எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 30, 2020

வரகு தேன்குழலுக்குப் பரிசு!

போட்டி முடிவுகள்  

நம்ம ஏடிஎம்மோட சஹானா மின்னிதழ்த் தளத்திலே தீபாவளிக்கான போட்டி ஒண்ணு வைச்சிருந்தாங்க. மறக்க முடியாத தீபாவளி நினைவுகள்/சமையல் குறிப்பு, தீபாவளிக்கான பக்ஷணங்கள் செய்முறை. அப்புறமாக் குழந்தைங்களுக்கும் படம் வரையும் போட்டி எல்லாம் வைச்சிருந்தாங்க. சென்னையைச்சேர்ந்த மதுரா பொட்டிக் இதற்கான ஸ்பான்சரை ஏற்றிருந்தாங்க. அதில் தீபாவளி பக்ஷணங்கள் செய்முறையில் நான் வரகு தேன்குழல் செய்முறையும், திரிபாகம் செய்முறையும் அனுப்பி வைச்சேன். மறக்க முடியாத தீபாவளி நினைவுகளையும் பகிர்ந்திருந்தேன். எல்லாம் வெளிவந்தப்போ மத்தவங்களோட நினைவுகள்/செய்முறைகள் எல்லாம் இன்னும் நல்லா இருக்கேனு தோன்றியது. ஆனால் சிறு தானிய உணவு என்பதால் வரகு தேன்குழலுக்கு ஆறுதல் பரிசேனும் கிடைக்கலாம் என எதிர்பார்த்தேன். ஆனால் முதல் பரிசே கொடுத்திருக்காங்க. திரிபாகத்துக்குப் பரிசு எதிர்பார்த்தேன். வரலை. இரண்டாம் பரிசு நம்ம வெங்கட் மனைவிக்குக் கிடைச்சிருக்கு. அவங்களும் நன்றாகச் செய்து காட்டிப் பகிர்ந்திருந்தாங்க. 

நினைவுகள் எழுதியதற்குப் பரிசெல்லாம் கிடைக்கலை. நம்ம பரிவை குமாருக்குக் கிடைச்சிருக்கு. பொதுவா நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. வைகோ சார் விமரிசனப் போட்டி வைச்சிருந்தப்போத் தான் விடாமல் என்னைத் தொந்திரவு பண்ணிப் பங்கெடுக்க வைத்தார். குறிப்பிட்ட அளவுக்குப் பரிசுகளும் கிடைத்தன. அதுக்கப்புறமா நான் கலந்து கொண்டது இந்தப் போட்டி தான். இதில் முதல் பரிசு கிடைத்தது உண்மையிலேயே சந்தோஷமாக உள்ளது. இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஓவியப் போட்டியில் குழந்தைகளுக்கானதில் முதல் பரிசு என் தங்கை (சித்தி பெண்) பேத்திக்குக் கிடைத்திருக்கிறது. குழந்தை உண்மையிலேயே நன்கு வரைந்திருந்தாள். மற்றக் குழந்தைகளும் சோடை போகவில்லை. என்னுடன் சேர்ந்து இரண்டாம், மூன்றாம் பரிசைப் பகிர்ந்தவர்களுக்கும் பரிவை குமாருக்கும், தங்கை பேத்திக்கும் வாழ்த்துகள். மேலே கொடுத்த சுட்டியில் உள்ள யூ ட்யூபில் பரிசு பெற்றோர் பற்றிய விபரங்களைக் காணலாம். 

Sunday, November 29, 2020

இரண்டாவது புத்தக வெளியீடு!

பாரம்பரியச் சமையல்கள் 

வணக்கம். என்னுடைய சமையல் குறிப்புகள், நான் சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருப்பனவற்றில் சில பாகம் ஒன்றாக இன்று அமேசான் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மிகுந்த உதவி செய்தவர் வழக்கம் போல் நம் வெங்கட் தான். நேற்றே வெளியீடு காண வேண்டியது ஒரு சில பிரச்னைகளால் இன்று தான் வந்திருக்கிறது. இதை நாளை திங்கள் 30-11-2020 மதியம் 12-30 மணியில் இருந்து சனிக்கிழமை மதியம் 12-00 5-12-2020 வரை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். இதற்கான சுட்டி மேலே கொடுத்துள்ளேன். அந்தச் சுட்டியை இங்கே இணைப்பதற்குள்ளாகப் போதும் போதும்னு ஆகி விட்டது. மொத்தத்தில் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் கற்கிறேன். புத்தகம் விலை 50 ரூபாய் தான். அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன்.  அனைவருக்கும் நன்றி. வாட்சப் மூலமும் இலவசத் தரவிறக்குவதற்கான சுட்டி கொடுத்துள்ளேன். 

Saturday, November 28, 2020

காணும் இடமெல்லாம் வேலன்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 11

கோமதி அரசு அவர்களின் இழப்பில் இருந்து இன்னமும் மனம் வெளிவரவில்லை. நமக்கே இப்படின்னா அவங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கையில் ஒண்ணும் புரியவில்லை. அந்த வேலவன் தான் அவர்கள் மனது தேறி வர அருள் புரிய வேண்டும். ஆரம்பித்த கந்த சஷ்டிப் பதிவுகளை முடிச்சுடலாம்னு இன்னிக்கு வள்ளி திருமணத்தின் அடுத்த பதிவைப் பகிர்ந்திருக்கேன். கொஞ்சமானும் மனம் ஆறுதல் அடையலாமே! *********************************************************************************************************************************************************************************** “என்ன, யானையா? தாத்தா, இருங்க, இருங்க, போயிடாதீங்க! எனக்கு யானையைக் கண்டால் பயம்!” என்று வள்ளி நடுக்கத்துடன் ஓடி வந்து கிழவரைக் கட்டிக் கொள்கின்றாள். மனதில் சந்தேகம் பூக்கின்றது வள்ளிக்கு. கிழவர் மாதிரி இல்லையே கையும், காலும், என்று நினைத்துக் கொள்கின்றாள். ஆனாலும் யானை பயம் மனதில் முந்துகின்றது. கிழவருக்கு சந்தோஷம், “ வள்ளி, ஏமாந்தாயா? ஏச்சுப்புட்டேனே, வள்ளி, ஏச்சுப் புட்டேனே!” என்று பாடி, ஆட, இவர் கிழவர் இல்லை என வள்ளியின் மனதில் உறுதிப் படுகின்றது. “சரி, தண்ணீர் தானே, தாத்தா, வாங்க , தண்ணீர் தருகின்றேன்”என்று அருகே இருந்த சுனைக்கு அழைத்துப் போய்க் கிழவரைச் சுனையில் தள்ளி விடுகின்றாள். பின் கை கொட்டிச் சிரிக்கின்றாள் வள்ளி. “ஏச்சுப்புட்டேனே, தாத்தா, ஏச்சுப்புட்டேனே!” என்று பாடி ஆடுகின்றாள் வள்ளி. “அப்படியா, வள்ளி, அதோ பார்!’ என்கின்றார் கிழவர். அங்கே வந்தது ஒரு யானை பிளிறிக் கொண்டு. வள்ளிக்கு நடுக்கம் அதிகம் ஆகி அவளும் சுனைக்குள் இறங்கிக் கிழவரைக் கட்டிக் கொண்டாள். யானை போகவே இல்லை. அங்கேயே பிடிவாதமாய் நிற்கின்றது. “ஆனையும் குதிக்குதல்லோ அசட்டாளம் பண்ணுதல்லோ சண்டாளப் பண்டாரா- என்னை சதி மோசம் செய்தீரே ஆனையை விலக்கி விடும் – நீர் ஆளையேக் கலக்குதல்லோ!” என்று கிழவரிடம் யானையைக் கூப்பிடும்படியும், விரட்டும்படியும் வள்ளி கெஞ்சுகின்றாள். கிழவர் கெஞ்சினால் மிஞ்சுகின்றார், மிஞ்சினால் கெஞ்சுகின்றார். இப்போது கிழவரின் முறையாச்சே. வள்ளி சரியாக மாட்டிக் கொண்டாள். “வள்ளி, என் அருமை வள்ளி, ஆசை வள்ளி, நான் உனக்கு என்ன வேண்டும், அதைச் சொல்லு, என்னைக் கல்யாணம் செய்துக்குவியா? சரினு சொல்லு! ஆனை போகும்!” என்று சொல்கின்றார் கிழவர். வள்ளி மறுக்கின்றாள். “நீர் எனக்கு மாமன், நான் உமது மருமகள்” என்று வள்ளி சொல்ல, கிழவர் மறுக்கின்றார். யானை போக மறுக்கின்றது. யானையை எப்படியாவது துரத்தினால் போதும் என நினைத்த வள்ளியோ, “ஆகட்டும், ஆகட்டும் தம்புரானே ஆனய விலக்கிவிடு நீரெனக்குப் பாட்டாவாம் நானுனக்குப் பேத்தியாம்” என்று சொல்கின்றாள் இம்முறை. ஆனால் கிழவர் இதற்கும் மசியவில்லையே. ம்ஹூம், அழுத்தமாய் “வள்ளி, நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறேன் என்று சொல்லு, ஆனை போயிடும்” என்று சொல்கின்றார் கிழவர். அரை மனதோடு வள்ளி சம்மதிக்கின்றாள். அப்போது நம்பிராஜனுக்குத் தினைப்புலத்தில் ஒரு கிழவர் வந்து வள்ளியைத் துன்புறுத்துகின்றான் எனத் தகவல் கிட்ட, அவன் வள்ளியைப் பார்க்க விரைந்து வந்தான் தன் மகன்கள் அனைவருடனும். அவனும், அவன் கூட்டத்தாரும் வருவதைக் கண்டதும் “ஆஹா, பிழைத்தோம் “ என நினைத்த வள்ளி, கிழவர் இருந்த பக்கம் திரும்ப அங்கே கிழவரைக் காணவில்லை. புதியதாய் ஒரு வேங்கை மரம் நிற்கின்றது. வள்ளிக்கு அப்போது தான் இதிலே ஏதோ விஷயம் இருக்கிறது எனப் புரிய, என்ன செய்யலாம் என யோசிக்கின்றாள். நம்பிராஜன் வந்து பார்த்துவிட்டு, “என்ன இது? புதுசாய் ஒரு வேங்கை மரம்? வெட்டுங்கள் இதை! “ என்று சொல்ல, அதை வெட்ட ஆரம்பிக்க, வள்ளியோ, வேண்டாம், வேண்டாம் என அலறிக் கொண்டே அந்த வேங்கை மரத்தைக் கட்டிக் கொள்கின்றாள். ஆறுமுகன் தன் ஆறுமுகங்களோடும் தோன்றி வள்ளியை ஆட்கொள்கின்றான். நம்பிராஜன் திகைத்துப் போய் நிற்கின்றான். எத்தனையோ தெய்வத் திருமணங்கள் இருந்தாலும் இந்த வள்ளி திருமணக் கதை அனைவரையும் கவர்ந்தாப் போல் வேறு ஒன்று கவராது. அனைவருக்கும் பிடித்த கதையாகும் இது. நான் பள்ளியில் படிக்கும்போது மார்கழி மாதப் பஜனை வகுப்பில் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜனின் மேற்பார்வையில் நடக்கும் பக்தி கலா நிகழ்ச்சியில் வள்ளி கல்யாணம் கட்டாயம் இடம் பெறும் ஒன்றாகும். பல முறைகள், பல வருடங்கள் தொடர்ந்து பார்த்திருக்கின்றேன். என்றாலும் அலுக்காத ஒன்று. பஜனை வகுப்பில் படிக்கும் மாணவிகளே பாத்திரங்களை ஏற்று ஆடிப் பாடி நடிப்பார்கள். ஒரு மாதத்துக்கும் மேலே ஒத்திகை நடக்கும். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் நிகழ்ச்சிகள் நடக்கும். அரையாண்டுத் தேர்வுக்கும் படித்துக் கொண்டு, இம்மாதிரியான நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டு, காலையில் சீக்கிரமாய் எழுந்து பஜனைக்கும் போய்க் கொண்டு, அம்மாதிரியான ஒரு வாழ்க்கை இப்போ நினைச்சாலும் கிடைக்குமா சந்தேகம் தான். காலையிலே 4 மணிக்கெல்லாம் மதனகோபால ஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும் பஜனை, 4 மாசி வீதிகளையும் சுற்றி ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேரும். அதுக்கப்புறமாய்ப் பள்ளிக்குப் போவோம். அதிலும் ஆண்டாளின் வாரணமாயிரம் பாடலுக்கும், இந்த வள்ளி திருமணம் நடக்கும் தினத்திலும் கூட்டம் அதிகமாய் வரும். முன்னாலேயே போய் இடம் பிடிப்போம். இப்போ பொதிகையின் தயவில் சில நிகழ்ச்சிகள் பார்க்க முடியுது உட்கார்ந்த இடத்திலேயே! (((

Wednesday, November 25, 2020

திரு அரசு அவர்களுக்கு அஞ்சலி!

 அருமை சிநேகிதி திருமதி கோமதி அரசுவின் கணவர் திரு அரசு அவர்களின் திடீர் மறைவு அதிர்ச்சி தரும் விஷயமாக ஆகிவிட்டது. நினைக்க நினைக்க மனசே ஆறலை. மென்மையான பேச்சு, சுபாவம் கொண்ட இருவரும் அருமையான தம்பதிகளாக இருந்தனர். அவங்க குடும்பவழக்கப்படி இருவருக்கும் நீண்ட ஆயுள் இருக்கும் என நினைத்திருந்தேன். இது ஓர் எதிர்பாராத அதிர்ச்சி! இந்த 2020 ஆம் ஆண்டே பல விஷயங்களிலும் மன வருத்தம் தந்து கொண்டே இருக்கும் ஒன்றாக ஆகி விட்டது. இனி வரும் மாதம் நல்லபடியாகப் போய் அனைவருக்கும் நன்மையை அளிக்கட்டும்.

திரு அரசு அவர்களின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

Tuesday, November 24, 2020

வருவாயா வேல் முருகா! கந்த சஷ்டிப் பதிவுகள்! 10

 வள்ளி தினைப்புலம் காக்க வந்துவிட்டாள். ஏற்கெனவே வள்ளியின் திருமணம் குறித்து அவளின் வளர்ப்புத் தந்தையான நம்பிராஜனும், தாயான மோகினியும் கவலையுற்றிருந்தார்கள். ஆனால் நாரத முனியோ அவள் குறிஞ்சிக் கடவுளான முருகனுக்கே உரியவள் எனச் சொல்லி இருந்தார். முருகனாவது, வள்ளியை வந்து மணப்பதாவது! என்ன செய்வது என்றறியாமல் இருந்தனர் நம்பிராஜனும், மோகினியும். இந்நிலையில் வள்ளி தினப்புலம் காக்கச் சென்றாள். அங்கே தோழிகள் புடை சூழ “ஆலோலம்” பாடினாள். ஆடினாள். அப்போது தோழிகள் ஓடி வந்து வள்ளியிடம் வளைச் செட்டி வந்திருப்பதாய்க் கூற , அவனை அழைத்து வருகின்றனர். தோழியர் அழைத்து வந்த வளைச் செட்டியைப் பார்த்து வள்ளி, இவன் என்ன சிறு பிள்ளையாக இருக்கின்றானே என மனதிற்குள் எண்ணினாள். வள்ளியின் கை பிடித்து வளை போட செட்டி நெருங்கியதும், வள்ளி விதிர் விதிர்த்துப் போகின்றாள். 

அந்த ஆறுமுகன் பிடிக்க வேண்டிய கை இது, ஒரு வளைச்செட்டி பிடிக்கலாமோ என மயங்குகின்றாள். வளைச் செட்டியைத் துரத்துகின்றாள் வள்ளி. ஏளனமாய்ப் பேசுகின்றாள் அவனைப் பார்த்து. அவமானப் படுத்தித் திருப்பி அனுப்புகின்றாள். “ஏ! வளைச்செட்டி, “ஆருமற்ற வள்ளி 

நாம் அருந்தினையைக் காக்கப் போறேன்

வாசலிட்டுப் போறவளுக்கு வளசலு எனக்கெதுக்கு?” 

என்று சொல்லி அவனை விரட்டுகின்றாள். வள்ளியின் அன்பின் ஆழம் புரிகின்றது கந்தனுக்கு. ஆம் வளைச் செட்டி வேடத்தில் வந்து வள்ளியைச் சோதனை செய்தது அந்தக் கந்தனே ஆகும். தினைப்புலம் காக்கும் போது வள்ளி தினைக் கொத்த வரும் கிளி, மைனா, குருவி, அன்னங்கள், காக்கைகள் போன்றவற்றை விரட்டுகின்றாள். 

ஆலோலம், ஆலோலம், ஆலோலங்கடி, சோஓஓஓஓஓஓ” 

ஆலோலங்கடி சோஓஓஓஓஓ 

ஆயலோ கிளி ஆயலோ 

அன்னங்களே, வாத்துகளே 

போவென்று விரட்டினாலும் 

குந்துகெட்ட வெள்ளக்கிளி ஆனாலும்

 போவதில்லை அடி ஆலோலம், ஆலோலம்,

 ஆலோலங்கடி சோஓஓஓஓ” 

எனப் பாடிப் பறவைகளை விரட்டுகின்றாள் வள்ளி. அப்போது அங்கே ஒரு தள்ளாத வயது சென்ற கிழவர் வருகின்றார். கிழவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கின்றது. உடல் மட்டுமில்லாமல் அனைத்து அவயங்களும் ஆடுகின்றன. கையில் பிடித்திருந்த தடியும் கையில் பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு வந்து கொண்டிருந்தார் கிழவர். தோழிகள் பார்த்தனர். கிழவரை மெதுவாய்க் கை பிடித்து அழைத்துச் சென்று வள்ளியிடம் கொண்டு சேர்த்தனர். கந்தன் நினைப்பில் இருந்த வள்ளி கிழவரைக் கொஞ்சம் எரிச்சலுடனேயே பார்த்தாள். என்னவென்று கேட்க, பாவம் தள்ளாத கிழவர், பசி போலிருக்கிறது, கை, கால் நடுக்கமாய் இருக்கிறது, அதான் இங்கே கொண்டு வந்து சேர்த்தோம் என்றனர் தோழிகள். 

"சரி அந்தத் தினைமாவைக் கொஞ்சம் சாப்பிடக் கொடுங்கள் என்று தோழியரிடம் ஆணை இடுகின்றாள் வள்ளி. “வள்ளி, வள்ளி, நீ உன் கையால் கொடேன்!” என்று ஆசையுடன் கிழவர் கேட்க, கிழவருக்கு ஆசையைப் பாரேன், என்ற வள்ளிக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்து விடுகின்றது. 

“கல்லை உரலாக்கி

 கருங்கம்பை ஒலக்கையாக்கி 

தேக்கிலையை அளவாக்கி 

தெள்ளி விடு வள்ளி 

தினைமாவை அள்ளி” என்ற கிழவரிடம்

 சரி, கிழவர் தானே ஆசையை நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டே, தேனும், தினைமாவும் கலந்து கிழவருக்குக் கொடுக்கின்றாள் வள்ளி. ஒரு வாய் போடவில்லை, கிழவருக்கு, விக்கல் எடுத்து விடுகின்றது. பயத்தில் வள்ளியைக் கட்டிக் கொள்கின்றார் கிழவர். வள்ளிக்குக் கோபம் வந்துவிடுகின்றது. “தண்ணீர் தவிக்குதடி வள்ளி” என்று தண்ணீர் கேட்கின்றார் கிழவர். வள்ளி மறுக்க, கிழவர் யோசிக்கின்றார். இவள் எதற்கும் பயப்படவே மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கின்றாளே என நினைத்த வண்ணம், “வள்ளி, வள்ளி, இந்தக் காட்டு யானை இருக்கே!” என்று ஆரம்பித்தார்.





படங்களுக்கு நன்றி கூகிளார்

Monday, November 23, 2020

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 9

நண்பர் ஒருவர் வள்ளி திருமணத்தைத் தான் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் நான் முதலில் தெய்வானை திருமணத்தை எழுதிட்டே அப்புறமா வள்ளி திருமணத்துக்கு வரலாம் என்று இருக்கிறேன். என்ன இது?? இறைவனுக்குத் திருமணம்ங்கறாங்க? அதுவும் இரண்டு திருமணமாமே? அப்படினு பேசிக்கிறவங்களுக்கு எல்லாம் இது இறை தத்துவத்தைப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்திச் சொல்வதற்கென்றே ஏற்பட்ட ஒன்று. திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இறைவன் கேட்கவில்லை. ஆனாலும் நாம் தானே செய்து வைக்கின்றோம். அவன் திருமணம் செய்து கொண்டதாய்ப் பாடி, ஆடியும் மகிழ்கின்றோம் இல்லையா? ஆன்மாக்கள் இறைவனைச் சென்றடைவது ஒன்றே வாழ்க்கைத் தத்துவம். என்றாலும் எப்போதும் இப்படித் தத்துவார்த்தமாய் அனைவராலும் சிந்திக்க முடியாது. அப்படிப் பட்டவர்களுக்கென இம்மாதிரி எளிய சம்பிரதாயங்கள், வழக்கங்கள் மூலம் இறைவனைச் சென்றடையும் வழியைக் காட்டுவதே இந்த அவசர யுகத்திற்கென ஏற்பட்டது ஆகும். 

இங்கே தெய்வானை முருகனுக்கு இடப்புறமாய் இருக்கும் இடகலைச் சக்தியாவாள். வள்ளியோ வலப்பக்கம் இருக்கும் பிங்கலை சக்தி. இந்த இரு சக்திகளும் நம் உடலில் எவ்வாறு இயங்குகின்றதோ அவ்வாறே தெய்வானையும், வள்ளியும் முருகனோடு இணைந்த ஐக்கியமாக நமக்கு யோகத்தையும், அருளையும் போதிக்கின்றனர். நம் உடலின் இரு சுவாசங்களே, ஆறுமுகனின் இரு மனைவியராக உணரப் படுகின்றனர். இந்த சுவாசம் இல்லையேல் நாம் எங்கே? ஓகே, ஓகே,  இதோ கதை! தத்துவத்தை நிறுத்திக்கிறேன். இப்போது இவர்கள் எவ்வாறு தோன்றினார்கள் என்ற வழிவழியாக வரும் புராணக் கதையைப் பார்ப்போமா? *********************************************************************************** தில்லைக் கூத்தனின் நடனத்தைக் கண்ட மஹாவிஷ்ணுவின் ஆனந்தப் பரவச நிலையில் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரிலிருந்து தோன்றிய இரு மங்கையரே அமிர்தவல்லி, சுந்தரவல்லி. இருவரும் கந்தனை மணக்க விரும்ப, கந்தனோ, தன் அவதார நோக்கம் நிறைவேறும் வரையில் திருமணம் இல்லை எனவும் அது வரையில் இருவரையும், ஒருத்தியை விண்ணிலும், மற்றொருத்தியை மண்ணிலும் பிறந்து தவத்தில் ஈடுபடும்படியும் சொல்லுகின்றான். விண்ணில் பிறந்த குழந்தையான தெய்வானையை தேவேந்திரனின் யானையான ஐராவதம் வளர்த்து வருகின்றது. யானைக் கூட்டத்துக்கே இயல்பாக உள்ள பாச உணர்ச்சியால், தாயில்லாக் குழந்தையான தெய்வானை யானையால் பாசத்துடன் வளர்க்கப் பட்டு தெய்வானை ஆகின்றாள். முருகனை இப்பிறவியிலும் மறவாது மணம் புரியவேண்டி தவம் இருக்கின்றாள். 

அவள் தவம் நிறைவேற வேண்டியும், தன் அன்பு மகளின் மனோரதம் நிறைவேறவும், தேவர்களுக்குச் சேனாபதியாக வந்த தேவசேனாபதிக்குத் தன் மகளைத் தர நிச்சயிக்கின்றான், தேவேந்திரன். திருமணம் நிச்சயிக்கப் பட்டு வேத முறைப்படி, வேள்விச் சடங்குகளைப் பிரம்மா நிறைவேற்ற, தேவேந்திரன் தாரை வார்த்துத் தர முறைப்ப்படி நடக்கின்றது. தவமிருந்த தெய்வானையாகிய ஆன்மா இறையைத் தேடி மண்ணுக்குவந்து மண்ணுலகில் திருப்பரங்குன்றத்தில் இறையோடு ஒன்றாய்க் கலப்பதே தேவ குஞ்சரியின் திருமணம் ஆகும். விண்ணுலக அருள் சக்தியான தெய்வானை முக்தியை முருகன் அருளுகின்றான் என்பதை விளக்க ஏற்பட்டதே தெய்வானை திருமணமாம் திருப்பரங்குன்றம் என ஏற்பட்டது.


அடுத்து முருகன் தமிழ்க் குறத்தி ஆன வள்ளியைத் திருமணம் செய்து கொண்டது. வள்ளியம்மையை இச்சா சக்தி என்பார்கள். இவளை முருகன் இச்சை கொண்டானா அல்லது இவள் முருகனிடம் இச்சை கொண்டாளா என்பதை அறிதல் கடினம். ஆனால் தானே தமிழ், தமிழே தானாகிய கந்தன் ஒரு பெண்ணை மணந்தது போதாது என நினைத்து, மற்றொரு பெண்ணையும் மணக்க நினைத்தான். அதுவும் ஒரு வேடுவப் பெண்ணை. எப்படித் திருமணம் புரிந்தான்? தெய்வானைக்குத் தெரியாமல் களவு மணம் புரிகின்றான் இவளை. ஆஹா, தெய்வானை சும்மாவா இருந்தாள்??? முதலில் வள்ளி பிறந்ததைப் பார்ப்போமா?? *********************************************************************************** வள்ளி திருமணம் பற்றி எழுதும்போது இயல்பாகவே காவடிச் சிந்து நினைப்பிலே வருது.அதுவும் விஜய் சிவா குரலிலே கேட்பதென்றால் தனி சுகமே. ஊனும் உருகும், உள்ளம் குழையும் வண்ணம் அற்புதமான குரலிலே பாடுவார். இந்தப் பாடல்களுக்கென்றே அவர் குரல் அத்தனை இனிமையா, அல்லது பாடல் இனிமையானு தெரியாத அளவுக்கு உணர்வுகள் ஒத்துப் போகும். வள்ளிதிருமணம் பற்றிய நாட்டுப் பாடல்கள் பலவற்றையும் அதிகம் பாடி வந்திருப்பது குமரி மாவட்டத்திலே உள்ள மக்களே ஆகும்.ஆனால் அவர்களில் பலரும் இன்று கூண்டோடு மாறி விட்டதால் அவர்களால் அரங்கேற்றப் பட்ட களியலாட்டக்கலையின் முக்கிய அம்சம் ஆன வள்ளி திருமணம், வள்ளியடவு போன்ற பாடல்களை ஆய்வாளர்கள் மிகவும் சிரமப் பட்டே கண்டெடுத்திருக்கின்றனர். 

கேரள எல்லைக் கிராமங்களில் ஒரு சில இடங்களில் குறத்திக்களி என்ற பெயரில் வழங்கும் சில பாடல்களில் மலையாளமும் கலந்து இருப்பதாகவும் சொல்கின்றனர். நமக்கெல்லாம் தெரிந்த கதையான வள்ளி கதையில் நம்பிராஜனின் மகளாய்ப் பிறக்கின்றாள் என்று ஒரு கதையும், நம்பிராஜன் கண்டெடுக்கின்றான் என இன்னொரு வகையும் உண்டு. ஆனால் இந்தக் குமரி மாவட்டக் கதைப் பாடல்களில் சொல்லுவதே வேறே. அவங்க சொல்லுவது என்னவென்றால்.ரிஷ்ய சிருங்கருக்கும், மற்றொரு பெண் மான் உருவில் இருந்த பெண்ணிற்கும் பிறந்த குழந்தையே வள்ளி. நம்பிராஜன் வேளி மலை அரசன். இவன் மனைவி மோகினி. இவன் வேட்டைக்குச் செல்லும்போது வள்ளிக் கிழங்குகள் சூழ்ந்த தோட்டத்தில் இந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த்து வருகின்றான். இந்தக் குழந்தையைச் சீரோடும், சிறப்போடும் வளர்த்து வருகின்றனர் நம்பிராஜன் குடும்பத்தில். 

குழந்தை அழுதால் பாடும் பாட்டெனச் சொல்லுவது, 

"மானே நீ போட்ட சத்தம் 

மலக்குறவன் ஓடி வந்து 

ஓடி வந்து வள்ளி தனை 

வளைத்துமே எடுத்தானே 

வளைத்துமே எடுத்தானே 

பெண்பிள்ளை பிள்ளையல்லோ 

பிள்ளையே ஆயிப்போச்சு 

ஆமணக்கு தண்டு வெட்டி 

அது நிறையத் தேனடச்சு 

தேனடச்சு அமுது பெறும் 

நேரமெல்லாம் அமுது பசி அடக்கிவிட்டு

 குச்சு போய்ச் சேர்ந்தார்கள்." 

என்ற இவ்வாறு ஓடி வந்து வள்ளியாகிய குழந்தையின் அழுகையை அடக்குகின்றார்களாம், குறவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்து. நம்பிராஜனுக்கு மகன்கள் நிறையப் பேர். அனைவரும் வள்ளியைத் தங்கள் சொந்த சகோதரி போலவே எண்ணிப் பாசமுடனும், நேசமுடனும் வளர்த்து வந்தார்கள். தினைப்புலத்தில் தினை அறுவடைக்குக் காத்து நின்றது. அங்கே பட்சிகள் வந்து செய்யும் இம்சை தாங்க முடியவில்லை. தன் மருமகள்கள் ஒவ்வொருவரையும் வேண்டுகின்றாள் நம்பிராஜன் மனைவியான மோகினி. ஒவ்வொருத்திக்கு ஒவ்வொரு காரணம். மறுக்கின்றார்கள். 

ஒருத்திக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்கணும், ஒருத்திக்குக் குழந்தை பிறக்கப் போகின்றது. இன்னொருத்திக்குத் தலை நோவு. இப்படிச் சொல்ல, அங்கே மெல்ல, மெல்ல மாமியார், மருமகள் சண்டை உதயம் ஆகும்போல் சூழ்நிலை உருவெடுக்கின்றது. பார்த்தாள் வள்ளி, தானே தினைப்புலம் காவல்காப்பதாய்ச் சொல்லிக் கிளம்புகின்றாள். பதறுகின்றாள் மோகினி. ஆஹா, பொன்னைப் போல் போற்றி வளர்த்த பெண்ணாயிற்றே. எப்படி அனுப்புவது?? தயங்கினாள் மோகினி. அன்னையைத் தேற்றி விட்டுப் புறப்படுகின்றாள் வள்ளி. கூடவே துணைக்குத் தோழிப் பெண்களை அனுப்பினாள் மோகினி. தோழிகள் புடை சூழ தினைப்புலம் வந்து, அங்கே மரத்தின் உச்சியில் தங்குவதற்குக் கட்டி இருக்கும் இடத்தில் தங்கிக் கொண்டு, கையில் ஒரு குச்சியையும் வைத்துக் கொண்டு வரும் பட்சிகளை விரட்டுகின்றாள் வள்ளி.. 

ஆலோலம், ஆலோலம், ஆலோலம் 

என்று பாடுகின்றாள் வள்ளி. அவள் ஆலோல சப்தம் கேட்டுப் பட்சிகள் பறந்தனவா? அவளைத் தூக்கிச் செல்ல கந்த பட்சி பறந்து வந்ததா??

 நாட்டுப் பாடல்கள் உதவி= கலைமகள் தீபாவளி மலர், கல்கி தீபாவளி மலர்கள்.

Sunday, November 22, 2020

கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி விடும்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 8

 சமீவனத்து மக்கள் அனைவரும் அந்தச் சிலையை வந்து கண்டனர். பிரமித்துப் போனார்கள். அதன் அழகைப் பாராட்டுவதா? உயிரோட்டத்தைப் பார்த்து வியந்து நிற்பதா? எதுவும் புரியாத மக்கள் சிற்பியைப் பார்த்து இன்னும் திகைத்தனர். என்ன?? கண்கள் தெரியாத ஒருவராலா இது வடிக்கப் பட்டது? கண்கள் இல்லாதவராலேயே இத்தனை அழகும், ஜீவனும் நிரம்பிய சிற்பத்தைச் செதுக்க முடிந்ததா?? ஆயிரம் கண்கள் கொண்டவராலே கூட இத்தனை அழகுச் சிலையை, உயிருள்ள முருகனைச் செதுக்க முடியுமா?? இதைப் பார்க்க, பார்த்து அனுபவிக்கக் கண் கோடி வேண்டும் அல்லவா?? அடடா, இத்தனை அழகு வாய்ந்த, பெரும் சக்தி வாய்ந்த முருகனை நம்ம ஊர்க் கோயிலில் அல்லவா வைக்கவேண்டும்? மக்கள் ஒரு முடிவுக்கு வந்து, சிற்பியைப் பார்த்து, "ஐயா, எங்கள் ஊர்க் கோயிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரருக்குப் புத்திரன் இல்லை. இந்த முருகனை அவருக்குப் புத்திரனாக்குங்கள் ஐயா, உங்களுக்குக் கோடி புண்ணியம். தயை செய்யுங்கள்." என்று இறைஞ்சுகின்றனர்.


படத்துக்கு நன்றி கூகிளார்!

சில்பா சிற்பிக்கு ஆனந்தம் எல்லை மீறியது. ஆஹா, இங்கேயும் ஒரு கோயில், அங்கேயும் இந்தச் சிலையைப் பிரதிஷ்டை செய்யத் தயாராய் மக்கள். நல்லவேளை தான். என்று நினைத்துக் கொண்டு, "சீக்கிரமாய் ஒரு நல்ல நாள் பாருங்கள், சிலை பிரதிஷ்டை செய்ய, பிரதிஷ்டை செய்யும்போது கண் திறக்கின்றேன்", என்று சொல்ல மக்களும் சரி என்றனர். ஆனால் சில்பா சிற்பி சொல்லிவிட்டாரே தவிர அவருக்கு அன்று இரவு பூராத் தூக்கமே வரவில்லை. மற்ற இரண்டு சிற்பங்களையும் செய்யும்போதும் சரி, செய்து முடித்ததும் சரி கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன். இந்தச் சிலையை அவ்வாறு பார்க்க முடியாது. எல்லாரும் இத்தனை புகழும் இந்தச் சிலையைப் பார்க்கவாவது ஒரு நிமிஷமாவது கண்பார்வை வந்துவிட்டுப் போகாதா? என மனதிற்குள் புழுங்கினார் சிற்பி.சிலை பிரதிஷ்டை செய்ய மக்கள் பார்த்த நாளும் நெருங்கியது. சிலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உடன் சிற்பியும் பேத்தியின் கையைப் பிடித்துக்கொண்டு சென்றார். ஆறுமுகனின் விழிகள் திறக்கவேண்டிய வேளையும் நெருங்கிவிட்டது.


படத்துக்கு நன்றி கூகிளார்

 மக்கள் கூட்டம் கூடி இருக்க, சிற்பி உளியைக் கையில் எடுத்துக் கண் இமையைத் திறப்பதற்குப் பதில் வேகமாய் உளியால் அடிக்கப் போக, சிறுமியோ, கையை நடுவில் கொடுத்து, "தாத்தா, தாத்தா, கந்தன் கண்கள் உடைந்துவிடுமே?" எனக் கூவிய வண்ணம் தடுக்க, சிறுமியின் கையில் பட்ட உளியால் அவள் கையில் அடிபட்டு ரத்தம் தெறிக்கின்றது. வேகமாய்ப் பீறிட்ட ரத்தம் சிற்பியின் குருட்டுக் கண்களில் பட்டுத் தெறிக்கின்றது. சிறுமியின் அலறலில் நடுங்கி விதிர்விதிர்த்துப் போன சிற்பியின் கண்களில் தெறித்த ரத்தத்தை அவர் துடைக்க, என்ன ஆச்சரியம், பார்வை திரும்பிவிட்டது சிற்பிக்கு. என்றாலும் அருமைப் பேத்தியின் கைகளை எண்ணிக் கலங்க, அவரை அந்த சமீவனத்திலுள்ள வன்னிமரக் காட்டிற்கு அழைத்து வந்த பெரியவர், தம் கையால் சில பச்சிலைகளை வைத்துச் சிறுமியின் கையில் கட்ட, ரத்தப் போக்கு நின்றது. "ஐயா, பெரியவரே! தாங்கள் யார்? என் கண்களையும் திறந்து, இப்போது இச்சிறுமியின் காயத்தையும் ஆற்றிய தாங்கள் நிச்சயம் ஒரு மகானாகவே இருக்கவேண்டும்." என்று சில்பா சிற்பி அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்க, அவரோ சிரித்த வண்ணம், " என் பெயர் வேலவன், கந்தன் என்றும் சொல்கின்றனர். இரு மனைவியர் எனக்கு. ஒரு மனைவியின் பெயர் தெய்வானை. " என்று சொல்லிச் சிரித்தார்.

ஒரு கணம் திகைத்த சில்பா சிற்பி, "ஆறுமுகா, வேலவா, கார்த்திகேயா!" எனக் கூவிய வண்ணம் பெரியவர் கால்களில் விழுந்து அவர் பாதம் பற்ற, அடுத்த கணம் அங்கே தோன்றியதோர் ஒளிப்பிழம்பால் சிற்பியின் கைக்கட்டைவிரலும் சரியாக, பெரியவர் மறைந்து போனார். ஊரே ஸ்தம்பித்து நின்றது. அனைவரும் சில்பா சிற்பியின் சக்தியும், மகிமையும் பெரியது என அறிந்து அவரைக் கொண்டாட, பெருமானை நேரிலே கண்ட திருப்தியுடன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. ஏற்கெனவே ஊருக்கு இருந்த புராணப் பெயரான அஷ்ட நேத்திரபுரம் என்னும் பெயரே, சிற்பிக்குக் கண்கள் திறந்த காரணத்தால் எண்கண் எனப் பெயரிடப் பட்டு இன்றளவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப் படுகின்றது. சில்பா சிற்பியோ தம் வாழ்நாள் பூராவும் எண்கண் கிராமத்தில் ஆறுமுகன் சந்நிதியிலேயே தவமாய் இருந்து, உயிர் விட்டதாய்க் கூறுகின்றார்கள். கோயிலில் சில்பா சிற்பியின் சமாதி வன்னிமரத்தடிப் பிள்ளையாருக்கு அருகே காணப்படுவதாயும் கூறுகின்றார்கள்.

"கந்தன் திருநீறணிந்தால் கண்ட வினைகள் ஓடி, அனைவருக்கும் சுகமே" என்பதை இந்தக் கதை/ கதையல்ல நிஜம் என்றும் ஒரு சாரார் கூற்று. உணர்த்துகின்றதல்லவா?? முன் பதிவில் நான் பதினெட்டுக் கண்கள் கந்தனுக்கு என்று எழுதி உள்ளேன். வெகு சிலரே அதைக் கவனித்திருக்கின்றனர். ஆறுமுகங்களில் பனிரண்டு கண்களும், நெற்றிக் கண்கள் ஆறும் ஆக மொத்தம் பதினெட்டும் சேர்த்துப் பதினெட்டுக் கண்கள் என்று கூறினேன். இந்தத் தகவலைச் சமீபத்தில் ஒரு சொற்பொழிவில்/புத்தகத்தில்??? சரியாத் தெரியலை, எதிலோ படித்தேன்/கேட்டேன். ஆறுமுகனும், சிவமும் ஒன்று எனவும், சிவனுக்கு உரிய நெற்றிக்கண்கள் ஆறும் ஆறுமுகனுக்கும் உண்டெனவும் படித்தேன். ஆகையால் பதினெட்டுக் கண்கள் என எழுதினேன். 

குமாராய நம: என்ற மந்திரம் பற்றி நண்பர் ஒருத்தர் கேட்டிருக்கின்றார். இந்த ஆறெழுத்து மந்திரத்தைக் கந்த பஞ்சாட்சரம்/ குஹ பஞ்சாட்சரம் என்று சொல்கின்றனர். இந்த மந்திரத்தோடு சிற்சில பீஜாட்சரங்களையும் சேர்த்து, அல்லது சேர்க்காமல் குரு மூலம் உபதேசம் பெற்றே அவர் அருளிய வண்ணமே ஜபிக்கவேண்டும் என்றும் சொல்கின்றனர். ஆகவே இதைப் பற்றி அதிகம் எழுத முடியாது. இதைப் பற்றிய நூல் "ஆறெழுத்து அந்தாதி" கந்தனுக்கு மிகவும் நெருங்கியவர் ஆன அகத்தியரால் அருளப் பட்டதாயும் தெரிய வருகின்றது. இப்படி ஒரு புத்தகம் இருப்பதே இப்போத் தான் தெரியும். ஆகவே தெரிஞ்சவங்க சொல்லலாம். முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் வருடத்தில் மூன்று முறைகள் சூர சம்ஹாரம் நடைபெறுகின்றது. திருத்தணிகையிலேயோ சூர சம்ஹாரமே நடைபெறுவதில்லை. சூரனை சம்ஹாரம் செய்த பின்னார் பகை தணிந்த கந்தன் அமர்ந்த இடம் என்பதால் இம்மாதிரி எனக் கூறுகின்றனர். 

திருச்செந்தூரில் ஆறுமுகன் சிவனைப் பூஜிக்கும் கோலத்திலேயே கையில் மலரோடு காணப்படுவான். சூரனைச் சம்ஹாரம் செய்து முடித்துத் தம் தந்தையாகிய ஈசனைப் பூஜிக்க எண்ணி மலர்களைக் கொண்டுவரச் செய்து, சிவலிங்கம் அமைத்து ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு மலரை இட்டு வழிபட, மெய்ம்மறந்த தேவாதிதேவர்கள், "முருகா, ஆறுமுகா, கார்த்திகேயா" எனத் தம்மை மறந்து கூவ, கையில் மலரோடு கந்தன் திரும்ப அந்தக் கோலத்திலேயே இன்றளவும் காட்சி தருகின்றார் செந்தூராண்டவர். பழநியிலோ தண்டாயுதபாணியாகச் சடைமுடியுடன் காட்சி தருவது தான் உண்மையான கோலம். போகர் வடித்த சிலை கையில் ஞான தண்டத்துடன் கூடிய சடைமுடியுடன் கூடிய ஞான தண்டாயுதபாணியே. ஆண்டிக் கோலம் எல்லாம் பின்னால் ஏற்பட்டதே. இப்போதும் பழநி மலை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும் முன்னால் பார்த்தால் மூல விக்ரஹத்தில் சடைமுடி இருப்பது தெரியவரும் என்று ஆன்றோர் பலரும் சொல்கின்றனர். நாங்கள் பார்க்கும்போது ராஜாங்கக் கோலத்தில் காட்சி அளித்துக் கொண்டிருந்தான்.

Saturday, November 21, 2020

மைய நடம் செய்யும் மயில் வாகனனை! கந்த சஷ்டிப் பதிவுகள்! 7

முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப் பிடி என அந்தச் சிலையைப் பிடிக்கச் சொன்னதே ஊரின் பெயராக அமைந்து இன்று எட்டுக் குடி என விளங்குகின்றது எனச் சொல்கின்றனர். பறக்க ஆரம்பித்த மயிலையும், வேலவனையும் பார்த்து பக்திப் பரவசத்துடன் மக்கள் அனைவரும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே வேலா, எங்களை விட்டுப் போய்விடாதா, கந்தா, கடம்பா எனக் கூவிக் கொண்டே போக, சிற்பியோ தன் உளியை எடுத்து அவசரத்துடனும் பதற்றத்துடனும், பறக்கும் மயிலை நோக்கி வீச, உளிபட்டு பின்னமடைந்த சிலை கீழே இறங்கி நின்றது. சிற்பி கண்களில் கண்ணீருடன் அழகிய சிலையைப் பின்னப் படுத்திவிட்டேனே எனக் கதற, திடீரென சிலையின் பின்னமடைந்த இடம் நேராகி நிற்க, மன்னனும், மக்களும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் விக்கித்துப் போய் சிற்பியைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

பின்னர் சிலையைச் சந்நிதானத்துக்கு எடுத்துப் போய் முறைப்படி அனைத்து வழிபாடுகளும் செய்து கும்பாபிஷேகமும் செய்வித்தான் முத்தரசன். மக்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து சில்பா சிற்பியையும் ஒரு தெய்வமே எனக் கொண்டாட ஆரம்பித்தனர். மன்னனை விடச் சிற்பியின் புகழும், அவருக்கு மரியாதையும் கூடியது. உலகிலேயே இம்மாதிரியான சிற்பி கிடையாது என ஏகோபித்த உணர்வோடு மக்களின் புகழ் சிற்பிக்குக் கிடைக்க மன்னன் மனம் புழுங்கியது. பொறாமையால் வெந்தான். "மன்னன் நான், ஆனால் புகழ் அவனுக்கு! போயும் போயும் ஓர் அற்ப சிற்பிக்கு என் முன்னேயே இத்தனை போற்றுதல்களும், புகழும் போய்ச் சேருகின்றனவே! இது என்ன அநியாயம்?" கொதித்துப் போனான் முத்தரசன். சேவகர்களை அருகே அழைத்துக் காதில் ஏதோ மெல்லச் சொல்ல சேவகர்களே பயத்தில் நடுங்கிப் போனார்கள். 

அவர்களுக்குத் தைரியம் சொன்னதோடு அல்லாமல் இது தன் கட்டளை எனவும் அரசன் என்ற முறையில் ஆணையிட்டான் முத்தரசன். அரசன் ஆணையை மீறும் தைரியம் இல்லாத சேவகர்கள் சில்பா சிற்பியையும் அழைத்துக் கொண்டு அவரின் சிற்ப மண்டபத்துக்குச் சென்றனர். அங்கே அவர் செய்து முடித்திருந்த, செய்து கொண்டிருந்த பல சிற்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் பின்னப்படுத்தி அலங்கோலம் செய்தனர். சிற்பி பதற்றத்தோடு அவர்களைத் தடுக்க வர, சேவகர்களில் சிலர் அவர் கை, கால்களை இறுகக் கட்டிக் கீழே தள்ள, இருவர் அவர் கண்களில் காய்ச்சி வைத்திருந்த கள்ளிப்பாலை ஊற்றினார்கள். துடிதுடித்தார் சிற்பி. கண்களைத் திறக்கவே முடியவில்லை.

"முருகா, ஆறுமுகா, உனக்குப் பதினெட்டு கண்கள் இருந்தும் எனக்கு இந்தக் கொடுமையா?" என்று கதறுகின்றார் சிற்பி. "உன்னைச் சிலையாய் வடித்தது தவிர, நான் செய்த தவறு என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" எனப் புலம்பிய சிற்பி, அப்படியே மயங்கிப் போக அவருக்கு மீண்டும் குமாரன் தோன்றி, "சிற்பியே, மும்முறைகள் என்னை நீர் வடிக்கவேண்டும் எனச் சொன்னது மறந்து விட்டீரா?? எடும் உளியைக் கையில், மீண்டும் நீர் என்னைச் சிலையாக வடிக்கவேண்டும் என்பதை மறந்து, மயங்கிப் போனீரோ?" எனக் கேட்க, " கந்தனே, இது என்ன சோதனை? நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கண்ணிழந்து கிடக்கும் என்னையா உன் சிலையைச் செய்யச் சொல்கின்றாய்? இது என்னப்பா சோதனை?" என்று கதறுகின்றார். 

"உளியைக் கையில் எடும் சிற்பியே! நீர் கையில் எடுத்தால் தாமாய் வேலைகள் நடக்கும். உம் பேத்தி உமக்குத் துணை இருப்பாள்."என்று கந்தவேள் ஆணை இடுகின்றான். மறுநாள் முதல் சிற்பவேலை தொடங்குகின்றது. பேத்தியாக வந்த பெண்ணின் உதவியோடு சிற்பி சிலை வடிக்கத் தொடங்குகின்றார். அவயங்களை அந்தப் பெண் சிற்பியின் கைகளை எடுத்து வைத்து, இங்கே, இங்கே எனக் காட்டிக் கொடுக்க அவ்வாறே சிற்பியும் செதுக்க மெல்ல, மெல்ல கந்தன் உருவாகத் தொடங்கினான். ஆனால் இப்போது சிலை செய்வது முத்தரசன் காதுகளில் எட்டவே கூடாது என மிக மிக கவனமாய்ச் சிலையைச் செதுக்கி வந்தார் சில்பா சிற்பி. பார்த்தாலே தெரியும் வண்ணம் முருகனின் சிறப்பான, 

"பன்னிரு கண்ணும்,பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்" "ஈராறு செவியில் இலகு குண்டலமும்" 

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கையும், கீதம் பாடக் கிண்கிணி ஆட" 

"மைய நடம் செய்யும் மயில்வாகனனை' 

மிக அழகாகவும், அருமையாகவும், ஜீவ சக்தி ததும்பும் வண்ணமும் செதுக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. மெல்ல, மெல்ல சிலை வடிவெடுத்துக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் அங்கே சிற்ப மண்டபத்துக்குச் சிற்பியைத் தேடிக்கொண்டு வந்தார். சில்பா சிற்பியைப் பார்த்து சிக்கலிலும், எட்டுக்குடியிலும் அவர் செதுக்கி வடிவமைத்த சிற்பங்களைப் பார்த்து அதன் அழகிலும், உயிரோட்டத்திலும் மனதைப் பறி கொடுத்துவிட்டதாயும், தாம் சமீவனம்(தற்போது எண்கண், புராண காலத்தில் அஷ்டநேத்திரபுரம்) என்னும் ஊரில் இருந்து வருவதாயும், சில்பியைத் தம்மோடு சமீவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தோடு வந்திருப்பதாயும் தெரிவிக்கின்றார்."முத்தரசனுக்குப் பயந்து பயந்து வாழும் நீர் அங்கே வந்து என்னுடன் இருந்தால் எங்கள் ஊரினுள் இருக்கும் வன்னிமரக் காட்டில் இருந்த வண்ணம் உம் சிற்பப்பணியை நீர் தொடரலாம். உம்மை எவரும் தடுக்க மாட்டார்கள்." என்று அழைக்க, சிற்பி தயங்குகின்றார். ஆனால் பேத்தியாக வந்த பெண்ணோ, அவரைச் சமாதானம் செய்து இது தான் சிறந்தது எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த முருகன் சிலையையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பெரியவரோடு சமீவனம் அழைத்துச் செல்கின்றாள். 


எண்கண் முருகன் கோயில், படத்துக்கு நன்றி விக்கிபீடியா

சமீவனத்தில் சிலையை எந்தத் தொந்திரவும் இல்லாமல் செதுக்க ஆரம்பித்த சிற்பி சில மாதங்களிலேயே பேரழகன் ஆன கந்தன் சிலையை, உயிரோட்டத்துடன் மீண்டும் செதுக்கி முடித்தார். மெல்ல, மெல்ல, சமீவனத்து மக்களுக்கும் இந்தச் செய்தி பரவ, ஊரார் அனைவரும் காட்டுக்குள் வந்து கந்தனைத் தரிசிக்கின்றனர். அப்போது......




Friday, November 20, 2020

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட! கந்த சஷ்டிப் பதிவுகள்! 6

 அதிசயம் ஆனால் உண்மை. பனிரண்டு வருடங்கள் முன்னர் இதை எழுதிய மறுநாள் காலை பொதிகைத் தொலைக்காட்சியில் 6-30 மணிக்கு சிக்கல், எட்டுக்குடி, எண்கண் மூன்று கோயில்களையும் அதன் வரலாற்றையும் கூறிக் காட்டினார்கள். இத்தனை வருஷங்கள் இல்லாமல் திடீர்னு இப்போ நான் எழுத ஆரம்பிச்சதும், இன்று இந்தக் கோயில்களைக் காட்டியதும், அதுவும் சில்பா சிற்பியின் கதையை ஓவியமாய் வரைந்துள்ளதையும் காட்டியதும் பார்த்தால், நேற்று நான் தரவெல்லாம் இல்லைனு சொன்னதால், தரவை அந்த முருகனே காட்டிக் கொடுத்திருக்கின்றான் என்று என் மனதில் தோன்றுகின்றது. சில்பா சிற்பியை சில்பா முனிவர் என்றும் சித்தர் என்றும் போற்றி அவருக்குத் தனிக் கோயில் எழுப்பி வழிபாடுகள் நடப்பதாயும் தெரிய வந்தது. இது எனக்குப் புதிய செய்தி! போயே பார்க்காத கோயில்களைப் பற்றி எழுத வேண்டாம் என நினைத்திருந்த எனக்கு எழுத வேண்டும் என்று தோன்றியதும், தொலைக்காட்சியில் பார்த்துவிடு என்று முருகன் காட்டிக் கொடுத்திருக்கின்றான். சீக்கிரமாய் நேரே போய் தரிசனம் செய்யவும் அவனருள் துணை நிற்கும். இந்த நினைப்பும், இன்றைய நிகழ்வும் அவன் செயலாலே! இனி கதை தொடரும்.! கதை தெரிந்தவர்கள் நான் செய்யும் தப்பைத் திருத்தவும். தெரியாதவர்கள் பொறுத்துக்கொள்ளவும், வேண்டுகின்றேன்.  பின்னர் நாங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்றதும் எட்டுக்குடியில் நம்மவர் கீழே விழுந்ததும், பாதியில் திரும்பியதும் அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எண்கண் போனதும் தனிக்கதை! *********************************************************************************** கனவில் வந்த கந்தன் கலகலவெனச் சிரிக்கின்றான் சில்பியைப் பார்த்து. முருகா, குமரா, என் கதியைப் பார்த்தாயா எனச் சிற்பி அழுது வேண்ட வேண்டும் என நினைத்தால் கைகளோ தொழுகின்றன. குமரன் சொல்கின்றான். "சில்பா சிற்பியே! உளியைக் கையில் எடு. இன்னும் இரு சிலைகள் நீ செய்யவேண்டுமே? இப்படி உறங்கினால் என்ன அர்த்தம்? நானே வியக்கும் வண்ணம் என் சிலையை வடித்த நீ அதேபோல் இன்னும் இரண்டு செய்யவேண்டும் அல்லவா?? என்னை நினை! எடு உளியைக் கையில்! ம்ம்ம்ம்., சீக்கிரம்!, சீக்கிரம்!" என்று அவசரப் படுத்துகின்றான். சில்பிக்குத் தூக்கிவாரிப் போட விழிப்பு வந்துவிட்டது. உடலெல்லாம் வியர்வை வெள்ளம். திகைத்து அமர்ந்தார் சில்பி. கண்டது கனவா? இல்லை நனவா? கட்டை விரல் போய்விட்டது அந்த முருகவேளுக்குத் தெரியாதா? இது என்ன சோதனை! என் அப்பனே, கந்தா, குமரா, கடம்பா, கார்த்திகேயா?? இதுவும் உன் ஆணையா?? முயல்கின்றேன். என்றவாறு ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாள் பகலில் கல்லைத் தேர்ந்தெடுத்து உளியைக் கையில் எடுக்கின்றார் சில்பி.


"தாத்தா, தாத்தா!" என்ற குரல்கேட்க திரும்பிப் பார்க்கின்றார். ஒரு சிறு பெண் ஏழு வயதிருக்கும் நின்று கொண்டிருக்கின்றாள். "நீ யாரம்மா?" எனக் கேட்க," என்ன தாத்தா? என்னைத் தெரியவில்லை? நான் உங்கள் பேத்தி!" என்று சொல்கின்றாள் அந்தச் சிறுமி. "அப்படியா? இந்தத் தாத்தாவிடம் உனக்கு என்னம்மா வேண்டும்?" என்று சிற்பி கேட்க, " நீங்கள் வேலை செய்யுங்கள் தாத்தா, நான் உதவுகின்றேன்." என்று அந்தப் பெண் சிற்பிக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய ஆரம்பிக்கின்றாள். சிலை உருவாகத் தொடங்குகின்றது, முத்தரசனுக்குத் தெரியாமல். அவன் கட்டளையை மீறி உருவாகும் சிலை மட்டுமின்றி, சிற்பியும் உயிர் பிழைப்பாரா?? குழப்பம் மேலிடுகின்றது சிற்பிக்கு. ஆனால் அவரால் சிலை வடிப்பதை நிறுத்தவும் முடியவில்லை. அழகன் முருகன் அவர் கைகளில் மெல்ல, மெல்ல உயிர் சிற்பமாய் வடிவெடுக்கின்றான்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

 "பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணியாட" முருகனின் அழகு பார்ப்பவர் கண்களை விட்டுப் பிரிய மறுக்கின்றது. தோள் கண்டார், தோளே கண்டார் என்பது போல் இந்த முருகன் சிலையப் பார்த்தவர்கள் அதன் அழகில் மயங்கி நின்றனர். ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாய் சிலை உருப்பெற்று வந்தது. இனி நல்ல நாள் பார்த்துக் கண் திறக்கவேண்டும். கண் திறந்தால் முருகன் எதிரே வந்து பேச ஆரம்பித்து விடுவான் போல் ஜீவ களை ததும்பிற்று முகத்தில். கண் திறந்தால் அவன் கருணை அந்தக் கண்களில் சொட்டுமே, அதை நம்மால் தாங்க முடியுமா என நினைத்தார் சிற்பி. அது வரையிலும் முத்தரசனுக்குச் செய்தி போகவில்லை. அவனும் தற்சமயம் வேறொரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய நிலையில் இருந்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட காஞ்சிரங்குடி என்னும் ஊரில் (தற்சமயம் எட்டுக்குடி என அழைக்கப் படுகின்றது) ஊர் மக்கள் அனைவரும் முத்தரசனிடம் வைத்த விண்ணப்பம் என்னவென்றால், சிக்கலில் முருகன் சந்நிதியை ஏற்படுத்தி, முருகன் விக்கிரஹத்தையும் பிரதிஷ்டை செய்த மாதிரி எங்கள் ஊரிலும், ஆனந்தவல்லி சமேத செளந்தரேஸ்வரர், இருவரும் தங்கள் மகன் ஆன குமாரன் இல்லாமல் தனியே குடி இருக்கின்றனர். அவரையும் குமாரனோடு குடி அமர்த்த வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் சில்பா சிற்பியை வரவழைக்கின்றான் முத்தரசன். அவனுக்குச் சிற்பி சிலை வடித்திருக்கும் விஷயம் தெரியாது. ஆகவே அவரிடம் உங்கள் வழிகாட்டுதலுடன் மற்ற சிற்பிகள் சிலை வடிக்கட்டும், தாங்கள் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்க, ஆவலை அடக்க முடியாத சிற்பியோ தான் ஏற்கெனவே செதுக்கிய சிற்பத்தைப் பார்வையிடுமாறும், அந்தச் சிலையைக் காஞ்சிரங்குடி என்னும் எட்டுக் குடியில் பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் எனவும் கூற, மன்னனுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. "என்ன? உங்கள் கட்டை விரலை நான் எடுத்தும், சிற்பம் செதுக்கி இருக்கின்றீர்களா?" என திகைத்துப் போய்க் கேட்ட மன்னன், உடனேயே சிற்பியின் குடிலுக்குச் சென்று சிலையைப் பார்க்கின்றான். "ஆறிரு தண்புயத்தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து" நின்ற அழகிய வேலன், சிங்காரவேலனையும் தோற்கடிக்கும் அழகோடு நின்றான். கண்கள் திறக்கவேண்டியதுதான் பாக்கி. சிற்பியைப் பார்த்து, முத்தரசன், சிலைக்கு விழி திறந்து காஞ்சிரங்குடியில் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கூறுகின்றான். சிற்பியோ கையைப் பிசைந்தார். "மன்னா, சிலையில் ஜீவ ஓட்டம் ததும்பி நிற்கின்றது. கண் திறப்பது என்பது சாமானியமான வேலை இல்லை. மயிலோடு முருகன் பறந்துவிடுவானே? எனவே நான் சிலைக்குக் கண் திறக்கும் முன்னர் தாங்கள் சிலையைச் சங்கிலி போட்டுப் பிணைத்துக் கட்டுங்கள்." என்று வேண்டுகின்றான்.

முத்தரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன சிற்பியாரே? என்ன நினைத்துக் கொண்டீர்கள்? சிலையாவது? பறப்பதாவது?? நீங்கள் என்ன உங்களை அவ்வளவு பெரிய ஆளென நினைத்துக் கொண்டீரோ?? சிற்பக்கலையில் வல்லுனர் என்றால் நீங்கள் வடித்த சிலைக்கு உயிர் வந்து ஓடிவிடும் என்று சொல்லுவதெல்லாம் அதிகம் என உங்களுக்கே தோன்றவில்லை?" என்று ஏளனம் செய்தான் முத்தரசன்.. சிற்பியும் இதற்கு மேல் மன்னன் ஆணையை மீற முடியாமல் சிலைக்குக் கண்கள் திறக்க அருகில் சென்றார். கண்களைத் திறக்கும் முன் செய்யவேண்டிய முறைப்படி, சிலையின் உடல்பாகத்தின் ஒன்பது இடங்களில் வழிபாடுகள் முறையாக நடத்தி பொன் ஊசியால் ஒளி மண்டலம், விழி மண்டலத்தை விளங்கச் செய்து, முறைப்படி கண்களைத் திறக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. முருகன் சிலை திடீரெனக் குலுங்க ஆரம்பித்தது. மயில் தன் தோகையை விரிப்பதை அனைவரும் காண முடிந்தது. உயிரோட்டம் மிகுதியாக மயிலுடன் ஆறுமுகன் விண்ணில் பறக்கத் தொடங்கினார். முத்தரசனோ செய்வதறியாது, "எட்டிப் பிடி, எட்டிப் பிடி, எட்டிப் பிடி!" எனக் கூவினான்.

Thursday, November 19, 2020

கற்றதெல்லாம் உந்தன் கனிமொழியாலே! கந்த சஷ்டிப்பதிவுகள்! 5

 இப்போது குறிப்பிடப் போகும் கதை தெரிந்தவர்கள் இருக்கலாம், எனக்கு இதன் ஒரு பகுதி மட்டுமே சிறிய வயதில் அறிந்திருக்கின்றேன் வாய்மொழியாக. இந்தக் கதையை நான் படிச்சது 4,5 வருஷத்துக்கு மேல் இருக்கும்.   . வடிவேலனைக் கல்லில் வடித்த ஒரு சிற்பியைப் பற்றிய கதை இது. செவிவழிச் செய்தியாகவே சொல்லப் பட்டு வருகின்றது. ஆகவே யாராவது "தரவு"னு கேட்டுட்டு வந்தால், தரவே மாட்டேன் என்பதையும் சொல்லி விடுகின்றேன். ***********************************************************************************சோழநாட்டு அரசர்கள் அனைவருமே சைவப் பற்றுடையவர்கள். ஈசனிடம் பற்றுள்ளவர்களுக்கு அவர் குமாரனிடம் பக்தி இல்லாமல் போகுமா? குறைவின்றி நிறைவாகவே இருந்து வந்த சமயம் அது. இந்தக் கதை நடந்த காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சி புரிந்து வந்தது என்றும், அதன் கீழ் கப்பம் செலுத்தி வந்த சோழச் சிற்றரசன் என்றும் சொல்லுவாருண்டு. ஆன்மீகக் காவலர்கள் ஆன சோழச் சிற்றரசர்களில் ஒருவன் ஆன முத்தரசன் என்பான் அப்போது சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். ஒருமுறை அவன் சிக்கலில் ஈசனைத் தரிசனம் செய்ய வந்திருக்கின்றான். அதுவரையிலும் சிக்கிலில் ஈசன் மட்டுமே கோயில் கொண்டிருந்ததாயும் சொல்கின்றனர். சிக்கிலுக்கு வந்த முத்தரசன் ஈசனின் வரலாற்றைக் கேட்டறிந்தான். வசிஷ்டர் காமதேனுவின் வெண்ணையை லிங்கமாய்ப் பிடித்து வைத்துப் பூஜை செய்து வந்ததையும், அந்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்ற பலராலும் முடியாததையும் லிங்கம் மண்ணில் சிக்கிக் கொண்டதாலேயே ஊருக்கும் சிக்கில் எனப் பெயர் வந்ததையும் கேட்டறிந்த முத்தரசன் உணர்ச்சி மேலிட்டுப் பல மானியங்களை ஒதுக்கினான் கோயிலுக்கு. 

அந்தக் கோயிலில் சிவ குமாரன் கோயிலில் இல்லை என்பதையும் அறிந்துகொண்டு சிங்காரமாய், அழகாய், நேர்த்தியாய் ஒரு வேலனை வடிக்கச் செய்து அங்கே பிரதிஷ்டை செய்யவும் உத்தரவிட்டான் மன்னன். மன்னனின் ஆட்கள் சிற்பிக்காக அலைந்து, திரிந்து வெண்ணாற்றின் கரையில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் தன்னந்தனியே சிலைகள் வடித்துக் கொண்டிருந்த ஒரு சிற்பியைக் கண்டார்கள். சிலைகளின் அழகோ பிரமிக்க வைத்தது. சிலையா அல்லது உயிருள்ள தெய்வமா என்று எண்ணும்படிக்கு ஜீவசக்தி ததும்பிக் கொண்டிருந்தன சிற்பங்களில். சிற்பியின் நெற்றியில் திருநீறு, மார்பில் உத்திராட்ச மாலை. பார்த்தாலே கை எடுத்துத் தொழவேண்டிய தோற்றம். சிற்பியா, இல்லை சிவனடியாரா?? முத்தரசனிடம் அழைத்துச் செல்லப்பட்ட சிற்பியைக் கண்டதும் ஈசனே சிற்பி வடிவில் வந்து விட்டானோ என்று முத்தரசனுக்குச் சந்தேகம். என்றாலும் அவனிடம் தன் வேண்டுகோளை வைக்கின்றான் முத்தரசன். 


சிற்பி சொல்கின்றான்:" மன்னா! நாங்கள் முருகனடிமைகள். பரம்பரைச் சிற்பிகளும் கூட. என்னைச் "சில்பா சிற்பி" என்றே சொல்லுவார்கள். பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தாலும், முருகனின் கருணையாலுமே அவன் உருவை வடிவமைக்கும் வாய்ப்பைத் தாங்கள் எனக்களிக்கின்றீர்கள். தங்கள் சித்தம் போல் மயிலோனை அனைவரும் வியக்கும் வண்ணம் சிங்காரமாய் வடிவமைக்கின்றேன்." என்று உறுதிமொழி கொடுக்கின்றார் சில்பா சிற்பி. நாட்கள் பறக்கின்றன. அருமையான கல்லைத் தேர்ந்தெடுத்துச் சிற்ப வேலையை ஆரம்பிக்கின்றார் சிற்பி. ஒருநாள் அவர் கனவில் ஆறுமுகன் தோன்றி, " நீ என்னை இந்த ஆறுமுகக் கோலத்தில் பனிரண்டு கைகளுடனேயே உருவாக்கு!" என்று கட்டளை இட, அவ்வாறே உருவாக்கத் தொடங்கினார் சிற்பி. வலக்கைகளில் சக்திவேல், கதை, கொடி, தண்டு, அம்புடன் கூட மற்றொரு வலக்கரத்தில் அபய ஹஸ்தமும், இடக்கைகளில் வஜ்ரம், பத்மம், கடகாஸ்தம், சூலம், வில், வரத ஹஸ்தமும் கொண்டு அழகை அள்ளிச் சொரியும்படியான சுந்தர வடிவேலனை மயில் வாகனத்தில் வடித்தார் சில்பா சிற்பி. 

பார்த்தவரைப் பித்துப் பிடிக்க வைத்தான் ஆறுமுக வேலன். மயிலோடு பறந்துவிடுவானோ என நினைக்கும் வண்ணம் ஜீவன் ததும்பி நின்றது சிலையில். கண்களின் அழகைச் சொல்லுவதா? புன்முறுவலைச் சொல்லுவதா? கைகளின் வடிவைப் பாராட்டுவதா? மயில் சிற்பமா? உண்மையான மயிலா? என்னும்படிக்குச் சிற்பம் அனைவரையும் திகைக்கவும், பிரமிக்கவும் வைத்தது. மக்கள் மன்னனைப் பாராட்டுவதா? சிற்பியைப் பாராட்டுவதா எனத் தெரியாமல் மயங்கி இருவரையும் மனதாரப் பாராட்டி இத்தகையதொரு சிற்பத்தை இனி எவராலும் உருவாக்க முடியாது என்று சொன்னார்கள். ஜெயகோஷங்கள் முழங்கின. ஒரு நன்னாள் பார்த்துக் குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்தான் முத்தரசன். நன்னாளில் குடமுழுக்கையும் நடத்தி ஆறுமுகனைச் சிக்கில் கோயிலில் பிரதிஷ்டையும் செய்வித்தான். ஊரெங்கும் கொண்டாட்டம், கோலாகலம், ஆனந்தத் திருவிழா! மக்கள் மனதில் மகிழ்ச்சி! ஆனால் மன்னனுக்கோ மனதில் ஏதோ குழப்பம்! வேகம், என்ன என்னவோ கணக்குகள். என்னவோ எண்ணங்கள். 

சிற்பிக்கு மன்னன் என்ன பரிசு கொடுக்கப் போகின்றானோ என்று மக்கள் பேசுவதும் அவன் காதில் விழுந்தது. சிற்பியை அரசவைக்கு வரவழைத்தான். அரசவையில் பெருங்கூட்டம். அனைவரும் மன்னன் அளிக்கப் போகும் பரிசையும், பாராட்டுச் சொற்களையும் எதிர்பார்த்துக் குழுமி இருந்தார்கள்.சிற்பி வரவழைக்கப் பட்டார். மன்னன் தரப்போகும் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்தார் சிற்பியும். மன்னனும் சிற்பியைப் புகழ்ந்தான், இது போன்ற சிற்பம், எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரழகுப் பெட்டகம் ஆன சிங்காரவேலன் சிலையைச் செதுக்கியதன் மூலம் தன் உள்ளத்தைச் சிற்பி குளிர்வித்து விட்டதாயும் கூறினான். இன்னொரு உதவியையும் செய்யவேண்டும் என்றும் கேட்டான். மற்றொரு சிற்பமோ என சிற்பி ஆவலுடன் காத்திருந்தான். முத்தரசன் கூறுகின்றான்:" சில்பா சிற்பியே! இத்தனை தத்ரூபமாய் முருகன் சிலையை வடிவமைத்த நீர் இனி எந்த மன்னனுக்கும் இதே போல் எந்தக் காலத்திலும் முருகன் சிலையை மட்டுமல்ல, எந்தச் சிலையையும் வடிக்கக் கூடாது. முத்தரச மன்னன் மட்டுமே முருகப் பெருமானைப் பேரழகுடனும், பொலிவுடனும் படைத்தான் என வரலாற்றில் என் பெயர் நிலைத்து நிற்க வேண்டும். ஆகவே" என நிறுத்தினான் மன்னன். 

அடுத்து வரப்போவதை எதிர்பார்த்துச் சிற்பி காத்திருக்கையில் மன்னன் கண்ணசைவில் சில வீரர் சிற்பியை நெருங்கினார்கள். சிற்பியை இருவர் இறுக்கிப் பிடித்துக் கொள்ள மற்றும் இருவர் அவர் வலக்கைக் கட்டை விரலை வெட்டப் போனார்கள். சிற்பி பயத்திலும் நடுக்கத்திலும் ஆழ்ந்து போய் மன்னனைக் கெஞ்சினார். " கட்டை விரலை வெட்டவேண்டாம் என. கட்டை விரல் இல்லை எனில் உளியைப் பிடிப்பது எவ்வாறு?? அதற்கு என் உயிரை எடுத்துக் கொள்." என்றும் சொல்லிப் பார்த்தார், மன்னன் மனம் இரங்கவில்லை. இந்தப் பெருமை யாவும் எனக்கே வந்து சேரவேண்டும் என்ற அவன் காவலரை நோக்கி," அஞ்சாதீர்கள் கட்டை விரலை வெட்டுங்கள்" என்று சொல்ல, அவர்களும் மன்னன் கட்டளைக்கிணங்கி சில்பா சிற்பியின் கட்டை விரலை வெட்டினார்கள். சிற்பி துடிதுடித்தார். உடல்வேதனையும், மனவேதனையும் தாள மாட்டாமல், "முருகா, உன் பேரழகைச் செதுக்கிய எனக்கு நீ கொடுத்த பரிசா இது?" என கண்ணீருடன் கலங்கி, சோகம் தாங்க முடியாமல், சோர்ந்து போய் உறங்க மீண்டும் கனவில் வந்தான் சிங்காரவேலன், முகம் கொள்ளாத புன்னகையுடன்.

Wednesday, November 18, 2020

முத்துக்குமரா என்று அழைக்கவா! கந்தசஷ்டிப் பதிவுகள்! 4

 கதை பற்றி துரை அவர்கள் ஆதாரமில்லை என்கிறார். ஆனால் இந்தக் கதையைப் பலரும் சொல்லிக்கேட்டிருக்கேன்.  அந்த அந்தக் கோயில்களிலும் இது வழங்கப்படுகிறது. ஆகவே இந்தக் கதையை நாளையிலிருந்து வழங்கப் போகிறேன். இது செவிவழிக் கதையாகவே பரவி வருகிறது. ஆகவே யாரேனும் "தரவு" எனக் கேட்டால், "இல்லை" என்பதே பதில். இப்போது இன்றைய பதிவைப் படிக்கலாம். கதைக்கு நாளை வரை பொறுத்திருக்கவும்.

***********************************************************************************


** குமாரன்= என்றால் சிவ, சக்தி ஆகியோரின் அருளால் வெளிப்பட்டவன் என்று ஒரு பொருள் ஆன்றோர் வாக்கில் சொல்கின்றனர். ஷரவணப் பொய்கையை அம்பிகையின் அம்சம் என்றும், கங்கையானவள் அந்தப் பொய்கையில் ஈசனின் வீரியத்தைக் கொண்டு சேர்த்ததால் சிவ சக்தி ஐக்கியத்தில் சர்வலோகத்துக்கும் அன்னை, தந்தை ஆனவர்களின் புத்திரன் என்பதாலும் குமாரன் என்று சொல்வதுண்டு என்று பரமாச்சாரியார் கூறுகின்றார். முதன்முதலாய்க் கந்தன் புராணத்தைக் "குமார சம்பவம்" என்று வால்மீகியே ராமாயணத்தில் பால காண்டத்தில் கூறி இருக்கின்றார். கு= என்ற சொல்லுக்கு அக்ஞானம், (ஆணவம், மலம், கன்மம்) இம்மூன்றில் உள்ள மலம் என்றும் கொள்ளலாம். மாரன்= என்றால் அழிப்பவன். நம் ஆணவத்தை அழிப்பவன். நம் கர்மாவை அழிப்பவன். நம் மலத்தை அழிப்பவன். அனைத்து உயிர்களின் மலப்பிணிகளை அழித்து ஒழிப்பவன் என்று கொள்ள வேண்டும். 

நம்மை அழிக்காமல், தன் வேலாயுதத்தால் காத்து ரட்சித்து நம் மனதில் உள்ள அசுர எண்ணங்களை அழித்து ஞானத்தைப் பிறப்பிக்கின்றவனே குமாரன். இந்தக் குமாரன் என்ற பெயரை வைத்தே ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதங்களில் உள்ள கெளமாரம் பிறந்தது. வடநாட்டில் குமாரன் என்றாலே கார்த்திகேயன் ஒருவன் தான். அங்கே இவன் நைஷ்டிக பிரம்மச்சாரி. புனே நகரில் உள்ள பார்வதி மலையில் கந்தன் தவக்கோலத்தில் அன்னையிடம் வேல் வாங்கும் முன்னர் தவம் புரிவதாயும் அங்கே பெண்கள் செல்லக் கூடாது என்றும் இன்றளவும் இருக்கின்றது. பார்வதியைத் தரிசித்து விட்டு மேலே போய்க் குமாரனைத் தரிசிக்க வேண்டும். பார்வதியையும் மலை ஏறியே தரிசிக்க வேண்டும். அன்னை அங்கே குமாரனுக்கு அருள் தர ஆயத்தமாய் இருக்கின்றாள். மேலே கார்த்திகேயன் இருக்குமிடத்துக்கு ஆண்கள் மட்டுமே செல்லலாம். இந்தக் குமாரனே குமாரஸ்வாமியாகவும் ஆகின்றான். குமரனாகவும் ஆகின்றான்.

ஸ்கந்தன் எப்படித் தமிழில் கந்தன் ஆனானோ அப்படியே குமாரனும் தமிழில் குமரன் ஆகின்றான். அடுத்து ஷரவணபவ. ஷ=மங்கலம் என்ற பொருளிலும், ர= ஒளி என்ற பொருளிலும், வ= சாத்வீகம், என்ற பொருளிலும், ண= போர், யுத்தம் என்ற பொருளிலும், பவன்= என்றால் தோன்றியவன், உதித்தவன் என்ற பொருளிலும் வருகின்றது. நம் ஷண்முகன் பிறக்கும் முன்னரே தேவசேனாதிபதி அவன் தான் என்பது தீர்மானம் ஆயிற்றே. பிறக்கும் முன்னரே அவனுக்குரிய பதவியைத் தீர்மானித்தாயிற்றல்லவா. அது மட்டுமா??? எல்லாரும் துறவியாகித் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அல்லது திருமணத்தின் பின்னர் துறவியாவார்கள், இவனோ துறவியாகிப் பின்னர் ஒரு மணத்துக்கு இரு மணம் அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலித்து மணந்து கொண்டிருக்கின்றான். ச= என்ற சொல்லுக்கு மகா லட்சுமி என்ற பொருளும் உண்டு. ர= என்றால் வாக் தேவி, சரஸ்வதி, வ= என்றால் ஆரோக்கியம், அந்த ஆரோக்கியம் தரும் வீரம் என்ற பொருளில் வரும். இந்த ஆறெழுத்து மந்திரத்தைத் தக்க குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தோமானால் கந்தன் கருணையால் அவன் வேல் நம்மைக் காத்து அரணாக நிற்கும். 

கதை இல்லையேனு பார்த்துட்டுத் திரும்பப் போயிடாதீங்க, கதை ரொம்ப நீஈஈஈஈஈளம். அதான் சுருக்கிட்டு இருக்கேன். ஒவ்வொரு பகுதியாய்ப் போடறேன், நாளையில் இருந்து.

Tuesday, November 17, 2020

ஆறுபடை வீடு கொண்ட வேல் முருகா! கந்த சஷ்டிப் பதிவுகள்! 3

 ஒரு ஆண்மகன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தான் கந்தவேள்! சூரன் மாமரமாய் மாறி நடுக்கடலில் நின்று எதிர்த்தபோதும் அதை இரு கூறாகவே வீழ்த்தினான். வீரம் மட்டும் இருந்தால் போதுமா?? அருளும் இருக்கவேண்டும் அல்லவா?? அருள் இல்லாத வீரம் மட்டுமே இருந்ததால் அன்றோ சூரனை அழிக்க நேர்ந்தது. கருணக் கடலாம் கந்தன் அவனுக்கு அருள வேண்டும் எனத் திருவுளம் கொண்டான்.



ஆனால் அந்த மாமரமோ சேவலாகவும், மயிலாகவும் மாறிக் கந்தனைத் தாக்க வர அவன் பேராற்றலோடும், பெருங்கருணையோடும் அவற்றைத் தடுத்தாட்கொண்டான் அல்லவா? பேரருளாளன் ஆன கந்தனின் கருணையால் சூரன் சேவலாக ஆகி அவன் கொடியிலும், மயிலாக மாறி அவனுக்கு வாகனமாகவும் ஆனான். இதற்கு முன்னால் ஷண்முகனுக்கு வாகனம் இல்லையா என்ன? மயிலேறும் வடிவேலன் மயிலேறித் தானே போருக்கே வந்தான் அல்லவா? கொடியிலும் சேவல் தானே இருந்தது? 

படங்களுக்கு நன்றி கூகிளார்.

அந்த மயில் வேறு யாரும் இல்லை. சூரனின் கொடுமைதாங்காமல் ஒளிந்திருந்த இந்திரன் தான் மயில்வாகனமாக முன் வந்தான். அக்னியானவன் சேவல் வடிவில் வந்து கொடியாக உதவினான். காக்கவேண்டியவனையும், காத்து, தண்டிக்கவேண்டியவனையும் காத்து இருவருக்கும் தன் கருணையால் அருள் மழை பொழிந்தான் கந்தவேள். கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பருளும் அந்தக் களிப்பான ஷண்முகனுக்குப் பரிசு கொடுக்க வேண்டாமா?? தேவேந்திரன் தன் அருமை மகளைத் திருமணம் புரிவித்தான் ஆறுமுகனுக்கு. மேன்மை வாய்ந்த குமாரனுக்குத் தன் மேன்மை வாய்ந்த மகளைத் தந்து தானும் மேன்மை பெற்றான் தேவேந்திரன். ஆனால் இன்னொரு பெண்ணையும் கந்தன் மணந்தானே? இந்தப் பெண் யார்?/ தேவானையின் சகோதரியே அவள். இருவரும் தேவலோகப் பெண்களே, முருகனை மணக்கவேண்டித் தவம் இருக்க ஒருத்தி தேவேந்திரனின் மகளாகவும் இன்னொருத்தி வேடுவர் குலத் தலைவனாலும் வளர்க்கப் பட்டாள். ஏன் இந்த வித்தியாசம்? இருவருமே திருமாலின் மக்கள் தானே? இங்கே தான் கந்தனின் அருள் புலன் ஆகின்றது. 


தெய்வானையை மணந்தது மேன்மை என்றால் எளிய வேடுவனின் மகளையும் மணந்தது கந்தனின் எளிமையைக் காட்டுகின்றது அல்லவா?? கந்தனின் மந்திரமும் ஆறு எழுத்து. அவனுக்கு முகங்களும் ஆறு. "ஷரவண பவ" "குமாராய நம:" எந்த இந்த ஆறெழுத்து மந்திரத்தைப் பற்றி திருமுருகாற்றுப் படையில் வந்திருப்பதாய் அறிகின்றோம். குமாரன்= அக்ஞான இருளை அழிப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஷரவண பவ என்றால் குமாரன் தோன்றிய நாணற்காட்டையும் குறிக்கும், குமாரனைப் போற்றிப் பாடினால் ஆரோக்கிய வாழ்வு சித்திக்கும் என்றும் குறிக்கும். ஆறுமுகங்களும் ஆறு திசைகளைக் குறிக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேல், கீழ் என ஆறு திசைகளையும் காட்டுகின்றது இது. சூரனை அழித்த சினம் அடங்காமல் முருகன் இருக்கப் போகின்றானே என்றே எண்ணி அவனுக்கு வள்ளி, தெய்வானை இருவரையும் மணமுடிக்கின்றனரோ??


அதனால் தான் நக்கீரர் அவனை ஆற்றுப் படுத்த ஆற்றுப்படை பாடினாரோ?? இந்த ஆற்றுப் படைகளில் குறிப்பிடும் இடங்களே ஆறுபடை வீடு என இன்று மாறி உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தரையிலும், திருப்போரூரில் விண்ணிலும், திருச்செந்தூரில் கடலிலும் போரிட்டான் சிவ குமாரன். இவனின் ஆறுபடை வீடுகளையும் அவற்றின் தத்துவங்கள் பற்றியும் பார்ப்போமா?? மேலும் சிக்கலில் குடிகொண்ட சிங்காரவேலன், எட்டுக்குடி வேலவன், எண்கண் ஷண்முகன் மூவரையும் செய்த சிற்பியைப் பற்றியும் அறிவோமா??? கதை வேணுங்கறவங்க கையைத் தூக்குங்கப்பா!அப்போத் தான் கதை சொல்லுவேன். இல்லாட்டி ஒண்ணும் கிடையாது! :P


படங்களுக்கு நன்றி கூகிளார்!

Monday, November 16, 2020

பகையே சுற்றி நில்லாதே போ! கந்த சஷ்டிப்பதிவுகள்! 2

 தீராத வினைகள் யாவையும் தீர்க்கும் கந்தவேள் நம் சொந்தவேள் என்பார் வாரியார் ஸ்வாமிகள். அவன் கைவேலோ துள்ளி வந்து நம் தீராத வினைகள் யாவையும் தீர்க்கும். அதைத் தான் பாரதியும், "துள்ளி வருகுது வேல்! பகையே சுற்றி நில்லாதே போ!" என்று பாடினார். பகை என்பது இங்கே நம் உள்ளேயே குடி கொண்டிருக்கும் பகை மட்டும் அல்ல. சுற்றி இருக்கும் பகை என நாம் கருதும் அனைத்தையும் மாற்றி அருளும் வல்லமை அவனுக்கு மட்டுமே உண்டு. நாம் அந்தக் கந்தனைக் "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்" அவனை மறவாமல் இருப்பதாலேயே வந்தனை செய்தாலும் நிந்தனை செய்தாலும் அனைவரையும் காத்து வருகின்றான். கந்தன் பிறந்தான். தொல்லைகள் தீர்ந்தன. அதுவும் எவ்வாறு? தாயான உமை குழந்தையைப் பார்க்க வருகின்றாள். ஏற்கெனவே சூரபதுமாசுரனால் தேவர்களுக்குத் துயர் என்பதும் அவள் அறிந்த ஒன்றே. அதனாலேயே இந்த சிவகுமாரன் ஜனனம் என்பதும் அவள் அறிந்ததே. குழந்தை குழந்தையாகவே இருக்க முடியுமா?? பெரியவன் ஆகி அவன் வந்த வேலையைக் கவனிக்க வேண்டாமா?? வேலையைக் கவனிக்க அவனுக்கு வேலாயுதம் தேவை அல்லவா?? குழந்தைகள் ஒன்றா? இரண்டா? இது என்ன? ஆறு குழந்தைகள் ஒரே மாதிரி. அனைத்தையும் ஒரு சேர எடுத்து அள்ளி அணைத்தாள் உமை! என்ன ஆச்சரியம்? அனைத்தும் ஒன்றாகி ஆறுமுகங்களுடனும் குழந்தை ஆறுமுகனாய்க் காட்சி அளிக்கின்றான். வேதங்கள் அவனை "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" "சுப்ரமண்யோஹம்" என மும்முறை சொல்லி ஆராதிக்கின்றது. அந்த வேதத்தையே, அவற்றின் பொருளையே தன் தகப்பனுக்குப் போதிக்கின்றான் அந்தத் தகப்பன் சாமி. ஒரு பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு அவன் மலைதேடித் தனியே அமர்ந்ததாகவும் கதை! உண்மையில் பழத்துக்கா கோபம்! இல்லை! தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவேண்டி, தான் எவ்வாறு அனைத்தும் துறந்து இருக்கின்றோமோ அதே போல் பற்றை அறு, என்னைச் சரணடை! உனக்கு நான் இருக்கிறேன் ஞானத்தைப் போதிக்க என்று அந்தச் சின்னஞ்சிறுவன் நமக்கு எடுத்துக்காட்டாய் அனைத்தையும் துறந்து ஒரு ஞானியாக, துறவியாக நின்று காட்டுகின்றான். இவன் பாட்டுக்கு இப்படித் துறவியாகப் போய் உட்கார்ந்துவிட்டால் தேவர்கள் கதி?? அவங்களுக்குக் கவலை சூழ மீண்டும் அன்னையைச் சரணடைய அன்னையும் குமாரனின் கோபம் தணிக்க ஒத்துக் கொள்ளுகின்றாள்.



மகனின் கோபத்தை அன்னையைத் தவிர யாரால் தணிக்க முடியும்?? புதுப் புது விளையாட்டுக் கருவிகளைக் கொடுப்பார்கள் இல்லையா குழந்தை விளையாட? புதுப் புது நண்பர்களைக் காட்டி இவனோடு விளையாடு, அவனோடு விளையாடு என்று சொல்வதில்லையா? அதே போல நவரத்தினங்கள் ஆன நவவீரர்களையும் கந்தனுக்குத் துணை சேர்க்கின்றாள். தன் சக்தியனைத்தையும் திரட்டிக் கந்தனுக்கு வேலாயுதமாய் மாற்றி அளிக்கின்றாள். அன்னையின் யோக சக்தி, ஞான சக்தி, ஆத்ம சக்தி அனைத்தும் சேர்ந்த அந்த சக்தி ஆயுதமான வேலாயுதத்தைப் பெற்ற கந்தன் வேலாயுதனாகி நிற்க அவன் முகத்தில் முத்து, முத்தாய் வியர்வைத் துளி. தன் வேல் போன்ற நெடுங்கண்களால் மகனை அன்புடன் பார்த்து அன்னை அளித்த அழகுவேலை வாங்கிய முருகன் முகமோ முத்து, முத்தாய் வியர்த்ததாம். இன்றும், இப்போதும், இதோ இப்போக் கூட அதைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டுத் தான் வருகின்றேன். என்ன சொல்லுவது வேலின் சக்தியை! சாதாரண வேலா அது?? ஞானவேல்! சக்தி வேல்! பக்தர்களுக்கு அருளும், பக்தனைக் காக்கும் வேல்! வெற்றி வேல்!



சத்ரு சம்ஹார வேல் அது! அதுவும் தன் அனைத்து சக்தியையும் கொடுத்த அன்னை அளித்த வேல். தாயானவள் ஒரு மகனுக்குப் பலவகைகளிலும் தைரியத்தையும், வீரத்தையும் ஊட்டவேண்டும். தாயின் மனோசக்தியால் பிள்ளை வீரனாக விளங்கவேண்டும் என்பதற்காக அளிக்கப் பட்ட அந்த வேல் பகைவனை அழித்ததா?? இல்லையே! துள்ளி ஓடி வந்த அந்தக் கந்தவேளின், சொந்தவேலானது, பகைவனின் ஆணவத்தை அழித்தது. மாயையை அழித்தது. அவன் யார் என்பதை உணர்த்தியது. அவனுக்கு ஞானத்தைப் போதித்தது. முருகன் திருவடிகளே சரணம் என அவன் சேவலாகவும், மயிலாகவும் மாறி ஷண்முகனின் கொடியாகவும், வாகனம் ஆகவும் ஆனான். அதிகாலையில் முதன்முதல் எழுப்புவது சேவல் தான் அல்லவா?? இந்தச் சேவல் யார் எழுந்தாலும், எழுந்திருக்காவிட்டாலும் கூவுவதை நிறுத்தாது. அதுவும் அதிகாலைச் சூரியனை வரவேற்கும். இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் ஆதவனை வரவேற்கும் சேவலின் கொக்கரக்கோ என்ற கூவலே ஓம் என்ற ஓங்கார நாதமாய்த் தோன்றுகின்றது அல்லவா??

Sunday, November 15, 2020

வடிவேலன் அவன் வீரத்தினைப் புகழ்வோம்! கந்த சஷ்டிப் பதிவுகள்! 1

 வால்மீகி ராமாயணத்தில் விஸ்வாமித்திர முனிவர் ராம, லட்சுமணர்களுக்குச் சொல்லுவதாய் அமைந்த பல புராணங்களில் இந்த ஸ்கந்த புராணமும் ஒன்று. இதைக் குறித்து விஸ்வாமித்திரர் ராமரிடம் மிதிலைக்குச் செல்லும் வழியில் கூறியதாக வருகின்றது. கங்கை நதியின் வரலாற்றை ராமர் ஆவலுடன் கேட்க அதற்குப் பதிலளிக்கும் விதமாய் விஸ்வாமித்திரர் கூறுவதில் ஸ்கந்த புராணம், அல்லது குமார சம்பவம் அடங்குகின்றது. கங்கையும், உமையும் மலையரசன் ஆன இமவானின் மகள்கள் ஆவார்கள். இதில் மூத்தவள் ஆன கங்கையை தேவலோகத்தில் தேவர்களின் நலனுக்காகவும், மூவுலகுக்குத் தொண்டுகள் செய்யவும் கங்கையை இமவான் தேவர்களுக்கு அளிக்க அவள் நதி உருவில் தேவலோகத்தை அடைகின்றாள்.

உமையவளோ பலவிதமாய்க் கடுந்தவம் புரிந்து ருத்ரனை மணக்கின்றாள். அந்தச் சமயம் அசுரர்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் போகவே ஈசன் தன் நெற்றிக்கண்ணில் இருந்தும், மற்ற கண்களில் இருந்தும் ஆறு அக்னிப் பொறிகளை மிக்க வீர்யத்துடன் உண்டாக்க, அதன் வெம்மை தாங்காமல் உமையவள் பதறி ஓட, அதைத் தாங்க கங்கை முன்வந்தாள். எனினும் அவளாலும் அந்த வெம்மையைத் தாங்க முடியாமல் போகவே அவள் அதை மிகுந்த கஷ்டத்தோடு தாங்கிக் கொண்டு வந்து இமயமலை அடிவாரத்தில் பொய்கை ஒன்றில் விட, அந்த அக்னிப்பொறிகளில் இருந்து தோன்றினான் சிவகுமாரன். அந்தக் குமாரனை வளர்க்கும் பொறுப்பைக் கார்த்திகைப் பெண்களிடம் தேவர்கள் ஒப்படைக்க, குமாரனும் கார்த்திகப் பெண்களால் வளர்க்கப் படுகின்றான். 


ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டதால் ஆறு முகங்களை உடையவன் ஆன அவன் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றான். ஆறுமுகங்கள் உள்ள அவன் ஷண்முகன் எனவும் அழைக்கப் பட்டான். குழந்தையாக இருந்த அவனைக் கண்ட உமையவள் ஆவலுடன் ஆறு குழந்தைகளையும் ஒருசேர எடுத்து அணைக்க, ஒன்று திரட்டப் பட்டதாலும், ஈசனின் வீரம் முழுதும் கலந்து பிறந்த காரணத்தாலும் ஸ்கந்தன் எனவும் அழைக்கப் பட்டான். 



இந்தக் குமாரனின் ஆறுமுகங்களும் ஒவ்வொரு யோகவடிவைக் குறிப்பிடக் கூடியது. மூலாதாரத்தில் இருந்து ஸஹஸ்ராரம் வரை உள்ள ஒவ்வொரு யோகநிலைக்கும் இவனே நம்மை வழிநடத்திச் செல்கின்றான். அன்னைக்கு நவராத்திரி, சிவனுக்கு ஒரு ராத்திரியான சிவராத்திரி, சிவகுமாரனுக்கோ ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப் படுகின்றது. 


ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் இருந்து ஆரம்பித்து சஷ்டி வரையில் உள்ள ஆறு நாட்களும் கந்தனுக்கு உரிய நாட்களாய்க் கருதப் பட்டு விரதம் மிகத் தூய்மையுடனும், ஒருமித்த மனத்துடனும் கடைப்பிடிக்கப் படுகின்றது. ஆறு முகங்களை உடைய இவனுக்கு உரிய நாளும் ஆறாவது நாளான சஷ்டியாகும். முருகன் தமிழ்க்கடவுள் என்றும் சொல்லப் படுகின்றான். என்றாலும் முதல் காவியம் என்று சொல்லப் படும் வால்மீகி ராமாயணத்திலேயே இவன் கதை குறிப்பிடப் பட்டிருக்கின்றது. தேவர்களுக்கு உதவியாக இவன் போர் புரிந்த காரணத்தால் தேவ சேனாதிபதி எனவும் அழைக்கப் படுகின்றான். இவனுக்கு உரிய படைவீடுகளும் ஆறு. "வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்!" என்கின்றார் பாரதியார். வீரம் என்றால் எப்படிப் பட்ட வீரம்?? 

பகைவனைக் கொன்று அழிக்கும் வீரம் அல்ல இது. பகைவனை மாற்றும் வீரம். பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்பதற்கொப்ப தன் அவதாரத்தின் நோக்கமே இந்த பத்மாசுரனை அழிப்பதே என்று உணர்ந்து அவனை அழிக்காமல் அவனின் ஆணவத்தை மட்டுமே அழித்தான் கந்தன். கருணைக்கடல் அவன். ஆறுமுகங்களும், பதினெட்டுக் கண்களால் அருளைப் பொழிகின்றன.  தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாடு என்னும் தலைப்பில் கீழே உள்ளவை காணப்படுகின்றன. "சேயோன்" என இவனைக் குறிப்பிட்டுப் பாடப் பட்டிருக்கின்றது. 

தொல்காப்பியமும் இறைநெறியும் என்னும் தலைப்பில்

    தொல்காப்பியத்தில்,   

    மாயோன் மேய காடுறை யுலகமும்

    சேயோன் மேய மைவரை யுலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என ஒவ்வொரு நிலத்தையும் கருப்பொருளுள் ஒன்றாகிய தெய்வத்தொடு இணைத்துக் கூறக் காணலாம். பால்வரை தெய்வம், வழிபடு தெய்வம் என்பவற்றையும் தொல்காப்பியம் குறிக்கின்றது. இங்கே சேயோன் எனக் குறிப்பிட்டிருப்பது முருகனையே குறிக்கும் என்கின்றனர் ஆன்றோர்.

இந்தப் பத்மாசுரன்  என்னும் சூரபத்மனே கந்தனின் அவதாரத்துக்குப் பலவகையிலும் காரணம். இவன் தான் முன் பிறவியில் தட்சனாக இருந்து, சிவனை மாப்பிள்ளையாகப் பெற்றும் அவரை அவமதித்தவன். இவனுடைய யாக குண்டத்திலேயே தாட்சாயணி ஆகிய சக்தி தன் உடலை ஆகுதி ஆக்குகின்றாள். இந்த தட்சனை அழிக்க ஈசன் வீரபத்திரரை ஏவ வீரபத்திரரும் தட்சனை அழிக்கின்றார். என்றாலும் இன்னொரு பிறவி எடுத்து ஈசனை அழிக்கவேண்டும் என்று காச்யபருக்கும், அதிதிக்கும் மகனாய்ப் பிறக்கின்றான் தட்சன். பத்மாசுரன் என்ற பெயருடன் வளர்ந்து வருகின்றான். இவனுக்கு மூன்று சகோதரர்கள். கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன் ஆகிய மூவருடன் சேர்ந்து பத்மாசுரன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. 

இவை சுமார் பனிரண்டு வருடங்கள் முன்னர் கந்த சஷ்டியை ஒட்டி எழுதிய பதிவுகள். இந்த வருட சஷ்டியை ஒட்டி அவற்றை மீள் பதிவாய்க் கொடுக்கிறேன். 

படங்களுக்கு நன்றி கூகிளார்

தொடரும்.



Tuesday, November 10, 2020

புளியோதரையும் சோறு! வெகு பொருத்தமான சாம்பாரு!

இந்த அமெரிக்கத் தேர்தலில் கமலா ஹாரிஸ் என்னும் பெண்மணி ஜெயித்தாலும் ஜெயித்தார். நம்ம ஊர் ஆட்கள், ஓர் அமைச்சர் உட்பட(?) குதியோனு குதிக்கிறாங்க. தமிழ்ப் பெண்மணியாம்! அவங்களுக்குத் தமிழிலே "அ,ஆ, இ,ஈ" உண்டுனு தெரியுமானே ஜந்தேகம்! :) அதோட அவங்க தன்னை இந்திய வம்சாவளினு எங்கேயும் எப்போதும் சொன்னதாயும் தெரியலை. ஆனாலும் எல்லோரும் குதிக்கிறதைப் பார்த்தாச் சிப்புச் சிப்பாவருது! அவங்களுக்காக யாகம் என்ன, வழிபாடுகள் என்னனு அவங்க அம்மாவோட அப்பாவின் குலதெய்வக் கோயிலில் கொண்டாட்டம் தான்! அது சரி, அவங்களைத் தமிழச்சினு சொல்றவங்க கமலா ஹாரிஸின் அம்மாவும், தாத்தா, பாட்டியும் பிராமணர்கள் என்பதை ஏத்துக்கறாங்க போல இருக்கேனு ஆச்சரியமா இருக்கு! தமிழிலேயே அவங்களுக்குக் கடிதம் "ட்வீட்" எல்லாம் கொடுக்கிறாங்க! இன்னொரு பக்கம் ஆன்மிக அன்பர்கள் ஹரிகதா காலட்சேபம் பண்ணும் விசாகா ஹரியின் படத்தில் அவங்க தலையை எடுத்துட்டு கமலா ஹாரிஸின் தலையை ஃபோட்டோ ஷாப் மூலம் ஒட்ட வைத்து சந்தோஷப்பட்டுக்கறாங்க. இதை எல்லாம் பார்த்துத் தலையில் அடிச்சுக்கறதா வேண்டாமானு யோசிக்கிறேன். கமலா ஹாரிஸ்னு எழுதக் கூடாதாம் சில தமிழறிஞர்களுக்கு. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கக்காரங்கனு நினைக்கிறேன். நியூ செர்சி தமிழ்ச்சங்கம் கமலா ஆரிசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகச் சொல்லி இருக்காங்க! :))))) விவிசி, விவிசி, விவிசி

*************************************************************************************

இரண்டு வருடம் முன்னர் அக்கி வந்து சிரமப்பட்டப்போ மருத்துவர் வீட்டு வேலைகளைக் கொஞ்ச நாட்கள் நிறுத்திட்டு முழு ஒய்வு எடுங்கனு சொன்னதாலே அப்போத் தான் வீட்டு வேலைகளான வீடு பெருக்குதல், வீடு துடைத்தல், பாத்திரம் கழுவறதுனு எல்லாத்துக்கும் ஓர் பெண்மணியை வேலைக்கு வைச்சோம். அது வரை எல்லா வேலைகளும் நான் தான் செய்துட்டு இருந்தேன். அந்தச் சமயம் தான் சாப்பாடும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு சாம்பார்/குழம்பு/மோர்க்குழம்பு, ரசம், கறி, கூட்டு என வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தோம். இரு வகையில் எனக்கு அது வசதியாகத் தெரிந்தது. காலையிலேயே சாப்பிட்டதும் எல்லாம் தீர்ந்துடும். மிஞ்சாது. இன்னொரு பக்கம் நம்ம ரங்க்ஸ் காய்கறிச் சந்தைக்குப் போய்க் காய்களை அள்ளிக் கொண்டு வந்தது தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இல்லைனா நான் திண்டாடிட்டு இருப்பேன். தினுசு தினுசா வெண்டைக்காய், கத்திரிக்காயில் 3 தினுசு, நீட்டு அவரை கொஞ்சம், பட்டை அவரை கொஞ்சம்னு! ஆனால் அப்புறமா அம்பேரிக்கா போனதும் அங்கே ஆறு மாசமும் நானே சமைச்சதும் ஓர் வரலாறு! இஃகி,இஃகி,இஃகி, மருமகள் மாலை வேலைகளைப் பார்த்துக் கொள்ள நான் காலைச் சமையலைக் கைவிடவில்லை.

***********************************************************************************

அங்கேருந்து வந்ததும் பழைய காடரர் கிட்டேப் பத்துப் பதினைந்து நாட்கள் சாப்பாடு வாங்கினோம். காரம் அதிகமாய்த் தெரிந்தது. அவரிடம் சொல்லிக் கொண்டே இருக்கையிலேயே லாக் டவுன் வந்து அவர் சமையலறையை மூடிட்டதாய்ச் சொல்லிட்டார். 2 மாசங்கள் நான் தான் சமைச்சுட்டு இருந்தேன். திடீர்னு நம்மவருக்கு மசக்கை மாதிரிக் காடரிங் சமையல் மேல் ஆசை வர மறுபடி அவங்க கொடுப்பதாகச் சொல்லவும் வாங்க ஆரம்பித்தோம்.. இம்முறை விலையும் ஏற்றி விட்டு அளவையும் குறைச்சுட்டாங்க. முன்னாடி கொடுத்தப்போ ஒருத்தருக்குக் கொடுப்பதே நாங்க இரண்டு பேர் சாப்பிடறாப்போல் இருந்தது. ஆனால் லாக் டவுன் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ எல்லாம் மாறி விட்டது.  காய்கள் வேறே நம்மவரால் சாப்பிட முடியாத பீட்ரூட், முட்டைக்கோஸ், சௌசௌ என இருக்கும். அப்போ வேறே காய் வீட்டில் பண்ணிக்கறாப்போல் ஆயிடும். ரசமும் இரண்டு பேருக்குக் காணாமல் இருந்தது. மேற்கொண்டு எதையானும் சேர்த்து ரசத்தைக் கூட வைத்து விட்டுக்கணும்.  குழம்பெல்லாம் நான் ஒரு கரண்டி, அரைக்கரண்டி தான் விட்டுப்பேன் என்பதால் பிரச்னை இல்லை. ரசமில்லாமல் ரசமாகவே இல்லை. சரினு நிறுத்திட்டு நானே மறுபடி சமைக்க ஆரம்பித்தால் நம்மவர் மறுபடி எனக்கு உதவினு நினைச்சுட்டு வேறொருத்தரிடம் வாங்கலாம்னு முடிவு பண்ணிச் சொல்லிட்டார்.முதல்லே இரண்டு நாட்கள் அவங்க கொடுத்தது நல்லாவும் இருந்தது. சரியாவும் இருந்தது. அதுக்கப்புறமாக் குழம்பு தீர்ந்துடுத்துன்னா பருப்பு ஜலத்தில் வேக வைச்ச தான் எதையானும் போட்டு அடி ரசமண்டியை விட்டுக் கலக்கிக் கொடுத்துடுவாங்க. மோர்க்குழம்புன்னா மோரை விட்டு விளாவி இருப்பாங்க. ரசமோ ஏற்கெனவே விளாவித் தான் இருக்கும். எனக்கு அது ஊசல் வாசனை வராப்போல் ஓர் எண்ணம். குழம்பும் ரசமும் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை எல்லாம் நம்ம வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்குக் கொடுத்தால் அவங்களும் இதே சொன்னாங்க. நீங்க சமைக்கிறாப்போல் இல்லை மாமி என்றார் அந்தப் பெண்மணி. இஃகி.இஃகி.இஃகி. 

உப்பு, புளி அடையாளம் தெரிஞ்சு போட்டால் போதும், சமையல் வந்துடும்னு நினைப்பாங்க போல! இன்னொருத்தர் பத்தரை மணிக்கே கொடுப்பேன்னு சொல்லிட்டுப் பதினோரு மணி வரை வரவே இல்லை. ஒரு வழியாப் பதினொன்றே முக்காலுக்கு வந்தார். புடலங்காய்க் கூட்டாம். புடலங்காய் தனியாகவும், கூட்டில் போட்ட பருப்புத் தனியாகவும், அரைச்சு விட்டது தண்ணியாக ஓடிக் கொண்டும் இருந்தது. அதையும் ப்ளாஸ்டிக் கவரில் போட்டுச் சுடச்சுடப் பாக்கிங் செய்திருந்தார். குழம்பு, ரசம் எல்லாமும் அப்படித்தான். இதற்குத் தொண்ணூறு ரூபாய் வேறே வாங்கினார். ஒரு உணவுக்கு ரூபாய் 30. தரமே இல்லை.  அதை எப்படிச் சாப்பிடறது? அன்னிக்கு நல்லவேளையா வீட்டில் மிளகு குழம்பு இருந்தது. அவசரமாக ஓர் ரசத்தை வைத்து அப்பளத்தைச் சுட்டுப் போட்டுக்கொண்டு சாப்பிட்டு விட்டு வாங்கின சாப்பாடை யாருக்கும் கொடுக்க முடியாத நிலையில் தூர எறிந்தோம். இத்தனை பரிசோதனை பண்ணியாச்சு, முதியோர் இல்லம் போனாலோ அங்கே வாசம் செய்தாலோ எனக்கோ அவருக்கோ ஒத்துக்கப் போறதில்லை.  ஏனெனில் அங்கேயும் சமையல் எப்படி இருக்கோ? சொல்லப் போனால் பத்து நாட்களாக இந்தச் சாப்பாடு ஒத்துக்காமல் எனக்கு வயிறு சரியில்லை. சாப்பிடுகையிலேயே வயிற்றில் வலி வந்து விடுகிறது. மோர் சாதம் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு எழுந்துடுவேன். அவருக்கும் பிடிக்கலை. போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் எறிந்து விடுவார். ஆகவே இனிமேல் ஒரு ரசம் வைச்சாலும் போதும், நானே சமைக்கிறேன், விஷப் பரிட்சை வேண்டாம்னு சொல்லிட்டேன். போதும்டா சாமினு ஆகிவிட்டது.

இந்த அழகில் காடரிங் காரங்க தீபாவளி பக்ஷணம் வேறே போடறாங்க. இனிப்பு வகைகள் கிலோ 500 ரூபாயாம். கார வகைகள் கிலோ 400 ரூபாயாம். சிலர் 550/450 என வைச்சிருக்காங்க. சென்னையில் சிலரோட விலைப்பட்டியலைப் பார்த்தால் இனிப்பு 300 ரூபாயாகவும், காரம் 250 ரூபாயாகவும் தான் இருக்கிறது. அதே போல் சாப்பாடு கொடுப்பதும் 100 ரூபாய்க்கு நன்றாக இருவேளையும் வராப்போல் கொடுப்பதாக அம்பத்தூரில் என் நாத்தனார் சொன்னார். இந்த விஷயத்தில் சென்னை தான் விலை மலிவு, நன்றாகவும் கிடைக்கும். இங்கே திருச்சியில்/ஶ்ரீரங்கத்தில் வீட்டு வாடகையும் அதிகம். இம்மாதிரி விஷயங்களிலும் வசதி பத்தாது. கல்யாணங்களிலேயே சாப்பிட்டுப் பார்த்தவரை சென்னையை அடிச்சுக்க இங்கே ஒரு காடரரும் இல்லை.  நமக்கோ இந்த வருஷம் பண்டிகை இல்லை. அதனால் சும்ம்ம்ம்மாச் சாப்பிடவெனக் கொஞ்சம் போல் தேன்குழல் மட்டும் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். மத்ததெல்லாம் பிழைச்சுக் கிடந்தால் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம். இதை எல்லாம் எதுக்குச் சொல்றேன்னு கேட்டால் வெளியே சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் முன்னர் பல முறை யோசிங்க! வேறே வழியே இல்லைனா வாங்குங்க! இல்லைனா வேண்டாம். மோர்சாதமாக வீட்டிலேயே சாப்பிட்டுக்கலாம். பசிக்குத் தான் உணவு, ஆனால் அது வயிற்றுக்கும் ஒத்துக்கணும். 

இதெல்லாம் ஒரு பதிவானு கேட்கிறவங்களுக்கு! கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதால் சொல்கிறேன். :)))))))

Friday, November 06, 2020

துள்ளி வருகுது வேல்!


படத்துக்கு நன்றி கூகிளார்!

கந்த சஷ்டி கவசம்  விமரிசனத்துக்கு ஆளானபோதே பலரும் பிராமணர்களைத் தான் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிராமணர்கள் முருகனைக் கும்பிடுவதில்லை என்றும், முருகன் என்று பெயர் வைக்க மாட்டார்கள் எனவும், குலதெய்வமாக முருகனைப் போற்ற மாட்டார்கள் எனவும் சொன்னார்கள். இதற்கெல்லாம் அப்போவே பதில் சொன்னாலும் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டை  இப்போச் சொல்லி இருப்பதும் ஒரு முருகன் தான். பிஜேபி கட்சிக்காரரான முருகன் ரத யாத்திரை செய்கிறார் அல்லவா? அப்போச் சொல்லி இருக்கார் எனக் கேள்விப் பட்டேன். ஒரு சிலர் இதைக் குறித்து எழுதி இருப்பதையும் பார்த்தேன். மற்றபடி தினசரிகளில் வரவில்லை என்றே நினைக்கிறேன். இதற்கெல்லாம் பதில் சொல்லணும்னு கட்டாயம் இல்லை தான். ஆனாலும் முருகனைக் கும்பிடுபவர்கள் பலருக்கும் அவனைப் போற்றிப் பாடிய பல பிராமணர்களைத் தெரியவில்லை. இது பிராமணர்களுக்காக வக்காலத்து வாங்கும் பதிவல்ல. தெரிந்த உண்மையைச் சுட்டிக் காட்டவே இந்தப் பதிவு.

திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் ஓர் பிராமணரே.  திருப்புகழை எழுதிய அருணகிரிநாதர் ஓர் அந்தணர் எனில் அதைப் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகளும் ஓர் பிராமணரே. திருப்புகழ்ப்பாடல்கள் உலகம் முழுதும் பரவப் பெருமளவு பாடுபட்டவர் குருஜி திரு ராகவன் என்னும் டெல்லியைச் சேர்ந்த பிராமணரே. உள்ளம் உருகுதையா என்று பாடகர் திரு டி.எம்.எஸ்ஸால் பிரபலப்படுத்தப்பட்ட முருகனைக் குறித்த பாடலை உண்மையில் எழுதியவர் தன்னை "ஆண்டவன் பிச்சி/பிச்சை" என அழைத்துக்கொண்ட பிராமணப் பெண்மணியான மரகதவல்லி அம்மாள். இவரின் பாடல்களைப் பிரபலமாக்கியவர் "திருப்புகழ் மணி" என அந்நாட்களில் அழைக்கப்பட்ட பெரியவர் ஆவார்.  இப்படி நிறைய பிராமணர்கள் முருகன் பால் வசப்பட்டு அவனைத் தொழுது கொண்டு இருந்திருக்கிறார்கள். இனி குலதெய்வம் முருகன் இருப்பானா என்னும் கேள்விக்குப் பதில்.

என் தாத்தாவும் (அம்மாவின் அப்பா) அந்தக் காலத்தில் சேதுபதி ராஜாவின் திவானாகவும் இருந்த திரு பி.எஸ். சுப்ரமணியம் அவர்களின் குலதெய்வம் அங்கேயே பரமக்குடிக்கும், தென்னவராயன் புதுக்கோட்டை எனப்படும் ஊருக்கும் அருகிலுள்ள ஓர் முருகன் தலம் தான். தாத்தா தினம் வேல் வைத்து வழிபாடுகள் நியம, நிஷ்டைகளோடு செய்து விரதம் இருந்து ஒரே வேளை உணவு உண்டு வாழ்ந்தவர். வேல் வைத்து பூஜை செய்து வந்ததால் அதிகமான ஆசாரங்களைக் கடைப்பிடிப்பார். கிட்டத்தட்ட 1969 ஆம் வருஷம் வரை இந்த வேல் பூஜையைத் தொடர்ந்து செய்துவந்தார். அப்போது என் பெரிய மாமா திடீரென இறக்கவும் ஏற்பட்ட புத்ரசோகத்தில் படுத்த படுக்கையாகி வேல் பூஜை நின்றது. மற்ற மாமாக்கள் தொடரவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவர்களுக்கே முருகன் வேறு உருவில் வந்து சொல்லி எல்லா மாமாக்களும் வேல் பூஜையை இப்போது தனித்தனியாகத் தொடர்ந்திருக்கிறார்கள். மாமாக்களின் பிள்ளைகளும் அந்த வழியிலேயே தொடர்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் வேல் உண்டு. குலதெய்வமும் அந்த முருகன் தான். 

எங்க பெண் வீட்டிலும் அவங்களுக்கு வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார ஸ்வாமி தான் குலதெய்வம். மாவிளக்குப் போடுவதும் அவனுக்கே! குழந்தைக்கு முதல் முடி எடுப்பதும் அவனுக்கே. இம்மாதிரிப் பல பிராமணர்கள் வீடுகளில் முருகன் குல தெய்வமாக இருந்து வருகிறான். பலருக்கும் இஷ்ட தெய்வமும் அவனே. என்னுடைய ஒரு மாமாவின் மைத்துனருக்குப் பெயர் முருகன் என்பதே! அவருக்குக் கிட்டத்தட்ட இப்போது 70,72 வயது இருக்கலாம். அந்தக் காலத்திலேயே இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். இது போல் பல உறவினர்கள் வீடுகளிலும் முருகன் குல தெய்வமாக இருந்தால் பிள்ளைக்கு முருகன் எனவும் பெண்ணுக்கு வள்ளி எனவும் பெயர் வைப்பார்கள். செந்தில் என்றும் சிலர் வீடுகளில் மகனுக்குப்  பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகவே முருகன் என்னமோ பிராமணர்களுக்குச் சொந்தம் இல்லை என்று சொல்லுபவர்கள் விபரம் தெரியாதவர்கள் என்றே சொல்வேன்.

முருகனைப் பற்றிப் பல பாடல்கள் பாடிய "பெண்"களூர் ரமணி அம்மாள் ஓர் பிராமணப் பெண்மணியே! அந்தக் காலத்தில் மடிசார் கட்டிக் கொண்டு மேடைகளில் அவர் பாடியது மிகப் பிரபலமான ஒன்று. இன்னும் சொல்லப் போனால் பல வைணவர்களுக்கும் முருகன் இஷ்ட தெய்வம். மாமனை வணங்குபவர்கள் மருமகனை வணங்காமல் இருப்பார்களா?  முருகன் எல்லோருக்கும் பொதுவானவன்.  நான் எங்கே சென்றாலும் எனக்கு வழித்துணை கந்த சஷ்டி கவசமும், "காக்க, காக்க, கனகவேல் காக்க!" என்னும் வரிகளும் தான்! அன்றும், இன்றும் என்றும் காத்து வருவது அந்த வேல் தான்! 

Monday, November 02, 2020

பழசு தான்! ஆனால் இப்போதும் செல்லும்! :)

இது ப்ழைய பதிவுகளில் சேமித்து வைத்திருந்த ஓர் அரதப் பழசான நகைச்சுவைத் துணுக்கு. அப்போ நல்லா ரசிச்சேன். இப்போ அம்புட்டுத் தெரியலை. :)))))

முன்னர் இருந்த ஆனந்த விகடனில் நான் ரசித்த ஒரு ஜோக்:படங்களுடன் வந்திருக்கிறது. ஒரு நபர் பாடுகிறார்.. மற்ற இரண்டு பேர் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"அதுக்குள்ளே பத்து மாசம் ஆயிடுச்சா?

எதைக் கேக்கறேன்னு புரியலியே?

அந்த ஆள் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் சீமந்தம்னு பாடறாரே? "

நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. பொதுவாக ஜோக் எல்லாம் நன்றாக இருந்தாலும் இது மாதிரி எனக்குப் பிடித்தவைனு வரது சிலது தான். என் மனசுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்துப்பேன்.அப்போ தன்னை அறியாமல் சிரிப்பு வந்தால் அது என்னைப் பொறுத்த வரை நல்ல ஜோக். இது அப்படிப் பட்டது. இனிமேல் இது மாதிரி எனக்குப் பிடித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும். (இது முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் எழுதினவை! அப்போ நான் தனிப்பெரும் தலைவியாக ஆட்சி செலுத்திய நேரம். ) ஹிஹிஹி, அப்போல்லாம் மனசாட்சி அடிக்கடி வந்து கூவும். இப்போல்லாம் வரதே இல்லை! 

(ம.சா.: ஆரம்பிச்சுட்டியா? உன் தலைவி புத்தியை? ரொம்பவே பந்தா காட்டறியே? உன் பதிவுக்கு வரதே பெரிய விஷயம். இதிலே இது வேறேயா? பெரிய சுஜாதான்னு நினைப்பு. என்ன பரிசு கொடுக்கப் போறே? பின்னூட்டம் தானே?)

அது அப்படித் தான் பேசும். நீங்க வழக்கம் போல் கண்டுக்காதீங்க.

கீழே மேற்கொண்டு படிக்கப் போகும் விஷயங்கள் என்ன எழுதுவது என்னும் எண்ணத்தில் என்னோட பதிவுகளின் ட்ராஃப்ட் மோடில் இருக்கும் பதிவுகளைத் தோண்டி எடுத்தப்போ இது கிடைச்சது. எத்தனை பேருக்குப் பிடிக்கும்னு தெரியாது. ஆனால் இப்போதும் உண்மை நிலைமை அதுதான் என எங்களுக்குத் தெரிந்த நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கின்றன. அங்கிருந்து வரும் வாட்சப் தகவல்களும் உறுதி கூறுகின்றன. 

இப்போ நிஜமாவே சுஜாதா இந்த வார விகடனில் (எந்த வாரம்னு எல்லாம் தெரியாது.)  எழுதி இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி. (இந்தப் பதிவை எப்போச் சேமித்தேன்னு தெரியலை. விகடன் எல்லாம் படிக்கிற காலத்தில் எடுத்து வைச்சிருக்கேன். அதுவும் சுஜாதா எழுதினப்போ! ) குஜராத்தில் இருந்து வெளிநாடு போன இந்திய மருத்துவர்கள் திரும்ப இந்தியா வரும்போது அதுவும் குஜராத் வரும்போது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று பணி புரிகிறார்கள் என்பதாக அவருக்கு மின்னஞ்சல் கணேசன் மஹாதேவன் என்பவர் கொடுத்திருப்பதாய் எழுதி இருக்கிறார். மேலும் "medical tourism" "911 service about trauma care" துவங்கவும்போவதாக எழுதி இருக்கிறார்.இது ஒண்ணும் புதிசு இல்லை. குஜராத்தில் எந்தக் கிராமத்துக்குப் போனாலும் பள்ளிகள் மிகத் தரமான கட்டிடங்களுடன் இருக்கும். பள்ளியில் நுழையும்போதே சரஸ்வதியின் சிலை வீணையுடன் இருக்கும்படியாக எழுப்பி இருப்பார்கள். தினமும் பிரார்த்தனை அங்கே தான் நடைபெறும். அவரவர் சொந்தக் கிராமங்களுக்குத் தரமான சாலைவசதிகளுக்கு வேண்டிய பண உதவி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, மதம்பார்க்காமல் பண உதவி போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன. அங்கங்கே மருத்துவ ட்ரஸ்ட் ஏற்படுத்தி டாக்டர்களுக்குச் சம்பளம் கொடுத்து வாரம் இரு முறை, மூன்று முறை என்று வரச் சொல்லி மருந்துகளைக் குறைந்த விலையில் கொடுத்து, அதாவது வெளியில் 50/-ரூ கொடுத்துத் தான்வாங்க வேண்டும் என்றால் இங்கே ஒரு ரூ. முதல் 5ரூ வரை மருந்தின் தரத்துக்குத் தகுந்த விலை இருக்கும். ஆயுர்வேத மருந்துகள் இன்னும் குறைவு. 

அரசும் பெண்களுக்கு எதுவரை படித்தாலும் இலவசம்தான். இது எல்லாம் நாங்க அங்கே இருந்தப்போவும் இருந்தது,  அதுக்கு முன்னாலேயேவும் இருந்திருக்கிறது. எங்க பையன் இஞ்சினீரிங் சேரும்போது அரசாங்கக் கல்லூரியில் மெரிட்டில் தான் சேர்ந்தான். நாங்க கட்டின ஃபீஸ் பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்கும் சேர்த்து வெறும் 250/-ரூ. தான். ஹாஸ்டல், சாப்பாடு, ட்ரஸ் என்றுதான் எங்களுக்குக் கொஞ்சம் தொகை செலவு செய்ய நேர்ந்தது. மேலும் அரசுப் பேருந்துகளில் போனால் கோடை நாட்களில் ஜூஸ், ,பெப்ஸி, போன்றவையும் குளிர் நாளில் டீயும் கொடுப்பார்கள்.காங்கிரஸ் முதலமைச்சரோ அல்லது பிஜேபி முதலமைச்சரோ அவரிடம் நாம் சென்றால் தோழமையுடன் பேச முடியும். சாதாரண மனிதர்கள் போல நடந்து போய்க் கொண்டு இருப்பார்கள். நாம் போய் நம்மோட வேலையைச் சொல்லலாம். எந்தத் தடையும் இருக்காது. இது ராஜஸ்தானிலும் இருந்தது. குஜராத்தில் இப்பவும் இப்படித்தான் என்று ஜாம்நகரில் இருந்து வந்த எங்கள் சிநேகிதர் கூறுகிறார்.  தேர்தல் சமயம் நகரங்களில் எந்தவிதப் பரபரப்பும் தெரியாது. 

கட்சிக் கொடிகளோ, பானர்களோ, கட் அவுட்டுகளோ பார்க்க முடியாது. சொல்லப் போனால் தமிழ்நாடு தாண்டினாலே இவை குறைவாகவே பார்க்க முடியும். அரசியல் தலைவர்கள் சாதாரணமாக வருவார்கள், போவார்கள், நாம் பெயரைச் சொல்லி கூடவே "பாய்" சேர்த்து அழைக்கலாம். உதாரணமாகப் பிரதமரை அங்கே "மோதி பாய்" என அழைப்பார்கள். இது பிஜேபி முதலமைச்சர் என்றில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தப்போவும் இருந்திருக்கோம். அப்போவும் சிமன் பாய் படேலை, "சிமன் பாய்" என்றே அழைக்கலாம். அதே போல் ஊர்மிளா பென் படேலையும் "ஊர்மிளா பென்" என அழைக்க முடியும். இங்கெல்லாம் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பெயர் சொன்னால் அம்புட்டுத்தேன்!