எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 02, 2014

கொண்டைக்கடலைச் சுண்டல் எடுத்துக்குங்க!

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.  ஆனாலும் சிலருக்கு ராத்திரி நிதானமாச் சுண்டல் சாப்பிடப் பிடிக்கும்.  மதுரையிலே ராத்திரி எட்டரை மணிக்குச் சூடான வேர்க்கடலை வறுத்தது, வேக வைச்சது, அப்புறம் சூடான பட்டாணிச் சுண்டல்னு மணி அடித்த வண்ணம் தள்ளு வண்டியில் வித்துட்டுப் போவாங்க.  இப்போல்லாம் எப்படியோ தெரியாது.

என்னோட பெரியப்பா அவங்க கிட்டேச் சுண்டல் வாங்கிக் கொண்டு மொட்டை மாடியில் போய் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு பருப்பாக ரசித்துச் சாப்பிடுவார். அது மாதிரி இப்போவும் சிலருக்குப் படுத்துக்கப் போறதுக்கு முன்னாடி பக்ஷண வகைகள், சுண்டல்னு சாப்பிடப் பிடிக்கும்.  இன்னிக்கு ஒரு நாளைக்கு அப்படி நினைச்சுட்டு எல்லோரும் எடுத்துக்குங்க!


இன்னிக்குக் கொண்டைக்கடலைச் சுண்டல் தான்.




மி.வத்தல், தனியா, பெருங்காயம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சுண்டலில் சேர்த்திருக்கேன்.  அதனால் நன்றாகவே இருக்கும். :)))))



ரெண்டு படத்திலேயும் வித்தியாசங்கள் எனக்குத் தெரியுது.  உங்களுக்குத் தெரியுதா?  யாருப்பா அங்கே? நிபுணர்கள்?? வந்து சொல்லுங்க பார்ப்போம்!

13 comments:

  1. நிறம் மாறின கடலைகள் கொஞ்சத்தைக் காணோம்! :)))))

    கொ.க.சு கடிக்கக் கொஞ்சம் கஷ்டம்!

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம் நாக்கு சப்தமிடுதல் கேட்குதா?!!!!

    ReplyDelete
  3. மிளகாய் வத்தல், மல்லி, வறுத்து பொடி செய்து போடும் போது சுண்டல் மிக ருசியாக இருக்கும்.

    ReplyDelete
  4. ஹாஹா, இரண்டாவது படம் கொஞ்சம் வெளிச்சம் கம்மியா இருக்கு!

    கொ.க.சு. குழைந்தே இருந்தது. சாப்பிடலாம். :))))

    ReplyDelete
  5. வாங்க துளசிதரன், நீங்கதானா அது? :))) இவ்வளவு சத்தமா இருக்கேனு நினைச்சேன். :)

    ReplyDelete
  6. வாங்க கோமதி அரசு, மொச்சைச் சுண்டலுக்கும் பொடி வறுத்துப் போடலாம். கொண்டைக்கடலைக்குக் கட்டாயமாய்ப் போட்டுடுவேன்.:)

    ReplyDelete
  7. நவராத்திரியின் போது இந்தசுண்டல் தவிர வேறு ஏதும் கிடைக்காதோ.?எங்கள் வீட்டில் தினம் ஒரு பலகாரம் இருக்கும். கொலு வைக்காததால் தண்டலும் கிடையாது. ஹூம். !

    ReplyDelete
  8. நாவூற வைக்கும் பதிவு

    ReplyDelete
  9. வாங்க ஜிஎம்பி சார், அதான் காலம்பர அப்பம், வடை பண்ணியாச்சே! சாயந்திரம் விநியோகத்துக்குச் சுண்டல் தான். அது என்னமோ தெரியலை சரஸ்வதி பூஜைனா அன்னிக்குக் கொண்டைக்கடலை தான் அதுவும் கறுப்புக் கொண்டைக்கடலை தான் வட மாநிலங்களிலும் செய்வாங்க! :)))

    ReplyDelete
  10. வாங்க முருகானந்தம் ஐயா, முதல் வரவுக்கும், ரசனைக்கும் நன்றி.

    ReplyDelete
  11. நேத்து சுண்டல் சாப்பிட வரலையேன்னு வருத்தமா இருக்கு! நன்றி!

    ReplyDelete
  12. நேத்து இல்லை சுரேஷ், வியாழனன்று. ஆகவே சுண்டல் உங்களுக்கு வைக்கலை! :)))))

    ReplyDelete
  13. சுவையான சுண்டல் எடுத்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete