எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 29, 2023

செங்கோலின் வரலாறு!

இன்னிக்குச் சோதனைக்குக் கொடுத்திருக்கேன். என்ன முடிவு வரப் போகுதோ தெரியலை. கீழே விழுந்ததில் ஏற்பட்ட வலி கணிசமாகக் குறைந்து விட்டது. இப்போக் கொஞ்சம் இல்லை நிறையப் பரவாயில்லை. போன வாரமே விழுந்த அன்னிக்கேக் காட்டிட்டு வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். தசை வலி தானே சரியாயிடும்னு நினைச்சு நாட்களை வீணாக்கிட்டேன். :( நாட்டில் ஆங்காங்கே நடக்கும் விஷயங்கள் திகிலை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டிருக்கார். அது தொடர்பான விசாரணகள் நடந்து முடியும் முன்னரே அடுத்தடுத்து இந்த அதிகாரிகள், வி.ஏ.ஓ. போன்றோருக்கு உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள். அரசு அதிகாரிகளாகப் பணி புரிவோர்க்கு எந்நேரமும் ஆபத்துத் தான் காத்திருக்கிறது. அதிலும் நேர்மையான அதிகாரிகள்னால் கேட்கவே வேண்டாம். பதவியில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருக்க வேண்டி உள்ளது. திருடனாகப் பார்த்துத் திருந்தினால் தான் உண்டு. 

இன்னிக்கு அக்னி நக்ஷத்திர முடிவு நாள். வெயில் என்னமோ கொளுத்துகிறது. காற்று ஆரம்பித்தாலும் அவ்வளவு மும்முரமாய் இல்லை. பருவக்காற்று இன்னமும் சுறுசுறுப்பாகத் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கலை. ஏசியைப் பகலில் எல்லாம் வைச்சுக்கறதில்லை. அப்புறமா அந்த அறையிலிருந்து வெளியே வரும்போது வெளிச்சூடு தாக்கிவிடும் என்பதால் இரவில் மட்டும் தான் ஏசி. அதையுமே விடிகாலையில் மூன்று மணி போல் அணைச்சுடுவோம். எழுந்திருப்பதற்குள்ளாக உடல் வெளியே உள்ள வெப்ப நிலைக்குப் பழகணுமே! 22 டிகிரியில் வைச்சுட்டு இருந்தோம். அப்புறமா அணைச்சுட்டு மின் விசிறியைப் போட்டால் வியர்க்க ஆரம்பிக்கிறது. ஆகவே இப்போ 24 டிகிரிக்கு வைச்சுட்டுக் கூடவே மின் விசிறியையும் போட்டுக்கறோம். அறை முழுவது நல்ல சில்லென்ற காற்று. காலம்பர அணைச்சாலும் எதுவும் தெரியலை. இதிலே மின்சாரம் வேறே மிச்சம் ஆகும் என்கின்றனர். பார்ப்போம்.

என்னோட சித்தி பையர் சத்யாவில் ஏசி வாங்கி இருக்கார். இன்ஸ்டாலேஷன் சார்ஜஸ் 850 ரூபாயோ என்னமோ சொன்னாங்களாம். வீட்டுக்கு வந்து ஏசியைப் பொருத்தும்போது அது இதுனு சொல்லிக் கடைசியில் கிட்டத்தட்ட 2000 ரூபாய்க்குக் கொஞ்சம் கீழே ஆகி இருக்கு! சேவையும் ரொம்பவே சுமார் என்கிறார். இதனாலேயே நாங்க இந்த ஆஃபர் கொடுக்கும் கடைகளுக்கே செல்லுவதில்லை. நேரடியாக எல்ஜியைத் தொடர்பு கொண்டே இரண்டு ஏசிக்களையும் வாங்கினோம். பதிவாக ஒருத்தர் வந்து எப்போதும் வேலைகளைச் செய்து கொடுப்பார். வேறே யாரையும் கூப்பிடறதில்லை.

செங்கோல் பற்றிப் பலரும் பலது சொல்கின்றார்கள். உண்மையில் இது 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர தினத்தன்று திருவாவடுதுறை ஆதீனம் அவர்களால் நேருவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. இதை நேரு அலஹாபாதில் ஆனந்த பவனத்தில் உள்ள காட்சிப் பொருட்களோடு வைத்திருந்ததாய்க் கேள்வி. மவுன்ட்பேட்டனிடம் யாரும் கொடுக்கவும் இல்லை. பின்னர் அவர் நேருவிடம் கொடுக்கவும் இல்லை. அப்படி நடந்ததாக ஒரு சலவைக்கல்வெட்டு வாட்சப்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெயரால் சுற்றுகிறது. எது உண்மை என்பது அந்தச் சமயம் இருந்தவங்களுக்குத் தான் தெரியும். 

பிரதமர் தலைமை வகித்துப் பங்கேற்கும் விழாக்களுக்கு ஜனாதிபதியை அழைப்பது மரபு/சம்பிரதாயம் இல்லை. ஏனெனில் ஜனாதிபதி பிரதமரை விட உயர்ந்த பதவி. முதல் குடிமகன். ஜனாதிபதி பார்லிமென்ட் திற ப்பு விழாவுக்குப் பங்கேற்கச் செல்லாததில் எந்தவிதமான அரசியல் காரணங்களும் இல்லை. பார்லிமென்டில் குறிப்பிட்ட சில சமயங்கள் மட்டுமே ஜனாதிபதி கலந்து கொள்வார். அதன் முறை/சம்பிரதாயமும் கூட. இந்தக் காரணங்களால் தான் அவரை அழைக்கவில்லை என்றாலும் அவரின் வாழ்த்துச் செய்தி அரசுக்கு வந்துள்ளது.

முன்னர் இப்போதைய முதலமைச்சரின் தந்தை முதலமைச்சராக இருந்தப்போ அவருக்கும் செங்கோல் வழங்கப்பட்டது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கு? அதற்கு இப்போது சொல்லும் சப்பைக்கட்டு அது கட்சிப் பணத்தில் இருந்து வாங்கியதாம். இது அப்படி இல்லையாம்? கட்சிக்கு ஏது பணம்? கட்சித்தொண்டர்களான பொதுமக்களிடம் வசூலித்தது தானே? அது கொடுக்கலாம். இது வலிந்து ஓர் ஆதீனத்தால் எழுபது வருடங்கள் முன்னரே அப்போதைய பிரதமருக்குப்  பரிசாகக் கொடுக்கப்பட்டது இப்போது மீட்கப்பட்டுப் பொதுவில் உள்ள சொத்துக்களில் ஒன்றாக ஓர் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. எது சரி? இது மதவாதமாம்! எல்லா மதத்தினரையும் அரவணைத்துச் செல்லுவதே உண்மையான மதச் சார்பின்மை. ஆனால் இங்கேயோ சநாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னால் மதச் சார்பின்மை. சநாதனத்தைக் கொண்டாடினால் மதவெறி! என்னவோ போங்க! ஒண்ணுமே புரியலை, உலகத்திலே!

ராஜராஜ சோழன் சிவபாத சேகரனாகத் தான் கடைசிவரை வாழ்ந்தான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான். அதற்காக யாரும் அவனுக்கு மதவெறி என்று சொன்னதாகத் தெரியலை. ஜைன, பௌத்த மடங்களுக்கும், மற்ற மதங்களுக்கும் உரிய மரியாதையையும் கொடுத்து வந்தான். தில்லை வாழ் அந்தணர்கள் தான் சோழ அரசனுக்குப் பட்டம் கட்டும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் வேறுபாடுகள் பார்க்காமல் திருப்பணிகள் செய்து வந்தனர் சோழ அரசர்களும், மற்ற அரசர்களும். உண்மையான மதச் சார்பின்மை என்பது முன் காலத்தில் இருந்தது. இப்போது சுயநலம் பிடித்தவர்களால் ஆளப்படும் நாட்டில் மதச்சார்பின்மை என்பது பொருளற்றுப் போய்விட்டது.

Thursday, May 25, 2023

நானெல்லாம் படம் பார்த்து!

 இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் படங்களைப் பார்க்க வாய்ப்பு இருந்தும் அவ்வளவு மனம் ஒன்றவில்லை.முன்னால் இரண்டு படங்கள் பார்த்துட்டு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னர் கொஞ்ச நாட்கள் படங்களே பார்க்கும் ஆவல் வரலை. திடீர்னு ஒரு நாள் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் படிக்கையில் இந்த யூ டர்ன் படம் கண்ணில் பட்டது. சரினு பார்க்க ஆரம்பித்தேன். விறுவிறுப்பான படம் தான். நடிகர்கள் யாரும் யாரெனத் தெரியலை. முற்றிலும் புதிய நடிகர்கள். ஆனாலும் நடிப்பும், கதையும், காட்சிகளும் ஒன்றோடு ஒன்று ஒன்றிப்போய்ப் பார்க்க வைத்தது. அப்படியும் 2,3 நாட்களாகத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து முடித்தேன். குறிப்பிட்டதொரு தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இடத்தில் பாலத்துக்கு மேலே யூ டர்ன் எடுக்கவே கூடாத இடத்தில் இரு சக்கர, நாலு சக்கர வாகனப் பயணிகள் அங்கே போட்டிருக்கும் கான்க்ரீட் பாறைகளை நகர்த்தி விட்டு வழி உண்டாக்கிக் கொண்டு யூ டர்ன் எடுத்துச் செல்கின்றனர். அப்படிச் செல்கின்றவர்கள் ஒவ்வொருவராக அன்றே இறக்கின்றனர்.

பத்திரிகையாளராக இருக்கும் ராதிகா பக்க்ஷிக்கு இதைக் குறித்து ஆய்வு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. சாலைப் பயணங்களில் நடைபெறும் விபத்துக்களையும் அதோடு கூடவே ஆய்வு செய்கிறாள். அப்போது இந்த யூ டர்ன் பற்றித் தெரிய வந்ததும் அது குறித்த தேடலில் மும்முரமாய் இறங்குகிறாள்விசித்திரமான சம்பவங்கள் மட்டுமின்றி போலீஸ் ஆய்வாளர் அர்ஜுன் ராதிகாவே இவற்றுக்குக் காரணமாய் இருப்பாளோ என சந்தேகப்படுகிறார். கடைசியில் உண்மையை ராதிகாவும் அர்ஜுனுமாகச் சேர்ந்து பேசுகையில் இருவருக்குமே புரிய வருகிறது. நம்பவே முடியாத உண்மை. மிச்சத்தை இணையத் திரையில் காணுங்கள்.

அதுக்கப்புறமாப் பார்த்தப்போ "கோஸ்டி" நன்றாக இருக்குமெனப் போட்டிருந்தாங்க. காஜல் அகர்வால் தான் கதாநாயகி. காஜல் அகர்வால் குழந்தையாய் இருந்தப்போ ஐபிஎஸ் அதிகாரியாய் இருந்த அவர் தந்தை ஒருபோக்கிரிகள் கோஷ்டித்தலைவனைப் பிடித்து வந்து சிறையில் அடைத்துத் தண்டனையும் வாங்கிக் கொடுக்கிறார்.  ஆனால் காஜல் அகர்வாலின் தந்தை இறக்க அதன் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்கணும்னு நினைச்சு அவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆகிறார். இந்த வழக்கை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடர்கிறார். ஆனால் இவரை ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாகக் காண முடியாமல் காமெடி என்னும் பெயரில் சொதப்பி இருக்காங்க. படம் ஹிந்தியில் இருக்குமோனூ பார்த்தால் கிடைக்கலை. தமிழில் தான் பார்க்க வேண்டி வந்தது. அறுவைனா அறுவை அம்புட்டு அறுவை. பேய், பிசாசுங்க எல்லாம் வந்தாலும் திகிலாக எல்லாம் இல்லை. தலையில் அடிச்சுக்கத் தான் தோன்றியது. இதில் தேவ தர்ஷினியைப் போட்டு வீணடித்திருக்கிறார்கள். யாரோ யோகி பாபுவாம். முதலில் உயிரோடு வந்து விட்டுப் பிறகு பேய், பிசாசாக வருகின்றனர். காமெடி என்னும் பெயரில் இது ஒரு கொடுமை. படத்தை அதற்கு மேல் பார்க்கப் பிடிக்கலை என்பதால் விட்டுட்டேன். காஜல் அகர்வாலும் ஒரு போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரமோ, தீவிரமான மனப்பான்மையோ இல்லாமல் அச்சுப்பிச்சென்று நடித்திருக்கார். அவரோடு கூட ஊர்வசியும், இன்னொருத்தரும். மூன்று பேரும் காமெடி என்னும் பெயரில் அறுவை போடுகின்றனர்.

விடுதலை, பத்துத்தல, அயலி, அயோத்தி, ருத்ரன் எனப் பல தமிழ்ப்படங்கள் இருந்தாலும் பார்க்கத் தோன்றவில்லை. எப்படி இருக்குமோனு ஒரு பயம். அயோத்தி பற்றி நிறைய விமரிசனங்கள் வந்தன. பார்க்க வேண்டாம்னு முடிவெடுத்துட்டேன்.

***********************************************


நேற்றுப் பல மாதங்களுக்குப் பின்னர் வெளியே ஒரு பூணூல் கல்யாணத்துக்குப் போனோம். ஆத்து வாத்தியார் பிள்ளைக்குப் பூணூல். குழந்தைக்கு ஏழு வயது தான் இருக்கலாம். மழலை மாறவில்லை. மொட்டை அடித்துக்கொண்டு பூணூல் போட்டுக்க வந்தபபோத் தூக்கி எடுத்துக் கொஞ்சத் தான் தோன்றியது. அந்தச் சத்திரத்துக்குள் போக எக்கச்சக்கமான படிகள். வாசல் படிகளில் ஏறும்போதே ஒரு இடத்தில் படி உடைந்து அதைக் கவனிக்காமல் ஏறிச் சறுக்கிக் கொண்டு போய்ப் பக்கத்துக் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டேன். அதில் நடு நெஞ்சில் நல்ல அடி பட்டுப் படுக்கவோ, உட்காரவோ முடியலை. இரும முடியலை.வலிக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருக்கேன். அதன் பிறகு பூணூல் நடக்கும் மண்டபம் போக ஒரு பத்துப் படிகள். அங்கிருந்து சாப்பிடும் இடம் போக ஐந்தாறு படிகள். எல்லாமாகச் சேர்ந்து கசரத் வாங்கியதில் முடியலை. சாப்பாடு வேறே சரியில்லை. 

மெனு என்னமோ நல்ல மெனு தான்.பால் பாயசம், தயிர்ப்பச்சடி, இனிப்புப் பச்சடி, உ.கி.பொடிமாஸ், அவரைக்காய்க் கறி, பூஷணிக்காய்க் கூட்டு,மாங்காய் ஊறுகாய், வடை, பதிர்பேணி, புளியோதரை, வறுவலுக்குப் பதிலாக மிக்சர், கதம்ப சாம்பார், ரசம்,மோர். பறிமாறினவங்க யாருக்கும் பரிமாறவே தெரியலை. சாம்பாரை முடிச்சுட்டு ரசத்துக்கு மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தேன். ரசம் ஊற்றுபவர் அந்த வழியாகவே நாலைந்து தடவைகள் போய் வந்தும்,எனக்கு ரசம் ஊற்றவே இல்லை. பின்னர் கத்தினத்துக்கப்புறமா வந்து அரைக்கரண்டி ரசத்தை ஊத்திட்டு அந்தப்பக்கம் பரிமாறுபவர்களோடு மும்முரமாய்ப் பேச ஆரம்பிச்சுட்டார். வந்த கோபத்துக்கு எழுந்துடலாம்னு தோணியது. ஆனால் இந்தப்பக்கம் நாலு பேர், அந்தப்பக்கம் நாலு பேர்னு எழுந்துக்க முடியாத நிலைமை. சாப்பிட்டோம்னு பேர் பண்ணினேன்.சாப்பாடு வயித்துக்கும் ஒத்துக்காமல் ஒரே தொந்திரவு. மிளகு ரசம் வைச்சுச் சாப்பிட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. நம்ம ரங்க்ஸுக்குக் கூட்டிப் போகவே இஷ்டமில்லை. வராதேனு சொன்னேனே என்று சொல்லிக் கொண்டே இருந்தார். :(

Wednesday, May 03, 2023

நெல்லையின் கேள்வியும் எனக்குத் தெரிந்த பதிலும்!

 ஒரு சென்சிடிவ் கேள்வி. ஆனால் நான் நிறைய நாள் யாரிடமாவது கெட்கணும்னு நினைத்திருந்தேன். வைணவத்தில் ஆழ்வார் பதின்மர், ஆண்டாள் மதுரகவியாழ்வாரும் அவர்கள் செய்த திவ்யபிரபந்தங்களைச் சேவிப்பத் உண்டு. இதேபோல் திருமுறைகளை  எல்லா பிராமணர்களும் சேவிப்பதில்லை என்பதைக் காணுகிறேன்,  அவர்கள் பூஜை அறையிலும் கூட நாயன்மார்களோ அல்லது திருமுறைகளை உண்டாக்கியவர்களையோ வணங்குவதில்லை. இதன் காரணம் என்ன?கீதா சாம்பசிவம் போன்று இதன் பாரம்பர்யத்தைத் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

நெல்லைத் தமிழன் கேள்வி.

பிராமணர்கள் தினந்தோறும் தேவார, திருவாசகங்களை ஏன் படித்து வணங்குவதில்லை. நாயன்மார்களுக்கும் அவர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை? நல்லதொரு கேள்வி. கிட்டத்தட்டப் பிற்காலச் சோழர்கள்/பாண்டியர்கள் காலம் வரையிலும் சைவம் செழிப்பாகவே இருந்தது. மாறி மாறிப் பாண்டியர்களும்/சோழர்களும் கோயில்களில் திருப்பணியைச் செய்தார்கள். தேவார/திருவாசகங்களை ஓதுவதற்கென  சிவத்திருமடங்களில் பொதுமக்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். அரசும் பல நிவந்தங்களை இதற்காக ஒதுக்கி இருந்திருக்கிறது. இது கிட்டத்தட்டத் தென்னாட்டில் முஸ்லீம்கள் படை எடுப்பு வரையிலும் சரியாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பிறகு சுமார் 40/50 ஆண்டுகள் ஒரு தலைமுறையே எந்தவிதமான இறை வழிபாடுகளும் செய்ய முடியாமல் இருந்திருக்கின்றனர். கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன என்பதே அப்போதைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான செய்தியாக இருந்திருக்கிறது. 

இந்நிலை நீடிக்காமல் விஜயநகரப் பேரரசும், நாயக்கர், மராத்தியர் ஆட்சிக்காலங்களும் மக்களுக்கு மீண்டும் பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கோயில்களைச் செப்பனிட்டுப் புதுப்பித்து விழாக்களை எல்லாம் ஒழுங்கு செய்து மக்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தினார்கள். என்றாலும் மக்கள் முழு மனதுடன் இறை வழிபாட்டில் ஈடுபட வில்லை.அவர்களுக்குள் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டிருக்கிறது. முன்னர் ஒரே வீட்டிலேயே அண்ணன் சிவ பக்தனாகவும், தம்பி வைணவ பக்தனாகவும் இருந்த காலம் போய் சைவ/வைணவப் பிரிவினை ஏற்பட்டு உள்ளது.

அந்நாளைய படிப்பில் சைவத்திருமுறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களே கோயில் சிவாசாரியார்களாக இருக்க முடியும் என்னும் நிபந்தனைகள் எல்லாமும் இருந்திருக்கிறது. சாமானிய மனிதன் தமிழ் கற்றால் கூடத் தமிழ் இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம் என நிறுத்திவிடாமல் பன்னிரு திருமுறைகளையும் கூடக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவற்றைப் பண் அமைத்துப் பாட வேண்டும் என்னும் நிபந்தனையும் கூட இருந்திருக்கிறது. இது நம் தமிழ்த்தாத்தா அவர்கள் தமிழ் கற்கும்போது கூட இருந்திருக்கிறது என்பதை அவருடைய சுய சரிதையின் மூலம் காணலாம். தமிழ் கற்க இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் இருக்க ஆங்கிலப் பள்ளிகள் நாளாவட்டத்தில் பெருகின. அவை ஆங்கிலத்தைப் போதித்ததோடு நிற்காமல் தமிழின் முக்கியத்துவத்தை மெல்ல மெல்லக் குறைத்தார்கள். முன்னெல்லாம் சிவ தீக்ஷை பெற்றவர்களே தமிழில் பண்டிதர்கள் ஆகலாம் என்றிருந்தது மாறித் தமிழை ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்னும் நிலைமைக்கு மாற்றியது அக்கால ஆங்கில அரசு. அதே சமயம் இலங்கையில் யாழ்ப்பாணத்தமிழர்களும் சரி, மற்றத் தமிழர்களும் சரி தேவார/திருவாசகங்களைப் படித்து ஓதி சிவ தீககை பெற்றே மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் முற்றிலும் வேறான நிலைமை.


இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வைணவப் பிரிவினையின் மூலம் வைணவர்கள் விஷ்ணு ஒருவனே தெய்வம்! என்னும் கொள்கையையும் தூக்கிப் பிடித்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குள் வடகலை/தென்கலைப் பிரிவுகள் தோன்றினாலும் ஸ்ரீராமானுஜர் காலத்துக்குப் பின்னால் தமிழுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் பட்டாசாரியார்களே சந்நிதிக்குள் பாசுரங்கள் பாடும் முறையை ஏற்படுத்தினார்கள். அதைத் தவிரவும் பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்களைத் தேர்ந்தெடுத்துத் தனி கோஷ்டி முறையை உருவாக்கி இதற்கென்றே தனிப் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன.

சைவர்களில் சைவர் எனத் தனியாக இருந்தவர்கள் ஆதி சைவர்களும், சிவாசாரியார்களுமே. இருவருமே ஒன்றே எனச் சிலர் சொன்னாலும் பலர் மறுக்கவும் செய்கின்றனர். இவங்க சிவனைத் தவிர்த்து வேறே கடவுளை வணங்குவதில்லை.  அதே சமயம் பிராமணர்களில் ஸ்மார்த்தர் என்னும் புதியதொரு பிரிவு தோன்றியது. இவர்கள் ஆதி சங்கரரைத் தங்கள் குருவாக ஏற்றவர்கள். அவருடைய ஷண்மத தத்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு எந்தக் கடவுள்களிடமும் பேதங்கள் கிடையாது. சர்வம் சிவ மயம் என்றாலும் சர்வம் விஷ்ணு மயம் என்றாலும் ஏற்பவர்கள். பஞ்சாயதன பூஜை என்னும் ஷண்மத வழிபாட்டில் முக்கியமான பூஜை முறையைப் பலரும் ஏற்று அதன்படி பூஜை செய்பவர்கள். இவர்களில் சிவ பூஜை மட்டுமே செய்பவர்கள் உண்டு. அவர்கள் தங்களுக்கான உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்வார்கள். மற்றவர்களை ஏற்க மாட்டார்கள்.

இந்த ஸ்மார்த்தர்கள் என்னும் பிரிவினர் கோயில்களில் வழிபாடுகளைச் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். ஆனால் வைணவர்களில் அப்படி இல்லை.ஆகம நடைமுறைகள் தெரிந்த பட்டாசாரியார்கள் என அனைவருமே கோயிலின் கர்பகிரஹத்தில் வழிபாடு செய்வார்கள். வழிபாடு செய்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பிரபந்தங்களை ஓதத் தெரிந்தவர்கள். ஆனால் அதே சமயம் கோயில்களில் வழிபாடு செய்யும் சிவாசாரியார்கள் பன்னிரு திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஓதவும் தெரியும். ஆனாலும் எப்போது எனத் தெரியாத காலத்திலேயே சிவன் கோயில்களில் ஓதுவார்கள் தோற்றுவிக்கப்பட்டுச் சைவ மடங்களால் ஆதரிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இருக்கும் கோயில்களின் கால வழிபாட்டின்போது தேவார/திருவாசகங்களை ஓதும் பேறு பெற்று இன்று வரை பல கோயில்களிலும் ஓதி வருகின்றனர். இவர்களில் ஸ்மார்த்தர்களும் சேர்ந்து கொள்வார்கள். பலருக்கும் ஓதத் தெரிந்திருந்தாலும் சிவன் கோயில் நடைமுறைப்படி ஓதுவார் தான் ஓத வேண்டும் என்றிருப்பதால் அவர்தான் ஓதுவார். கூடவே நாமும் தெரிந்தால் சொல்லலாம்.

சிதம்பரத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் தருமபுரம் ஆதீனத்தால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் வந்து பன்னிரு திருமுறைகளை ஓதுவதை இன்றும் பார்க்க முடியும். அங்கே உள்ள தீக்ஷிதர்கள் ஸ்மார்த்தர்கள் ஆனாலும் அவர்கள் ஈசனின் நேரடிச் சீடர்கள் என்பதால் அவர்கள் கர்பகிரஹத்தில் வழிபாடுகள் செய்ய உரிமை பெற்றவர்கள் என்பதோடு அனைவருக்குமே பன்னிரு திருமுறைகளை ஓதவும் தெரியும். பெரும்பாலும் அபிஷேஹ காலத்தில் ஸ்ரீருத்ரம் சொல்லிக் கொண்டோ அல்லது திருமுறைகளை ஓதிக்கொண்டோ அபிஷேஹம் செய்வார்கள்.எல்லாக் கோயில்களிலும் பன்னிரு திருமுறைகளை முறைப்படி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் அந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மடங்களால் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் பங்கு கொள்பவர்களே பிராமணர்கள் தாம். அனைவரும் சேர்ந்து தேவார முற்றோதல் என்னும் நிகழ்ச்சியை அடிக்கடி தொடங்கி நிறைவும் செய்வார்கள். கட்டாயப்பாடமாகப் பன்னிரு திருமுறைகளை வைக்காமல் விருப்பப் பாடமாக வைத்திருப்பதால் இதில் ஆர்வம் உள்ளவர்களே கலந்து கொள்கின்றனர். திருப்புகழும் அப்படித் தான் எல்லாக் கோயில்களிலும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


ஆனாலும் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்தியே ஆகவேண்டும். வைணவர்களுக்கு மகாவிஷ்ணுவிடம் உள்ள பற்றும், பாசமும், பக்தியும் சைவர்கள்னு சொல்லிக் கொள்ளும் ஸ்மார்த்தர்களுக்கு இல்லை என்றே சொல்லணும். மிகச் சின்ன வயசிலேயே வைணவ பக்தி நெறிமுறைகள் போதிக்கப்படுகின்றன என்பதற்கு என் முகநூல் நண்பர் திரு கேசவபாஷ்யம் வி.என். அவர்களின் புதல்வன் "ஆத்ரேயனே" சான்று. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். இங்கேயும் "சிந்துஜா ஹரிகதை" போன்ற மேதைகள் உள்லனர் என்றாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.. வைணவர்கள் மறந்தும் பிறன் தொழமாட்டார்கள் என்பதற்குச் சிதம்பரம் கோயிலின் பெருமாளே சாட்சி. ஆனால் மற்றவர்கள் எல்லாவற்றையும் ஏற்பார்கள். இந்துக்களின் இன்றைய நிலைமைக்கு அது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.  சிவன் கோயில்களில் ஸ்வாமி பல்லக்கைத் தூக்குபவர்கள் பிராமணராய்த் தான் இருக்கணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் விஷ்ணு/பெருமாள் கோயில்களில் அவர்களைத் தவிர வேறே யாரும் பெருமாளின் பல்லக்கைத் தொடக் கூட முடியாது. பிராமணர்கள் அலகு குத்திக்க மாட்டாங்க, கடினமான வேலைகளைச் செய்ய மாட்டாங்க என்பவர்கள் அந்த ஸ்ரீபாதம் தாங்கிகளின் தோள்பட்டையைப் பார்த்தால் தெரியும்.

வேறு கருத்துள்ளவர்கள் சொல்லலாம்.