமாயணத்தில் சொல்லப் படும் விஷயங்கள் கணவன் - மனைவி உறவு மட்டுமல்லவே! அரசன் ஆனவன் எவ்வாறு ஆட்சி, நிர்வாகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதில் இருந்து போர் முறைகள், போரில் நடக்கும் உபாயங்கள், விளைவுகள், பாதிப்புகள், சக மனிதர்களை மதிக்கும் முறை, மந்திரி, பிரதானிகளை மன்னன் நடத்த வேண்டிய முறை, மூத்தோருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள், குருவிற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள் என எத்தனையோ கற்க இருக்கும் போது, இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கும்போது, என்னுடைய இந்த அற்புதமான வாழ்வை நீங்கள் "wanton dissipitation" என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வரவில்லை. சிரிப்புத் தான் வருகின்றது. வாழ்வை அனுபவிப்பது பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கலாம் அல்லவா?? என்னளவில் நான் மனதில் இன்னும் கற்கும் ஆவலுடனேயே இருக்கின்றேன். I am an optimistic person, so no problem . May God Bless All. That is all to say, and thank you for coming to my blog.Of course, it is God's gift, my life, I mean, and Nothing is going to be waste, including my life. Actually I do not want to reply you, but after second thought, I made up my mind.