எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 17, 2006

140. என்னோட ரயில் அனுபவங்கள்-2

ஏற்கெனவே எங்களுக்கு மூன்று பேருக்கும் ஊரை விட்டுப் போகவே இஷ்டம் இல்லை. இதிலே ரெயிலே வரலைன்னா இன்னும் ஜாஸ்தியாக் கோபம் வந்தது. எங்களுடன் என் கணவர் ஆஃபீஸில் அவர் கீழ் வேலை பார்க்கும் எல்லாரும் வந்திருந்தார்கள், கூடவே ராணுவ

வீரர்களும் சாமான்களை ஏற்றுவதில் உதவி செய்ய வந்திருந்தனர். "பாக்கிங்" ஆரம்பித்ததுமே வந்து உதவி செய்வார்கள். அதெல்லாம் கணக்கே இல்லை, அவங்க உதவிக்கு. எல்லாரும் ஒரு பெரிய படையாகத் திரண்டு போய் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய் ரயில் வராத காரணத்தைக் கேட்கவே,அவர், "இப்போ தான் அஜ்மேரில் இருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அங்கே ரயில் மறியல் நடக்கிறதாம். போலீஸ் வந்து மறியல்காரர்களை அப்புறப்படுத்தியதுக்குப் பின் தான் ரயில் வர முடியும்." என்றார்.


எங்களுக்கு ரெயிலில் சாப்பிட உணவு எடுத்து வருவதாகச் சொன்னப் பெண்மணி அஜ்மேரில்

வீடு இருப்பதால் இந்த ரெயிலிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தார். ரெயில்

கிளம்பவில்லை எனத் தெரிந்ததும் வழக்கம்போல் அங்கே போக்குவரத்துக்குப் பயன்படும்

"டெம்போ"வில் வந்து சேர்ந்து விட்டார். ரயில் ஒரு வழியாகப் பதினோரு மணி அளவில் வந்தது. மீட்டர் கேஜ் வண்டி என்பதால் அப்போது அதில் ஏ.சி. எல்லாம் கிடையாது. (கைப்புள்ள, இப்போவும் மீட்டர்கேஜ் தானா? ப்ராட்கேஜ் ஆகிவிட்டதா?) ஆகி யிருக்கும்னு நினைக்கிறேன். முதல்வகுப்பில் ஏற்றினார்கள். எங்களை மாலை மரியாதையுடன். சாமான்கள் எல்லாம் "ப்ரேக் வான்"னில் ஏற்றப்பட்டது. முதல் வகுப்பில் நாங்கள் உள்ளே போனதும் உடனே வெளியேற்றப் பட்டோம். என்ன என்றால் டெல்லியில் இருந்து வரும் ஒரு

பஞ்சாபிக் குடும்பம் எங்கள் வரவை விரும்பவில்லை. செய்வது அறியாது திகைத்து நிற்கையில்

என் கணவரின் ஆஃபீஸ்காரர்கள் எல்லாம் அங்கே போய் சண்டை போட்டு, உடனேயே டி.டி.ஆரை வரவழைத்துப் பகலில் முதல் வகுப்பில் உட்காரலாம் என்ற சட்டத்தை எடுத்துச்

சொல்லும்படிச் செய்து என் கணவரை உட்கார்த்தி வைத்தார்கள். எங்கள் பையன் வேறு ஒரு பெட்டியில், நானும் எங்கள் பெண்ணும் இன்னொரு பெட்டியில், அந்தப் பெட்டியில்

இருந்தவர் எங்களைப் பெரிய மனதுடன் அனுமதித்தார். இப்படியாக நாங்கள் டிக்கெட்

இருந்தும் ஒண்டுக் குடித்தனத்தில் இருப்பது போல் ஒண்டிக் கொண்டு போனோம். மேலும் அது நாள்வரை நாங்கள் எங்கே போனாலும் நாங்கள் நால்வரும் ஒரு பெட்டியிலும், என் மாமனார்,

மாமியார் கூப்பேயிலும்(பக்கத்திலேயே) வருவார்கள். இப்போது மாமனார், மாமியார் பம்பாயில் இருந்த அவர் தம்பியிடம் இருந்ததால் நாங்கள் 4 பேர் மட்டும். இது வரை சேர்ந்து

வந்த நாங்கள் உடலளவில் பிரிந்து உட்கார்ந்து வந்தது அதுவே முதல் முறை. என் பையன் மாற்றி, மாற்றி எங்கள் பெட்டி, அப்பா இருக்கும் பெட்டி என்று வந்து கொண்டிருந்தான்.


நசிராபாத்திலும் வண்டி உடனே கிளம்பவில்லை. ஒரே கவலையாக இருந்தது. கடைசியில் ஒருத்தர் போய் விசாரித்ததில் நசிராபாத்தில் இருந்து "ப்யாவர்" ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் கிட்டத்தட்ட ப்யாவர் ஸ்டேஷனின் அவுட்டரில் ஒரு கூட்ஸ் வண்டி தடம் புரண்டதில் (அது பெட்ரோல் ஏற்றிச் செல்லும் கூட்ஸ்) அது சரியானதும்தான் வண்டி கிளம்பும் என்றார்கள். ஒரு வழியாக வண்டி கிளம்பிப் பக்கத்து ஸ்டேஷன் போனதுமே ரயில்வே ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் வந்து வண்டியில் யாரும் புகை பிடித்தல், மற்றும் உடனடியாகத் தீப்பிடிக்கும் வஸ்துக்கள் இருந்தால் எடுத்து விடும்படி அறிவிப்புச் செய்தார்கள். இந்த அறிவிப்பு "ப்யாவர்" ஸ்டேஷன் வரை தொடர்ந்தது. ப்யாவர் ஸ்டேஷனில் வண்டி மிக மிக மெதுவாக ஊர்ந்தது. சக்கரங்களின் உராய்வால் ஏற்படும் தீயைத் தடுப்பதற்காக. வண்டி ஸ்டேஷனில் நுழைய 40 நிமிஷம் ஆச்சு என்றால் ஸ்டேஷனில் இருந்து மெதுவாக வெளியே வந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை மெதுவாக வர ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது. அது வரை எல்லாரும் சாப்பிடக் கூட இல்லை. சாப்பாடு கையில் கொண்டு வந்த சாமான்களுடன் இருந்தது.கையில் கொண்டு வந்த சாமான்கள் எங்கேயோ இருந்தன. போன உடன் சமைக்கப் பாத்திரங்கள், ஸ்டவ் அடுப்பு, வாளி, சமையல் சாமான்கள், ஒருவாரத்திற்குத்
தேவையான உடுப்புக்கள் அதில் அடங்கும்.

ஒருவழியாக நாங்கள் இறங்கும் வரை அந்தப் பஞ்சாபி எங்களைத் திட்டிக் கொண்டே வர,

அஹமதாபாத்திற்கு மாலை வர வேண்டிய ரயில் இரவு 10-00 மணிக்குப் போய்ச் சேர்ந்தது.

நாங்கள் போகவேண்டிய செளராஷ்ட்ரா மெயில் நாங்கள் ப்ளாட்பாரத்தில் இறங்கி

சாமான்களை வைக்கும்போது சொல்லிவைத்தால் போல் கிளம்பிக் கொண்டிருந்தது. அவுட்டரில்

இருந்தே பார்த்துக் கொண்டு வந்தோம்.ரெயில் நின்று கொண்டிருந்தது. இன்னும் பத்து

நிமிஷம் இருந்தால் போய்ப் பிடிக்கலாம் என்று நினைத்தோம். சரியாக நாங்கள் போய்

ப்ளாட்ஃபார்மில் கால் வைக்கவும் வண்டி கிளம்பவும் சரியாக இருந்தது. அடுத்த வண்டி இரவு

12-00 மணிக்கு ஜாம்நகருக்கு முன்னால் உள்ள "ஹாப்பா" என்ற ஸ்டேஷன் வரை போகும். அந்த வண்டி வரும். அது காலை 10-30 மணி போல் ஹாப்பா போகும்.

அங்கிருந்து ஜாம்நகருக்கு ஆட்டோவோ அல்லது வேறு வண்டியோ பிடித்துப் போகவேண்டும். அதை விட்டால் மறுநாள் காலை பம்பாயில் இருந்து வரும் செளராஷ்ட்ரா எக்ஸ்ப்ரஸ்

வரும். அதில் நாள் பூராப் போக வேண்டும். அது காலை 8-00 மணி அளவுக்குத் தான் அஹமதாபாத் வரும். என்ன செய்வது என யோசித்தால், என் கணவரோ "ஹாப்பா"வண்டியில் போய்விடலாம் என்று கூறினார். டிக்கெட் வாங்க வேண்டாம். ஆனால் அதில் முதல்

வகுப்பு இல்லை. ஜனதா வண்டி, எல்லாம் 2-ம்வகுப்புத் தான். அதில் ஏதாவது இடம் இருக்கிறதா என்று பார்த்தால் எல்லாம் பூர்த்தி ஆகி இருந்தது. இரவு தூங்கவே இல்லை. குழப்பமாக இருந்தது. ஆனால் என் கணவர் முடிவு எடுத்து விட்டார்,ஜனதாவில்

போவது என்று. எங்க வீட்டில் ஜனநாயகம் தான். எல்லாரும் அவர் அவர் அபிப்பிராயத்தைத்

தாரளமாகச் சொல்வோம். கத்திச் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் இறுதி முடிவு அவர்

எடுப்பதுதான். அதில் மாற்றம் இல்லை. ஆகவே இரவு வண்டி வந்ததும் டி.டி.ஆரிடம் கேட்டால் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் ஒரு இடம் கூட இல்லை. நசிராபாத்தில்

கிட்டத்தட்ட 30,40 பேர் வந்திருந்து ஒரு மஹாராஜாவை வழி அனுப்புவது போல் அனுப்பி

வைத்திருக்க இங்கே சாமான்கள் ஏற்றமுடியாமல் தவித்துக் கொண்டு சாமான்களை ஏற்றிக் கொண்டு பொதுப் பெட்டியில் ஏறினோம். அந்தக் காலத்துப் பெட்டி, எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. உட்காரவே இடம் இல்லை.

எல்லாக்கூட்டமும் நர்மதை நதிக்கரையில் உள்ள "ஓங்காரேஷ்வர்" கோவிலுக்குப் போய்விட்டு வருகிறது. சாமான் செட்டுக்களுடன் உள்ளெ நுழைந்த எங்களைப் பார்த்து மிரண்டார்கள். சாமான்களை எல்லாம் போகும் வழி, வரும் வழியில் ஒரு மாதிரி, கவனிக்கவும், ஒருமாதிரிதான் அடுக்கிவிட்டுக் கழிப்பறைக்குப் போகும் வழியில் எங்கள் படுக்கையைப் பிரிக்காமல் போட்டுவிட்டு அதன்மேல் நானும், எங்கள் பெண்ணும் உட்கார்ந்தோம். ஒரு பெட்டியின் மேல் எங்கள் பையன் உட்கார, என் கணவரும் எங்களுடன் ஒண்டிக் கொண்டார். முதல் வகுப்பு டிக்கெட்டுடன் பொது 2-ம் வகுப்பில் கழிப்பறைப் பக்கம் உட்கார்ந்து வந்தது முதல் முதல் நாங்களாகத் தான் இருக்கும். டிக்கெட் பரிசோதிக்க வந்த அலுவலர் எங்கள் டிக்கெட்டையும், எங்களையும் விசித்திரமாகப் பார்த்துவிட்டு, "ஏன் காலை வண்டியில் போயிருக்கலாமே?" என்று கேட்டார். நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டோம். என் கணவர் பதிலே சொல்லவில்லை. சற்று நேரத்துக்கு எல்லாம் உட்கார்ந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சம் அனுசரித்துக் கொண்டு எனக்கும், என் பெண்ணுக்கும் இடம் கொடுத்தார்கள். நேரம் போகப் போக என் கணவருக்கும், பையனுக்கும் இடம் கிடைத்தது. ஒரு வழியாக ரெயில் ஹாப்பா ஸ்டேஷனுக்குக் காலை 11-00 மணி அளவில் போய்ச் சேர்ந்தது. ஊரைப் பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. கண்ணுக்குக் குளுமையான ராஜஸ்தான் நசீராபாத்தில் இருந்து விட்டு,இங்கே வந்துட்டோமே இதுதான் உண்மையில் பாலைவனம் என்ற எண்ணம் தோன்றியது. மனம் கலங்கியது. ஸ்டேஷனுக்கு என் கணவரின் அலுவலகத்தில் இருக்கும் 2 நபர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த வண்டியில் எங்களை எதிர்பார்க்கவில்லை, முதல் வண்டியில் வரவில்லை என்றதும், எதற்கும் பார்க்கலாம் என்று வந்திருந்தார்கள். எங்களை இந்த வண்டியில் பார்த்த அவர்களுக்கும் அதிர்ச்சிதான். அவர்களிடம் நான் முதல் முதல் கேட்ட கேள்வி இது தான்: இங்கே மரங்கள் இருக்கிறதா?முக்கியமாக வேப்பமரம் உண்டா? பறவைகள் உண்டா?" என்பதுதான். உங்க க்வார்ட்டர்ஸிலேயே சுற்றி வேப்பமரங்கள் தான் என்றார் அவர்.

4 comments:

  1. சந்தோஷம்.. வேப்பமரம் தான் உங்க குடியிருப்புனு சரியா சொல்லிருக்கீங்களே :)

    வடக்குல எல்லாம் ரயில் பயணம் இப்படி இருந்தாதான் நல்லா இருந்ததா அர்த்தம் ;)

    மாலை மரியாதையுடன் ஏற்றினார்களா.. என்னது இது, மாத்துங்க வாக்கியத்த!

    ReplyDelete
  2. வேப்ப மரம் வீட்டைச் சுத்தினு தான் சொல்றேன் போர்க்கொடி, நறநறநற, அப்புறம் மாலை மரியாதைன்னா என்ன தப்பு? நம்ம எடுத்துக்கிற விதத்திலே எடுத்துக்கணும். போர்க்கொடியைத் தூக்கிட்டே இருந்தா எப்படிப் புரியும்? :D

    ReplyDelete
  3. எங்க போனாலும் ஒரு அட்வென்ச்சர் இல்லாம போக மாட்டீங்க போல...உங்க நல்ல நேரம் பாவம் அவங்க மூனு பேருக்கும் ஒட்டி அவங்களூம் கஷ்ட பட்டு இருக்காங்க
    :-)

    ReplyDelete
  4. ச்யாம், ,இது மட்டுமா? இன்னும் இருக்கே, கொஞ்சம் கொஞ்சமா வரும் பாருங்க! :D

    ReplyDelete