எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 02, 2006

சிறப்புக்கள் மிகுந்த சின்னமஸ்தா தேவி.

திருமதி விசாலம் அவர்கள் தான் பார்த்த சின்னமஸ்தா தேவியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறிய தத்துவம் ஓரளவு சரியாக இருந்தாலும், பூரண விளக்கம் அவருக்குக் கிடைக்கவில்லை. எனக்கு அவ்வளவாக இதெல்லாம் தெரியாது என்றாலும் படித்துப்

புரிந்து கொள்ள முயற்சி செய்வேன். எல்லாம் வல்ல அந்தத் தேவியின் ஒவ்வொரு

சொரூபத்திற்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உண்டு என்று நாம் எல்லாரும் அறிவோம். அப்படி இந்த உருவத்துக்கும் ஒரு காரணம், ஒரு காரியம் இருக்கிறது. நம்மால் எளிதில்

புரிந்து கொள்ள முடியாது. எனக்கும் புரிந்து கொள்ள ஆசைதான். ஸ்ரீவித்யா உபாசகர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நான் படித்த வரைச் சின்ன மஸ்தா தேவியைப்

பற்றி எழுதுகிறேன். இதில் ஏதாவது தவறு இருந்தால் அது நான் சரியாகப் புரிந்து

கொள்ளாமையே தவிர நான் படித்தது காரணம் இல்லை. ஏதாவது தவறாக இருந்தால்

விஷயம் தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

முதலில் இந்த தேவியின் உருவம் பற்றி. அதுவே ஒரு கேள்விக்குறிதான். காளியை விடப்

பயங்கரமான சொரூபம் இவளுக்கு. பார்த்தாலே அருவருப்பும், பயமும் கொள்ளும் தோற்றம். பக்தர்களை ரட்சிக்கும் தாய் இந்தக் கோலம் ஏன் எடுத்தாள்? ரதியும், மன்மதனும் இணைந்திருக்கும் போது அவர்கள் மீது தன் இடக்காலை நீட்டி, வலக்காலை ம டக்கி ஆடும் நிலையில் இருக்கிறாள். நிர்வாண கோலத்தில் இருக்கும் இவள் மேனியில் கருநாகம் மாலையாகத் திகழ்கிறது. வலக்கையில் கோடரியும், இடக்கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையையும் ஏந்திக் கொண்டு தன் கழுத்தில் இருந்து வரும் ரத்தத்தைக் கையில்

வைத்திருக்கும் தலைப்பகுதியால் பருகும் தோற்றம். இவள் தோழியரான வர்ணனி மற்றும்

டாகினி இருவரும் இவளைப் போலவே காட்சி அளிக்கிறார்கள்.இது தோற்றம். இப்போது இதன்

அர்த்தம் என்னவென்றால்:

மனத்தை ஒருவழிப்படுத்த என்ன வழி என்று மறைமுகமாகக் கண்டத்தைக் குறிப்பாக

உணர்த்துகிறாள். கண்டத்தைத் துண்டித்துப் பார்த்தால் மனதின் ஸ்வரூபம் தெரியும் என்பார்கள்.

அறுத்தால் உடலை விட்டுப் பிராணன் போய் விடும். ஆனால் கழுத்தை அறுத்தாலும் பிரானன்

கூட்டை விட்டுப் போகாமல் இருப்பதற்குச் செய்யும் யோகம் "ஹடயோகம்" என்பார்கள். ஒரு

உண்மையான யோகி என்றால் அவருக்குத் தன் தலை, உடல் ஆகியவை செயல்படுவது நன்கு

புரியவேண்டும் என்பதை பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரம் உணர்த்துகிறது. அப்படிப்பட்ட

மனத்தைக் கண்டித்து ஏகாக்கிரக சித்தத்தில் செலுத்தும்படி செய்வதே உண்மையான யோகம்.

கண்டஸ்தானத்தில் வாயுசக்கரம் இருக்கிறது. வாயுவின் அம்சமான மனம் கண்டஸ்தானத்தில்

இருக்கிறது. அகண்ட பரிபூர்ணமான பரம்பொருளைக் கண்டமாக்கிப் பின் சின்னா

பின்னமாகக் காட்டி,(சின்னமாகவும், பின்னமாகவும்) இறைவனது மாயாசக்தியால்

இவ்வுலகம் உண்டாகிக் காத்தல், அழித்து லீலை புரிதலைக் காட்டுகிறது.

புருவங்களின் மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் இந்தத் தேவி வேகமாகப் பிரவேசிக்கிறாள்,

அதாவது யோகிகளுக்கு. காலத்தின் உதவி இவளுக்குத் தேவையில்லை. அதிவேகமாக

எப்படி மின்சாரம் அதிவேகமாக நமக்கு ஷாக் அடித்தால் நம் உடலில் பாய்கிறதோ அதை விட

வேகமாகச் சின்னமஸ்தா தேவி கண்மூடித் திறக்கும் முன் சரீரத்தில் வியாபிக்கிறாள். நம்

சரீரத்தில் வலம் வரும் முக்கியமாக இதயத்தை வலம் வரும் 101 நாடிகளில் முக்கியமானவை இடை, பிங்களை, சுழுமுனை. முதுகெலும்பின் நடுவில் இருக்கும் சுழுமுனை தனக்கு இருபுறமும்

இருக்கும் இடை, பிங்களை நாடிகளுடன் பின்னல்போல் பின்னிக்கொண்டு மூன்றும் ஆக்ஞா

சக்கரத்தில் சேருகின்றன. இது ஒரு வகையில் திரிவேணி சங்கமம். இடை கங்கை, பிங்களை யமுனை. சுழுமுனைதான் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி. இந்தச் சுழுமுனைதான் சின்னமஸ்தா தேவி என்று வைத்துக் கொண்டால் இடை வர்ணனியாகவும், பிங்களை டாகினியாகவும்

செயல்படுகிறார்கள்.நம் சரீரத்தில் இருக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியக் கிரந்திகளைத் தன் ஆயுதத்தால் அறுத்து அகில உலகிலும் உள்ள பிரம்மாண்ட சக்தியை நம் உடலில் உள்ள பிரம்மாண்டத்தில் சேர்ப்பதே இதன் தத்துவம். அதாவது மனிதனின் தலை புத்தி என்றால், இந்த புத்தி சக்திக்கு அப்பாற்பட்ட பரம்பொருள் இருக்கிறது. தலையைத் துண்டித்தல் என்பது புத்தியானது சக்தியைத் தாண்டி நிற்கிறதுக்கு அடையாளம். சகல இந்திரியங்களையும்

ஜெயித்தால்தான் புத்தியானது சக்தியைத் தாண்ட முடியும். அதனால் தான் இந்த தேவி தானும்

நிர்வாண கோலத்தில் ரதியும் மன்மதனும் இணந்திருக்கும் கோலத்தில் இருக்கும்போது

அவர்கள் மீது ஏறி நின்று ஆடும் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ச்கலத்தையும் ஜெயித்துத் தான், தனது என்ற உணர்வு போனால் தான் அப்படிப்பட்ட நிலைமை அடைய முடியும் என்று ஸ்ரீவித்யா உபாசகர்கள் கூறுவார்கள்.இப்பிறவியில் அப்படி எல்லாம் நாம் இருப்போமா என நினத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் இதன் தாத்பர்யம் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

டாக்டர் நடராஜன் என்னும் தேவி உபாசகர் (திரு நஜன், தற்சமயம் இல்லை) ஸ்ரீவித்யையைப்

பூரணமாகக் கற்றுக் கையாண்டவர் என்றும் அவர் பிரசுரித்துள்ள "தசமஹாவித்யா"

என்னும் நூலில் இந்தத் தேவியைப் பற்றி இன்னும் அறிய முடியும்
என்றும் கூறுகிறார்கள்.

ஆதாரம்: ஜபல்பூர் நாகராஜசர்மா.

நம்பிக்கைக் குழுவிற்காகக் கீதா சாம்பசிவம்.

7 comments:

  1. nice one - though i speak of agonism and athesim - i have a deep interest in knowing the theology of hindu gods. I Have a keen interest in those to know. I have heard of this devi as the most dreadful to kalli but never had read a describtion about her o well ever.

    By the way - what is the mythology follwed with this goddess and any theology surface with this goddess in Hindu mythology?

    I will try to find some more information about this devi with my friends sources ( ellam - desandrigal than - antha kuttathullymm ayikiyam aven appa appa)

    ReplyDelete
  2. சே..சீகிரம் தலைவர் ரஜினி மாதிரி நானும் இமயமலை போயிடுவேன் போல.. எங்க திரும்பினாலும் பக்தி ரசம் சொட்டுதே..

    ReplyDelete
  3. புதிய தகவல்கள்! நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. heheheheh after ten years!

      Delete
    2. இதுதான் வலைப்பதிவுகளின் சிறப்பம்சம். எப்ப வேணுமுன்னாலும் தேடலாம், வாசிக்கலாம்!

      Delete
    3. அருமை ஜீ

      Delete
    4. அருமை ஜீ

      Delete