எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 25, 2020

எஸ்பிபிக்கு அஞ்சலி! :(

மண்ணில் இந்தக் காதல்  எஸ்பிபியின் அனைத்துப் பாடல்களுமே ரசிக்கும் வகை என்றாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது இந்தப் பாடல் தான். படமும் பிடிக்கும், பாடலும் பிடிக்கும். அவர் நடிப்பும் இந்தப் படத்தில் பிடிக்கும். அருமையான பாடல். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். ஓரளவு எதிர்பார்த்த செய்தி என்றாலும் எப்படியும் பிழைச்சுடுவார் என்னும் நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் இப்படி ஒரு நல்ல மனிதரைக் காலன் இந்தப் பாடு படுத்தி இருக்க வேண்டாம். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.


கீதா & சாம்பசிவம்

14 comments:

  1. ஆமாம்...எஸ்பிபி யின் குரலும் அவரது நல்ல குணமும் நம் மனதில் என்றும் நினைவில் இருக்கும்.

    ReplyDelete
  2. செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போல் மனம் தவிக்கிறது. அவர் ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்தித்துக் கொள்வோம். அவர் குடும்பத்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுக்கு அவர் பிரிவை தாங்கும் சக்தியை இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.
    அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  4. இறை நிழலில் நற்கதி அடையட்டும்..
    ஓம் சாந்தி.. சாந்தி.. சாந்தி..

    ReplyDelete
  5. உங்கள் பிரார்த்தனைகளில் நானும் இணைந்து கொள்கிறேன்!
    என்னால் கொஞ்சமும் ஜீரணித்துக்கொள்ள முடியாத மரணம் இது! நேருக்கு நேர் சந்திக்காமலேயே அவரிடம் அன்பு கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் மிகப்பெரிய துக்கம் இது. நீங்கள் எழுதியிருப்பது போல இறப்பதற்கு முன் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்.

    ReplyDelete
  6. மிக மிக வருத்தம் தந்த நிகழ்வு. இந்தப் பாடு பட்டிருக்க வேண்டாம். அதுவும் வாழ ஆசைப்பட்ட ஒரு அன்பு மனிதருக்கு
    அவர் குடும்பத்துக்கு நமக்கு நஷ்டம் தான்.
    என்றும் நம் அவர் குரல் இருக்கும்.

    ReplyDelete
  7. என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

    ReplyDelete
  8. ஆழ்ந்த இரங்கல்கள்...

    மனம் பாடும் பாடல்களில் என்றும் வாழ்வார்...

    ReplyDelete
  9. அவரது ஆன்மா நற்கதி அடையட்டும்...

    எனது அஞ்சலிகளும்.

    ReplyDelete
  10. மண்ணில் இந்தக் காதல்.. கேட்க மிகவும் ரம்யமானது. இப்படியெல்லாம் பாடல்கள் வந்திறங்கியபோது நான் தமிழ்த் திரையுலகத்திலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன்! தமிழ் திரைத்தரம், ரசனை வேகமாக சரிந்துவந்ததே காரணம். இருந்தும் ஆங்காங்கே நல்ல பாடல்கள் சிலவும் வந்தன என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டதில் சந்தோஷமாக இருந்தது.

    இப்படி ஒரு பாட்டுக்காரன் இனி இம்மண்ணில் வந்துசேர நூற்றாண்டாகலாம்.

    ReplyDelete
  11. அவர் பாடிய பாடல்களில் என்றும் வாழ்வார்.
    நல்லபடியாக குணமாகி மீண்டும் பாடுவார் என்று நினைத்தது நடக்கவில்லை.


    ReplyDelete
  12. எஸ்.பி.பி. ஒரு சகாப்தம். 

    ReplyDelete
  13. அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. மிக மிக நல்ல மனிதர். 3 நாட்கள் ஆனது எனக்கு நார்மலுக்கு வர

    ReplyDelete