எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 17, 2011

இளவரசி ஜான்சன் அவர்களே

இளவரசி ஜான்சன்

என்னுடைய சிதம்பர ரகசியம் தொடர் அப்படியே ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரு கமா, புல் ஸ்டாப் விடாமல் உங்களோட வலைப்பக்கத்திலே காப்பி,பேஸ்ட் பண்ணி இருப்பதைப் பார்த்ததும் மனம் ரொம்பவே வருந்துகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே விரும்பத் தகாத நிகழ்வுகள். இது ரொம்பவே பாதிக்கிறது. ஏற்கெனவே என்னுடைய பிள்ளையார் தொடர்கள் மழலைகளில் வந்ததை ஒருத்தர் காப்பி,பேஸ்ட் பண்ணிப் போட்டிருந்தார். ஆனால் அவர் கடைசியில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்ததால் விட்டுட்டேன். நீங்க பெயரைக் குறிப்பிடாமல் இப்படிச் செய்யலாமா?????????????

9 comments:

  1. என்னுடைய எழுத்தையும் பல தளங்களில் 'எடுத்துப் போட்டு'ப் பார்க்கிறேன்.பெரும்பாலும் பெயர் போட்டு லிங்க் கொடுத்து விடுகிறார் கள். தான் பெற்ற ரசனை, இன்னொருவரும் பெறட்டும் என்கிற நல்லெண்ணத்தில் தான்.

    ஆனால், இவர் செய்வது மாதிரி செய்தால் எழுதியவருக்கு 'சொரேல்'
    என்று தான் இருக்கும். இதை நீங்கள் கண்குத்திப் பாம்பாய் செயல்பட்டுக் கண்டுபிடித்தது தான் ஆச்சரியம். அதுவும், அங்கு காணக்கிடைக்கிற கமெண்டுகளில் உங்கள் பெயரைப் பார்த்து.. (தொடர் அருமையாப் போகுது கீதாம்மா.. தொடரின் முடிவில் முழுவதையும் PDF செய்து ஒரே நூலாக வலையேற்றி விடுங்கள்) பேசாமல் அவரை உங்கள் வலைப்பூக்கு ஒரு லிங்க் கொடுக்கச் சொல்லி, 'நன்றி' போட்டுவிடச் சொல்லுங்கள். விஷயம் முடிந்தது.

    கொசுறு: தலைப்பு சூப்பர்.

    ReplyDelete
  2. இந்த விஷயத்தில் நாம் எப்படி கவனமா இருக்கமுடியும்?

    ReplyDelete
  3. இதுல நாம எப்படி கவன்மாக இருக்க?

    ReplyDelete
  4. என்ன கீதா இது. அனியாயமா இருக்கே. துளசிக்குத் தான் இந்த மாதிரி ஆச்சு.
    உங்களுக்குமா. ரொம்ப வருத்தமா இருக்கு. என்னவோ அயல் நாட்ட்க்கு நம்ம மூளைழயை
    விற்ஃப்பனை செய்வதாகச் சொல்கிறார்களே. இங்கே எழுத்தைத் திருடுபவர்களை என்ன செய்வது:)((((((

    ReplyDelete
  5. வாங்க ஜீவி சார், இது முதல் முறை இல்லை. ஒரு சிலர் நான் எழுதிய ராமாயணத்தில் இருந்தும் கண்ணன் வருவான் தொடரில் இருந்தும் கூட எடுத்துப் போட்டிருக்காங்க. ஆனால் கட்டுரையைப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டிருக்காங்க. கர்ணன் பற்றிய என்னுடைய குறிப்புக்களை அப்படியே வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, எ.பி; கூட மாறாமல் இன்னொருத்தர் தன் பெயரில் எழுதி இருக்கார்! :(

    ReplyDelete
  6. அதான் தெரியலை லக்ஷ்மி. சும்மா விடவும் முடியலை. இப்படிக் கண்டிக்கணும்னு தான் பதிவாகவே போட்டேன். ஏற்கெனவே பிள்ளையார் பற்றிய கட்டுரைகளை அப்படியே காப்பி, பேஸ்ட் ஆக்கி இருப்பதை நண்பர் ஆகிரா ராஜகோபாலன் சுட்டிக் காட்டினார். அப்புறம் கவனிச்சதில் கடைசியில் என்னுடைய பெயரைப் போட்டிருந்ததால் விட்டுட்டேன். :(( இம்மாதிரி நிறையப் பதிவுகளை நண்பர்கள் கவனத்துக்குக்கொண்டு வராங்க. :(( ஒண்ணும் புரியலை.

    ReplyDelete
  7. வாங்க வல்லி, இந்தியா வந்தாச்சா??? இல்லை ஸ்விஸ் தானா?? ஆமாம், நீங்க சொல்றாப்போல் எனக்கு அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கு. ஆனால் இம்முறை தான் வெளிப்படையாகச் சொன்னேன். ஆகிரா பல முறை சுட்டிக் காட்டி இருக்கார். சிலர் பெயரைப் போட்டுடறாங்க. அதனால் விட்டுடலாம்னு விட்டுட்டேன். :((((((

    ReplyDelete
  8. கடைசியில் உங்க பெயர குறிப்பிட்டு ஒரு நன்றியாவது சொல்லியிருக்கலாம்.இப்படி நீங்க எப்படியோ கண்டுபிடித்து விட்டீர்களே மாமி.

    ReplyDelete
  9. அப்புறம் என்ன ஆச்சு?

    ReplyDelete