எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 29, 2006

122. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!

ஆப்பு அம்பிக்கும், வேதாள வேதாவுக்கும் ஆனந்தம்!
நாகை எலி(சீச்சீ) எல்லாம் இந்த வேதாவாலே வந்தது.
சூடான் புலிக்கும் ஆனந்தம்.
தி.ரா.ச. சார் ஏற்கெனவே அலுத்துப் போய் வரதை நிறுத்திட்டார். அதுவும் அந்த முறுக்கு சாப்பிட்டதில் இருந்து வாழ்க்கையே வெறுத்துப் போய் விட்டார் போல் இருக்கு. அம்பியும், நானும் போடற சண்டை அவங்க வீடு வரை போய்க் கேட்டால் பின்னே என்ன சும்மாவா? இனிமேல் ஆனந்தம் தான் சார் உங்களுக்கும்.
மின்னல், வந்து ஆஜர் கொடுக்க வேண்டாம்
.ச்யாம், வந்து பார்த்துட்டு ஏதாவது சொல்லணுமேனு சொல்ல வேண்டாம்.
கார்த்திக் இனிமேல் தைரியமா இங்கே வராமல் அவர் வால்மார்ட், அல்லது டார்கெட் அல்லது க்ரோக்கர் போகலாம். அங்கே தமிழ்க்காரர்களைப் பார்த்து அரட்டை அடிக்கலாம்.
கைப்புள்ள இனிமேல் அம்பி காட்டும் ஆஸ்திரேலிய கங்காருவையோ, வங்காளப் புலியையோ, திபேத் எருமையையோ, ஆப்ரிக்கா யானையையோ பார்த்து ரசிக்கலாம்.
அம்பி ஏற்கெனவே எழுதும் பில்டப் பதிவுகளை இன்னும் விரிவு படுத்தி எழுதலாம்.
புதுசா வரும் kn own stranger கொஞ்சம் பொழுது போகாது, பொறுத்துக்குங்க.
இப்போ க்ளப்லே சேர அப்ளை பண்ணி இருக்கும் லதா கொஞ்சம் பொறுங்க. தொடர்ந்து வந்திருந்தா பிரச்னை இல்லை.
சின்னக்குட்டி உங்க பதிவிலே இருந்துக்கிட்டே ரத்தக்கண்ணீர் வடிக்க வேண்டாம். ஒரே ஆனந்தக் கண்ணீர்தான் இனிமேல்.
**********************
மேலே சொன்ன நிகழ்வுகளுக்கு எல்லாம் காரணம் நான் நாளை டெல்லி போகிறேன். வரக் கொஞ்ச நாள் ஆகும். வழக்கம்போல் திரும்பி வர டிக்கெட் confirm ஆகவில்லை. அதுவரை தைரியமாக இருக்கலாம். என்னோட torture இருக்காது. ஆகவே தோழர்களே, தோழியர்களே எல்லாரும் ஜோரா ஒருமுறை கையைத் தட்டிட்டு சந்தோஷமா இருங்க, பார்க்கலாம்.

16 comments:

  1. ahaa! itha itha itha thaan ethirpaarthen.
    //வரக் கொஞ்ச நாள் ஆகும். வழக்கம்போல் திரும்பி வர டிக்கெட் confirm ஆகவில்லை. //
    naal thaana? maasamoo?nu santhosha patten. delhi makkal inime ratha kanneer vuda poraanga. :)
    neenga kilambinathuku apromaa thaane unga bnglre meet pathi ezhutha poren. he hee :)
    (ithu thaan yuthaa dharmam!)

    ReplyDelete
  2. என்னங்க.. நான் வரேன் நீங்க டெல்லி போறீங்க :( தலைவினா எப்போதும் தொண்டர் சேவை செய்ய வேண்டாமா?

    ReplyDelete
  3. ஆப்பு அம்பியின் நாரத வேலை எனக்குத் தெரியும். இதுதான் நடக்கும், நடக்கப் போகுதுன்னும், இந்தச் சிங்கம் எதைக் கண்டும் அஞ்சாது! என்ன வேணா எழுதுங்க! நம்பறதுக்கு யாரும் இல்லை!
    அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமில்லையே!
    ஹிஹிஹியா ஹி ஹி ஹி இருக்கட்டும் வந்து வச்சுக்கறேன்.

    ReplyDelete
  4. நீங்க புதுசு, தொண்டர்கள்தான் தலைவிக்குச் சேவை செய்யணும். புதுசா வந்ததாலே தலைவியின் பிரிவு உபசார விழாச் செலவு மட்டும் உங்களைச் சேர்ந்தது. ரொம்ப ஆகாது. ஒரு பத்து லட்சம் மட்டும் தான் ஆகும். பார்த்துக்குங்க! :D

    ReplyDelete
  5. தம்பி,
    ஆப்பு லிஸ்ட்லே உங்களைச் சேர்க்க மறந்துட்டேன். வேதாவுக்கு அப்புறம் ஆப்பு உங்களுக்குத் தான், காத்திருங்க!

    ReplyDelete
  6. வேதா,
    வேதாள வேதா,
    திரும்பி வந்து வச்சுக்கறேன் உங்களை, சரியான ஆப்பு காத்திருக்கு உங்களுக்கு.

    ReplyDelete
  7. டெல்லி சென்று தங்களின் புகழை உலமெல்லாம் பரப்பி வர புதரகத்தின் சார்பில தலைவியை வாழ்த்தி வழியனுப்புகிறோம் :-)

    (மனதுக்குள்...எல்லாம் நேரம் வயசான காலத்துல கம்முனு இருக்காம தெக்கயும் வடக்கயும் என்ன டூர் வேண்டி கிடக்கு) :-)

    ReplyDelete
  8. டில்லி செல்லும் தலைவியை திரும்ப
    வர விடாமல் செய்ய சதி..!!!!

    சங்கம் இதற்க்கு உடந்தையா....

    தலைவியை மாற்ற சங்கம் சதி செய்கிறதா....

    பக்கத்துக்கு பக்கம் விருவிருப்பு..

    வாங்கி விட்டீர்களா Dr.நமது கைப்பூ

    டில்லி சென்று வர சைக்கிள் டிக்கெட் இலவசம்.!! !! !!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள். டெல்லி எதுக்கு போறீங்கன்னு யாருக்கும்தெரியாது.தெய்வப்பிறவியில் வரும் வசனமாதிரி "எங்க அப்பா வேலூர்ல இருக்கார்" பேத்தியை பாக்கத்தானே.
    வந்து இதேபோல நல்ல, பார்த்த இடங்களை பற்றிப் பதிவு போடுங்கள்.தலைவர் கூட வரார் இல்லெ.அப்புறம் என்ன.சென்று வாருங்கள் வென்று வாருங்கள்.

    ReplyDelete
  10. ச்யாம்,
    இது நல்லாவே இல்லை. எனக்கு வயசாயிடுச்சுனு சொல்லி அந்த அம்பி கூட சேரவே சேராதீங்க, சொல்லிட்டேன். அப்புறம் ஆப்பு லிஸ்ட்லே உங்க பேர் மத்தவங்க பேரை முந்திட்டு முன்னாலே போயிடும்! :D

    ReplyDelete
  11. ஆஹா, மின்னல்,
    சதிக்கு உடந்தையா? அதியமான் போல் எனக்கு நெல்லிக்கனி கொடுத்த சங்கத் தலைவராம் கைப்புள்ள மனதை மாற்றச் சதியா? இருக்கட்டும், வரேன் உடனேயே! (தகவல் கொடுத்துப் போட்டுக் கொடுத்ததற்கு நன்றி, ஹி,ஹி,ஹி, தலைவின்னா சும்மாவா? என்னை மாட்டலாம்னு எண்ணமா?)உங்க பேர் ஆப்பு லிஸ்ட்லே இரண்டு நபர் முன்னாலே போயிட்டது. :D

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கு நன்றி தி.ரா.ச. சார், நான் பாட்டியை இல்ல பார்க்கப் போறேன், பேத்தியை இல்லை, உங்க சிஷ்யன் சொல்றதை நம்பாதீங்க!

    சென்று வென்று வரச் சொல்லியதற்கு நன்றி.

    ReplyDelete
  13. "ஆனந்தம்!
    இமாலயம் போல் ஆனந்தம்!
    தொடரம் இந்த ஆனந்தம்!
    நிலைக்கும் ஆனந்தம்!"

    "ஆனந்தம்!
    இமாலயம் போல் ஆனந்தம்!
    தொடரம் இந்த ஆனந்தம்!
    நிலைக்கும் ஆனந்தம்!"

    ஒன்னும் இல்லங்க 12பி பாட்டு கேட்டுகிட்டு இருந்தேன். சரியா இந்த பதிவு படிக்கும் போது இந்த பாட்டு தான் ஒடிச்சு. அதான்.... ஹிஹி.....

    ReplyDelete
  14. semma commedy... kujaalla irrukku entha paguu

    ReplyDelete
  15. pudhusa vandha nan enna panradham?! :)

    ReplyDelete