எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 29, 2019

நாங்களும் ஹவுடி மோதி பார்த்தோமே!

வரிசையில் எங்கள் முறை வந்ததுமே அங்கிருந்த தன்னார்வலர் எங்களுக்கு எனத் தரைத்தளத்தில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அங்கே ஃப்ளோர் ஆக்ஸெஸ் வழியாக நேரே உள்ளே அரங்கத்தினுள் நுழையலாம் எனவும் சொல்ல எனக்கு அப்பாடா என இருந்தது.நமக்கு அங்கே தான் இருக்கைகள் இருக்கும் என முதலில் இருந்தே  எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. நல்லவேளையாக மூத்த குடிமக்கள் என்பதால் நமக்குக் கிடைக்கும் சில சலுகைகள்  உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. தரைத்தளத்துக்குச் செல்லும் வழியில் சென்று அங்கே கழிப்பறை எனக்குறிப்பிட்டிருப்பதில் போகலாம்னு நினைத்தால் அங்கிருந்த பாதுகாவலர் வெளியே தாற்காலிகக் கழிவறைகள் வைத்திருப்பதாகச் சொன்னார். நிறைய நடமாடும் கழிவறைகள். மீண்டும் ஸ்ரீரங்கம் நினைவுக்கு வந்தது. இங்கேயும் திருவிழாக்காலத்தில் அது நிறைய வைப்பார்கள். பின்னர் நேரே உள்ளே செல்லும் வழியில் சென்று எங்கள் இருக்கையைக் கண்டு பிடித்தோம். இடப்பக்கம் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்படி சில இருக்கைகளும் நடுவில் இடம் விட்டு மத்தியில் வருமாறு இரண்டு பக்கங்களிலும் இருக்கைகள், அதைத் தவிர்த்து வலப்பக்கம் வேறே இருக்கைகள். எங்களுக்குப் பின்னால் காலரியைச் சுற்றிலும் கீழே இருக்கைகள். அத்தனை இருக்கைகளும் சிறிது நேரத்தில் நிரம்பி வழிந்தன.

காலரிகளில் நிறையப் படிகள். அடுக்கடுக்காக அமைந்திருந்ததால் படிகளில் ஏறி, இறங்கி வர வேண்டும். எஸ்கலேட்டர் மேல் அடுக்கில் இறக்கி விடுகிறது. அங்கிருந்து படிகளில் இறங்கிக் கீழே உள்ள கடைசி அடுக்கு காலரிக்கு வந்து மீண்டும் படிகளில் இறங்கி இடத்தைக் கண்டு பிடித்து அமரவேண்டும். அங்கே உள்ள தளத்தில் கழிவறைகள் இருந்தன. ஆனால் அத்தனை படிகள் ஏறிச் செல்ல வேண்டும் என்பதால் நாங்கள் தாற்காலிகக் கழிப்பறையையே பயன்படுத்திக் கொண்டோம்.
கூட்டம் கூட்டமாக


எதிரே மேடையில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாக ஆயத்தம்


வலப்பக்க காலரியின் கூட்டம் ஒரு பார்வை


மேடை தெரியுதா?



குழந்தைகளின் மோகினி ஆட்டம்

நான் பையரைச் சோளப் பொரி வாங்கித் தரச் சொன்னேன். எங்க பெண் மெம்பிஸில் இருக்கையில் பெரிய பேத்திக்கு (அப்பு அப்போப் பிறக்கவில்லை) நிறைய வெண்ணெய் போட்டு வாங்கித் தருவாள். எனக்கும் ஆசையாக இருக்கும். ஆனால் கேட்கக் கூச்சம் என்பதால் கேட்டதில்லை. அதே போல் "சிவாஜி" படம் பார்க்க மெம்பிஸில் தியேட்டருக்குப் போனப்போவும் எல்லோரும் பக்கெட் பக்கெட்டாகச் சோளப் பொரி  வாங்கினார்கள். நம்மவரிடம் சொன்னால் (நாங்க ரெண்டு பேர் தான் அந்தப் படத்துக்குப் போனோம்) "நீ என்ன சின்னக்குழந்தையா?" என ஓர் முறைப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இணைய உலகிலேயே அன்றும், இன்றும் என்றும் ஒரே சின்னக்குழந்தை நான் தான் எனத் தெரியவில்லை! நு நினைச்சுட்டுப் போனால் போகிறதுனு அவரை மன்னிச்சு விட்டுட்டேன். ஆனால் இன்னிக்கு ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பையரும் வாங்கி வந்தார். பையர் தனக்கு சமோசாவும் எங்களுக்குச் சோளப்பொரியும் வாங்கி வந்தார். வேறே என்னென்னமோ விற்பதாகவும் ஒன்றும் சாப்பிடும்படி இல்லை எனவும் சொன்னார். எங்களுக்கு எதுவும் வேண்டாம் எனச் சொல்லி விட்டோம். ரங்க்ஸிடம் கொஞ்சம் கொடுத்துவிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். என்ன ஏமாற்றம். நோ வெண்ணெய்! துரோகி! யாரைச் சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பரவாயில்லைனு மனசை சமாதானம் செய்துட்டுச் சாப்பிட ஆரம்பிச்சேன். ரங்க்ஸிடம் கொடுத்ததைச் சாப்பிட்டு முடித்து விட்டார். இன்னும் வேண்டுமானு கேட்டால் வேண்டாம்னார். சரினு நான் சாப்பிட்டால் அவர் கையில் இருந்த ஜிப்லாக்கைத் திறந்து அதில் உள்ளவற்றை வெளியில் எடுத்துவிட்டுச் சோளப்பொரியை அதில் கொட்டச் சொல்லி வற்புறுத்தினார். எனக்கு ஒண்ணும் புரியலை! ஏன்? எனக் கேட்டால் நீ இந்த பக்கெட்டைக் கையில் வைச்சுக்கொண்டு தவிக்கிறே என்றார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த பக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு தானே சாப்பிட முடியும்? இது கூடப் புரியலையேனு அவரை ஓர் முறை முறைத்துவிட்டு நான் பாட்டுக்குச் சாப்பிட ஆரம்பித்தேன். விடவில்லை. அதுகுள்ளே பாதி காலியாகப் பையருக்கு பயம் வந்துடுச்சு போல! அடுத்த துரோகி! வெண்ணெய் போட்டுச் சோளப்பொரி கேட்டால் வெறும் சோளப்பொரி வாங்கிக் கொடுத்ததோடு அல்லாமல் அதைச் சாப்பிடாதே, வயித்தை வலிக்கப் போகுதுனு கண்ணு வைக்க ஆரம்பிச்சார். கடுப்பாக வந்தது. லட்சியம் செய்யாமல் சாப்பிட்டால் இரண்டு பக்கமும் விட்டால் தானே!

மனசே நொந்து போனது. சின்ன வயசில் இருந்து ஆசைப்பட்ட ஓர் பதார்த்தத்தை இப்போக்கூடச் சாப்பிட விட மாட்டேன் என்கிறார்களே என! கிட்டத்தட்ட அழாக்குறையாக அந்தச் சோளப்பொரியைப் பையரிடம் கொடுத்தேன். அவர் வாங்கி வைத்துக்கொண்டார். (@துரை, சோகக்கதை இப்போ என்னன்னு புரியுதா?)   கண்ணும் மனமும் அதிலேயே இருந்தது. அதற்குள்ளாக மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்போவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.

சிறிது நேரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசிக் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் போவதாய்ச் சொல்ல நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. முதலில் கேரளத்தின் மோகினி ஆட்டம், பின்னர் தமிழ்நாட்டின் பரதநாட்டியம், ஆந்திராவின் குச்சுப்பிடி, கர்நாடகாவின் யக்ஷகானம் என வரிசையாக ஒவ்வொன்றாக வந்தன. வடகிழக்கு மாநிலத்தின் குழந்தைகள் மிக அருமையாக ஆடினார்கள். எல்லோருமே நன்றாக ஆடி இருந்தாலும் இவர்கள் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. பஞ்சாபின் பாங்க்டா நடனமும், ராஜஸ்தான், ஹரியானாவின் நடனங்களும் கண்களைக் கவர்ந்தன.  நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆனதும் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றால் பாதுகாவலர்கள் வெளியே அனுமதிக்கவில்லை. காலரிக்குச் செல்லும் படிக்கட்டுகளைக் காட்டி அதன் வழியே மேலே ஏறி உயரே உள்ள முதல் காலரித்தளத்தில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தும்படி சொல்லி விட்டார்கள். நல்லவேளையாக எங்களுக்கு எதுவும் சாப்பிடாததால் பிரச்னை ஏதும் இல்லை



கலை நிகழ்ச்சிகளின் படங்கள் வெவ்வேறு விதங்களில்












மேடையின் இரண்டு பக்கங்களிலும் மற்றும் மேடைக்கு மேலும் பெரிய பெரிய ஸ்க்ரீன்கள். நடுவே கீழே விளக்கு வெளிச்சத்துக்குக் கீழே மேடை தெரிகிறது. பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றை ஓரளவுக்குக் கொடுத்திருக்கேன். மோகினி ஆட்டம் மட்டும் 2,3 முறை வந்திருக்குனு நினைக்கிறேன். 

Friday, September 27, 2019

ஹவுடி மோதி! நிகழ்வின் தொடர்ச்சி 2

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் விருப்பன் திருநாள் என்னும் சித்திரைத்திருவிழாவுக்குச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். அவரவர் ஊரில் வயலில் என்ன விளைகிறதோ அதை அரங்கனுக்கு என எடுத்து வருவார்கள். கூட்டம் சொல்லி முடியாது.  ஸ்ரீரங்கமே அல்லோலகல்லோலப்படும். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். அரங்கனை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, அரங்கன் கூடி இருக்கும் மக்களைப் பார்ப்பான். அதே போல் தான் இங்கும். கூட்டமான கூட்டம். கிட்டத்தட்ட அந்த விருப்பன் திருநாளைப் போல இங்கேயும் மக்கள் ஹூஸ்டனில் இருந்து மட்டுமல்லாமல் அக்கம்பக்கம் ஆஸ்டின், டாலஸ் போன்ற நகரங்களில் இருந்தும் கிளம்பி வந்தார்கள். சிலர் முதல்நாளே வந்து ஓட்டல்களில் அறை எடுத்துத் தங்கி இருந்தனர் எனச் சொல்லிக் கொண்டார்கள்.

உள்ளே நடுவில் உள்ள பெரிய மைதானத்தில் நாலு வரிசைகளாக நிறைய நாற்காலிகள் போட்டிருந்தனர். இடப்பக்கம் இரண்டாவதாக உள்ள வரிசையில் "கே" யில் துவங்கும் வரிசையில் எங்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து நடுவில் உள்ள மேடை நேர் எதிரே தான். ஆனாலும்! :))))



இதைப் போல் வலப்பக்கமும் இரு வரிசைகள். முன்னால் உள்ள நாற்காலிகள் எல்லாம் முக்கியமானவர்களுக்கு. அங்கிருந்து தடுப்பைத் தாண்டி நம்மால் போக முடியாதபடிக்குப் பாதுகாப்புப் போட்டிருந்தது. அதை ஒட்டிக் காணப்படும் இருக்கைகள் எல்லாம் முக்கியமானவர்களுக்கானது. அதிலும் இன்னொரு தடுப்பைத் தாண்டி உள்ள இருக்கைகள் விவிஐபிக்களுக்கானது. அங்கே தான் முக்கியத்தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

நாங்கள் அமர்ந்த வரிசை


இப்போது கூட்டம் இன்னும் வராததால் எங்களுக்கு நேர் எதிரே மேடை நன்றாகவே தெரிந்தது. :)


சுற்றிலும் உள்ள காலரிகள். இரண்டு பக்கங்களிலும் வரிசையாக காலரிகள். அவற்றில் நிரம்பி வழியும் மக்கள்!

காலரியையும், ஸ்டேடியத்தையும் முழுக்க வரும்படிப் படம் எடுக்க வேண்டும் எனில் வீடியோவில் தான் முடியும். நான் சார்ஜ் தீர்ந்துவிடுமோனு பயத்தில் வீடியோவில் எடுக்கவில்லை. 



கீழே தெரியும் காலரிகளுக்கு மேலேவெளிச்சமாகத் தெரிகிறதே அங்கேயும்  இரு அடுக்கு காலரிகள். அவற்றிலும் மக்கள்.


பல வருஷங்களாக ஆசைப்பட்ட சோளப்பொரி!


ஸ்டேடியத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி!
                           
காலை சீக்கிரம் எழுந்து சாதம் வைத்துக் கொண்டு தயிர்சாதம் பிசைந்து எடுத்துக்கொண்டு கிளம்புவதாக முடிவு செய்து படுத்தபின்னரும் மனசில் ஏதோ நெருடல். கடைசியில் இருவரும் ஒரு சேர எழுந்து கையில் சாப்பாடு எடுத்துச் செல்லவேண்டாம். என்ன முடியுமோ, பார்த்துக்கலாம். எடுத்துப் போயிட்டுக் கொட்டும்படி நேர்ந்தால் என்ன செய்வது என்னும் எண்ணம் வரவே எதுவும் கொண்டு போகவேண்டாம் என முடிவு செய்தோம். . ஆகவே காலை நாலரைக்கு எழுந்து குளித்து முடித்துக் காஃபி மட்டும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பலாம்னு நினைத்தோம். பையரும், மருமகளும் சீரியல் இருப்பதாகவும் அதைப் பாலில் போட்டுச் சாப்பிடலாம் என்றும் சொன்னார்கள். சோளம் தானே. அதோடு பாதாம், பிஸ்தாப் பருப்புக்கள். ஆகவே சரி எனச் சொன்னோம். காலை எழுந்ததும் போவதைப் பற்றியும் உணவு பற்றியும் மறுபடி ஓர் கலந்தாலோசனை நடக்க அப்போது நம்மவர் பையரிடம், " நீ கஷ்டப்பட்டுக் காசு கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கி இருப்பதால் தான் வரோம்." என்று சொல்லப் பையருக்குச் சிரிப்பு வந்தது. இது இலவச அனுமதி. யாருக்கும் காசு இல்லை. வர விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டிப் பதிவு செய்துக்கலாம். அதன்படி பதிவு செய்தேன் எனச் சொல்ல உடனே நம்மவர் என்னிடம் வந்து இலவசமாம். நாம் எதுக்குப் போகணும்? மஹாலயம் வேறே. நாளைக்குத் தர்ப்பணம் வேறே இருக்கு. பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று சொல்ல நான் நீங்க வரலைனாப் பரவாயில்லை. நான் மட்டும் போகிறேன் எனச் சொல்லிட்டுக் குளிக்கப் போயிட்டேன்.அதன் பின்னர் வேறு வழியில்லாமல் அவரும் கிளம்பினார். எவ்வளவு ஆவலுடன் காத்திருந்த நிகழ்ச்சி! தவற விடுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காசா, பணமா? நம்ம நாட்டுப் பிரதமர் வெளிநாட்டுக்கு வரும் சமயம் அவரைப் பார்க்கக் கிடைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா?  அதன் பின்னர் அவரும் வேறு வழியில்லாமல் குளித்துக் காஃபி, சீரியல் எல்லாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். மருமகளும், குழந்தையும் வரவில்லை. குட்டிக் குஞ்சுலுவுக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம்னு எண்ணம். அதே போல் அங்கே குஞ்சுலுவைக் கூட்டிப் போயிருந்தால் பிரச்னை ஆகி இருந்திருக்கும்.

வீட்டில் இருந்து ஒரு மணிநேரத்துக்குள்ளாகப் போகும் தூரத்தில் ஸ்டேடியம் அமைந்துள்ளது. நாங்கள் விரைவாகவே போய்ச் சேர்ந்து விட்டோம். நுழைவாயிலிலேயே பையர் அங்கே இருந்த பாதுகாவலரிடம் ஸ்டேடியம் பக்கம் போய் எங்களை இறக்கிவிடலாமா எனக் கேட்டார். அவரும் போகலாம் எனச் சொல்லவே ஸ்டேடியம் பக்கம் எங்களை இறக்கிவிட்டு அங்கே காத்திருக்கச் சொல்லிவிட்டுக் காரைப் பார்க் செய்யப் போனார். காலை சீக்கிரமே நாங்கள் போனதால் ஸ்டேடியம் உள்ளேயே உள்ள பார்க்கிங்கில் இடம் கிடைத்தது. இல்லைனா இரண்டு கிலோமீட்டராவது நடக்கும்படி இருந்திருக்கும் என்று பையர் சொன்னார்.


அவர் காரை நிறுத்திவிட்டு வந்ததும் நாங்கள் நிதானமாக உள்ளே போக ஆயத்தம் ஆனோம். எவ்வளவு தான் மெதுவாகப் போனாலும் ஓர் நிலையில் உள்ளே நுழையும் வரிசை வரத் தான் செய்தது. ஆங்காங்கே இருந்த தன்னார்வலர்கள் அனைவரது நுழைவுச்சீட்டையும் அமெரிக்கக் குடிமக்களின் அடையாள அட்டையையும் பார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குப் பாஸ்போர்ட்டைக் கொண்டு போயிருந்தோம். அதையும் நுழைவுச் சீட்டையும் பார்த்து உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே நீண்ட வரிசைகள் பல நிற்க எதிலே நிற்கணும்னு தெரியாமல் ஒன்றில் நின்றோம். பக்கத்தில் இருந்த வரிசையில் கூட்டமே இல்லாததோடு அங்கே  ஃப்ளோர் ஆக்செஸ் என்றும் போட்டிருந்தது. நான் பையரிடம் கேட்க அவர் அதெல்லாம் விவிஐபிக்களுக்கானது எனச் சொல்ல எனக்கு மனசு கொஞ்சம் வாடியது. சற்று நேரத்தில் வரிசையில் முன்னேறி உள்ளே நுழையும் இடத்துக்குச் செல்லக் கூடிய எஸ்கலேட்டருக்கு அருகே வந்துவிட்டோம். ஏஸ்கலேட்டரைப் பார்த்துவிட்டு நான் திரும்பி விடலாமா என யோசிக்க, அருகேயே லிஃப்டுக்கான இடமும் கண்களில் பட ஆஸ்வாஸப் பெருமூச்சு விட்டேன்.

Wednesday, September 25, 2019

ஹவுடி மோதி! நிகழ்வில் நாங்கள்!

நாங்க யு.எஸ். போகப் பயணச் சீட்டு வாங்கியதுமே சில நாட்களில் பையர் மோதியும் செப்டெம்பரில் அங்கே வரப்போவதாகவும் ஹூஸ்டனில் ஒரு மாபெரும் சந்திப்பு நிகழப்போவதாகவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்    பலரும் வரப்போவதாகவும் இந்திய வம்சாவளியினர் மாபெரும் அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னார்.    நாமெல்லாம் எங்கே போகப் போறோம்னு தான் நான் நினைச்சேன். திடீரெனப் பையருக்கே என்ன தோன்றியதோ தான் அந்த நிகழ்ச்சிக்குப் போகப் போவதாகவும் நீங்கள் இருவரும் கலந்து கொள்ள விரும்பினால் உங்கள் பெயரையும் கொடுக்கிறேன் எனச் சொல்லவும், நாங்களும் வருவதாகத் தெரிவித்திருந்தோம். எங்கள் பெயரையும் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டதாகவும் பின்னர் சொன்னார். நாங்கள் அம்பேரிக்கா வந்ததில் இருந்தே இந்நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் நடுவில் பையர் நெதர்லான்ட்ஸுக்கு அலுவலகவேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. அந்தச் சமயம் பார்த்து இங்கே புயல், மழைனு ஒரே அமர்க்களம். நிகழ்ச்சி நடப்பது சந்தேகம் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். பையர் வேறே நிகழ்ச்சி நடைபெறும் முதல்நாள் மாலை தான் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஹூஸ்டன் வந்தார். அவர் வந்த விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதம் என்பதால் மாலை நான்கு மணி சுமாருக்குத் தான் வந்து சேர்ந்தார். 



நிகழ்ச்சி நடந்த என்.ஆர்.ஜி. ஸ்டேடியம். அட! என்னோட இனிஷியலும் என்.ஆர்.ஜி. தான். அப்போ?


                                                  இன்னொரு கோணத்தில் ஸ்டேடியம்


கார் பார்க்கில் இருந்து மக்கள் வந்து கொண்டிருக்கும் காட்சி


அந்தக் காலை ஏழு மணிக்கே ஆண்களும், பெண்களுமாய்க் குடும்பத்தோடு





சக்கர நாற்காலியில் அமர்ந்தும் பார்வையாளர்கள் வருகை


ஒரு குடும்பம் செல்கிறது. மராட்டி உடையில் இருக்கும் பெண் குழந்தை கலாசார நிகழ்ச்சிகளில் ஆடுவதற்காக உடை அலங்காரத்தோடு வருகிறாள். இம்மாதிரி நிறையக் குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. அந்தச் சிறுவனும் ஆடுவதற்கான ஆயத்த உடையில்


சிறியவர் முதல் பெரியவர் வரை சாரி சாரியாய் வருகின்றனர்.



இன்னொரு சக்கர நாற்காலிப் பார்வையாளர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பலருக்கும் இந்தச் சக்கர நாற்காலியைக் கொடுத்து உதவினார்கள். பலருக்கு அவர்களில் தன்னார்வலர்கள் சக்கரநாற்காலியைத் தள்ளிக் கொண்டும் வந்தார்கள். ஏற்பாடுகள் குற்றம், குறை சொல்ல முடியாத அளவுக்கு அருமையாக இருந்தது.


                                            பத்தடிக்கு ஒரு குப்பைத்தொட்டி ஆங்காங்கே!


எங்களை ஸ்டேடியத்தின் அருகே விட்டுவிட்டுப் பையர் காரைப் பார்க் செய்யப் போயிருந்தபோது


கார் பார்க்கில் இருந்து நடந்து வர முடியாதவர்களுக்காக பாட்டரி கார்களும் ஓடிக் கொண்டிருந்தன. மூத்த குடிமக்கள் மட்டும் ஸ்டேடியம் அருகே வந்து இறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆகவே நாங்கள் கொஞ்சம் கிட்டவே இறங்கிக் கொண்டோம்.






ஒரு குட்டி இந்தியாவே அங்கே காண முடிந்தது.


உள்ளே செல்ல வரிசையில் நிற்கும் மக்கள்


ஸ்டேடியத்தின் உள்ளே! விபரங்கள் பின்னால்!

பையர் ஆம்ஸ்டர்டாமில் இருந்தே நிகழ்ச்சிக்குக் காலை ஆறு மணிக்கே செல்ல வேண்டும் எனவும் நிகழ்வு முடிய மதியம் மூன்று மணி ஆகும் எனவும் சொல்லிவிட்டு என்னிடம் உன் வயித்துக்கு என்ன ஒத்துக்குமோ அந்த உணவை எடுத்துக்கொள் என்றும் சொல்லி இருந்தார். ஆகவே தயிர்சாதம் கையில் கொண்டு போகலாம் என முடிவு செய்தோம். இரண்டு காரணங்கள். ஒன்று மஹாலயம் என்பதால் வெளியே சாப்பிட முடியாது; இரண்டு அங்கே கொடுக்கும் உணவு என்ன தான் சைவ உணவு என்றாலும் ஒத்துக்குமா என்பது சந்தேகமே! ஆனால் சனிக்கிழமை மாலை வந்த பையர் நிகழ்ச்சியில் அமெரிக்கக் குடியரசுத்தலைவரும் கலந்து கொள்ளப் போவதால் உணவெல்லாம் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அங்கே கிடைப்பதைத் தான் சாப்பிடணும் என்றும் சொல்லிவிட்டார். ஆனால் சாப்பாடு செய்து எடுத்துக்கோ, அனுமதிச்சால் கொண்டு போகலாம். இல்லைனா குப்பைத்தொட்டி தான் என்றும் சொன்னார். வண்டியிலேயே வைச்சுட்டுப் போகலாம். நிகழ்ச்சி முடிஞ்சு வந்து சாப்பிடலாம் என நாங்க சொன்னோம். ஒரே குழப்பம். கடைசியில் நாங்க இருவருமாகச் சேர்ந்து கையில் பழங்கள், பிஸ்கட்டுகள், குடிநீர் எனக் கொண்டு போகலாம், அனுமதிச்சால் உள்ளே கொண்டு போகலாம் இல்லைனால் தூக்கிப் போட வேண்டியது தான் என முடிவு செய்தோம்.

Saturday, September 21, 2019

துபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி!

ஒரு வழியாக நான்கு மணி நேரப் பயணத்தின் பின்னர் துபாய் வந்து சேர்ந்தோம். அங்கே வெளியே வரும்போதே வீல் சேர் பற்றி விசாரித்ததில் ஏரோ பிரிட்ஜ் முடியும் இடத்தில் காத்திருப்பார்கள் எனச் சொல்லவே அங்கே வந்தோம். எங்களைப் போல் இன்னும் 10,20 நபர்கள். அனைவருமே யு.எஸ்ஸில் ஒவ்வொரு இடம் போக வேண்டியவர்கள். அவர்களில் சிலர் எங்களைப் போல் ஹூஸ்டன் செல்பவர்களும் இருந்தார்கள். எல்லோரையும் ஒருங்கிணைத்தவர் ஹூஸ்டன் செல்லும் எங்களை மட்டும் தனியாகப் பிரித்து வேறொருவருடன் அனுப்பினார். அங்கிருந்து இரண்டு மூன்று இடங்களில் மின் தூக்கி மூலம் பயணித்துப் பயணித்து வேறொரு டெர்மினலுக்கு வந்திருந்தோம்னு நினைக்கிறேன். சில இடங்களில் காத்திருக்கவும் நேர்ந்தது. துபாய் நேரப்படி காலை ஒன்பதே முக்காலுக்குத் தான் எங்கள் விமானம். அப்போது எட்டு மணி ஆகி இருந்தது. கடைசியில் துபாய் விமானப் பாதுகாப்புச் சோதனையை முடித்துக் கொடுத்தார்கள். அங்கே கழுத்துச் சங்கிலி, கைவளையல் எல்லாவற்றையும் கழட்டச் சொன்னார்கள். கழுத்துச் சங்கிலியைக் கழட்டிப் போட்டேன். ஆனால் கை வளையலைக் கழட்ட முடியவில்லை. அதைச் சொல்லவும் சரினு சொல்லிட்டாங்க. பாதுகாப்புச் சோதனை முடிந்து ஹூஸ்டன் விமானம் ஏறுவதற்குப் போக வேண்டிய நுழைவாயிலுக்கு பாட்டரி கார் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தாங்க. ஏற்கெனவே 2,3 இடங்களில் பாட்டரி கார் மூலம் வந்திருந்தோம். அதில் ஓர் இடத்தில் சென்னையில் பார்த்த உறவினரை மறுபடி பார்த்தோம். அவங்க சியாட்டில் போவதால் அதற்கான பாட்டரி காருக்குக் காத்திருந்தாங்க. அவங்களிடம் போயிட்டு வரேன்னு சொல்லிக் கொண்டே வந்தோம்.

ஹூஸ்டன் செல்ல பாட்டரி கார் ஏறவேண்டிய இடத்தில் இருந்தவர் ஏனோ தாமதம் ஆக்கிக் கொண்டிருந்தார். மணியும் எட்டரைக்கு மேல் ஆகவே நாங்களே போய் விசாரித்தோம். அங்கே இரண்டு பாட்டரி கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றில் ஒன்றில் அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்ள அங்கிருந்த இன்னொரு ஊழியரும் அதை ஆமோதித்தார். அதற்குள்ளாக எங்களைப் போல் ஹூஸ்டன் செல்லவேண்டியவர்கள் அனைவரும் வந்து சேர எல்லோரையும் அரை மனசாக அந்த ஊழியர் அனுப்பி வைத்தார்.  ஒரு வழியாக நாங்கள் செல்லவேண்டிய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம். அங்கே யு.எஸ்.பாதுகாப்புச் சோதனை. நல்லவேளையாக அதிகம் சோதிக்கவில்லை. மடிக்கணினியைப் பிரிச்சு வைக்கச் சொல்லிட்டு, கைப்பையையும் முக்கிய சாமான்களை மட்டும் திறந்து பார்த்துவிட்டு ஸ்கானிங் எனப்படும் நுட்பமான ஊடுகதிர்ப் பரிசோதனையை முடித்துவிட்டு அனுப்பி விட்டார்கள். இதற்குள்ளாக மணி ஒன்பதே கால் ஆகி விமானம் கிளம்பும் நேரமும் வந்து உள்ளே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இங்கே எந்த வீல்சேரும் வரவில்லை. நடந்தே போகவேண்டி இருந்தது. நீளமான பாதை! விமானத்துக்குள் போகக் கொஞ்சம் உயரே வேறே ஏறணும். மூச்சு வாங்க ஏறிப் போனோம். சென்னையிலேயே இங்கே இந்த விமானத்துக்கும் போர்டிங் பாஸ் கொடுத்துவிட்டதால் இங்கேயும் ஓரத்து இருக்கைகள் இரண்டு. உள்ளே போய்ச் சாமானை வைத்தோம். சிறிது நேரத்தில் ஜன்னல் இருக்கைக்கும் ஆள் வந்தார். உள்ளே வந்ததில் கொஞ்சம் மூச்சு வாங்கியதால் நான் விமானப் பணிப்பெண்ணை அழைத்துக் குடிக்கக் குடிநீரும் ஜூஸ் ஏதேனும் கொடுக்கச் சொல்லிக் கேட்கவே அவர் இருவருக்கும் அதை எடுத்து வந்து கொடுத்தார். நடு இருக்கைக்கு ஆள் இல்லை. ஜன்னல் இருக்கைக்காரன் ஜம்மென்று நடுவில் உள்ள கைப்பிடியை எடுத்து விட்டுக்காலை நீட்டிக் கொண்டு இரண்டு இருக்கைக்கான தலையணை, கம்பளி எல்லாவற்றையும் எடுத்துப் பயன்படுத்திக்கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.  ஆகவே விமானம் கிளம்பியதும் சிறிது நேரத்தில் தொலைக்காட்சியில் "ஊரி" படம் பார்க்க ஆரம்பித்தேன்.

URI - New poster.jpg

படம் யதார்த்தமாகவும் உண்மையைச் சொல்லுவதாகவும் அமைந்திருந்தது.  இதற்குப் பரிசுகள் கிடைத்தது அதிசயமே இல்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை, நிகழ்வுகள் நடக்கும் இடங்களின் அமைப்பு எல்லாம் அப்படியே அமைந்திருந்தது. நம் கண் முன்னர் வடகிழக்கு மாநிலங்களும், புது தில்லியும் வந்து போயின. பரேஷ் ராவலின் நடிப்பு குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்தது எனில் பிரதமராக நடித்திருந்த ரஜித் கபூரும் அருமையாக நடித்திருந்தார். உடை, அலங்காரங்கள் அனைவருக்குமே நன்றாகப் பொருந்திப் போயிருந்தன. கருடாவைத் தயாரித்த இஷானாக நடித்திருந்த நபரும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தார். மொத்தத்தில் உண்மையை உள்ளபடி கூறிய படம். இதன் பின்னர் நான் பார்த்தது சஞ்சீவ் குமார்,ராக்கி நடித்த ஸ்ரீமான், ஸ்ரீமதி என்னும் மிகப் பழைய படம். ஏற்கெனவே சில முறை பார்த்திருந்தாலும் மறுபடி பார்த்தேன். படம் முன்னர் கவர்ந்த மாதிரி இப்போது கவரவில்லை.

சிறிது நேரத்தில்  உணவு வந்தது. அதே பொங்கல் ஆனால் இம்முறை கிச்சடி முறையில் மிளகாய்ப் பொடி போட்டு! காய்கள் ஏதும் போடவில்லை. தொட்டுக்க குஜராத்தி முறையில் இனிப்பாக ஏதோ கூட்டு. அந்தப் பிஞ்சுச் சோள சாலட் மாத்திரம் நன்றாக இருந்தது.  சாலட் ஒன்று கொடுத்தார்கள் பிஞ்சுச்சோளம் போட்டு. சாட் மாதிரி அருமையான ருசியுடன் இருந்தது. ஜவ்வரிசியில் ஏதோ இனிப்பு. ஜைனர்கள் ஜவ்வரிசி சேர்ப்பார்களா? தெரியலை! பழத்துண்டங்கள், வெண்ணெய், ஜாம் இலை. பின்னர் காஃபி. காஃபி மட்டும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விதத்தில் மற்ற விமான சேவை மாதிரி இல்லாமல் நன்றாக இருந்தது. இதற்கு முன்னர் விமானப் பயணங்களில் ராயல் நேபாளில் மட்டுமே அருமையான காஃபி கிடைத்தது. 2 முறை வாங்கிக் குடித்தோம். இந்தப்படம் சிங்கப்பூர்  விமானத்தில் ஜைன உணவு. இதில் தயிரெல்லாம் இருக்கிறது. ஆனால் எமிரேட்ஸில் எங்களுக்குத் தயிர் கொடுக்கவில்லை. பொதுவாக சைவ உணவோடு தயிர் கண்டிப்பாக இருக்கும். இவங்க ஏனோ கொடுக்கலை.

படத்துக்கு நன்றி கூகிளார்!

விமானத்தில் ஜைன உணவு க்கான பட முடிவு

மிக நீண்ட பயணம். ஐந்தாயிரம் மைலுக்கும் மேலே. அட்லான்டிக் கடல் வரவே ஆறு மணி நேரங்களுக்கும் மேல் ஆகி விட்டது.  நடுவில் கொஞ்சம் தூங்கிக் கொஞ்சம் விழித்து என இருந்தோம். அவ்வப்போது ஜூஸ், காஃபி, தேநீர், மற்றும் மற்றக் குடிபானங்கள் எனக் கேட்டுக் கேட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். நாங்கள் அவ்வப்போது ஜூஸ் வாங்கிக் குடித்தோம். வேறே உணவு ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீண்ட பதினைந்து மணி நேரப் பயணத்தின் பின்னர் ஹூஸ்டன் வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. விமானத்தின் பைலட்டும் அதை உறுதி செய்தார். மாலை நான்கு மணி சுமாருக்கு ஹூஸ்டனில் விமானம் தரை இறங்கியது. மெதுவாக  விமானத்தை விட்டு வெளியே வந்தோம். விமானத்தில் இருந்து இறங்கும் இடத்திலேயே அதிகாரிகள் கையில் பட்டியலையும் நீண்ட வரிசையில் வீல் சேர்களையும் வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.

முதலாக வெளிவந்த என்னைக் கிட்டத்தட்டக் கையைப் பிடித்து இழுத்து வீல் சேரில் அமர வைத்தார் ஓர் அதிகாரி . என் பெயரைக் கேட்டு உறுதியும் செய்து கொண்டார். நம்மவர் வரணும்னு சொன்னேன். அவர் என்னமோ கொஞ்சம் மெதுவாகத் தான் வந்தார். ஆகவே அந்த அதிகாரி இருவரையும் சேர்த்தே அனுப்புவோம், கவலை வேண்டாம் எனச் சொல்லிவிட்டு நம்ம ரங்க்ஸ் வந்ததும் அவரையும் பெயரைக் கேட்டு உறுதி செய்து கொண்டு வீல் சேரில் அமர வைத்து இருவரையும் வழி அனுப்பினார். வீல் சேர் எங்கும் நிற்காமல்  இமிகிரேஷனிலும் கஸ்டம்ஸிலும் மட்டும் நின்றது. வழக்கம்போல் இமிகிரேஷனில் எத்தனை மாதங்கள் எனக் கேட்டுவிட்டு ஆறு மாதம் என்றதும் மார்ச் எட்டாம் தேதிக்குக் கிளம்பத் தேதி குறிப்பிட்டு அனுப்பினார்கள். கஸ்டம்ஸிலும் சாமான்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்ததும் பையரும் விமான நிலைய வரவேற்பறைக்கூடத்தினுள் நுழைந்தார். அவருடன் அங்கேயே ஸ்டார் பக்ஸில் ஒரு லாட்டே காஃபி சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பி வந்தோம். குஞ்சுலு எங்களைப் பார்க்க மாட்டேன் என முகத்தை மூடிக் கொண்டது.

Thursday, September 19, 2019

விதை விநாயகர்!

விநாயகர் விசர்ஜனம் க்கான பட முடிவு


என்னடா, பிள்ளையார் சதுர்த்தி முடிஞ்சு இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே, இப்போப் போய் விதை விநாயகர் பற்றிச் சொல்றாளேனு பார்க்கிறீங்களா? அதற்குக் காரணம் 2 நாட்கள் முன்னர் முகநூலில் பார்த்த ஆதி வெங்கட்டின் பழைய நினைவுகளின் மீள் பதிவு. அதில் அவர் தான் விதை விநாயகர் வாங்கித் தொட்டியில் கரைத்ததாகச் சொல்லி இதன் மூலம் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காது என்றும் சொல்லி இருந்தார்.  அங்கேயே அவரிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் தெரியணுமே! முக்கியமாய்க் கல்யாணி சங்கர் போன்ற சில பெரியவர்களும் இந்த மாதிரியான ஓர் விஷயத்தைப் பெருமையாகக் கருதுகின்றனர். விநாயகரைக் கரைப்பதன் தத்துவமோ உண்மையான நோக்கமோ இல்லாமல் இம்மாதிரிச் செய்வது சரியில்லை என்பதே என் எண்ணம்.  இப்போது இம்மாதிரியான விநாயகர் சிலைகளை அதிக விலைக்கு விற்கவும் வியாபாரத்தைப் பெருக்கவும் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் கண்டு பிடித்த ஓர் தந்திரமான யுக்தி எனலாம்.

விநாயகரை ஏன் நதி, குளங்களில் கரைக்கிறோம்? இதை முதலில் தெரிந்து கொண்டு பின்னர் ஏன் விதை விநாயகரைத் தொட்டிகளில் கரைக்கக் கூடாது என்று பார்ப்போமா? நம் நாட்டில் தென்மேற்குப் பருவ மழை தான் எல்லா ஆறு, நதிகளிலும், ஏரிகள், குளங்களிலும் நீரைக் கொண்டு வரும் சக்தி உள்ளது. இந்தப் பருவம் தான் நம் நாட்டின் உணவு உற்பத்தியையும் நிர்ணயிக்கிறது. இந்த மழை பெய்து கொண்டிருக்கையில் அநேகமாக எல்லா ஆறுகளும் பூரணப் பிரவாகம் எடுத்து ஓடும். அதி வேகமாகவும் ஓடும். அப்போது நதி நீரின் ஓட்டத்தில் ஆற்றில் உள்ள மணலும் அடித்துக் கொண்டு சென்றுவிடும். நீர் ஆற்றில் தங்காமல் ஓடோடி விடும் சாத்தியங்கள் உண்டு. பெய்யும் மழையால் வந்த நீரெல்லாம் தங்காமல் ஓடிக் கடலை அடைந்து விட்டால் நிலத்தடி நீர் ஆற்றைச் சுற்றி உள்ள ஊர்களிலும், அதன் மூலம் மற்றக் குளங்கள், ஏரிக்கரைகள் உள்ள ஊர்களிலும் குறைய ஆரம்பிக்கும்.


நீர் ஆற்றிலோ குளங்களிலோ ஏரிகளிலோ தங்க வேண்டுமெனில் அடியில் நீரைத் தேக்கி நிற்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் தேவைப்படும். அது தான் களிமண்! இந்தக் களிமண் ஆற்று நீர் முழுதும் ஓடாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதம் அல்லது ஆவணி மாதங்களிலேயே பெரும்பாலான பண்டிகைகள் வருகின்றன. நீர் வளம் மட்டும் காரணமில்லை. நீரைச் சேமித்து வைக்கவுமே இத்தகைய பண்டிகைகள். அதிலும் விநாயக சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வணங்கிய பின்னர் ஒவ்வொரு வீட்டிலும் அவற்றை ஆற்றிலோ, குளங்களிலோ, ஏரிகளிலோ அல்லது வீட்டுக் கிணறுகளிலோ கரைத்தால் தான் நீர் தேங்கி நின்று நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஒவ்வொரு ஊரிலும் விநாயகரை வணங்கிய ஒவ்வொரு குடும்பத்தினரும் இம்மாதிரிச் செய்தால் அதன் மூலம் அந்த அந்தச் சுற்று வட்டாரங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர வழி கிடைக்கும்.


ஒவ்வொரு வீட்டிலும் இப்படிக் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளைக் கரைப்பதன் மூலம் நீர் பூமிக்குள் உறிஞ்சப்படும். அதுவும் பிள்ளையார் சதுர்த்தி அன்றே கரைப்பதில்லை என்பதையும் கவனியுங்கள். மூன்றாம் நாள் தான் கரைப்போம். அதற்குள் களிமண் காய்ந்திருக்கும் அல்லவா? காய்ந்த களிமண் நீரில் அடித்துச் செல்ல முடியாது. அங்கேயே தங்கும். விநாயகரைக் கரைக்கையில் மண் அங்கேயே நிலத்தில் படியும். ஆனால் இது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே பொருந்தும். இப்போதைய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கோ மற்றச் செயற்கைச் சாயம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளுக்கோ சற்றும் பொருந்தாது.

மக்களின் எதிர்காலத்துக்காகப்பயன்படுத்தப்பட்ட ஒரு திட்டம் இப்போது முற்றிலும் சிதைந்து போய்விட்டது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு தான் விதை விநாயகரைக் கொண்டு வந்திருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. களிமண்ணில் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்குள்ளாகப் பிள்ளையார் அச்சில் வார்க்கும் முன்னர் அவற்றில் பூச்செடிகளின் விதைகளையோ அல்லது காய்கறிகளின் விதைகளையோ போட்டு விட்டு விதை விநாயகர் என்னும் பெயரில் விற்பதோடு அல்லாமல் சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது என்கின்றனர். அந்தப் பிள்ளையாரைச் செடிகள் வைக்கும் தொட்டியில் கரைக்கச் சொல்கிறார்கள். அதன் மூலம் விதைகள் தொட்டியில் விழுந்து முளைக்கும் என்பதோடு பிள்ளையாரை வைத்து வணங்கியதிலும் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதே அவர்கள் சொல்வது.

தொட்டியில் விநாயகரைக் கரைத்து அதன் உள்ளே இருக்கும் விதைகளை நட்டால் தான் நன்மை தருமா? நேரடியாகவே தொட்டிகளில் விதைகளைப் போட்டு வளர்க்கலாமே! பிள்ளையாரைக் கரைத்து அதன் மூலம்  விதைகளைப் போட்டு முளைக்க வைக்கும் இது சாஸ்திர விரோதம் என்றால் ஏற்கக் கூடியவர்கள் யாரும் இல்லை. விநாயகரைக் கரைப்பதன் உள்ளார்ந்த பொருளே இங்கே அடிபட்டுப் போகிறது. மேலும் விநாயகரை விஸர்ஜனம் செய்வது என்றே சொல்லுகிறோம். இந்த விஸர்ஜனம் என்னும் சொல்லுக்கு முற்றிலும் கரைத்துவிடுவது என்றே பொருள். அதைப் பார்த்தால் முற்றிலும் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையிலிருந்து விதைகளைப் போட்டு மீண்டும் முளைக்க வைப்போம் என்பது சற்றும் பொருந்தாத ஒன்று. விஸர்ஜனம் செய்தாகி விட்டது எனில் அங்கே அப்புறாமா ஏதும் மிச்சம் இல்லை என்பதே உண்மையான பொருள். முற்றிலும் கரைக்கப்பட்ட விநாயகர் சிலையில் இருந்து செடிகள் முளைப்பது என்பது சாஸ்திர விரோதம் மட்டுமில்லாமல் விநாயகர் வழிபாட்டின் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

Wednesday, September 18, 2019

புயல் வருது!


 ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை மழையே பெய்யாமல் இருந்தது. ஒரு நாளானும் மழை அடிச்சுப் பெய்யக் கூடாதா எனத் தோன்றும். வானம் என்னமோ மேக மூட்டமாக இருக்கும். ஆனால் மழைப் பொழிவு கம்மி தான். இப்போத் திருச்சியில் கனமழை எனத் தொலைக்காட்சிகளில் சொல்கின்றனர். எந்த அளவுக்குனு தெரியலை. ஆனால் இங்கே வந்ததில் இருந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இப்போது இன்றைய நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் முன்னர் வந்த ஹார்வி புயலின் வேகத்தோடு வேறொரு புயல் இங்கே வரப்போவதாய்ச் சொல்கின்றனர். முதலில் இரண்டு நாள் விடாமழை என்றே செய்தி வந்தது. இப்போது பார்த்தால் புயலே வருதாம்! பையர் வேறே ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கார். இங்கே நாங்களும் குஞ்சுலுவும் அவளோட அம்மாவும் தான். போன முறை பையர் வீட்டைக்காலி செய்து கொண்டு முக்கியப் பொருட்களோடு எங்க பொண்ணு வீட்டுக்குப் போய்த் தங்கி இருந்தார். இம்முறை என்னனு புரியலை. மின்சாரம் எல்லாம் இருக்குமா, இணையம் இருக்குமானு எல்லாம் சிந்திக்கலை. நடப்பது நடக்கட்டும். புயல் பார்த்தும் வெகு காலம் ஆகி விட்டது. சென்னையில் இருக்கிறச்சே 2005 ஆம் ஆண்டில் பார்த்தது. ஆனால் இங்கே மரங்கள் ஆடுவதை எல்லாம் பார்க்க முடியுமா தெரியலை! பார்ப்போம்.

Tuesday, September 17, 2019

துபாய் செல்லும் விமானத்தில்!

அநேகமாக எல்லாப் பயணிகளும் வீல் சேர் கேட்டிருப்பாங்க போல! :P ஏனெனில் வீல் சேர் வர அரை மணி நேரம் ஆகி விட்டது. வீல் சேரில் சௌகரியங்கள் அதிகம். இமிக்கிரேஷன், கஸ்டம்ஸ் போன்றவற்றில் காத்திருக்க வேண்டாம். நேரே அழைத்துச் சென்று விடுவார்கள். விமான நிலையத்தின் மொத்த தூரத்தையும் கால்களால் அளக்க வேண்டாம். கால்வலியால் கஷ்டப்படவும் வேண்டாம். ஏரோ பிரிட்ஜின் நுழைவாயில் வரை கொண்டு விட்டு விடுவார்கள். அதே போல் நாம் இறங்கும் இடங்களிலும் கையில் பட்டியலை வைத்துக்கொண்டு எந்த விமானச் சேவையில் பயணம் செய்கிறோமோ அவர்கள் காத்திருப்பார்கள். அவர்களுடன் நாம் போவதால் செக்யூரிடி சோதனை கூட விரைவில் முடிந்து விடும்.



படத்துக்கு நன்றி கூகிளார்

வீல் சேர் வந்ததும் நாங்களும் எல்லாச் சோதனைகளையும் முடித்துக் கொண்டு எந்த நுழைவாயிலில் விமானம் ஏறணுமோ அங்கே காத்திருந்தோம். அதன் பின்னர் உள்ளே கொண்டு விட்டனர். ஆனால் விமானத்தைச் சுத்தம் செய்யும் பணி முடியாததால் சிறிது நேரம் காத்திருக்க நேர்ந்தது. அந்த நேரம் என்னுடைய பெரியம்மா மருமகள் (எனக்கு மன்னி) தன் மருமகளுடன் சியாட்டில் செல்ல அதே விமானத்துக்கு வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரம் அளவளாவினோம். பின்னர் அவங்க உட்காரும் வரிசை வேறிடம் என்பதால் சென்று விட்டார்கள். சியாட்டிலில் நிறைய உறவுக்காரர்கள் இருக்காங்க தான். ஆனால் அங்கே சென்றதில்லை. பேசாமல் கூகிளில் வேலை வாங்கிக் கொண்டு போயிடலாமோனு ஒரு எண்ணம். எங்க இருவருக்குமே ஓரத்து இருக்கையைக் கொடுத்திருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உள்ளே அமர்ந்திருப்பவர்கள் அடிக்கடி கழிவறை பயன்படுத்துபவராக இருந்தால் உட்காரவே முடியாது. அதுவும் அவருக்கு ஒரு பக்கத்து ஓரம், எனக்கு இன்னொரு பக்கத்து ஓரம். உள்ளே செல்பவர்கள், உணவு வண்டியைத் தள்ளிக் கொண்டு வருபவர்கள் எல்லோரும் மேலே மேலே இடித்துக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது. தொலைக்காட்சியில் இம்முறைத் தமிழ்ப்படங்கள் புதுசுனு சொல்லவே என்னனு பார்த்தேன். ஒண்ணும் ரசிக்கலை. ஹிந்தி ஊரி படம் இருந்தது. ஆனால் இந்த நாலு மணி நேரப் பயணத்திற்கு அது வேண்டாம்னு முடிவு எடுத்தேன். எதுவும் பார்க்கவில்லை.

சொல்ல மறந்துட்டேனே. நான் கிளம்பும்போதே மோதி அங்கிளிடம் இருந்து தகவல் வந்தது. செப்டெம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டனில் சந்திக்கலாம் என. ட்ரம்ப் அங்கிளும் வராராம். அதோட எல்லா மாநில ஆளுநர்கள், அதிகாரிகள் வராங்க! எல்லோருடனும் ஓர் சந்திப்புக் காத்திருக்கு! இஃகி,இஃகி,இஃகி! எல்லோரும் புகை விடுங்க பார்க்கலாம்.

விமானம் கிளம்பியதும் உணவு வந்தது. நாங்க ஜெயின் உணவு  கேட்டிருந்ததால்  ஒரு காய்ந்த கனமான கடிக்கவே முடியாத ரொட்டி(சப்பாத்தி என்று தமிழ்)பட்டாணிக் கூட்டு, பொங்கல், பழத்துண்டங்கள், வெண்ணெய், ஜாம் எல்லாம் வந்தது. அதிகக் காரம் இல்லாத பொங்கல்! பட்டாணிக்கூட்டு அந்தச் சப்பாத்தியை முழுங்கப் பார்த்தால் முடியலை. அப்படியே வைச்சுட்டேன். பொங்கலும் பழங்களும் மட்டும் சாப்பிட்டுவிட்டுக் காஃபிக்குக் காத்திருந்தோம். பரவாயில்லை. காஃபி மற்ற விமானச் சேவைகளில் இருப்பது போல் இல்லை. நன்றாகவே இருந்தது.

என்னதான் எழுதினாலும் கலகலப்பாக இருக்க முயன்றாலும் பானுமதியின் நினைவு இருந்து கொண்டே இருக்கிறது. விரைவில் அவர் மனம் தேறி மீண்டும் எழுதாவிட்டாலும் பதிவுகளுக்கு வந்து நம்மோடு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

Wednesday, September 11, 2019

ஜெயஜெய பாரத சக்தி!

Barathiyar க்கான பட முடிவு


துச்சா தனன்எழுந்தே -- அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ -- என்று
அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88

‘ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -- கண்ணா!
அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே -- அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், -- அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89

‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!
சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90

‘வானத்துள் வானாவாய்; -- தீ
மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91

‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92

‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93

‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்
வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! -- இங்கு
சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94

‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95

பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96

பொன்னிழை பட்டிழையும் -- பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97

தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான்


நேற்றே ஷெட்யூல் செய்து வைக்கலாம்னு தான் இருந்தேன். முடியலை. உடல்நிலையும் ஒரு காரணம். இன்னிக்குத் தான் முடிந்தது. இங்கே இப்போத் தான் பதினோராம் தேதி காலை என்றாலும் இந்திய நேரப்படியும் பதினோராம் தேதிக்கே பதிவு வரவேண்டும் என்பதால் இப்போதே போட்டிருக்கேன்.

Tuesday, September 10, 2019

நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

அமெரிக்கா ஹூஸ்டன் க்கான பட முடிவு

Picture Courtesy: Google, Thanks.

நான் வந்துட்டேன், நான் வந்துட்டேன்னு சொல்லு நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!  ஹாஹாஹா! 

குட்டிக்குஞ்சுலுவுக்கு எங்களை நன்றாக அடையாளம் தெரிந்தாலும் முதலில் தலையைத் திருப்பிக் கொண்டு "நோ" என்று சொன்னது. தொடக் கூடாதாம், கன்னங்களைக் குட்டிக்கைகளால் மூடிக் கொண்டு முகத்தையும் திருப்பி கொண்டு விட்டது. ஹேஹே, நாங்க விடுவோமா? ஓடிப் போய்த் தொட்டுட்டோம். சிரிக்கிறது முகத்தை மூடிக் கொண்டு. நேற்று அதற்கு நக்ஷத்திரப் பிறந்த நாள். நாங்க வாங்கிட்டு வந்திருந்த பாவாடை, சட்டையைப் போட்டுக் கொண்டு அது அப்பா, அம்மாவுடன் அருகே இருந்த கோயிலுக்குப் போய்விட்டு வந்தது. வந்து எல்லோரையும் நமஸ்காரமெல்லாம் பண்ணினதாம். என்னால் உட்காரமுடியவில்லைனு போய்ப் படுத்துட்டேன். ஆகவே அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. நேற்று முழுவதும் எழுந்து உட்காரவே முடியவில்லை.ஜெட்லாகெல்லாம் இல்லை நல்லவேளையா. சுமார் 24 மணி நேரம் உட்கார்ந்தே வந்ததில் கால்கள் வீங்கி விட்டன. அதனால் வலி கொஞ்சம். தூங்கி எழுந்ததில் இன்று பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் நிதானம் வர 2,3 நாட்கள் ஆகும் போல் இருக்கிறது. முன்னெல்லாம் வந்த அன்றே வேலையைத் துவக்குவேன். இந்த முறை முடியலை.

அம்பேரிக்காவுக்கு வந்து சேர்ந்தாச்சு. கிளம்பும் முன்னர் கிளம்புவதற்கான ஆயத்தங்கள் செய்வது, நடுவில் பண்டிகைகள் வந்தது அதற்கான வேலைகள் எனச் சரியாக இருந்தது. தினமும் கணினியில் அமர்ந்து கொண்டு வேலைகள் செய்தேன் தான். ஆனால் அவை எல்லாம் கிளம்புவதற்கான ஆயத்தவேலைகள். கிளம்பும் முன்னர் செய்ய வேண்டிய ஆயத்தங்கள். தொலைபேசியை சேஃப் கஸ்டடியில் வைப்பது, மின்சார வாரியத்துக்கு முன் பணம் கட்டுவது எனப் பல வேலைகள். இவற்றை எல்லாம் ரங்க்ஸ் செய்தாலும் சில வேலைகள் ஆன்லைனில் செய்ய வேண்டி இருக்கிறது. அவை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது.  ஞாயிற்றுக் கிழமை மாலை இங்கே வந்து சேர்ந்தோம். பையர் வந்து அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் சேர்ப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்தே நாங்க இருவருக்குமே வீல் சேர் கேட்டிருந்ததால் நல்லவேளையாக விமான நிலையத்தில் நடக்க வேண்டிய மணிக்கணக்கான, மைல் கணக்கான நடை இல்லை. விமானப் பயணம் குறித்துச் சொல்லுவதற்கு முன்னர் சில விஷயங்கள்.

சனிக்கிழமை சென்னை விமான நிலையத்துக்குக் கிளம்ப வேண்டும். அதற்கு 2 நாட்கள் முன்னரே வயிறு வழக்கம்போல் கொஞ்சம் தகராறு செய்ய ஆரம்பித்தது. மோர் சாதம் தவிர்த்து வேறே ஏதும் சாப்பிடக் கூடாதுனு கவனமாக இருந்து 2 நாட்கள் பொழுதையும் கழிச்சாச்சு. சனிக்கிழமை சாயந்திரம் ஆறு மணி போல் கிளம்பியும் ஆச்சு. வண்டியில் ஏறிக்கொண்டு வரும் வழியில் ரேவதி தொலைபேசியில் விசாரித்தார். பின்னர் இங்கே வந்ததும் பேசிக்கொள்ளலாம்னு சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தார். நாங்க கிளம்பும்போது மதியச் சாப்பாடுக்கான குழம்பு, ரசம், கறி, கூட்டு மட்டும் காடரர் மூலம் வாங்கிக் கொண்டோம். கைக்குச் சப்பாத்தியும் உருளைக்கிழங்கு மசாலா(மதுரை அம்பி கடை மாதிரி) பண்ணி (சின்ன வெங்காயம் போட்டுத் தான்) எடுத்துக் கொண்டு விட்டேன். வெண்ணெய் வேறே நிறைய இருந்ததால் மெலிதாப் பராந்தா மாதிரிப் பண்ணி எடுத்துக் கொண்டேன்.

வண்டியில் வந்து கொஞ்ச தூரம் ஆனதும் இரவு எட்டு மணி சுமார் வண்டியை எங்கானும் நிறுத்தி விட்டுச் சாப்பிடலாம்னு முடிவு செய்து, உளுந்தூர்ப்
பேட்டை தாண்டி அடையார் ஆனந்த பவன் வாசலில் (பெட்ரோல் பங்கை ஒட்டி இருக்குமே அது)நிறுத்திவிட்டுக் கழிவறைக்குப் போகலாம்னு கீழே இறங்கினோம். சாப்பாடு எனக்கு வேண்டாம்னு சொல்லிவிட்டுச் சூடாகக் குடிக்கத் தான் வேண்டும் என்று அடையார் ஆனந்த பவனிலேயேயே காஃபி வாங்கித் தரச் சொன்னேன். காஃபி வாங்கிக் கொண்டு வந்ததும் வண்டி கிளம்பியது. வேறே எங்கும் நிற்காமல் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கே எமிரேட்ஸ் நுழைவாயிலுக்கு எங்கே நிறுத்தணும்னு கேட்டுக் கொண்டு அங்கே நிறுத்திய பின்னர் ட்ராலியில் சாமான்களை வைத்துக் கொண்டு உள்ளே பாதுகாவலரிடம் பயணச் சீட்டையும், பாஸ்போர்ட்டையும் காட்டிவிட்டு நுழைந்து ஸ்கானிங் மாதிரியான வேலைகளை முடித்துக் கொண்டு பயணச் சீட்டு வாங்கச் சென்றோம். அங்கிருந்த ஏர்லைன்ஸ் ஊழியரிடம்  எங்களுக்கு முன் வரிசையில் ஓரத்து இருக்கைகள் இருந்தால் கொடுக்கும்படி கேட்டதில் அவர் முன் வரிசை எல்லாம் விற்று விட்டன என்றார். ஙே! இதென்ன என யோசித்ததில் கால்களை வசதியாக வைத்துக் கொண்டு உட்கார முடியாத முப்பது வயதுக்கு உட்பட்ட முதியோர்கள் அவற்றை அதிகப் பணம் கொடுத்து வாங்கிவிடுவதாகக் கேள்விப் பட்டோம். முன்னெல்லாம் இப்படி இல்லை. பிசினெஸ் க்ளாசில் எல்லாம் போக இன்னும் அதிகப்படியான டாலர்களைக் கொடுக்க வேண்டும். வேறே வழியில்லாமல் அவங்க கொடுத்த இருக்கை எண்களை வாங்கிக் கொண்டு நாமும் 30 வயதுக்குட்பட்ட முதியோராக இல்லாமல் போனோமே என நினைத்துக்கொண்டு வந்து வீல் சேருக்குக் காத்திருந்தோம்