எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 19, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 4

 ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

 வில் கோலம் க்கான பட முடிவு  சங்கு கோலம், க்கான பட முடிவு

வில் கோலம் அல்லது சங்குக் கோலம்,  வலம்புரிச் சங்கைக் குறிப்பிட்டிருப்பதால் சங்குக் கோலம் பொருத்தம்.

சங்கு கோலம், க்கான பட முடிவு   சங்கு கோலம், க்கான பட முடிவு


சக்கரக் கோலம் க்கான பட முடிவு

அல்லது சக்கரமும் சங்கும் சேர்ந்த கோலமும் பொருத்தம். மழைப் பிறப்பைக் குறித்து அந்தக் காலத்திலேயே கூறி இருக்கும் ஆண்டாள் இங்கே கண்ணனை அழைக்கிறாளா, மேகத்துக்கு அதிபதியான இந்திரனை அழைக்கிறாளா என்பது குறித்துக் கருத்து வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிலும் கண்ணனின் கரிய திருவுருவையே கண்ட ஆண்டாள் மழையைப் பொழிவிக்கும் கருமேகக் கூட்டங்களிலும் கண்ணனையே காண்கிறாள். ஆகவே கண்ணனின் கைச்சக்கரம் போலவும், அவன் ஊதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் போலவும் இடியையும் மின்னலையும் ஒப்பு நோக்குகிறாள்.  சக்கரம் மின்னுவதைப் போன்ற மின்னலும் பாஞ்சஜன்யத்தின் ஒலியைப் போன்ற இடி முழக்கமும் கேட்கும்படி மழையைப் பொழிவித்து இவ்வுலகின் நீராதாரத்தைப் பெருக்கி அனைவரையும் வாழ வைப்போம் என்கிறாள் ஆண்டாள்.


       vishnu god க்கான பட முடிவு   vishnu god க்கான பட முடிவு


ஆழி மழைக்கண்ணா= ஆழி இங்கே கடலையும் குறிக்கும், வருணனையும் குறிக்கும், பரமன் கைச்சக்கரத்தையும் குறிக்கும். ஆனால் இந்த முதல் ஆழி என்பது வருணனைக் குறிக்கிறது. நாட்டில் மழை சரிவரப் பருவம் தப்பாமல் பொழிந்தாலே நிலவளம் செழிக்கும். அதற்கு மழை பொழிய வேண்டுமெனில் எப்படி?? பள்ளியிலே படிச்சதை ஆண்டாள் சர்வ சாதாரணமாக அப்போவே சொல்லிட்டுப்போயிட்டாள். கடல் நீர்தான் ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து மழையாகப்பொழிகிறது என்பதைச் சின்ன வயசிலேயே படிச்சிருக்கோம் இல்லையா?? அதனால் முதல் ஆழியை வருணன் என எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்த ஆழியைக் கடல் என எடுத்துக்கணும்."ஆழி மழைக்கண்ணா!" வருணணைக் கூப்பிட்டு = இங்கே ஏன் கண்ணா என்கிறாள் என்றால் மழை பொழியும்போது வருணன் கண்ணனின் அருள் மழையை நினைவூட்டுவதாயும் கொள்ளலாம். கண்ணனின் கரியநிறத்தைப் போன்ற மேகங்கள் அவன் நிறத்தை நினைவூட்டுதலையும் கொள்ளலாம். ஆண்டாளே வேண்டுகிறாள் இதே பாடலில், "ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து" என.

ஒன்று நீ கை கரவேல்= ஏ, வருண பகவானே, உன் கருணையை நிறுத்திவிடாதே. என்கிறாள்.

அந்த ஆழி மழை எப்படிப் பொழிகிறது? ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி= கடலினுள் புகுந்து மேலெழும்பி ஆவியாக மாறி மேகங்களுக்குள் புகுந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாய் இடியோசையுடன் வேகமான பெருமழையாகப்பொழிந்து எங்கள் மேல் பொழிவாயாக.
வருணனை மழைபொழியுமாறு வேண்டும் ஆண்டாள் அதற்கு அவனை எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறாள். மழைமேகங்கள் கருத்து இருப்பவை கண்ணனின் நிறத்தைக் குறிக்கின்றன. கண்ணனின் சங்கு இடியோசை போல் எழுந்து தீமைகளை ஒழித்து அடியார்களுக்குக் கருணை என்னும் மழையைப் பொழிகிறது. அவன் கைச்சக்கரமோ தீயவற்றை வேரோடு அறுத்துத் தள்ளுகிறது. அந்தச் சங்கையும் சக்கரத்தையும் போல் வருணனின் இடியும், மின்னலும் இருக்கவேண்டுமாம். இடியோசையும், மின்னலும் அவன் கைச் சக்கரத்தையும், சங்கையும் குறிக்கும். இந்த மழைமேகங்களையும் அவை நீருண்டு கன்னங்கரேல் எனக் கருத்து இருப்பதையும் பார்க்கும் ஆண்டாளுக்குக்கண்ணன் உருவமும் அவன் கரிய திருமேனியும் நினைவில் வருகின்றன.

ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கருத்து= மஹா பிரளயத்துக்கும் முந்தையவனாய் ஆதி முதல்வனாய் இருக்கும் அந்த நாராயணனைப் போலவே அவனுடைய நிறம் போலவே நீயும் கருமை வண்ணத்தோடு வருவாய் என்பது இங்கே பொருள்,

பாழியம்தோளுடைய பற்பநாபன் கையில்= அழகான தோள்களை உடைய பத்மநாபன் என்று பொருள். பரமன் தன் நாபியிலிருந்து பிரம்மாவை சிருஷ்டிக்கிறான். அதுவும் பத்மம் என்னும் தாமரை மலரில் தோன்றச் செய்து அதில் பிறப்பிக்கிறான். அந்தப்பிள்ளையைத் தன் திருத்தோள்களால் ரக்ஷிக்கவும் செய்கிறான். அத்தகைய பற்பநாபன் கைகளில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து= ஆழி இங்கே சக்கரம் என்னும் பொருளில் வரும். நாராயணனின் கைச்சக்கரம் எப்படி மின்னுகிறது?? அத்தகைய சக்கரத்தைப் போல் ஏ, வருணனே, நீயும் உன் மின்னலை மின்னச் செய்வாயாக. அவனுடைய வலம்புரிச்சங்கின் நாதம் எவ்வாறு ,பூம்ம்ம்ம்ம்ம்ம்ம் என வருகிறதோ அதே போல் இடியை இடிக்கச் செய்வாயாக.


தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்= சார்ங்கம் இங்கே வில்லைக் குறிக்கும். சிவன் கையில் இருப்பது சாரங்கம். விஷ்ணுவிற்கோ சார்ங்கம். இரண்டுக்கும் ஒரு சின்னப் புள்ளியில் வேறுபாடு என்பதையும் கவனிக்கவும். இங்கே சார்ங்கம் என்பது வில். வில்லை ஏந்தியவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் வில்லானது அம்பை மழையாகப் பொழியும். பகைவரை அழிக்கும். ஸ்ரீராமனின் வில்லில் இருந்து வரும் சரமழைபோல் அப்படி மழையை நீயும் பொழியச் செய்வாய் வருணனே என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்தது பிரார்த்தனை, தனக்கு மட்டுமா?? அனைவரும் வாழப் பிரார்த்திக்கிறாள்.

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

நாங்களும் வாழ உலகினில் பெய்திடமாட்டாயா வருணனே.

இப்போது நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து எம்பிரானைக் கும்பிட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறோம். உன் கொடையை எண்ணி நாங்களும் மகிழ்வோம் என்கிறாள் ஆண்டாள். ஆண்டவனின் உதார குணத்தை இங்கே சுட்டுகிறாள் ஆண்டாள். பரமனைத் தஞ்சமடைந்தால் அவன் கருணை மழை நமக்குக் கிடைக்கும். குறைவில்லாது காத்து ரக்ஷிப்பான். குறைவில்லா அனுகிரஹம் செய்யக் கூடிய பெருமானை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கி இன்ப மழை வர்ஷிக்கும்.

இதற்கு பட்டத்திரி கூறுவது என்னவென்றால், சகல செளபாக்கியங்களையும் கொண்ட பகவானை நாம் வழிபட்டால் பக்தர்களுக்கு அவன் தன்னையே கொடுப்பான் என்பதுவே.

"காருண்யாத் காம மந்யம் தததி கலு பரே ஸ்வாத்மதஸ்த்த்வம் விஸேஷா
ஐஸ்வர்யாதீஸதேந்யே ஜகதி பரஜநே ஸ்வாத்மநோபீஸ்வரஸ்த்வம்
த்வய்யுச்சை ராரமந்தி ப்ரதிபத மதுரே சேதநா: ஸ்ப்பீத பாக்யா:
த்வம் சாத்மாராம ஏவேத்யதுல குணகணாதார ஸெளரே நமஸ்தே.

அனைத்துக் கல்யாண குணங்களையும் கொண்ட பரமனை வழிபட்டால் அவன் தன் பக்தர்களுக்குத் தன்னையே கொடுத்துவிடுகிறான். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நிலையற்ற செல்வங்களை மட்டும் அவன் கொடுப்பதில்லை. வெறும் ஐச்வரியங்களை மட்டும் அளிப்பதில்லை. ஐஸ்வரியங்களின் மூலம் பக்தர்கள் மனதையும் ஆள்வதில்லை. மேலான தன்னையே கொடுத்து பக்தர்களை ஆட்கொள்கிறான். பக்தர்களின் பாக்கியம் தான் என்ன?? அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆநந்தம் தான் என்ன?? ஆஹா இதைவிடவும் உயர்ந்ததொரு ஆநந்தம் தேவையா பக்தர்களுக்கு?? பகவானே ஆநந்த ஸ்வரூபி, அவனே ஆட்கொண்டுவிட்டால் அதைவிடவும் உயர்ந்ததொரு பாக்கியம் எது இருக்க முடியும். ஆனால் நாமோ நிலையற்ற செல்வத்துக்காகத் தான் ஆலாய்ப் பறக்கிறோம்.


எனக்கு இங்கே இப்போது காலை மணி ஏழே முக்கால். அதே இந்தியாவில் பத்தே கால் இருக்கலாம். காலை வேளையில் இப்போத் தான் என்னால் வர முடிஞ்சது. ஆனால் இந்தியாவில் மதியம் நெருங்குவதால் பதிவு தாமதமாய்த் தெரியும். நேற்றைய பதிவில் ஸ்ரீராமும் குறிப்பிட்டிருக்கிறார். இனி மாலையே ஷெட்யூல் செய்து இந்திய நேரத்துக்கு வைக்கணும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.

Thursday, December 18, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 3

 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

 வாமனன் க்கான பட முடிவு   மீன் கோலம் க்கான பட முடிவு

இன்றைய தினம் பசுக்களுக்கும், மற்ற கால்நடைச் செல்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக காமதேனுக் கோலம் போடலாம். அல்லது மீன் கோலம் போடலாம். 

வாமனன் க்கான பட முடிவு

வாமனனாக வந்து அவதரித்த மாயவன், திரிவிக்கிரமனாக மூவுலகையும் தன் பாதங்களால் அளந்தவன் பெயரைச் சொல்லிப் போற்றிப் பாடினோம் ஆனால், கீழ்க்கண்ட நன்மைகள் விளையும் என்கிறாள் ஆண்டாள். மாதம் மும்மாரி பொழிவதோடு காலத்தே பெய்யும் மழையால் செந்நெல் செழித்து வளர்வதோடு மீன்களும் நீர் நிறைந்த வயலுக்குள்ளே புகுந்துவிளையாடும். பசுக்கள் பாலைப் பொழியும்.  பொறிவண்டு எனப்படும் புள்ளி போட்ட வண்டுகள் குவளை மலர்களில் வந்து தேனை உண்டு மயங்கிக் கிடக்கும். இப்படி அனைவருக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் நாமம் நாராயணா என்னும் நாமம்.  முதல் பாடலில் கிருஷ்ணாவதாரத்தைக் குறித்துச் சொன்ன ஆண்டாள் இங்கே உத்தமன் என்னும் பெயரால் வாமன அவதாரத்தையும், திரிவிக்கிரம அவதாரத்தையும் குறிப்பிடுகிறாள். அத்தகைய உத்தமனின் பாதம் பட மஹாபலி எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்!

அருமையான பாடல். வைணவர்களின் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் வாழ்த்திப்பாடும்போது இந்தப்பாடல் தவறாமல் பாடப்படும். அத்தகையதொரு உலகளாவிய நன்மைக்கான வேண்டுதல் இந்தப் பாடலிலே அடங்கி இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே ஆண்டாள் பரமனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைக்கிறாள். மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் அறிவோம். ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒவ்வொருத்தரை மஹாவிஷ்ணு அழித்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் அந்த அரக்கர்களைக் கொல்லவென்றே அவதாரம் செய்திருக்கிறார். ஆனால் வாமன அவதாரம் அப்படி அல்ல. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், அப்படித்தான். மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம அவதாரங்களில் அதுவும் அந்த நரசிம்ம அவதாரத்தில் எதிர் எதிர் சிந்தனைகளான + - ஒன்று சேரவும் ஈசன் தோன்றி நரசிம்மனை அழித்தான். கடுமையான கோபம் கொண்ட அவதாரம், மஹாலக்ஷ்மியே பக்கத்தில் போக அஞ்சினாளாம்.

வாமனன் க்கான பட முடிவு

அதுக்கடுத்து இந்த வாமன அவதாரம். சின்னஞ்சிறு பிரமசரியப் பிள்ளை. பிரமசரிய விரதம் இருக்கிறது. பிரமசாரி ய விரதத்தில் பிக்ஷை எடுத்துத் தான் சாப்பிடணும். இந்தப் பிள்ளையும் வந்து பிக்ஷை கேட்கிறது. மஹாபலிச் சக்கரவர்த்தி யாகங்கள் செய்து இந்திர பதவியை அடையப் போகிறான். இதுவோ கடைசி யாகம், இதை முடித்தால் இந்திரனை விடவும் உயர்ந்த பதவியை அடையலாம். ஆனால் அவனுக்கோ மோக்ஷம் காத்திருக்கிறது. சிரஞ்சீவி பதவி காத்திருக்கிறது. ஆகவே யாகத்துக்கான முன்னேற்பாடுகளாய் தானங்கள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டான் மஹாபலி. எல்லாம் முடிஞ்சாச்சுனு நிச்சயமாத் தெரிஞ்சுண்டு சாவகாசமா நம்ம ஆள் போறார் நமட்டுச் சிரிப்போடு. சின்னத் தாழங்குடையைப்பிடிச்சுண்டு, காலிலே கட்டைச் செருப்போடு வரும் சின்னப் பிள்ளையைப் பார்த்த பலிக்கு சந்தோஷம், ஆகா, இந்தப் பிள்ளையின் தேஜஸ் என்ன?? யாரோட பிள்ளை இவன்??

அதுக்குள்ளே சுக்ராசாரியாருக்கு மூக்கிலே வேர்க்க அவரோ பலியிடம் எச்சரிக்கிறார். அப்பா, உன் யாகத்தைக் கெடுக்க வந்த பிள்ளை இவன். காசியபரின் புத்திரன் என்ற பெயரில் வந்திருக்கும் இவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே. நீ பாட்டுக்கு அவசரப் பட்டு வாக்குக் கொடுத்துவிடாதேனு சொல்றார். ஆனால் மஹாபலியோ , "குருவே, மஹாவிஷ்ணுவே வந்து கேட்கும்போது கேட்பதைக் கொடுப்பது என் அரச தர்மம். அரச தர்மத்தை நான் மீற மாட்டேன்." என்று சொல்லிவிடுகிறான். வந்துட்டார் வாமனனும். யாசகமும் கேட்டாச்சு.
"குழந்தாய், என்னப்பா வேண்டும்?"

அரசே, என் காலடியால் மூன்றடி மண் கொடுத்தால் போதும்!" குழந்தை தானே? தன் சின்னஞ்சிறு காலைக் காட்டுகிறது. அது பென்னம்பெரிய காலாகப் போறதுனு பலி கண்டானா? ஆனால் சுக்ராசாரியார் கண்டுவிட்டார். குறுக்கே போக, பலியோ வாக்குக் கொடுக்கிறான். பூமி தானம் சும்மா சரினு சம்மதிக்கிறதோடு போயிடாது. சாஸ்திரோக்தமா தாரையும் வார்க்கிறான் பலி. அப்போவும் சுக்ராசாரியார் வண்டாய் மாறி நீர் விடும் கெண்டியின் கண்ணை அடைத்துக்கொள்ள, ஒரு தர்ப்பைக்குச்சியால் அவர்கண்ணையே குத்துகிறான் வாமனச் சிறுவன். பின்னர் தாரையும் வார்த்து, சின்னஞ்சிறு கால் பென்னம்பெரிய காலாக ஆகிறது. ஒரு கால் மேலே, மேலே, மேலே போக, அங்கே தேவாதிதேவர்கள் அந்தக் கால் விஷ்ணுவின் கால்னு தெரிஞ்சு பாதபூஜை செய்ய அந்த நீர்தான் , அழகர் மலையில்,"நூபுரகங்கை"னு வந்துட்டு இருக்கு. எங்கே இருந்து எங்கேயோ போயிட்டேன்?? அட?? திருப்பாவை எங்கே போச்ச்ச்ச்???????

ம்ம் பிடிச்சாச்ச். இங்கே பலியை வாமனன் சம்ஹாரம் செய்யவில்லை. அவனைப் பாதாளத்துக்கு அதிபதியாக்கிச் சிரஞ்சீவியாக வாழ வழி செய்கிறான். அதனால் இங்கே வாமனனை ஓங்கி உலகளந்த உத்தமன்னு ஆண்டாள் சொல்கிறாள். அதோட பகவான் மூன்றடி எடுத்து வைத்ததில் சகலவிதமான ஜீவராசிகளுக்கும் அவரது ஸ்பரிசம் கிடைத்திருக்கிறது. எப்படி பிட்டுக்கு அடிவாங்கிய பரமனின் அடி ஒவ்வொரு ஜீவராசிக்கும் பட்டதோ அப்படியே. அப்பாடி ஒருவழியா விட்ட இடத்தைப் பிடிச்சாச்ச்..
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்= நதிக்கரையில் பாவை நோன்புக்கு என அம்மனைப் பிடித்து வைத்து வழிபடுவார்கள். அந்த அப் பாவைக்கு மலர்கள் சாற்றி வழிபடுவதற்காக நீராடிவிட்டு வரவேண்டும். அதற்காக நாம் நீராடச் செல்வோம் தோழியரே. இந்த அருமையான பாவை நோன்பை நாம் நூற்பதால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து= நாட்டிலே தீமை என்பதே இராமல் அனைத்தும் ஒழிந்து போய் ஒவ்வொரு மாதமும் மூன்று முறை முறையே மழை பெய்து நீர் வளம், சிறந்து, அதன் மூலம் நில வளமும் செழிக்கும்.

ஓங்கு  பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள்= செந்நெல் செழுத்து ஓங்கி வளரும், வயலில் பாய்ச்சி இருக்கும் நீரில் குளத்து நீரோ என மயக்கம் கொண்ட மீன்கள் பாய்ந்தோடி மகிழ்ந்து விளையாடும்.

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப= குவளைப் பூக்களின் மகரந்தத்தில் {போது=மகரந்தம்) வண்ண விசித்திரமான வண்டுகள் தேன் குடிக்க வந்து கண்கள் செருகி
மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி =தயங்காமல் வந்து செழிப்பான கறவைப்பசுக்களின் பெருத்த மடியில் இருந்து இரு கைகளாலும் பாலைக் கறக்கக் கறக்க அவையும் வஞ்சனை என்பதே இல்லாமல் வள்ளலைப் போல் குடங்களை நிறைத்துக்கொண்டே இருக்குமாம். ஆகவே என்றும் வற்றாத நிறைந்த செல்வத்தைத் தரும் இந்த விரதத்தை நாம் அனைவரும் கடைப்பிடிக்கலாம் வாருங்கள் பெண்களே.

இதை பட்டத்திரி, கூறுவதை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இங்கே ஆண்டாள் கூறி இருப்பது நாடு செழித்து இருப்பது குறித்து. பட்டத்திரியோ, நிலையற்ற செல்வத்தை நாடுவதை விட, பகவான் திருநாமத்தைப் போற்றுவதே நிலையான செல்வம் என்று கூறுகிறார்.

"நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி புரஸ்தை ரநப்யர்த்திதாந்
அப்யர்த்தாந் காமாநஜஸ்ரம் விதரதி பர்மாநந்த ஸாந்த்ராம் கதிஞ்ச
இத்தம் நிஸ் ஸேஷலப்ப்யோ நிரவதிக பல; பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்ரம் தம் சக்ரவாடீ த்ருமம் அபிலஷதி வ்யர்த்த மர்த்தி வ்ரஜோயம்

மக்கள் தங்கள் மனோ ரதங்கள் ஈடேற அதுவேணும் இது வேணும்னு கேட்கிறார்கள்; அதோடு சொர்க்கத்தில் இருக்கும் கற்பக விருக்ஷம் மாதிரி இருந்தால் நல்லதுனு நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஹரி, நீரோ அந்த கற்பக விருக்ஷத்தை விடவும் உயர்ந்தவர் அன்றோ. உம்மை வணங்கியவர்களுக்கு அள்ளி அள்ளிக் கருணை என்னும் செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அன்றோ நீர். வேண்டியதற்கு மேல் பரம ஆநந்தத்தையும், முக்தியையும் கொடுக்கும் வள்லல் நீர். மேலும் உம்மை அனைவரும் எளிதில் அடைய முடியும். எல்லையற்ற பலன்களை அள்ளித்தருபவர் நீர். இங்கே செல்வமாக அவர் குறிப்பிடுவது பகவானையே. மேலும் பகவான் என்ற சொல்லுக்கு உள்ள விசேஷ குணங்களாக, ஐச்வர்யம், தேஜஸ், கீர்த்தி, லக்ஷ்மீகரம், ஞாநம், வைராக்யம் ஆகிய ஆறுகுணங்களும் நிரம்பியவர்கள் எனப்பொருள்.

காசியாத்திரை நிகழ்ச்சியில். மாப்பிள்ளைக்கு கையில் கைத்தடி கொடுப்பது ஏன்?

 கலயாணத்தன்று காலை மாப்பிள்ளைப்   பையரின் அலங்க்காரம் தான் முக்கியம் இப்போ. அதைப் பார்ப்போம். மாப்பிள்ளையின் இந்த அலங்காரத்திற்குப் பரதேசிக் கோலம் என்று சொல்வார்கள்.  ஆனால் உண்மையில் இத்தனை நாட்கள் படிப்பு, படிப்பு என இருந்த மாணவன் இப்போது தான் திருமணத்திற்குத் தகுதி பெற்றவனாகியதால் ஆடை, அலங்காரங்கள் செய்து கொள்கிறான்.  ஆனால் இந்தக் காசி யாத்திரை குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன.  ஒரு சிலர் இது தான் திருமண பந்தத்திலே இருந்து தப்பிக்கப் பிள்ளைக்குக் கிடைத்தக் கடைசிச் சந்தர்ப்பம் எனவும், வேறு சிலர் மாணவன் காசிக்குப் படிக்கச் செல்கையில் பெண் வீட்டார் வழி மறித்து எங்க பெண்ணைத் திருமணம் செய்து தருகிறேன் என்று சொல்வதால் பிள்ளை திரும்பி விடுகிறான் எனவும் சொல்கின்றனர்.  இன்னும் சிலர் பையர் நேரடியாக வானப்ரஸ்தம் மேற்கொள்ளக் கிளம்புவதாகவும் அதைத் தடுத்துப்பெண்ணின் தந்தை தன் பெண்ணைக் கொடுப்பதாகவும் சொல்கின்றனர்.  அதற்காகவே வெயிலில் இருந்து பாதுகாக்கச் செருப்பு, துஷ்ட மிருகங்களை அடக்கத் தடி, மழை, வெயிலில் பாதுகாப்புக்குக் குடை,, அவன் அறிவு பெறப் , புத்தகங்கள் எல்லாம் கொடுப்பதாகச் சொல்கின்றனர்.  ஆனால் காசி யாத்திரை எனப்படும் பரதேசிக் கோலத்தின் அர்த்தம் இது எதுவுமே இல்லை என்பதே உண்மை. அதோட இல்லாமல் இதைத் தவிர்க்க வேண்டியவற்றின் பட்டியலிலும் கூறி இருக்கிறார்கள். :)))) உண்மையான பொருள் புரியாததால் பல அனர்த்தங்கள். முதல்நாள் லக்னப் பத்திரிகை வாசிப்பதால் மறுநாள் இந்தச் சடங்கு தேவையற்றது என்பது ஒரு கருத்து.  பெண்ணை நிச்சயம் செய்வது பெரியோர்கள் தான்.  இப்போத் தான் நிச்சயத்தில் பெண்ணும், பிள்ளையும் கலந்து கொள்கின்றனர்.  பொதுவாகப் பெரியோர்களே நிச்சயம் செய்கின்றனர்.  அதன் பின்னரே மணமகனுக்கு முறைப்படி தெரிவிக்கப்படுவதாய் ஐதீகம். அதனாலேயே இந்தக் காசி யாத்திரையை எல்லா சமூகத்தினரும் விடாமல் கடைப்பிடிக்கிறாங்களோனு நினைக்கிறேன். :)))))


முன்பெல்லாம் மாணவன் குருகுலத்தில் படித்து வந்தான். ஸமாவர்த்தனம் என்னும் கான்வகேஷன் நடந்த பின்னரே காசிக்கும் யாத்திரை சென்று வருவான். காசியாத்திரை போய் வரும் கட்டத்தில் மாணாக்கனை "ஸ்நாதகன்" எனச் சொல்கின்றனர்.  படிக்கும் காலத்தில் மாணவன் குருவுக்கு அடங்கியவனாக பிக்ஷை எடுத்து உணவு உண்ணும் வழக்கத்தோடு இருந்து வந்தான்.  வயிறு நிறையச் சாப்பிடலாம்.  ஆனால் அவற்றில் புலனை ஈர்க்கும் விஷயங்கள் இருத்தல் கூடாது.  ஒற்றை வேஷ்டி தான் கட்டிக் கொள்ள வேண்டும்.  வெற்றிலை, பாக்கு,போன்றவையோ சந்தனம் போன்ற வாசனாதித் திரவியங்களோ, பயன்படுத்துதல் கூடாது.  இப்போதும் நியம நிஷ்டையோடு இருக்கும் பிரமசாரிகள் வெற்றிலை, பாக்குப் போட மாட்டார்கள்.  உணவின் ருசியைக் குறித்துக் குறை சொல்ல மாட்டார்கள். ஏனெனில் சுகத்தில் மனம் போக ஆரம்பித்தால் கல்வியில் குறைபாடு ஏற்படும்.  பனிரண்டு வருஷங்கள் இப்படி இருந்து குருகுல வாசத்தை முடித்த மாணவனை கிரஹஸ்தாசிரமம் ஏற்க வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம் சொல்லும் ஆலோசனை.  ஆகவே அவன் இல்லறம் ஏற்க வசதியாக இப்போது ஆடை, மாலை, சந்தனம், குங்குமம், குடை, தடி, விசிறி, செருப்பு போன்றவை பயன்படுத்துவதோடு வாசனாதி திரவியங்களும் பயன்படுத்துவான்.  அவன் படித்தவன் என்பதை உலகோருக்குக் காட்டும் வண்ணம் கையில் ஒரு புத்தகம், (முன் காலங்களில் சுவடிகள்) இருக்கும்.  பார்க்கப் போகும் பெண்ணின் கண்களுக்கு அழகனாகத் திகழ வேண்டாமா?  ஆகவே அவன் தன்னைத் தானே அழகு படுத்திக்கொள்வதோடு உறவினரும் உதவுகின்றனர்.  ஆசாரியரும் இனி அவனுக்கு ஒற்றை வேஷ்டி தேவையில்லை எனப் பஞ்சகச்சம் பரிந்துரைக்கிறார்.

இல்லறம் விரும்பும் மாணவன் தானாகப் பெண்ணைக் கேட்டுப் பெற முடியாது என்பதால் தக்கவர்களை அணுகி அவர்கள் மூலம் பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறான்.  அப்போது தான் பெண்ணின் தகப்பனார் அவன் குலம், கோத்திரம் மட்டுமல்லாது படிப்புப் போன்ற தகுதிகளையும் அவன் விருப்பத்தையும் நன்கு அறிந்து கொண்டு தான் தன் பெண்ணை அந்தப் பிள்ளைக்கே தருவதாக ஒத்துக் கொள்கிறார்.  ஆனானப்பட்ட பரமசிவனுக்கே சப்தரிஷிகள் அனைவருமாகச் சென்று ஹிமவானிடம் பெண் கேட்க வேண்டி இருந்ததே! பெண்ணைக் கொடுப்பதன் மூலம் அத்தனை நாட்கள் பெண்ணிடம் தனக்கிருந்த உரிமையை  அகற்றி மணமகனிடம் ஒப்படைக்கிறார் பெண்ணின் தந்தை.  இதுவே பரதேசிக் கோலம் என்று இன்றைய நாட்களில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டிருக்கிறது.  உண்மையில் பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கும் ஒரு நிகழ்வே காசியாத்திரை அல்லது பரதேசிக்கோலம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.  இத்தோடு ஸமாவர்த்தனம் நிறைவு அடைகிறது.  அடுத்து டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணச் சேதிதான். 

காசியாத்திரை எனப்படும் பரதேசிக் கோலம் குறித்த விளக்கங்களுக்கு நன்றி காமகோடி தளம். 


எங்கள் ப்ளாக் வலைத்தளத்தில் புதன் கிழமைக்கான கேள்வியில் தலைப்பில் உள்ள கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலை நான் ஏற்கெனவே தென்னிந்தியத் திருமணங்களில் அந்தணர் திருமணம் குறித்த பதிவுகளில் எழுதி இருந்தேன். அதில்லிருந்து கேள்விக்கான பதிலை மட்டும் எடுத்துத் தொகுத்துக் கொடுத்திருக்கேன். விரும்பியவர் படிக்கலாம்.  பதிவை நேற்றே படிச்சாலும் உடனே இதைப் போட முடியவில்லை. அதனால் தான் தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை என இன்று பகிருந்திருக்கேன். மார்கழித் திங்கள் பதிவு வழக்கம்போல் மதியம் பகிர்ந்து கொள்வேன்.

Wednesday, December 17, 2025

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்! 2

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்! 2

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்கு (ச்)
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

 மலர்க்கோலம் க்கான பட முடிவு


இறைவனை அர்ச்சிக்கப் பூக்கள் தேவை.  ஆகவே இன்று பூஜைக்கு உகந்த மலர்க்கோலம் போடலாம்.

நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்னும் விதிமுறைகளை இங்கே ஆண்டாள் சொல்கிறாள்.  எந்நேரமும் ஈஸ்வர தியானமாக அந்தப் பாற்கடலுக்குள் யோகநித்திரை செய்து கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடிகளை அடையவேண்டுமெனில் தினந்தோறும் நீராடித் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது.  மையிட்டுக் கொள்ளாமல் பூக்களைச் சூடாமல், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல், தீய சொற்களைச் சொல்லாமல், தீய செயல்களைச் செய்யாமல் ஞானியர்க்கும், மற்றும் இல்லாதவர்க்கும் அவரவருக்கு வேண்டியவற்றை தானம் செய்தும் இவ்வுலகம் உய்யுமாறு மட்டுமின்றி நம்மால் மற்றவரும் மனம் உகந்து மகிழ்ச்சியுடன் இருக்குமாறும் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணன் பிறப்பு க்கான பட முடிவு

வையத்து வாழ்வீர்காள் என்று விளிக்கும் ஆண்டாள் இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதாகக் கூறுகிறாள். இங்கே இவ்விதம் கூறுவதன் காரணம் பரமனோ பூமியில் வந்து ராமனாக அவதரித்து மனித வாழ்க்கையில் உள்ள எல்லாக் கஷ்டங்களையும் அநுபவித்திருக்கிறான். அதே போல் கண்ணனாக வந்து ஒரு சின்னஞ்சிறு குழந்தை எப்படி எல்லாம் பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் ஆநந்தத்தைத் தருமோ அப்படிக் கொடுத்திருக்கிறான்.அதோடு மட்டுமா?? கோபிகைகளின் தாபத்தைத் தீர்க்கிறான். ஒவ்வொரு கோபியும் கண்ணனைத் தங்களுடனேயே இருக்கிறவனாய்க் காண்கின்றார்கள். ஒருத்தியிடம் விளையாடினால், இன்னொருத்தியிடம் கோவிக்கிறான். மற்றொருத்திக்கு மாடுகறக்க உதவினால், வேறொருத்தியின் மாடுகளை மேய்க்கிறான். ராதையுடனோ கேட்கவே வேண்டாம். புல்லாங்குழலை ஊதிக்கொண்டு ஆடிப் பாடிக் களிக்கிறான்.அவனுடைய ராஸக்ரீடையின் முதல் ரஸிகேஸ்வரியாக ராதையும் இருக்கிறாள். இப்படி அந்தப் பரந்தாமனே வைகுந்தம் வேண்டாம், பூமிக்கு வந்தால் அங்கே என் அடியார்களோடு ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் சொன்னவண்ணம் கேட்டுக்கொண்டு இருக்கிறதே சுகம் என்று ஓடோடி வந்துவிடுகிறான் அல்லவா?அதனாலேயோ என்னமோ ஆண்டாள், வையத்து வாழ்வீர்காள் என்று கூப்பிடுகிறாள்.

ராசக்ரீடை க்கான பட முடிவு

மேலே அவள் கூறுவது எல்லாம் விரத நியமங்கள். விரதம் இருப்பது என்பது வெறும் வயிற்றுக்கு உண்ணாமல் பட்டினி இருப்பது மட்டுமல்ல. உடல் மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டாள் சொல்லும் விரத நியமங்களைப் பாருங்கள்:

பாற்கடலில் பையத் துயிலுகிறானாம் பரமன்.

பாற்கடல் க்கான பட முடிவு

பாற்கடலில் அவன் என்ன தூக்கம் தூங்குகிறான்?? அது யோக நித்திரை அல்லவா?? கீழே ஆதிசேஷன் எதுக்கு? குண்டலினி எப்படி உறங்குகிறதோ அதைச் சுட்டத் தானே. ஐந்து இந்திரியங்களையும் ஐந்து முகங்களாய்க் கொண்ட ஆதிசேஷன் மேல் ஆண்டவன் யோகநித்திரை கொண்டிருக்கிறான். ஆக நம் மனம், வாக்கு, காயம் அனைத்துக்கும் அதிபதியான அவன் பைய=மெல்லத் தான் துயிலுகிறானாம். அடியாருக்கெல்லாம் ஓடோடி வந்து அருள் செய்யும் பரமன் மெல்லத் தானே தூங்க முடியும்??

அவனுடைய திருவடித் தாமரைகளை நினைந்து பாடுவோம் என்னும் ஆண்டாள், நோன்பு நூற்கும் நியமங்களாய் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், என்றும் நெய்க்கும், பாலுக்கும் தடை விதிக்கிறாள். ஆஹா, இது என்ன??? கண்ணனுக்குப் ப்ரீதி நெய்யும், பாலும் தானே? ஆமாம், கோகுலத்திலும் நெய்யும், பாலும் தானே ஓடும்??ஆம், ஆனால் அதை நாம் தான் உண்ணக் கூடாது. கண்ணனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். தூய்மையான உள்ளத்தோடு நெய்யும், பாலும் சேர்க்காமல் நம்மிடம் இருப்பதை அந்தக் கண்ணனுக்கே எனக் கொடுத்துவிடுவோம். இங்கே பாற்கடலில் இருக்கும் பரமனைப் பார்த்த கண்களுக்கு அதன் பின்னரும் உணவில் நாட்டம் இருக்குமா என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவை பாடல் க்கான பட முடிவு

பெண்களாகிய நாம் ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்வதில் நாட்டம் உடையவர்கள். ஆனால் இப்போது கண்ணனுக்காக அதையும் நாம் தியாகம் செய்யவேண்டும். காலை சீக்கிரமே எழுந்து குளித்து, கண் மை இட்டு கண்களில் எழுதாமல், மலர்களால் நம்மை அலங்கரித்துக்கொள்ளாமல், நெய், பால் சேர்க்காமல் உணவு அருந்தி அந்தப்பரமனின் திருவடி தரிசனத்தை நினைத்து அவன் புகழ் பாடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் நாட்களில் நாம் செய்யாதன எதுவும் செய்யோம். அதாவது நற்செயல்களையே செய்யவேண்டும், நல் எண்ணங்களையே சிந்திக்கவேண்டும். நல் வார்த்தைகளையே கூறவேண்டும். தீங்கு நினையாமல் இருக்கவேண்டும். நல் சொற்களைப் பேசவேண்டும், தீய சொற்களைப் பேசக் கூடாது. இதைத் தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். உடல் மட்டும் சுத்தமாய் இருப்பது விரதம் இல்லை, உடலோடு மனமும் சேர்ந்து சுத்தமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆண்டவனிடம் நம்மையே நாம் அர்ப்பணித்தால் அவன் நமக்கு மோக்ஷத்தைக் கொடுப்பான்.

ஆண்டாள் திருப்பாவை பாடல் க்கான பட முடிவு

அது மட்டும் போதாது. ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்று மேலும் சொல்கிறாள். ஐயம் என்பது ரிஷிகள், துறவிகள் , பிரமசரிய விரதம் இருக்கும் பிரமசாரிகள் போன்றோருக்குப் போடும் பிக்ஷை என்று கூறலாம். ஐயம் இங்கே சந்தேகம் என்ற பொருளில் வரவில்லை. "ஐயமிட்டு உண்" என்பதும் உயர்ந்ததொரு கருத்தைத் தான் கூறுகிறது. துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், பிரமசாரிகள் போன்றோருக்கு நாம் தினமும் பிக்ஷை அளிக்கவேண்டும். அவர்களைத் தேடிப் போயாவது அளித்தல் நம் கடமை என்பார்கள். பிரமசாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ணவேண்டும் என்பது ஒரு காலகட்டத்தில் கட்டாயமாய் இருந்தது. ஒரு முறை பிக்ஷை கேட்ட வீட்டில் மறுமுறை போயும் கேட்கக் கூடாது. அதே போல் ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டே நிற்கக் கூடாது என அதற்கும் பல நியமங்கள் உண்டு. அத்தகையதொரு உயர்ந்த தருமத்தை நாம் தேடிப் போய்ச் செய்யவேண்டும் என்கிறாள் ஆண்டாள். பொதுவாய் பிக்ஷையையே கேவலமாய் எண்ணும் இந்தக் காலத்தில் இதென்ன ஐயமும், பிச்சையும்னு இரண்டு தரமும் ஒண்ணையே சொல்லி இருக்காளேனு தோணும்.

மேற்கண்டவர்கள் மட்டுமின்றி ஏழைகள் இருப்பார்களே அவங்களுக்கு உணவு அளிப்பதைத் தான் இரண்டாம் முறை சொல்லி இருக்கும் பிச்சை என்ற வார்த்தை குறிக்கும். ஏழைகள், முதியவர்கள் என்று சாப்பிட உணவில்லாமல் பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள். இவை எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாம் உய்யுமாறு கண்ணன் அருள் நமக்குக் கிடைக்கும். நாம் அனைவரும் உவப்புடன் இருப்போம் பெண்களே.



இங்கும் அதே பக்தி தான். ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது. நாராயண பட்டத்திரி கண்ணனை வேண்டுகிறார் இவ்விதம்:

"பவத்பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்
கிமப்யாரூடா சேத் அகில பரிதாப ப்ரசமநீ
புநஸ்சாந்தே ஸ்வாந்தே விமல பரிபோதோதய மிலந்
மஹாநந்தாத்வைதம் திஸதி கிமத; ப்ரார்த்யம் அபரம்"

பரமனின் செலுத்தும் பக்தியானது அவனுடைய கருணையால் அடியார்களுக்கு என ஓடோடி வந்து அருளும் தயாள குணத்தால் இனிமையாக இருப்பதாயும், அனைவரின் மனத் தாபங்களையும் அடியோடு அகற்றும் சக்தி படைத்தும், உள்ளத்தில் ஞாநத்தை உண்டாக்குவதாயும், கடைசியின் அவனோடு ஒன்றாய்க் கலக்கும் பேரானந்தத்தைத் தருவதாயும் இருக்கிறதாம். அதோடு மட்டுமா?? அவன் இருக்குமிடம் வைகுந்தம் என்றாலும் இங்கே பட்டத்திரியோ க்ஷேத்திராடனம் செய்யவேண்டும் என்றும் ஆசை கொள்கிறார். வாத நோயால் பீடிக்கப் பட்டவருக்கு க்ஷேத்திராடனம் செய்யவேண்டுமாம்.

நாராயணீயம் க்கான பட முடிவு

""விதூய க்லேஸாந் மே குரு சரணயுக்மம் த்ருத ரஸம்
பவத்க்ஷேத்ர ப்ராப்தெள கரமபி ச தே பூஜந விதெள
பவந்மூர்த்யாலோகே நயநம் அத தே பாததுலஸீ
பரிக்ராணே க்க்ராணம் ஸ்ரவணமபி தே சாருசரிதே"

பக்திக் கடலில் மூழ்கித் திளைக்கும் பட்டத்திரி தன் கால்கள் பகவானின் திவ்ய க்ஷேத்திரங்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லவேண்டாம் எனவும், கைகள் பகவானின் வழிபாட்டையே செய்யவேண்டும் எனவும், நாசிகள் பகவானுக்கு அர்ப்பணம் துளசியைத் தவிர மற்றப் பொருட்களின் மணத்தை நுகரவேண்டாம் எனவும், கண்கள் எப்போதும் அந்த திவ்ய மங்கள சொரூபத்தையே காணவேண்டும் எனவும், காதுகள் பகவானின் சரித்திரத்தை அல்லாது மற்றவற்றைக் கேட்கவேண்டாம் என்றும் விதியைச் செய்யுமாறு பகவானை வேண்டிக் கொள்கிறார். ஆண்டாளோ நாமே கட்டுப்பாடாக இருக்கவேண்டும் என்று கூற, பட்டத்திரியோ, பகவான் கிட்டேயே போய் என் மனம், நா, கண், காது, மூக்கு, கைகள், கால்கள் என அனைத்தையும் வேறொரு விஷயத்தை நினையாமல், காணாமல், பேசாமல், கேட்காமல், நுகராமல், நடக்காமல், செய்யாமல் இருக்கும்படி நீயே அருள் புரிந்துவிடு என் அப்பனே எனக் கேட்டுவிடுகிறார். இது கொஞ்சம் யதார்த்தமாய்த் தெரியுது எனக்கு. பட்டத்திரி என்னை மாதிரி ஆளோ??

மார்கழி 2 ஆம் நாளுக்கான பதிவு இது. படங்கள் முன்னர் போட்டவை அல்ல. புதியன! மற்றபடி எழுதி இருப்பது முன்னால் எழுதியவை தான்! தொடர்ந்து போடக் கண்ணனின் ஆதரவும் அவன் அருளும் வேண்டும். ஓம் நமோ நாராயணாயா! படங்களுக்கு நன்றி கூகிளார்




    

Tuesday, December 16, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! 
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
 நாரா யணனே நமக்கே பறைதருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்! 
தீபம் கோலம் க்கான பட முடிவு
 முதல்நாள் நோன்பு ஆரம்பிக்கையில் அழகாக தீபக் கோலம் போட்டு ஆரம்பிக்கலாம். ஆண்டாளின் காலத்தில் முழுநிலா வீசும் நாளில் ஆரம்பித்தித்திருக்கிறது. காலம் செல்லச் செல்லப் பருவங்கள் மாறுபட மாறுபட இதுவும் மாறி இருக்கிறது. மதிநிறைந்த நன்னாளில் நீராடித் தூய்மையுடன் நந்தகோபன் குமாரன் ஆன அந்தப் பரந்தாமனை, சூரியனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்துடையானைப் போற்றிப் பாடினால் அவன் நமக்கு அந்த வைகுண்டப் பதவியையே கொடுத்துவிடுவான் என்கிறாள் ஆண்டாள். பட்டர்பிரான் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள், கண்ணனோடு இரண்டறக் கலக்கவேண்டி பாவை நோன்பு ஆரம்பிக்கிறாள். நாள், நக்ஷத்திரம் எல்லாமும் பார்த்து ஆரம்பிக்கிறாள்.

 மார்கழி மாதம், பூரணச் சந்திரன் நிறைந்து தோன்றும் நன்னாளாம் அது. அனைவரையும் நதியில் நீராடிப் பாவை நோன்பை ஆரம்பிக்கலாம் என அழைக்கிறாள். ஆய்பாடியின் செல்வச் சிறுமிகளை அழைக்கும் ஆண்டாள் நந்தகோபனைக் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறுகிறாள். கொடுந்தொழிலன் என்பது இங்கே கொடுமையான தொழிலைச் செய்பவன் என்ற பொருளில் வராது. கொடுக்கின்றவன் என்ற பொருளிலேயே நான் பார்க்கிறேன். கூர்வேலால் காளைகளையும், மாடுகளையும் அடக்கி ஆளும் நந்தகோபன் தன் ஈகைத் தன்மையால் சிறந்து விளங்குவதை ஆண்டாள் இங்கே சுட்டிக்காட்டுகிறாள். அத்தகைய நந்தகோபனின் குமாரன் ஆன கண்ணன், ஏரார்ந்த கண்ணியான யசோதையின் இளம் சிங்கம் என்றும் கூறுகிறாள்.
ஏரார்ந்த என்றால் வடிவான, அழகிய கண்களை உடைய அல்லது அழகிய தோற்றத்தை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும். அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே?
இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான். இப்போது நாரயணீயத்தில் பட்டத்திரி கூறுவதைப் பார்க்கும் முன் பட்டத்திரி பற்றிய ஒரு சிறு அறிமுகம். கேரளத்தைச் சேர்ந்த மேல்புத்தூர் நாராயண பட்டத்திரி தனது குருவான அச்சுத பிஷாரடிக்கு வந்திருக்கும் வாத நோயைத் தனக்கு அளிக்குமாறு விரும்பிப் பெற்றுக்கொண்டவர் . பின்னர் நோயின் கடுமை தாங்காமல் குருவாயூரில் இறைவன் சந்நிதியில் 100 நாட்கள் தங்கி ஒரு நாளை ஒரு தசகம் வீதம் 1036 ஸ்லோகங்களை இயற்றினார். ஆரம்பிக்கும் முன்னர் எதில் ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்தவரைத் துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் "மச்சம் தொட்டு உண்" என்று கூற எழுத்தச்சனின் கல்வி ஞானத்தையும் எல்லாவற்றுக்கும் மேல் அவரின் பக்தியையும் அறிந்திருந்த பட்டத்திரி முதலில் குழம்பினாலும் பின்னர் தெளிந்தார். 
பகவானின் மச்சாவதாரம் அவர் மனக்கண்களில் தோன்றியது . பத்து அவதாரங்களையும் பூரணமாக எழுதி நிறைவு செய்ய எண்ணம் கொண்டு முதலில் தன் பிரார்த்தனைகளை பகவத் வைபவம், செளந்தர்யம்,பக்தி லக்ஷணம் ஆகிய முறைகளில் தெரிவித்து விட்டு ஆரம்பிக்கிறார். முழுதும் அத்வைதக் கருத்துக்களாகவே காணப்படும் இந்த நாராயணீயம் மிக உயர்ந்ததொரு வேதாந்தமாகக் கருதப் படுகிறது. மேலும் இது முடிவடைந்த நூறாம் நாள் பட்டத்திரியின் வாத நோயும் நீங்கி ஆண்டவனும் தலையசைத்து இவரின் கவிதைகளைப் பாராட்டி திவ்ய தரிசனமும் அளித்தான். 
 இதையே நாராயண பட்டத்திரி நாராயணீயத்தில் கூறுவது எப்படி எனில், "படந்தோ நாமாநி ப்ரமதபர ஸிந்த்தெள நிபதிதா: ஸ்மரந்தோ ரூபம் தே வரத கதயந்தோ குணகதா சரந்தோ யே பக்தாஸ்த்வயி கலு ரமந்தே பரமமூந் அஹம் தந்யாந்மந்யே ஸமதிகத ஸரவாபிலஷிதாந்" அந்தப்பரம்பொருளான பகவான் வேண்டும் வரங்களை அருளும் அருளாளனாக இருக்கிறார். அவருடைய பக்தர்கள் பகவானின் திவ்ய நாமங்களைப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பேரழகு வாய்ந்த அற்புதத் திருமேனியை தியானம் செய்து கொண்டும் ஆனந்தமாக இருக்கின்றார்கள். பகவானின் குணாதிசயங்களை வர்ணிக்கும் திய்வ நாம சரித்திரங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். 

இத்தகைய ஆநந்தமயமான வாழ்க்கையில் அவர்களுக்கு எதுவும்பொருட்டன்று. ஆசைகளே அற்ற பாக்கியசாலிகள் அவர்கள் என்கிறார். ஒரு அசட்டுத் தனமான முயற்சி. திருப்பாவைக்கும் பட்டத்திரியின் நாராயணீயத்துக்கும் ஒப்பிட்டு எழுத முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு அந்தப்பொருள் வரும் நாராயணீயப் பாடல்களாய்த் தேடி எடுத்திருக்கேன். இதற்கு எந்த அளவு வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மேலே தொடரும். நன்றி.


கோலத்துக்கு நன்றி. கூகிளார். என்னோட மூலப் பதிவில் வேறே கோலம் இருக்கும். அது முன்னால் மின் தமிழ்க் குழுமத்தில் திரு உதயனின் கோலங்களைப் பதிந்தபோது எழுதியது. சுமார் பத்து வருஷம் முன்னால் 2010 ஆம் வருஷங்களில் எழுதியவற்றைத் தொகுத்திருக்கேன். இது மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்னும் மின்னூலாகவும் வெளி வந்துள்ளது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாள் மின்னூலுக்கான சுட்டி


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். இந்தப்பதிவுகள் இதோடு மூன்றாம் முறையாக வெளி வருகின்றன. முதலில் இப்பதிவுகள் 2020/2011 ஆம் ஆண்டுகளில் வந்து பின்னர் 2029/2020 ஆண்டில் கோலங்களோடு வந்து பின்னர் மின்னூலாகவும் வந்திருக்கிறது. இந்த வருஷம் மார்கழி மாதம் கத்தாரில் தோஹாவில் இருக்கேன். அம்பேரிக்காவில் 2, 3 முறைகள் மார்கழி மாதங்கள், தைப்பொங்கல்னு கழிந்தாலும் இந்த வருஷம் நம்ம ரங்க்ஸ் இல்லாமல் தனியாக இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு பழையனவற்றை அசை போட்டுக் கொண்டு இருக்கேன். மன மாறுதலுக்காக இப்பதிவுகளை இங்கே கொடுக்கலாம். வேறு மார்கழிப் பதிவுகளும் இருந்தாலும் சமீபத்தில் நாராயணீய நாள் கொண்டாடினப்போ இந்தப் பதிவுகளில் நாராயணீயமும் குறிப்பிட்டிருப்பது நினைவில் வரவே இவற்றைத் தேடி எடுத்துக் கொடுக்கிறேன். இந்தியாவில் 2 மணிக்கு மேல் இருந்தாலும் இங்கே இப்போது தான் நண்பகல் பனிரண்டு மணி. காலையிலிருந்து வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. இப்போத் தான் கொஞ்சம் நின்னிருக்கு. மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தில்! தெற்கு கோபுரத்தில் வைகுண்ட ஏகாதசி/மார்கழி மாதம் என்பதால் கோபுரம் முக்கியமாகத் தெற்கு கோபுரம் அழகாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். குட்டிக் குஞ்சுலு அதை கோல்டன் டவர் என்று சொல்லும். நான் என் வழக்கமான இடத்தில் உட்கார்ந்த வண்ணம் கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதே சமயமும் தெற்கே பார்த்திருக்கும் பெருமாளும் எங்களைத் தான் பார்த்துக் கொண்டிருப்பார் என நினைப்பேன். இப்போ அதை எல்லாம் எண்ணுவதே ஒரு சுகம்.

Thursday, December 11, 2025

வாழ்க நீ எம்மான்!

 






இன்னமும் கொஞ்சமானும் உயிர்ப்புடன் வைத்திருப்பது இம்மாதிரியான மஹான்கள் பிறந்த மண்ணில் பிறந்திருக்கோம் என்னும் ஆறுதலே. மற்றபடி நடப்பது யாவும் நல்லதாய் இல்லை. ஆனால் பெரும்பான்மை தூங்கிக் கொண்டிருக்கிறது. தட்டி எழுப்ப யார் வரணுமே தெரியலை, புரியலை. வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் நினைக்கவே கவலை தருவதாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது. இறை நம்பிக்கை ஒன்றே இப்போது காப்பாற்றி வருகிறது. என்னுடைய இந்தக் காலத் தலைமுறை மக்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளிலோ அல்லது குறைந்த பக்ஷமாக ஐந்தாறு ஆண்டுகளிலேயோ முற்றிலும் அழிந்து விடும். அத்தோடு வருங்கால இளம் சமுதாயத்திற்கு உண்மையை எடுத்துச் சொல்லவோ நல்லனவற்றையும் நீதி, நேர்மை பற்றியும் கூறவோ, பெரியோர்கள் இருப்பது அரிது.  அப்படி இருக்கையில் நம் பாரம்பரியமும், கலாசாரமும் மெல்ல மெல்ல அழிந்தே போய் விடுமே என்னும் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இனி மக்களைக் காப்பது ஆண்டவன் பொறுப்பு என மனதைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தாலும் முடியவில்லை.  இன்னொரு பாரதி வருவானா அல்லது வந்தாலும் மக்கள் அவனையும் அவன் எண்ணங்களையும் மதிப்பார்களா?



Monday, November 10, 2025

நினைவோ ஒரு பறவை!

 இந்த வருஷம், இந்த மாதம் ஐந்தாம் தேதியோடு சரியா இருபது வருஷங்கள் ஆகின்றன. நான் வலைப்பக்கம் எழுத ஆரம்பிச்சு 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆரம்பத்தில் தமிழ் எழுத வராமல் ஆங்கிலத்தில் தட்டச்சி இருந்தேன். அதுக்கு ஒருத்தரும் கருத்துச் சொல்லவில்லை. சில, பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டில் ரஞ்சனி முதல் ஆளாக வந்து கருத்திட்டிருந்தார். பின்னர் கில்லர்ஜி அடுத்த நாளே வந்திருந்தார். இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கம் மட்டும் இன்று வரையில் 2,972 பதிவுகள் வந்திருக்கின்றன. சில மீள் பதிவுகளையும் சேர்த்து. ஆனால் பலருக்கும் எனக்கு இது ஒன்று மட்டும் நான் வைத்திருக்கும் வலைப்பூ அல்ல இன்னும் சிலவும் இருக்கின்றன என்பது தெரியாது. இதே ஐடியிலேயே என்னுடைய கோயில்களின் புனித யாத்திரை பற்றிய பதிவுகள் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதிலே முதலில் எங்க கயிலை யாத்திரை பற்றி எழுதிட்டுப் பின்னர் சிதம்பரம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு தொடர் எழுதினேன். என்னை ஓரளவுக்குப் பிரபலம் ஆக்கியது அந்தத் தொடர் தான். அதனால் பல சிதம்பரம் தீக்ஷிதர்களும் பழக்கம் ஆனார்கள். பின்னர் ஆங்காங்கே நாங்கள் போய் வந்த கோயில்கள் குறித்தெல்லாம் எழுதிட்டுப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஆரம்பிச்சிருந்தேன். அதைத் தொடர முடியாமல் நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தேன். அதில்லிருந்தே நான் பதிவுகள் எழுதுவது ரொம்பக் குறைந்து விட்டது. 

முதலில் எழுதிய பதிவின் சுட்டி கீழே

https://sivamgss.blogspot.com/2005/11/my-thoughts.html#comment-form

கண்ணனைப் பற்றி எழுத ஆரம்பிச்சப்போ முதலில் இந்த வலைப்பக்கம் தான் ஆரம்பிச்சேன். பின்னர் அதற்கெனத் தனியாக ஒரு மெயில் ஐடி கொடுத்து அதில் ஒரு வலைப்பக்கம் திறந்து அதில் எழுதி வந்தேன். அதற்கு முன்னரே எங்களோட பிரயாணங்களையும் , முக்கியமான இடங்களையும் பற்றி எழுதத் தனியான ஓர் மெயில் ஐடியில் எழுதி வந்தேன். மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ அந்த ஐடி தான் அதிகம் உபயோகிச்சிருக்கேன். மின் தமிழ் குழுமத்திற்காக எழுதிய ஒரு சில பதிவுகள், குறிப்புகள் எல்லாமும் அங்கே வெவ்வேறு பெயர்களில் உள்ள வலைப்பக்கங்களில் காணக் கிடைக்கும். சமையல் பற்றி எழுத ஒரு தனி வலைப்பூ இந்த ஐடியில் துவங்கி பாரம்பரிய சமையலில் இரு புத்தகங்களும் கின்டிலில் போட்டிருக்கேன். எங்க பொண்ணு, இன்னும் சில உறவுக்காரப் பையர், பெண்களுக்காக ஆங்கிலத்தில் ஓர் சமையல் குறிப்புக்கள் கொண்ட வலைப்பூவும் ஆரம்பிச்சேன்.

படங்களுக்கெனத் தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கி இருந்தேன்.  ராம்லக்ஷ்மியிடம் இருந்து  பாராட்டுக் கிடைத்தால் சந்தோஷம். அதையும் சின்னப் புத்தகமாகப் போட்டிருக்கேன். ஆக இவை எல்லாமும் சேர்ந்தால் மொத்தப்பதிவுகள் நிறையவே இருக்கும். மழலைகள் குழுமத்துக்கு, நம்பிக்கை குழுமம், முத்தமிழ்க் குழுமம், ரத்தினமாலை குழுமம் எனக் குழுமங்களுக்காக எழுதியவையும் உண்டு. அப்போல்லாம் நிறையப் படித்துக் கொண்டிருந்ததாலும், அடிக்கடி கோயில்களுக்குப் போனதாலும் எழுத விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்தும் லினக்ஸிற்காகத் தமிழ் மொழீபெயர்ப்பு, தினத்தந்தி நூற்றாண்டு மலருக்காக வேலை எனப் பற்பல வேலைகள். இப்போ எதுவும் இல்லை. நேரம் என்னமோ இப்போக் கடினமாக இருப்பதோடு கொஞ்சம் எழுதவே நிறைய நேரம் எடுக்கிறது என்பது உண்மை. 

இதை எல்லாம் இப்போ ஏன் எழுதுகிறேன் எனில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னால் நாங்க எழுதினப்போ எழுதிக் கொண்டிருந்த க்ருத்திகா ஸ்ரீதர் என்னும்  ஒரு சிநேகிதியின் பதிவை முகநூலில் படிச்சேன். அவர் சில நாட்களுக்கு முன்னர் வந்து கூட என்னிடம் இன்னமும் ப்ளாக் எல்லாம் எழுதறீங்களா என ஆச்சரியமாய்க் கேட்டிருந்தார். இவர் தெரிந்தவரே ஒழிய நான் அதிகம் போனதில்லை. படிச்சது இல்லை. என்றாலும் படிச்சிருக்கேன். ஒரு சில சமயங்களில் கருத்துப் போட்டிருப்பேன். ஆனால் அவர் எழுத்துப் பரிச்சயம் தான். இத்தனை வருஷங்கள் கழிச்சும் அவர் என்னை நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அப்போதெல்லாம் இவர், கவிதா கஜானன் போன்றவர்கள் எழுதுவதைப் படிக்கையில் எனக்கு அறிவுஜீவிகள் தோற்றம் வரும். நமக்குத்தான் அறிவு ஜீவி என்றால் ஒத்து வராது என ஒதுங்கியே இருந்திருக்கேன். உண்மையில் இன்று அவர் என்னை நினைவு கூர்ந்திருந்தது நெகிழ வைத்தது. அப்போது எழுதிக் கொண்டிருந்த பல நண்பர்களின் நினைவுகளும் வந்து அலை மோதின. 

ஏன் இவங்க எழுத்தை எல்லாம் பற்றிப் பயந்தேன் என்றால் நான் என்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள அப்போல்லாம் மொக்கைப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருந்தேன். நாம தீவிரமான சிந்தனைப்பதிவுகளை எழுதினால் படிப்பாங்களா என்னும் சந்தேகம். பின்னர் மெல்ல மெல்ல நானும் நடு நடுவே பக்திப்பதிவுகள், நவராத்திரிப் பதிவுகள்னு போட ஆரம்பிச்சேன். தமிழ் மணம் நக்ஷத்திரமாக இருந்தப்போ இந்த மும்மொழித்திட்டம் குறித்த ஓர் பதிவைக் கூட எழுதினேன் என்றால் பார்த்துக்கோங்க.  அதோடு அப்போல்லாம் வருடா வருடம் பதிவு எழுதிய/எழுத ஆரம்பிச்ச தினத்தைக் கொண்டாடுவேன். ஆரம்பத்தில் ஆதரவளித்த சூப்பர் சுப்ரா என்பவரை வருடா வருடம் நினைவு கூர்ந்து வந்தேன். பின்னர் காலப் போக்கில் எத்தனை வருடங்கள் என்பதே மறந்தும் விட்டது. என்றாலும் பலரின் நினைவுகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றன. இதில் என்னைப் போல் இன்னமும் ப்ளாக் எழுதுவது துளசி மட்டும் தான். வல்லி சிம்ஹன் அவ்வப்போது எழுதுகிறார். என்னை விடத் துளசி இன்னும் பிரயாணம் அதிகம் செய்வதால் அவர் இன்னமும் புத்துணர்வோடு எழுதிட்டு இருக்கார். வாழ்த்துகள். ஏதோ இந்த அளவுக்காவது என்னாலும் எழுத முடிகிறதே என்பதில் எனக்கும் சந்தோஷம் தான்.