எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 07, 2024

அவ்வப்போது எட்டிப்பார்க்கிறேன்!

 நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ அதோடு சேர்ந்து நானும் தினம் தினம் தூங்கி, விழித்து, நம்ம ரங்க்ஸைக் கவனித்துக் கொண்டு பொழுது ஓட்டமாய் ஓடுகிறது. இரவு படுக்கையில், அப்பாடா, காலை நீட்டிப் படுக்கலாம் என்று தோன்றும். தூக்கம் வராது. சுமார் பனிரண்டு வரை புரண்டு புரண்டு படுப்பதோடு சரி. ரங்க்ஸுக்குப் பசித்தால் அவர் படுத்திருக்கும் அறையிலிருந்து என்னைக் கூப்பிட ஒரு மணி அமேசான் மூலம் வாங்கி உள்ளது. நான் படுக்கும் எங்கள் படுக்கை அறையில் அதைப் ப்ளகில் சொருகி இருக்கோம். அவர் அறையிலிருந்து பட்டனை அழைத்தால் சங்கீத அழைப்பு வரும். உடனே எழுந்து போய் என்ன எனக் கேட்டுவிட்டு வேண்டியதைச் செய்துவிட்டு வருவேன். இரவு காவல் இருக்கும் பெண் இருந்தாலும் குடிக்க ஏதேனும் வேண்டும் எனில் என்னைத் தானே அழைக்கணும். என்றாலும் நானும் அங்கே படுக்காதது அவருக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கு. சில சமயம் என்னை விட்டுட்டு எல்லோரும் எங்கே போனீங்க என்பார். அல்லது நான் மட்டும் தான் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கேனா? மத்தவங்க இல்லையா என்பார்! ஏன் என்னைப் பார்க்க யாருமே வரலை என்பார். ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அழுகை வரும். என்றாலும் அவர் எதிரே காட்டிக்காமல் வீட்டில் தான் இருக்கீங்க என்பேன். அரை மனதாக அப்படியா என்பார். உடனேயே சரி, நீ போய்த் தூங்கு என்பார்.


எங்கே போய்த் தூங்கணும் என்றால் கொஞ்சம் யோசிச்சுட்டு, நம்ம ரூமில் தான். நான் இப்போ கெஸ்ட் ரூமில் தானே இருக்கேன் எனச் சரியாகச் சொல்லுவார். நேத்திக்கு என் தம்பி தொலைபேசியப்போ நான் குளித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் நான் நீங்கல்லாம் வந்தால் தங்குவீங்களே, அந்த ரூமில் படுத்துண்டு இருக்கேன். அக்கா எங்க பாத்ரூமில் குளிக்கிறா எனச் சரியாகச் சொல்லி இருக்கார். சில சமயங்கள் தடுமாற்றம். இதெல்லாம் பரவாயில்லை என்பது போல் இந்த கதீட்டர் பிரச்னை. அடிக்கடி, இன்ஃபெக்ஷன் ஆகிறது. இன்னமும் அவரால் பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல் உட்கார முடியலை என்பதால் கதீட்டர் இருக்கணும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஆவதைப் பார்த்தால் கழட்டி எறியணும் போல் இருக்கு. :(


காலை நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும், இரவு நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும் (இருவருமே உறவு) வருகிறார்கள். ஒத்துப் போகிறதா எனில் ஒண்ணும் சொல்ல முடியாது. சில விஷயங்களைப் பொது வெளியில் எழுதவோ சொல்லவோ முடியாது. வாயை மூடிக்கணும். அவ்வளவே. அல்லது; எனக்குச் சகிப்புத் தன்மை குறைச்சல்னு வைச்சுக்கலாம். தினம் தினம் பிசியோதெரபியும் நடக்கிறது, சீக்கிரம் எழுந்து நடமாட மாட்டாரானு இருக்கு. அறுவை சிகிச்சை நிபுணர் பயாப்சி பண்ணிப் பார்க்கணும் என்கிறார். அதுக்கு ஒத்துக்கோங்க என்கிறார். ரங்க்ஸுக்கும் இஷ்டம் இல்லை. எனக்கும் இல்லை. தெரிந்த பல மருத்துவர்களிடமும் அவங்க கருத்தைக் கேட்டாச்சு. வேண்டாம்னே சொல்றாங்க. என்னோட உபிசவான தி.வாவும் அதையே சொல்லுகிறார்.இனி வரும் நாட்கள் எப்படியோ தெரியாது. நல்லபடியாகக் கழியணும்னு எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன். 

இந்த அழகில் ஸ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தையாவது நெல்லை தயவில் வீடியோவில் பார்த்தேன். நெல்லைக்கு நன்றி நினைவாக அனுப்பி வைத்ததுக்கு. ஆனால் தி/கீதாவின் பிள்ளை கல்யாணம், நெல்லையின் பெண் கல்யாணம் நடந்தப்போ நான் மருத்துவமனையில் மருத்துவர்களோடு ஆலோசனைகளில் மூழ்கி இருந்ததால் சுத்தமாய் நினைவில் இல்லை சொல்லவே வெட்கமாக இருந்தாலும் அதான் உண்மை. பின்னால் நினைவு வந்து விசாரித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இணையமே மறந்துடுமோ என்னமோ! :(