எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 14, 2021

உப்பு வாங்கலையோ உப்பு! மீள், மீள், மீள் பதிவு!

 உப்பு வாங்கலையோ உப்பு!


அன்னக்கொடி விழா

அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?


அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!


மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.


அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.


அன்ன தானம்

எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்

ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,

பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்

வந்திருந்தனர்.


குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்

உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான

பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து

கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து

வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.


பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய

சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.

மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்

வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்

செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய

தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து

இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்

வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்

அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.


எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.


2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம்.  இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!


வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.


உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்


ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.


சொம்பில் தண்ணீர் வைத்திருந்த படம் தற்செயலாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது டெலீட் ஆகி விட்டது. :( என்ன செய்ய முடியும்? படம் இருக்கானு தேடிப் பார்க்கணும். அதுவும் எந்தக் கணினியில் இருக்கோ! :) எழுதினதை மட்டும் கீழே நீக்கவில்லை. அப்படியே கொடுத்திருக்கேன்.

சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 

இந்த வருஷம் தான் அக்ஷய திரிதியைக்கான நகைக்கடை விளம்பரங்கள் எதுவும் வரவில்லை.  இந்தப் பிரசாதங்களும் இந்த வருஷம் பண்ணலை. இந்த வருஷம் கடுமையான தொற்று பாதிப்பு இருப்பதால் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பது காலை கோலம் போட மட்டும். ஆகவே எதுவும் பண்ணவில்லை. பால் மட்டும் நிவேதனம் செய்தேன். பின்னர் சமைத்ததும் சமையல் நிவேதனம்.

30 comments:

  1. பதிவை இரண்டு மூன்று வரி படித்ததும் உடனே உப்பு வாங்கக் கிளம்பிட்டேன்.

    அது சரி... அயோடைஸ்ட் உப்பா, கிரிஸ்டல் உப்பா, பொடி உப்பா... இதனை விளக்கமா எழுதக்கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை. கல் உப்புத் தான் வாங்கணும்.

      Delete
  2. //நகை வாங்கவும் துணி வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது// - இப்போல்லாம் கும்பல்ல போய் (மாஸ்கை காதில் மட்டும் தொங்கப்போட்டுக்கொண்டு) எல்லாம் வாங்கிட்டு வந்து, கொரோனா வந்துவிட்டது, அரசு செயல்படவில்லை என்று பதிவு போடுவதுதான் ஃபேஷன். நீங்க என்னடான்னா...ஒண்ணும் வாங்கப் போகலையாமே... இது அநியாயமில்லையோ

    ReplyDelete
  3. உருளியில் பால் பாயசம்.... ஆஹா... நினைத்தாலே இனிக்கிறது. உருளி இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால், எனக்கும் கேட்டு வாங்கிக்கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஹும், இந்த உருளியில் பாயசம், பொங்கல் பண்ணி நாலு பேர் சாப்பிடலாம். :)

      Delete
  4. இன்று நன்பரது அறைக்குச் சென்ற போது உப்பும் வழக்கம் போல பாலும் வாங்கிச் சென்றேன்.. மாலை அசோகா / காஃபி..

    அக்ஷய திரிதியை நாளில் பிறரை வாழ வைத்து நாமும் நல் வாழ்வு வாழ்வதற்கு உறுதி மேற்கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஆமாம், நீங்க சொல்வது சரியே!

      Delete
  5. வியாபாரிகள் விரிக்கும் வலையில் வீழாதிருப்போமாக!..

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் பரவாயில்லை. மக்கள் இந்த அக்ஷய திரிதியை மோகத்தில் இல்லை.

      Delete
  6. பழைய பதிவை படித்து இருக்கிறேன்.
    அஷ்ய திரிதியை பற்றிய விளக்கம் அருமை.

    அஷ்ய திரிதியை அன்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டுவோம். அன்பைதருவோம் அனைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. அனைவருக்கும் அன்பு என்னும் அமுதத்தை அள்ளித் தருவோம். அனைவர் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கவும் பிரார்த்திப்போம்.

      Delete
  7. நிவேதனங்கள் படம் அருமை.

    ReplyDelete
  8. உப்பு வாங்க வேண்டும் என்பதே சரி. நானும் நேற்று காலையில் கல் உப்பு வாங்கி வந்தேன் - அவசர வேலையாக வெளியே சென்ற போது.

    இப்போது எல்லாம் விளம்பர மாயமும் மோகமும். கூட்டம் அலைமோதுகிறது திருவரங்கத்திலும்! வெளியே செல்லும்போது பார்க்கும் காட்சிகள் - கொரோனாவா அப்படின்னா என்று கேட்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.

    கர்ணன் - கட்டை விரல்? ஆள்காட்டி விரல் என்று படித்த நினைவு!

    ReplyDelete
    Replies
    1. //கர்ணன் - கட்டை விரல்? ஆள்காட்டி விரல் என்று படித்த நினைவு!// ஆமா இல்ல?
      எங்கே பார்த்தாலும் கூட்டம் தான்.

      Delete
  9. இந்த வருடம் அட்சயதிரிதியை மட்டுமல்ல, அக்னி நட்சத்திரமே எண்ணிப்பார்க்க முடியாமல் கடந்து செல்கிறது.  காரணம் மனதில் ஒரே கவலைதான்!  தாக்கும் வெயிலின்போது கூட அக்னி நட்சத்திரத்தில் இருக்கிறோம் என்கிற எண்ணம் வராத அளவு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இங்கே எப்போவுமே அக்னி நக்ஷத்திரத்து வெயில் கடுமை தெரியாத அளவுக்குக் குறைந்துவிடும். ஒரு சில நாட்கள் மட்டுமே அதிசயமாய்த் தெரியும். இங்கே கொரோனா தாக்கம் தான் கடுமையாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் அடங்க மறுக்கின்றனர்.

      Delete
    2. ஸ்ரீராமுக்கு இருக்கும் பிரச்சனை மிகவுமே கஷ்டமானதுதான். நாங்கள்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம், ஏதேனும் வாங்கணும்னா நான் மட்டும் வெளியில் சென்று வாங்கிவருகிறேன் (மாஸ்க், ஃபேஸ் ஷீல்ட்). ஆனால் ஸ்ரீராமுக்கு தினமும் ஆபீஸ் போய்த்தான் ஆகவேண்டும், ரிஸ்க்கைச் சந்தித்தாகவேண்டும். கஷ்டம்தான்.

      Delete
    3. கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக நம்ம ரங்க்ஸ் வெளியே எங்குமே போகலை. ஆனால் இப்போது மளிகைப் பொருட்கள் வேண்டும். அவர் போகாமல் முடியாது. என்னதான் தொலைபேசியில் ஆர்டர் கொடுத்தாலும் சிலவற்றிற்கு நேரில் போய்ச் சொல்லும்படி இருக்கு. என்ன செய்யறதுனு புரியலை.

      Delete
  10. அக்ஷய திரிதியை விளக்கம் நன்று. இப்போது கேரளத்திலும் பேசப்படுகிறது எல்லாம் மீடியாதான்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், எங்கே கீதாவைக் காணோம்? எல்லாம் நகைக்கடைக்காரங்க கொடுக்கும் விளம்பரங்களால் இது எங்கும் பேசப்படும் ஒன்றாக மாறி விட்டது.

      Delete
  11. கீதாக்கா அக்ஷய திரிதியை நீங்க சொல்வது போல் 20 வருஷமாத்தான் இப்படி அல்லோகலம். அது போல பச்சை ட்ரெஸ் வளையல் எல்லாம் கூட அப்படித்தான் திடீர் திடீர்னு யாராவது கிளப்பி விடுவாங்க...
    அக்ஷய திருதியை பற்றி எல்லாம் சமீபத்தில்தான் கேள்விப்பட்டது முன்பு எல்லாம் அது பற்றி பேசியதில்லை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அக்ஷய த்ருதியை கொண்டாட்டம் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு மற்ற மாநிலங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. பெங்களூரில் கூட இப்போதுதான் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. இந்த வருடம் அ.தி.அன்று ஜி.ஆர்.டி.யில் ஆன் லைனில் தங்கம் வாங்கும் அறிவிப்பு வந்ததே!

      Delete
    2. வாங்க தி/கீதா, தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாச்சே! இந்தப் பச்சை நிற அலையில் நானும் மிதந்திருக்கேன். நாத்தனார்கள் எல்லோருமே கேட்பார்கள். ஹாஹாஹா!

      Delete
    3. வாங்க பானுமதி ஜிஆர்டியில் அறிவிப்பு வந்ததைப் பார்க்கலை. இந்த வருஷம் எதுவும் இல்லைனு நினைச்சிருந்தேன்.

      Delete
  12. வடை பாயாசம் எல்லாம் சூப்பரா இருக்கு. கண்ணால் பார்த்துக் கொள்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, நாங்களும் இந்த வருஷ அக்ஷயதிரிதியை அன்னிக்குக் கண்ணால் இதைப் பார்த்துக் கொண்டோம்.

      Delete
  13. ஆஹா! உருளியில் பாயசம்! பார்க்கும் பொழுதே ஆசையாக இருக்கிறது.
    எங்கள் குடியிருப்பில் இருக்கும் சூப்பர் மார்கெட்டில் ராக் சால்ட் விற்பனைக்கு இருக்கிறது. ஆனால் அதை நான் இது வரை பயன்படுத்தியதில்லை, எப்படி பயன் படுத்துவது என்று உங்களிடம் கேட்க நினைத்திருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வடமாநிலங்களில் இந்த ராக் சால்ட் எனப்படும் இந்துப்புப் பிரபலமான ஒன்று. ரொம்ப ஆசாரக்காரர்கள் இதைத் தான் பயன்படுத்துவார்கள். மருத்துவ குணம் நிரம்பியது என்பதால் நாம் எப்போதும் பயன்படுத்தும் உப்பைத் தவிர்க்கச் சொல்லி இதைப் பயன்படுத்தச் சொல்வார்கள். இதுவும் கறுப்பு உப்பும் வயிற்றிற்கும் ஜீரணக்கோளாறுகளுக்கும் நல்லது. ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் உண்டு. எல்லாவற்றிற்கும் இந்த உப்பைச் சேர்க்கலாம். விலை அதிகம் என்பதால் கட்டுபடி ஆகாது எனப் பலரும் நினைக்கலாம்.

      Delete