எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 30, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்! 2 தொடர்ச்சி!

 சுமார் பனிரண்டு மணி அளவில் எக்ஸ்ரேக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டார்கள். தூக்கம் வேறே முழு ஏசி என்பதால் குளிர் வேறே. ஒண்ணும் சாப்பிடாததால் பசி வேறே. காலை நீட்டிப் படுத்தால் தேவலை போல இருந்தது. கொஞ்சம் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தால் இடப்பக்கம் அந்த நரம்பு முடிச்சுக்களெல்லாம் நகர்ந்து கொண்டு மேலும் வலியை அதிகப்படுத்தியது. அதற்குள்ளாக மேலும் இரு முறை மருமகள் வந்து பார்த்துட்டு செவிலியரிடம் எப்போ எனக்கு செக்கப் ஆரம்பம் எனக் கேட்டுக்கொண்டாள். சர்ஜன் வரணும் என்றார்கள். அதுக்குள்ளாக ட்யூட்டி மருத்துவர் மாதிரி ஒரு சர்ஜன் வந்து என்னைப் படுக்கையில் படுக்கச் சொன்னார். படுக்கை மிக உயரத்தில் இருக்க என்னால் ஏறிப் படுக்க முடியலை. உடனே ஒரு நர்சை அனுப்பி ஸ்டூல் கொண்டு வரச் சொல்லிப் படுக்கையையும் கொஞ்சம் இறக்கச் சொன்னார். ஏறிப் படுத்தேன். கால்களை மேலே தூக்கிப் போட முடியாமல் தவிக்கச் செவிலியர் தூக்குகையில் வலி தாங்காமல் கத்திவிட்டேன். பின்னர் இந்த மருத்துவர் என்னிடம் விபரங்களைக் கேட்டுக் கொண்டு சின்னதான ஒரு ஸ்கேன் மானிடரில் என் மேல் வயிற்றில் வலி இருக்குமிடம் பரிசோதனை செய்து கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் அது முடிந்து அவர் ஏதோ சொல்லிட்டுப் போனார். என்னவென்று கேட்டதற்கு அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எடுத்தே ஆகணும் எனவும் அங்கே ஆள் இன்னும் வராததால் சிறிது நேரம் அங்கேயே இருக்கணும் எனவும் சொன்னார்கள். மறுபடி தேவுடு காத்துக் கொண்டிருந்தேன். 

நல்லவேளையாகப் போர்த்திக்கொள்ளப் போர்வை கொடுத்தார்கள். கீழே இருந்து யாரும் வரலை. தூங்கிட்டாங்க போலனு நினைச்சுட்டிருந்தப்போ என்னோடு காத்திருந்த ஒரு தமிழ்ப் பெண் அல்ட்ரா சவுன்டுக்கு நர்ஸ் துணையுடன் கிளம்பிப் போனார். அடுத்து நம்மைக் கூப்பிடுவாங்கனு எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தேன்.கொஞ்சம் அப்படியே கண்ணசர யாரோ கூப்பிடும் ஒலி கேட்டுக் கண் விழித்தால் நர்ஸ் ஒருத்தர். என்னை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவருடன் அங்கே போனேன். ஆனால் இது விஷயம், பையருக்கோ அவர் மனைவிக்கோ தெரியாது. அவங்க கீழேயே இருந்தாங்க. அங்கே இருந்த பெண்மணி என்னைத் தனியாகவா வந்திருக்கே எனக் கேட்கக் கீழே பையரும், மருமகளும் காத்திருப்பதைச் சொன்னேன். இவர் ஹிந்தியிலும் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் நடந்தது. நான் வெளியே வந்தப்போப் பையர் அங்கே நின்றிருந்தார். செவிலியரோ அல்லது மருமகள் மூலமாகவோ செய்தி தெரிந்து அங்கே வந்திருந்தார். ஸ்கேன் செய்த பெண்மணியிடம் என்ன பிரச்னை எனக் கேட்க அவர் சர்ஜன் தான் சொல்லுவார் எனச் சொல்லிட்டார்.

பின்னர் பையரைக் கீழே போகச் சொல்லிட்டு நர்ஸ் ஒருத்தர் வந்து மறுபடி எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்து வந்தார். உட்காரச் சொன்னார்கள். சுமார் அரைமணிக்கும் மேலாக ஆகி விட்டது. இம்முறை கொஞ்சம் நன்றாகவே தூங்கி விட்டேன். மறுபடி எழுப்பும் சப்தம் கேட்டுப் பார்த்தால் என்னை வீட்டுக்குப் போகலாம்  என்று சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் விபரங்கள் கேட்டதற்கு வெளியே கையைக் காட்ட அங்கே பையர் நின்று கொண்டிருந்தார். பின்னர் வீல் சேரை வெளியே தள்ள அங்கிருந்து பையர் என்னைக் கீழே அழைத்துச் சென்றார். போகும்போதே அவர் என்னிடம் உள்ளே நரம்புகள் சுருட்டிக்கொண்டு இருப்பதைத் தவிர்த்து வேறே எதுவும் தெரியலை என்றும் வலி குறைய மாத்திரைகள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். பின்னர் எமர்ஜென்சிக்கு வெளியே வந்து ஃபார்மசியில் மருந்துகளை வாங்கிக் கொண்டுக் குட்டிக்குஞ்சுலுவும் அவங்க அம்மாவும் காத்திருந்த இடம்  வந்து அவங்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். வண்டியில்  ஏறும் வரை வீல் சேர்தான். சிரமப்பட்டுத் தான் வண்டியில் ஏற முடிந்தது. மணி நாலரை ஆகி இருந்தது. வீடு வந்து சேரும்போது ஐந்தரைக்குக் கிட்டத்தட்ட ஆகி விட்டது. வீட்டில் படிகள் ஏறணுமே! எனக்கு உள்ளே போக இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இரவு முழுதும் உட்கார்ந்திருந்ததால் கால்கள் வேலை செய்யவில்லை. நகர்த்தவே முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கால்களை நகர்த்தி ஒவ்வொரு அடியாக வைத்து வைத்து வீட்டுப் படிகளைக் கடந்து ஒருவழியாக உள்ளே போனப்போ மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் படுத்துவிட்டேன். 

Monday, October 27, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்!

 அது என்னமோ தெரியலை. மாமா இருந்தவரைக்கும் நான் அதிகமா மருத்துவப் பரிசோதனை எல்லாம் செய்துக்கலை. மருத்துவர் கொடுத்த வழக்கமான மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இப்போப்பையரும் பெண்ணும் மாமாவின் காரியங்கள் முடிந்ததும் கூட்டிச் சென்றார்கள் கத்தார் வருவதற்கு மருத்துவப் பரிசோதனை ரிப்போர்ட்டும் மருத்துவரின் மருந்துச் சீட்டும் இல்லாமல் போக முடியாது என்பதால் போனோம். அதிலிருந்து ஒரே பரிசோதனைகள் தான். நான் ஜூன் மாசம் வரைக்கும் ரத்தத்தில் சர்க்கரை பார்ப்பது தவிர்த்து எதுவும் செய்து கொண்டதில்லை. இப்போ எக்கச்சக்கப் பரிசோதனைகள்.  அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எக்ஸ்ரேக்கள் என. அதிலும் பிஎஸ் என் எல் போனப்போப் பையர் படிகளில் இறங்க முடியாத என்னைத் தூக்கி இறக்கி விடும்போது ஏதோ பிரச்னையாகி வயிற்றில் மார்புக்கூட்டுக்கு அருகே இருந்து மேல் வயிறு முழுவதும் எக்கச்சக்க வலி ஏற்பட்டுப் பல மருந்துகள் சாப்பிட்டும் தீராமல் இங்கே தோஹா வருவதற்கு நாலைந்து நாட்கள் முன்னர் (டிக்கெட் எல்லாம் வாங்கினப்புறமா) வலி மிக மிக அதிகமாகி உட்காரவோ, படுக்கவோ முடியாமல் போனதில் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு சர்ஜனிடம்அவர் சொன்னபடி எல்லாவிதமான ஸ்கேன்களும் எடுக்கப்பட்டு உள்ளே  மசில் ஸ்பாசம் ஆக இருக்குனு சொல்லி மாத்திரைகள் கொடுத்தார் ஐந்தே நாட்களுக்கு. கிளம்பும் முன்னர் சரியாகவும் போச்சு. இங்கே வந்து கொஞ்ச நாட்கள் இடப்பக்கம் படுக்க முடியாமல் இருந்தாலும் பின்னர் சரியாகி விட்டது. 

இ த்தனை நாட்கள் கழிச்சு இ ப்போத் திடீரென புதன்கிழமை அன்று மதியத்திலிருந்து அந்த வலி. முதல்நாள் கொஞ்சம் பொறுக்கும்படி இருந்தாலும் மேல்வயிற்றைத் தொட முடியலை. படுக்க முடியலை. அன்னிக்குப் பையர் அலுவலக வேலையாக ஆஃப் ஷோர் போயிருந்தார். ஆகவே வீட்டுக்கு வரலை. மறுநாள் தான் வந்தார். அன்னிக்குச் சாயங்காலம் மறுபடி திடீரென வலி வரவே கொஞ்சம் பயந்த நான் பையரிடம் சொல்லக் கிட்டத்தட்ட ஆறரை மணி அளவில் மருத்துவமனை சென்றோம். வழக்கமாகப் பார்க்கும் மருத்துவர் அந்த வாரம் முழுவதும் விடுமுறையில் இருந்ததால் இன்னொரு மலையாள மருத்துவரிடம் போனோம். அவர் பல விதங்களிலும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் சர்ஜனிடம் தான் போகணும்னு சொல்லிட்டார். சொல்லிட்டு அந்த மருத்துவமனையின் சர்ஜனைத் தொடர்பு கொண்டால் அவர் அன்னிக்கு வரலை. ஆகவே கத்தாரின் தோஹாவில் உள்ள அரசு மருத்துவமனை சர்ஜனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். உடனே அங்கே போய் எமர்ஜென்சியில் பார்க்கச் சொல்லி வற்புறுத்தி விட்டார். 

நாங்கள் போன ஆஸ்டெர் மருத்துவமனையிலிருந்து சுமார் அரை மணி நேரப் பயணத்தில் அரசு மருத்துவமனை இருந்தது. அங்கே போனோம். போகும்போதே ஏழரைக்கு மேல் ஆகி விட்டது. அங்கே போய் எமர்ஜென்சியைத் தேடிக்கொண்டு போனோம். இங்கே எல்லாம் பெண்களுக்குத் தனி/ ஆண்களுக்குத் தனி என்றிருப்பதோடு பெண்கள் பக்கம் ஆண்கள் வரக்கூடாது/வர முடியாது. ஆகவே மருமகளுக்குத் தொலைபேசி எப்போ வேண்டுமானாலும் அழைப்பேன் எனப் பையர் சொல்லி வைத்திருந்தார். மருத்துவமனையில் எமர்ஜென்சிக்குள் போகும் இடம் வரைப் பையர் வந்து விட்டார். அங்கே போய்ப் பெயரை ஐடிகார்டுடனும் ஹெல்த் கார்டுடனும் கொடுத்துப் பதிந்து கொண்ட பின்னர் (வழக்கம்போல் வீல் சேர்தான்) அந்தச் செவிலியர் ஒரு பரிசோதனை அறைக்கு முன்னர் என்னை உட்கார்த்தி வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். காரைப் பார்க் செய்யச் சென்ற பையர் முக்கிய நுழைவாயில் வழியாக வந்து நான் அமர்ந்திருக்கும் பெரிய கூடத்தின் வாயில் வரை வந்து அங்கிருந்த செக்யூரிடியிடம் என்னைக் காட்டி விபரங்கள் சொன்னார். அவர் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டார். ஆனால் பையரை உள்ளே விடவில்லை. 

காத்திருந்த இடத்தில் எனக்கு முன்னரே நாலைந்து பேர்கள் இருந்ததால் அங்கிருந்த செவிலியர் ஒவ்வொருவராய்க் கூப்பிட்டு உள்ளே அழைத்துச் சென்று பரிசோதனைகளை முடித்தார். கீழே ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றச் சின்னச் சின்னப்பரிசோதனைகள். அவை முடிந்ததும் என்னை அங்கிருந்த ஒரு உதவிப் பெண்மணி  மேலே எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இது வேறே வாயில் என்பதால் வெளியே நின்ற பையருக்கு நான் மேலே போயிருப்பதே தெரியாது. உள்ளே போனது தான் தெரியும். பின்னர் எப்படியோ விசாரித்துக் கொண்டு வர முயன்றால் எத்தனையோ ஆண்கள் தத்தம் மனைவியரோடு வந்திருக்கையில் பையரை மட்டும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆகவே அவர் கீழே சென்று விட்டார். நான் மத்தியானம் சாப்பிட்டது தான். கீழே இருக்கையிலேயே பையர் அங்கே இருந்த செக்யூரிடியிடம் கேட்டுவிட்டு அங்கிருந்த காஃபி ஷாப்பில் கேக் போன்றதொரு வஸ்துவை வாங்கிக் கொடுத்துவிட்டார். தாங்கணுமே, எத்தனை நேரம் ஆகுமோ என்பதால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டேன். தண்ணீர் குடிச்சால் நம்பர் ஒன் போக வேண்டி இருக்கும். துணை இல்லாமல் வீல் சேரிலோ, நடந்தோ போக முடியாது. ஆகவே தண்ணீரே குடிக்கவில்லை. மேல சில மணி நேரக் காத்திருப்பில் எப்போப் பரிசோதனைகள் ஆரம்பிக்கும் எனக் கேட்டதில் சரியாகப் பதில் கிடைக்கவில்லை.

நான் கையில் என்னுடைய அலைபேசியை எடுத்துச் செல்லாததால் மணி என்னனு தெரியலை. அங்கிருந்த ஓரிரு மலையாளச் செவிலியர்கள் பிடிவாதமாக மலையாளத்திலும்/ ஆங்கிலத்திலும்/ அரபியிலும் பேசினார்கள். மறந்து கூட இந்தியிலோ/தமிழிலோ பேசவில்லை. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் என்னைப் பார்க்க மருமகள் வந்து விட்டாள். அவளிடம் கேட்டதில் விபரங்கள் ஒன்றுமே தெரியாத காரணத்தால் அந்த அகாலத்தில் பையர் மருமகளைக் குழந்தையை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார் எனவும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கீழே பையரிடம் விட்டுவிட்டுத் தான் மட்டும் மேலே வந்திருப்பதையும் மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் பதினோரு மணிக்குப் பரிசோதனை ஆரம்பிக்கும் எனச் சொன்னதாகவும் தகவல்கள் கொடுத்தார். பின்னர் அவர் உதவியோடு நான் கழிவறை சென்று வந்தேன். பையரிடம் விபரம் தெரிவிக்க மருமகள் கீழே போய் விட்டார். சற்று நேரத்தில் எனக்குக் கையில் நரம்பு மூலம் மருந்து ஏற்றுவதற்கான ஊசியைச் சொருகி அதில் சில/பல மருந்துகளை ஏற்றி அடுத்தடுத்துச் செய்யப் போகும் பரிசோதனைகளுக்குத் தயார் செய்தனர்.


Wednesday, October 08, 2025

கூப்பாடு ஆன சாப்பாடு!

 செப்டெம்பர் பதினொண்ணுக்குப் பின்னர் பல முறை எழுத நினைச்சு எழுதலை. மனசு பதியலை. நடுவில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் தீர்ந்து போய் இங்குள்ள மருத்துவமனையின் மருத்துவரைப் பார்த்துச் சொல்லி மருந்து வாங்கி வரப் போகும்படி இருந்தது. என்னதான் இங்கே இருந்தாலும் மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டு நகரவே இல்லை. அங்கேயே இருக்கு. சில சமயம் காலை சாப்பிடும்போது ரங்க்ஸ் நினைவு வந்துடும். ஒவ்வொரு விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்து சொல்லிட்டுத் தான் செய்வேன். அல்லது அவரிடம் கேட்டுப்பேன். இப்போவும் சில சமயம் ஏதானும் விஷயம்னால் உடனே அவர் வந்ததும் சொல்லணும் எனத் தோன்றுகிறது. பின்னர் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு கடவுளே, அவர் எங்கே இருக்கார்னு நினைவில் வரும். எதையும் பகிர ஆளில்லையேனு மனசு கிடந்து தவிக்கும். வெங்கட்டின் அம்மா அவர் கணவர் இறந்து ஒரு வருஷத்துக்குள்ளாக அவரிடம் போயிடுவேன்னு சொன்னாங்களாம். அதே மாதிரிப் போயிட்டாங்க. ஒரு மாசம் ஆகி இருக்கும். எனக்கெல்லாம் அப்படிக் கிடைக்குமானு தெரியலை. கிடைச்சாலும் தெரியப் போறதில்லை. :(

சாப்பாடு பல மாதங்களாகவே வேண்டாவெறுப்பாகத் தான் சாப்பிட்டு வருகிறேன். அங்கேயானும் கிரைண்டர் இருப்பதால் இட்லி,  தோசைக்கு மாவு நானே அரைச்சுடுவேன். இங்கே மிக்சி தான். அதையும் ஸ்டபிலைசர் போட்டுட்டு அரைக்க வேண்டி இருக்கு. குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, ரைஸ் குக்கர் எல்லாமும் அம்பேரிக்காவின் மின் பயன்பாட்டுக்கு ஏற்றவகை என்பதால் இங்கே ஸ்டபிலைசர் போட்டுத் தான் அவற்றை இயக்கணும். அம்பேரிக்காவில் இதே மிக்சியில் நானே தனியாக அரைச்சிருக்கேன். ஆனால் இங்கே அரைக்க யோசனை. ஏதானும் பிரச்னையாயிடுத்துன்னா என்ன செய்யறது? ஏற்கெனவே இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணாகப் போய் கன்டென்சர்/கம்ப்ரெஸர்(?) எதுனு தெரியலை. மாத்தணும்னு சொல்லி அப்புறமா ஒண்ணுமே தெரியலை. ஆகவே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. சப்பாத்தி மாவு சப்பாத்தி பண்ணினால் நல்லாவே இல்லை. கடிக்கக் கொஞ்சம் இல்லை, ரொம்பவே கஷ்டம். ஏற்கெனவே பற்களில் பிரச்னை. ஆகவே சப்பாத்தி பண்ணினால் சாப்பிட அரை மணிக்கும் மேல் ஆயிடும். :( சாதம் போதும்னு சொன்னாலும் பிள்ளை, மருமகள் கேட்பதில்லை. இதிலே அசிடிட்டி தொந்திரவு ரொம்பவே அதிகம் ஆகி இரவுத் தூக்கம் இல்லாமல் போனதில் நேற்று மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.

ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள்! ஸ்ரீரங்கத்தில் கொடுத்திருக்கும் மருந்துகளில் அவருக்குத் திருப்தியே இல்லை. அதோடு ரத்த அழுத்தம் வேறே 103/54 என்றே காட்டியது. அவரோட பிபி மெஷினில் அவருக்கே சந்தேகம் வந்ததால் வேறே கொண்டு வரச் சொல்லி 2,3 முறை பார்த்தார். அதுக்கெல்லாம் பிபி அசரலை. விடாமல் 103/54 என்றே காட்டியது. உடனே பிபி மருந்தைப் பாதி மட்டும் எடுத்துக்கோ, 2,3 நாட்களுக்கு மாத்திரையே வேண்டாம்னு சொல்லிட்டு, அங்கே ரத்தச் சர்க்கரை பார்க்கவும் அதோடு கூட வயிற்றில் பாக்டீரியா இன்ஃபெக்ஷன் இருக்கானு பார்க்கவும் சேர்த்தே பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து ரிப்போர்ட் வந்ததும் மறுபடி வரச் சொன்னார். அதுவரை அங்கேயே உட்காரச் சொல்லிட்டார். பரிசோதனைக் கூடத்தில் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். ஆகவே என்னைக் கூப்பிடவே ஐந்தே முக்கால் ஆச்சு. அவங்க ரத்தம் எடுக்கும்போது வலியே தெரியலையேனு நினைச்சால் இன்னிக்கு அந்த இடத்தில் நீலமாக ரத்தம் கட்டி இருக்கு. செவிலியரும் தமிழ். மருத்துவர் மலையாளம் என்றாலும் நல்லாத் தமிழிலேயே பேசினார்.

மருத்துவருக்கு என்னோட அனிமிக் பிரச்னை,  விடமின் D குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை இதோடு காலில் ஆர்த்ரிடிஸ், வயிற்றில் லிவரில் பாதிப்பு, அசிடிட்டி எல்லாத்தையும் பார்த்ததும் ஒரே தலை சுற்றல். எப்படி இவங்க  அனிமியா, விடமின் D குறைபாட்டுக்கெல்லாம் மருந்தே சாப்பிடாமல் இருக்காங்கனு ஆச்சரியம் வேறே. நல்லவேளையா லிவருக்கு ஸ்ரீரங்கம் மருத்துவர் மாத்திரைகள் 3 மாசத்துக்குக் கொடுத்திருக்கார். அது ஒண்ணுதான் பரவாயில்லை. மத்தபடி அங்கே நல்லாவே கவனிக்கலைனு இவரோட கருத்து.  ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்ததும் அங்கே உள்ள கான்டீனில் உட்கார்த்தி வைத்துவிட்டுப் பையருக்கு ஏதோ கேட்கப் போனார். அங்கே இட்லி, போளி, வடை போன்றவை கிடைப்பதாகப் போட்டிருந்தாங்க. பையர் வேண்டுமானு கேட்டார். தண்ணி கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். பின்னர் எனக்கு வீல் சேர் எடுத்துவரும் உதவியாளர் பரிசோதனைச் சாலையில் போய் ரிசல்ட் வந்துடுத்தானு கேட்டுட்டு வந்தார். ரிசல்ட் மருத்துவருக்கே ஆன்லைனில் அனுப்பிடறாங்க. அவர் பார்த்துத் தக்க மருந்துகளைக் கொடுக்கிறார். நமக்கு ரிப்போர்ட் கைக்கு வருவதில்லை. வேணும்னால் ஆன்லைனில் பார்த்துக்கலாம். அதுவும் மருத்துவர் பார்த்துச் சரியெனச் சொன்னதும். எனக்கு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் இல்லைனு சொல்லிட்டார். மற்றபடி அசிடிடிக்கு மாத்திரை, சிரப் கொடுத்திருக்கார். 

சாப்பாடுதான் கூப்பாடாகி விட்டது. பருப்பு வகைகள், உ.கி. புளி முதலியன அறவே தவிர்க்கணும்னு சொல்லிட்டார். பையருக்கு அப்போவே கவலை. பின்னே எதைச் சாப்பிடுவதுனு. வீட்டுக்கு வந்ததும் நான் தக்காளியை சூப் மாதிரி வைச்சு மிளகு பொடி போட்டு அதை ரசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திக்கிறேன்னு சொன்னேன். அதோடு மோர்ச்சாறு போன்றவையும் அவ்வப்போது பண்ணிக்கிறேன்னு சொன்னேன். காய்கறிகள் கொஞ்சமா சாம்பார்ப் பொடி போட்டு வதக்கியோ வேக வைச்சோ சாப்பிட்டுக்கலாம். பையர் நாளையிலே இருந்து உன்னோட சாப்பாட்டை நீயே சமைச்சுக்கோ. உனக்குத் தான் எப்படினு புரியும்னு சொல்லிட்டார். ஆகவே இன்னிக்கு நானே சமைத்துக் கொண்டேன். ராத்திரிக்கு மருமகள் தோசைக்கு அரைச்சு வைச்சிருக்கா. அதான் சாப்பிடணும்.