எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 26, 2020

பொல்லாத விஷமக்காரக் குஞ்சுலு! 2

ஆயிற்று! நாளை (புதன்கிழமை) ஒரு நாள். வியாழனன்று இங்கிருந்து கிளம்பணும். விசா என்னமோ மார்ச் எட்டாம் தேதி வரை இருந்தாலும் நாங்க போன வாரம் போகவே நாள் முடிவு செய்திருந்தோம். ஆனால் பையர் கோபித்துக்கொண்டதால் ஒரு வாரம் முன்னாடி கிளம்பறோம். குட்டிக் குஞ்சுலுவும் அவ அம்மாவும் எங்களுடன் சென்னை வரை வருகிறார்கள் மருமகளுக்குப் பெற்றோரைப் பார்த்து 3 வருடம் ஆனதால் அவங்க வரமுடியாத நிலையில் எங்கள் துணையுடன் வருகிறாள். குஞ்சுலுவும் அவ அம்மாவும் நேரே அங்கே போய்விடுவார்கள். கிளம்பும் முன்னர் ஸ்ரீரங்கம் வருவார்கள். அப்போது நல்ல வெயில் வந்துடும். கவலையாத் தான் இருக்கு. இந்தக் குஞ்சுலு வேறே ஒரே ஆட்டம், பாட்டம், விளையாட்டுத் தான். இப்போ 2 நாட்களாக ஊருக்குப் போவதால் பள்ளிக்கு அனுப்பலை. அதுக்கே அதுக்குப் பொழுது போகாமல் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறது. நேற்று மதியம் என்னோடு உட்கார்ந்து கொண்டு எல்லாப் புத்தகங்கள்,படங்கள் பார்த்துப் பெயர் சொல்லிக் காட்டியது. ஒன்று, இரண்டு 30 வரை சரியாக எண்ணுகிறது. சில படங்களுக்கு வர்ணம் அடிப்பதாகச் சொல்லிக் கொண்டு தாறுமாறாக வர்ணம் அடிச்சு வைச்சிருக்கு!

தினம் தினம் ராத்திரி எங்க அறைக்கு வந்து கொட்டம் அடிச்சுட்டுத் தான் தூங்கவே போகும்.ஒன்பது மணிக்குத் தூங்கப் போகவே அதைக் கெஞ்சணும். இனிமேல் அது முடியாது. என்ன செய்யுமோ என நினைத்தால் கவலையும் வருத்தமுமாக இருக்கு. குழந்தை ஏங்கிப் போய்விடுவாளோ என்னும் கவலை பத்து நாட்களாகவே. ஓடி ஓடி வரும். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தியாவிலேயே எங்கேயானும் இருக்கக் கூடாதோ என்று தோன்றுகிறது. ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? இந்தியாவில் அவ பாட்டி வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்கப் போகிறதோ! விஷமம் தாங்காது. எல்லா சாமான்களும் கீழே வந்துடும். நாற்காலி, பெஞ்ச் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஏறி எல்லாவற்றையும் எடுக்கும். பபுள்ஸ் விடுவதற்கென பாதுகாப்பான சோப்பு நீர் இங்கே குழந்தைகளுக்கென அங்கீகரிக்கப்பட்டது விற்கிறார்கள். அதைப் பெண் வாங்கிக் கொடுத்தாள். குஞ்சுலுவுக்காக அதில் பபுள்ஸ் விட்டுக்கொண்டு காட்டிக் கொண்டிருப்பேன். சும்மாத் தொந்திரவு செய்கிறது என்பதால் இப்போ அதை ஒளிச்சு வைச்சிருக்கோம்.

எங்க பெண் வந்தால் குஞ்சுலுவுக்குக் கோபம் வந்துடும், எங்களை அழைத்துச் செல்லத் தான் வந்திருக்காள் என. ஆகவே உள்ளே போய்க் கோவித்துக்கொண்டு உட்கார்ந்துக்கும். கூப்பிடக் கூப்பிட வெளியே வராது. பையரோ, மருமகளோ உள்ளே போய் அதோடு பேசித் தாத்தா, பாட்டி இங்கே தான் இருக்கப் போறாங்க, அத்தையோடு போகப் போவதில்லைனு எல்லாம் சொல்லி இப்போ அத்தை கிளம்பப் போறாங்கனு சொன்னப்புறமா வந்து ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக்கும், வேறே புடைவை மாத்தி இருக்கேனானு! இல்லைனு தெரிஞ்சதும் சிரித்துக்கொண்டே இரண்டு கைகளாலும் அவங்களுக்கு "பை" சொல்லி கட்டிக்கொண்டு வழி அனுப்பும். :))))) பெண்ணுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் குழந்தையின் மனதைப் புரிந்து கொள்வதால் அதை நாம் துன்புறுத்துகிறோமேனு வருத்தப்படுவாள். இனி என்ன செய்யப் போகிறதோ தெரியலை. ஏற்கெனவே ஒன்பது, பத்து மாசத்தில் விட்டுவிட்டு வந்தது அதுக்கு இன்னமும் நினைவில் இருக்குப் போல! கொஞ்ச நாட்கள் ஸ்கைபில் எங்களைப் பார்க்கவே மறுத்துக் கொண்டு இருந்தாள். சரியாக நாளானது. இனி எப்படியோ தெரியலை. அது திரும்பி இங்கே வந்ததும் ஸ்கைபுக்கு வந்தால் தான் தெரியும். பார்ப்போம். இறைவன் விட்ட வழி!

Wednesday, February 19, 2020

தாத்தாவுக்குப் பிறந்த நாள்!


தாத்தாவுக்குப் பிறந்த நாள்!க்கான பட முடிவுகள்

22. என் கல்யாணம்


கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து ஜனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். ரெயில் வண்டியின் வேகம், பஸ்ஸின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.

இன்றும் அன்றும்


இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?

அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனஸ்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.

கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேஷ காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீஷ் பெயரால் வழங்கும் காய்கறிகளும் ஹிந்துஸ்தானிப் பெயரால் வழங்கும் பக்ஷிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விஷயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.

ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புஷ்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்ஸவ மூர்த்திகளுக்குச் செய்யும் புஷ்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோஷத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தக்ஷணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதக்ஷணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

போஜனக் கிரமம்


காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போஜனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போஜனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூஜை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லோரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவைகளே அக்காலத்துப் பக்ஷியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போஜனத்திற்கு ஊரிலுள்ள எல்லோரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன


காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுக்களிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.

நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனஸ்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்


எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணத்திற்குமுன் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு நிறைபணி நடைபெற்றது. விநாயக மூர்த்தியின் திருவுருவம் முழுவதையும் சந்தனத்தால் மறைத்துவிடுவார்கள். அதற்காக ஊரினர் யாவரும் வந்து சந்தனம் அரைப்பார்கள். ஊரில் பொதுவாக ஒரு பெரிய சந்தனக்கல் இதற்காகவே இருக்கும். அதைக்கொணர்ந்து வைத்து அருகில் இரண்டு கவுளி வெற்றிலையும் சீவலும் வைத்துவிடுவார்கள். பொடிமட்டையும் வைப்பதுண்டு. சந்தனம் அரைக்க வருபவர்கள் அவற்றை அடிக்கடி உபயோகப்படுத்திக்கொண்டு தங்கள் கைங்கரியத்தைச் செய்வார்கள்.

அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு நிவேதனமான பழங்களும் சுண்டல், வடைப்பருப்பு, மோதகம் முதலியவைகளும் விநியோகம் செய்யப்படும். மோதகம் ஒரு மாம்பழ அளவு இருக்கும். ஒவ்வொரு பொருளையும் இன்னார் இன்னாரே விநியோகிக்க வேண்டுமென்ற வரையறை உண்டு. அவர்கள் ஊரிலிருக்கும் காலங்களில் அந்த விநியோகத்தைத் தவறாமற் செய்து வருவார்கள். இந்த நிறைபணியோடு எங்கள் வீட்டிலும் பெண் வீட்டிலும் குலதெய்வ சமாராதனைகளும் நடைபெற்றன.
என் கல்யாணம் அக்காலத்திற்கேற்ப விமரிசையாகவே நடை பெற்றது.
குளங்களிலும் வாய்க்கால்களிலும் நிறைய ஜலம் இருந்தது. ஆதலின் விருந்தினர்களது ஸ்நானம் முதலிய சௌகரியங்களுக்குக் குறைவு நேரவில்லை.
நலங்கு நடைபெற்றபொழுது நானே பத்தியங்கள் சொன்னேன். அவற்றை என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எனக்குச் சொல்லித் தந்தார். எங்கள் குலகுருவாகிய ஐயா வாத்தியாரென்பவர் எல்லா வைதிக காரியங்களையும் முறைப்படி நடத்தி வைத்தார்.

சிதம்பர உடையார் வருகை


விபவ வருஷம் ஆனி மாதம் 4-ம் தேதி (16-6-1868) என் விவாகம் நடந்தது. அன்று இரவு மறவனத்தம் சிதம்பர உடையார் குதிரை மீதேறி வந்து சேர்ந்தார். அவர் விவாகத்துக்கு முதல் நாளே வந்திருப்பார். அவர் தந்தையாருக்கு அன்று திதியாகையால் அதைச் செய்துவிட்டு விவாக தினமாகிய மறுநாட் காலையிலே புறப்பட்டு இரவு மாளாபுரம் வந்தார். வந்தவுடனே என் தந்தையாரைக்கண்டு தாம் முன்பே வாக்களித்திருந்தபடி ஐம்பது ரூபாய் அளித்தார். தக்க சமயத்தில் அவர் செய்த உபகாரத்தைப் பெற்று என் தந்தையார் மிக்க நன்றி பாராட்டினார்.

அவர் குதிரையின்மீது ஏறிவந்து இறங்கியபோது அவர் ஒரு பெரிய செல்வரென்பதைக் கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் அறிந்துகொண்டனர். அவர் கலகலவென்று பணத்தை எடுத்துக்கொடுத்தபோது எல்லாரும் ஆச்சரியமுற்றனர். என் தந்தையார் மிக்க செல்வாக்குடையவரென்ற எண்ணம் அவர்களுக்கு அப்போது உண்டாயிற்று. அரியிலூர் முதலிய இடங்களிலிருந்தும் சில வேளாளச் செல்வர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி உபசாரங்கள் நடைபெற்றன. எந்தையாரிடம் அவர்கள் காட்டிய மரியாதையைக் கண்ட என் மாமனாரும் அவரைச் சார்ந்தவர்களும், “நல்ல இடத்தில்தான் நாம் சம்பந்தம் செய்திருக்கிறோம். பெரிய மனுஷர்களெல்லாம் இவருக்குப் பழக்கமாக இருக்கிறார்கள். நம் மாப்பிள்ளைக்குக் குறைவு ஒன்றும் இல்லை” என்ற தைரியத்தை அடைந்தார்கள்.

Wednesday, February 12, 2020

தஞ்சையும் தமிழும்!

tanjore templeக்கான பட முடிவுகள்

தஞ்சைக் கோயில் குட முழுக்கு பற்றியும் அதைத் தமிழில் செய்ய வேண்டிய அவசியம் பற்றியும்   முகநூலில் "மத்யமர்" குழுமத்தில் ராஜ் ராஜேந்திரன்  என்னும் நண்பர் எழுதி இருந்தார். வடமொழி என்றால் வடக்கே இருந்து வந்த மொழி என்னும் கருத்தில் இருக்கிறார் போலும். வட மரம் என்றால் ஆலமரம் என்னும் பொருள்.  ஆல மரத்தின் பெயர் களுள் கோளி, பூதவம், கான் மரம், வட மரம், தொன் மரம், ஒதிய பழுமரம், கோளி, ஆலே என்றெல்லாம் அழைக்கப்படுவதாக திவாகர நிகண்டுவின் மரப்பெயர்த் தொகுதியிலும் சூடாமணி நிகண்டுவின் மரப்பெயர்த் தொகுதியிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. (நன்றி. விக்கிபீடியா).  ஆலமரத்தின் கீழிருந்து ஈசன் வாயால் வந்ததால் இது வடமொழி எனப்பட்டது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் இது பற்றிக் கூறும் நண்பர் மேலும் சொல்லுவதாவது!  அதில் அவர் வடமொழி பிழைப்புக்கான மொழி எனவும், ஆகமங்கள் ஈசனா ல் கொடுத்தவை அல்ல எனவும் விரைவில் அவை மறைய வேண்டும் எனவும் சொல்லி இருந்தார். தமிழில் படித்திருந்தாலும் ஆழமாய்ப் படிக்கவில்லையோ? திருமூலர் தனது திருமந்திரத்தில் "ஆகமச் சிறப்பு" என்னு பெயரிலேயே பாடல்கள் எழுதி இருக்கிறார். அது குறித்துத் தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகத்தில் சொல்லி இருக்கும் முன்னுரையைப் படித்தாலே போதுமானது. ஆகமங்கள் யாரால் கொடுக்கப்பட்டன என்பது.

2.4.3 வேத ஆகமச் சிறப்பு

வேதம், ஆகமம் என்ற இரண்டு நூல்களைப் பற்றியும் திருமூலர் குறிப்பிடுகிறார். இரண்டுமே இறைவனிடமிருந்து வந்தவை: வேதம் பொது; ஆகமம் சிறப்பு என்பதும் அவர் கருத்து. ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது’ என்பது பொருள். இச்சொல், சிவபெருமானிடமிருந்து இந்நூல்கள் வந்தன என்பதைக் குறிக்கிறது.

ஆகமம் என்ற சொல்லை மற்றொரு விதமாகவும் பிரித்துப் பொருள் காண்கிறார்கள். ஆ என்பது பாசம்; க என்பது பசு; ம என்பது பதி. எனவே இம்மூன்றையும் ஆகமம் கூறுகிறது.

திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் உணரும் எளிமையும், இனிமையும் உடைய பாடல்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘

1 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்

அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.

2 அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்

எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

3 அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது

எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

4 பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்

அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து

அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி

உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.

5 சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற

நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.

6 பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம்

உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம்

மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து

உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.

7 ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு

மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன்

வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று

ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.

ஆகமங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்பதோடு தஞ்சைப் பெரிய கோயில் மகுடாகம முறைப்படி கட்டப்பட்டுக் குடமுழுக்கு நடத்தப்பட்ட கோயில் என்பதைப் பல கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீதிமன்றத்தால் ஆகம முறைப்படியான குடமுழுக்குச் செய்யலாம் என்று சொல்லப்பட்ட பின்னரும் இதைக் குறித்து விவாதிப்பதில் பொருள் இல்லை. வடமொழியில் கோயில்களில் வழிபாடு செய்வதன் மூலம் நாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரியான மொழியில் வழிபாடுகள் நடக்கின்றன என்பதால் மக்களுக்குப் புரிந்து கொள்ளவும் முடியும்.

tanjore templeக்கான பட முடிவுகள்

இங்கே தமிழில் செய்தால் வட நாட்டவர் இங்கே வந்தால் அவர்களுக்கு என்ன புரியும்? அவ்வளவு ஏன்? அண்டை மாநிலங்களில் கூட வடமொழியில் தான் வழிபாடுகள் நடக்கின்றன. அங்கெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. இங்கே தமிழ் நாட்டில் தான் தமிழ் ஆர்வலர்கள் எனச் சொல்லிக் கொண்டு வழிபாடுகளில் எல்லாம் அநாவசியமான தலையீடுகள்.  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரையில் உள்ள அனைத்து இந்து சமயக் கோயில்கள் எல்லாம் வடமொழியில் வழிபாடுகள் செய்யப்படும் கோயில்களே! அதே போல் நம் சைவ சமயமும் இமயம் முதல் குமரி வரை பரவி இருந்தது. நேபாளத்தின் பசுபதிநாதர் கோயிலிலும் சம்ஸ்கிருத வழிபாடே. பத்ரிநாத்தில் நம் தென்னாட்டுத் தமிழர்களும், மலையாளத்துப் போத்திகளும் கோயில்களில் வழிபாடுகள் செய்கின்றனர். நம் தமிழகத்து ஆதிசங்கரர் சொன்ன விதிகளின்படி அங்கெல்லாம் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அங்கே எல்லாம் எந்தவிதமான தகராறுகளும் இல்லை. அவர்கள் இந்தக் கோயில் அர்ச்சகர்கள் தென்னாடு என்பதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

இது பொதுஜனங்களின் பொதுவான விருப்பம். தமிழ் வழிபாடு தேவை என்று சொல்லுபவர்களால் தேவார, திருவாசகங்களின் உட்பொருளை உணர்ந்து சொல்ல முடியுமா? அல்லது அவற்றைத் தடங்கல் இல்லாமல் படிக்கத்தான் முடியுமா? தமிழும், வடமொழியும் நம் நாட்டின் இரு கண்கள். நாட்டை ஒருங்கிணைப்பது அது தான். நாமும் அண்டை மநிலங்களுக்குப் போய் வழிபாடுகள் நடத்தவோ, அண்டை மாநிலத்தவர் இங்கே வந்து வழிபாடுகள் நடத்தவோ இது தான் ஏற்புடைய மொழி. என்னதான் சம்ஸ்கிருதம் செத்துவிட்டது எனக் கூறினாலும் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் மொழி சம்ஸ்கிருதம். தமிழ் அதை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதோடு இல்லாமல் சம்ஸ்கிருத  மந்திரங்கள் ஒலிக்கும் சப்தத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுபவை. அவற்றில் ஒரு சின்ன ஒலி மாறுபாடோ சப்தத்தில் மாறுபாடோ இருந்துவிட்டால் விபரீத அர்த்தம் கொடுக்கும் என்பதோடு செய்யப்படும் கிரியைகளிலும் புனிதத்துவம் குறையும். கோயில்களின் இறைத்தன்மை, விக்ரஹங்களின் இறைத்தன்மை ஏற்றுவது எல்லாம் சிவாசாரியார்கள் சொல்லும் மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. பல்லாண்டுகள் மூடிக்கிடக்கும் ஒரு கோயிலைத் திறந்து எந்த சிவாசாரியாரும் உடனடியாக வழிபாடு செய்து விட முடியாது. அதைத் திறந்து வழிபாடு செய்வதற்கென உள்ள வழிமுறைகளின்படியே அவர்கள் செய்வார்கள். அதன் பின்னரே கோயிலைத் திறந்து உள்ளே செல்வார்கள். இங்குள்ள எந்த சிவாசாரியார்களும் எதுவும் தெரியாமல் கோயில்களில் வந்து வழிபாடு செய்வதில்லை. இதில் பிராமணர் என்ற ஜாதியினால் அவர்கள் சிவாசாரியார்கள் ஆவதும் இல்லை. பிராமணர் வேறு! சிவாசாரியார் வேறு. ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தம் செய்து கொள்வதும் இல்லை.


ஆகம மையம்

இந்தச் சுட்டியில் ஆகமங்கள் பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கும். ஆனால் சில ஆகமங்கள் சம்ஸ்கிருதத்தில் அல்லது தேவநாகரியில் தான் படிக்கக் கிடைக்கும். நண்பர் ஒருவர் மகுடாகமம் புத்தகம் அனுப்புவதாகக் கூறி உள்ளார். அவரிடம் கேட்டு வாங்க வேண்டும்.

இங்கு நாத! நீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால்
உனை அர்ச்சனை புரிய பொங்குகின்றது என் ஆசை'

இவை பெரிய புராணத்தில் சேக்கிழார் சொன்னது. ராஜராஜ சோழன் ஆகம முறைப்படி கோயில் கட்டவில்லை என்றாலோ ஆகம முறைப்படி வழிபாடுகளைச் செய்யச் சொல்லவில்லை என்றாலோ சேக்கிழார் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார் அல்லவா?  திருமூலர் ஆகமங்கள் ஈசன் வாயிலாக வந்ததாகவே சொல்லுகிறார். பின்ன நந்தி எம்பெருமான் ஈசனிடமிருந்து அறிந்து தன் சீடர்களுக்கு உபதேசித்ததாகக் கொள்வர். திருமூலர் நந்தி எம்பெருமானின் சீடர்களில் ஒருவர் ஆவார். ஆகவே ஆகமச் சிறப்பைப் பற்றி அவர் சொன்ன பாடல்களை மேலே பகிர்ந்திருக்கிறேன். ஆகமங்களையும், மறைகளையும் ஒதுக்கினால் அந்தக் கோயில்களில் இருந்து ஈசனே ஒதுங்கி விடுவார் என்றும் சேக்கிழார் சொல்லி இருக்கிறார். திருமுறையில் பெரிய புராணத்தில்

பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்

சொல்லி இருப்பதோடு ஆகமங்களைத் "துங்க" என்றும் சொல்லி இருக்கிறார். "துங்க" என்றால் உயர்ந்த என்னும் பொருள் வரும். தஞ்சைப் பெரிய கோயில் ஆகம முறைப்படி கட்டப்பட்டிருப்பதை "தஞ்சாவூர்" என்ற கல்வெட்டு ஆராய்ச்சி நூல் கூறுகிறது. பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் போதும், சரபோஜி மகாராஜா ஆட்சியின் போதும் எழுதப்பட்ட நூல்களான "ப்ருகதீஸ்வர மஹாத்மியம்" மற்றும் "தஞ்சைப் பெருவுடையார் உலா" போன்ற நூல்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுவதோடு "பெருவுடையார் உலா"வில்

'ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆட்டத்தில்
ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு'

என்னும் வரிகள் இதை உறுதி செய்கின்றன. 28 ஆகமங்கள் உள்ளன எனச் சொல்லப்படும் சிவாகமங்களில் 17 ஆவது ஆகமம் மகுடாகமம். ஈசனின் உருவே ஆகமங்களால் ஆனது எனவும் அதில் மகுடாகமம் தான் ஈசன் தலை எனவும் கொள்வர். எல்லாவற்றிலும் சிறந்த மகுடாகம முறைப்படியே பெருவுடையாருக்குக் கோயில் எழுப்ப ராஜராஜன் நிச்சயித்திருக்கலாம். அதோடு அவன் தன் அரச வாழ்க்கையின் இறுதிப்பகுதியில் ஓர் யோகியாகத் தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்தான் எனவும் தன்னை அனைவரும் "சிவபாத சேகரன்" என்றே அழைக்க வேண்டும் என்றும் விரும்பினான். யோகங்களில் சிறந்ததாகக் கருதப்படும் இந்த மகுடாகமம் யோகிகள் தங்கள் தலை வழியாக இறை சக்தியோடு கலப்பதையும் குறிக்கும். தஞ்சைப் பெரிய கோயில் கருவறையும் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டதே!

ஒரு காலத்தில் தமிழ் படிப்பதெனில் இவை அனைத்தையும் அநேகமாகப் படிப்பார்கள் எனச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். குறைந்த பட்சமாகத் தேவார, திருமுறைகளோடு, கம்பராமாயணம், வில்லி பாரதம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியவற்றையும் முழுமையாக சங்கப்பாடல்களோடு கற்பார்களாம். அத்தோடு இல்லாமல் இவை அனைத்தையும் பண் அமைத்துப் பாடியும் மனனம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி வந்து பள்ளிகளைத் திறந்து நம் கல்விக்கண் அவர்களால் திறக்கப்பட்டபோது இவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல மெல்ல நின்று போனது.,  நாங்கள் எல்லாம் படிக்கும்போது கூட ஔவையாரின் நீதி போதனைகள், நாலடியார், பதினெண் கீழ்க்கணக்கு, திரிகடுகம் என்றெல்லாம் ராமாயணம், பாரதத்தோடு படித்தோம். பெத்லகேம் குறவஞ்சி, சீறாப்புராணம் என்றெல்லாம் படித்தோம் ஆனால் சமீப காலங்களில் அதாவது கடந்த ஐம்பதாண்டுகளில் இவை எதுவுமே இல்லை என்பதோடு இப்போதெல்லாம் இத்தகைய இலக்கியச் சிறப்பு வாய்ந்த தமிழின் பக்கமே நம் மக்கள் போவதில்லை. ஆகவே அவர்கள் நாம் தமிழில் படிப்பதெனில் இவ்வளவு எளிதாகப் படிப்பது தான் என நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

அறிவியல் சொற்கள் தமிழில் குறைவு. நல்ல அறிவார்ந்த தமிழர்களால் தான் அத்தகைய சொற்களை ஏற்படுத்த முடியும். ஆனால் இந்தக் காலங்களில் அத்தகைய தமிழ்ச் சொற்கள் இல்லாததோடு எல்லாவற்றிலும் இந்தப் "பண்ணு தமிழ்" புகுந்து கொள்கிறது. அல்லது தமிங்கிலீஷில் எழுதிப் படிக்கின்றனர். என்னத்தைச் சொல்ல! எனக்குத் தெரிந்து தமிழ் மொழி இப்போது இணையத்தில் சந்தவசந்தம் என்னும் குழுமத்தின் மூலமும் அந்தக் குழுமத்தில் உள்ள தலை சிறந்த ஆசிரியரான திரு இலந்தை ராமசாமி அவர்களாலும் அவரின் சீடர்களாலும் இன்னமும் கொஞ்சம் உயிர் வாழ்கிறது. நல்ல விஷயங்களைப் படிக்கவும் கேட்கவும் முடியும்.  மரபு வழியிலான கவிதைகளை அங்கே மட்டும் பார்க்கலாம். முகநூலிலும் மாலா மாதவன், கீதா எம்.சுதர்சனம், சாந்தி மாரியப்பன், ஜேகே கண்ணன் போன்றோர் ஆசுகவிகளாக இருக்கின்றனர். இவர்களில் பெண்கள் மூவரும் இலந்தையாரின் சிஷ்யைகள்.  ஜேகே கண்ணன் அபிராமி அந்தாதியைப்போல் அபிராமி அம்மன் மேல் தானும் ஓர் அந்தாதியை இயற்றி வருகிறார். இவர்களை எல்லாம் பொறாமையுடன் பார்த்துப் பாராட்டுவதைத் தவிர நான் ஏதும் செய்வதில்லை. :(

இதில் முதல் பகுதி முகநூலின் "மத்யமர்" குழுமத்தில் என்னால் வெளியிடப்பட்டது. மற்றவை பிற்சேர்க்கை.

Monday, February 10, 2020

விளக்கு அலங்காரங்களை ஒரு வழியா முடிச்சேன்!














படங்கள் நிறைய இருந்தாலும் அதில் மக்கள் அதிகம் முகம் தெரியும் அளவுக்கு இருப்பதால் பகிரவில்லை.அங்கும் இங்கும் செல்லும் மக்கள் கூட்டத்தைத் தவிர்த்துப்படம் எடுப்பது என்னைப் பொறுத்தவரை சிரமமாக உள்ளது.  ஒரு சில படங்கள் மட்டும் தேர்வு செய்து போட்டிருக்கேன். இன்னும் சில படங்கள் இதற்கு முன்னால் நவம்பர் மாதம் டாலஸ் போனப்போ எடுத்தவை இருக்கின்றன. அதைக் கொஞ்ச நாட்கள் இடைவெளியில் பகிர்கிறேன். இவை எல்லாம் கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் மாலை இங்கே உள்ள கால்வெஸ்டன் போனப்போ எடுத்தவை என்பதை மறுபடியும் நினைவு கூர்கிறேன். இதற்கு மேலும் வண்ண விளக்கு அலங்காரங்கள் மேலும் ஒரு மைல் நீளத்துக்குத் தொடர்ந்தாலும் தொடர்ந்து எடுக்க முடியலை! :(

Sunday, February 02, 2020

விளக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து பார்ப்போமா?

சும்மாவானும் பார்வையாளர் கணக்கை 800க்கும் மேல் காட்டுகிறது. சும்மா உள உளாக்கட்டிக்குனு நினைக்கிறேன். ஏனெனில் 8 பேர் கருத்துச் சொன்னால் அதிகம்னு இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ப்ளாகருக்கு இந்தப்பொய்யெல்லாம் எதுக்கு? எதுக்குனு கேட்கிறேன். அதே போல்  முழு நேரப் பார்வையாளர்களும் கிட்டத்தட்ட ஏழரை லட்சம்னும் சொல்கிறது. 75000 நபர்கள் இருக்குமோ என்னமோ! எவ்வளவு பொய்யெல்லாம் சொல்லுது பாருங்க! விஷமக்காரக் குஞ்சுலுவை மட்டும் 700 பேர்களுக்கு மேல் பார்த்திருக்காங்களாம். 70 ஆக இருக்கும்னு ஒரு சைபரை எடுத்துவிட்டுக் கணக்குப் போட்டுக் கொண்டேன். இப்போ நாம அடுத்த வேலையைப் பார்ப்போமா? ஒரு வழியா இந்த வலைப்பக்கத்தில் ரைட் க்ளிக்கைச் செயல்பட முடியாமல் நண்பர் ஒருத்தர் மூலம் தடுத்துவிட்டேன். சாப்பாடுப் பதிவுகளுக்கும் பண்ணித்தரேன்னு சொல்லி இருக்கார். அவர் ரொம்பவே வேலை மும்முரத்தில் இருப்பவர். ஆதலால் நேரம் கிடைக்கிறச்சே அதையும் பண்ணிடுவார்.


இப்போ நாம் விளக்கு அலங்காரத்தைத் தொடர்ந்து பார்ப்போமா?


















வழி நெடுக இரண்டு பக்கங்களிலும் விதம் விதமான அலங்கரிப்புகள். அவற்றைப் படம் எடுக்க நேரம் எடுப்பதோடு நம்மால் எல்லாவற்றையும் ஒரு சேரப் பார்க்கவும் முடியவில்லை. அதைத் தவிரவும் புல்வெளிகளில் ஆங்காங்கே சிற்பங்களைப் போன்ற விளக்கு அலங்காரங்கள். நம்ம ஊரில் ஆடி மாதம் அம்மனை விளக்குகளால் அலங்கரித்துக் கட் அவுட் போல் வைப்பார்கள். பிள்ளையார் சதுர்த்தி காலம் பிள்ளையார் வருவார். அது போல் இங்கே சான்டா மற்றும் அவர் வண்டி, கலைமான்கள், கன்னி மேரி, ஏசு ஆகியோரை இம்மாதிரி விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள். புல்வெளியில் இருட்டில் போகக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஏதேனும் பூச்சி, பொட்டு இருக்கலாம் என்பதோடு "ரகூன்" எனப்படும் ஒரு வகை நாய் இருக்கும் எனவும் அது கடித்தாலோ, தோலில் பட்டாலோ தொழுநோய் வரும் எனவும் சொல்கின்றனர். இங்கே பையர் வீட்டில் அதிகம் முயல்கள் தான் பார்த்திருக்கேன். அவற்றையும் இப்போ அதிகம் பார்க்க முடியலை. என்றாலும் இருட்டில் எதுக்குப் போகணும் என நினைத்துச் சாலை வழியேவே சென்றோம்.

எங்களைத் தாண்டிக்கொண்டு பாட்டரி கார்கள் சென்றன. இந்த வசதி இருப்பதே அப்போத் தான் தெரியும். முதலிலேயே தெரிந்திருந்தால் அதிலேயே போய்ப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் ஆட்களோடு வண்டி நிறைந்து சென்றதால் நாங்கள் அழைத்துச் செல்லக் கூப்பிடவில்லை. மெல்ல மெல்லச் சென்றோம்.