எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 04, 2024

முங் தால் பராத்தா ரெடி! சாப்பிடலாம் வாங்க! :D

 நேத்திக்கு முதல் நாள் பாசிப்பருப்புச் சுண்டல் செய்தேன். நேற்று ஆயுர்வேத மருத்துவரிடம் போவதாக இருந்ததால் காலையிலிருந்து வயிற்றைக் காலியாகவே வைத்திருந்தேன். ஏனெனில் இப்போதெல்லாம் வயிற்றில் ஏதானும் போட்டால் உடனே கழிவறைக்குப் போகும்படி ஆகிறது. சாப்பிடுவது என்னமோ மோர் சாதம் மட்டும் தான். அதையும் பல நாட்கள் கரைத்துக் குடிக்கிறேன். இதுக்கே இந்தப் பாடு படுத்துகிறது வயிறு. என்னோட முதல் விரோதியே என் வயிறு தான். போகட்டும். நேற்றுச் சுண்டல் செய்கையில் மஞ்சள், குங்குமம் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்ததால் சுண்டலைச் சரியான நேரத்தில் அடுப்பிலிருந்து எடுக்கலை. கொஞ்சம் குழைந்து போய் விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்மவர் உடனே எனக்கு வேண்டாம்னு அறிவிப்புச் செய்துட்டார். நான் விடுவேனா என்ன? தாளித்துக் கொட்டித் தேங்காயெல்லாம் சேர்த்துட்டு நிவேதனம் ஆனதும் சாப்பிட்டுப் பார்த்தால் நன்றாகத் தான் இருந்தது. வரவங்களுக்குக் கொடுக்கவும் கொடுத்தேன். அப்படியும் சுண்டல் மிச்சம். சரினு குளிர்சாதனப் பெட்டியில் ஒரு ஓரமாக எடுத்து வைத்தேன்.

இன்னிக்குக் காலம்பர காலை ஆகாரம் பண்ணி ஆகணுமே. சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைச்சுட்டு அந்தச் சுண்டலைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்துக் கொண்டேன். அலுமினியம் சட்டியை அடுப்பில் வைத்துக் கடுகு, சீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு பெருங்காயப் பொடியைச் சேர்த்துச் சுண்டலைக் கொட்டிக் கொஞ்சம் காரப்பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறினேன். உப்புக் கொஞ்சம் போலச் சேர்த்துட்டுச் சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்தேன். பச்சைக்கொத்துமல்லியைத் தண்டோடு பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் ஆற விட்டு உருண்டைகளாய்ப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு சாப்பாத்தியின் உள்ளேயும் வைத்து மூடிப் பின்னர் நன்கு பெரிதாக இட்டுக் கொண்டு அடுப்பில் சப்பாத்திக்கல்லில் போட்டு நெய் விட்டு நன்கு வேக விட்டு எடுத்துக் கொண்டேன். தால் பராத்தா தயார். 


PC: Google

இதையே மைதாமாவில் பிசைந்து கொண்டு இட்டு மூடி எண்ணெயில் பொரித்தெடுத்தால் மூங்தால் கசோடி தயார். காலை வேளையில் எண்ணெய் வேண்டாம் என்பதோடு மைதாமாவு பயன்பாடும் பெரிதாக இல்லை. கசோடியில் சில சமயம் பாசிப்பருப்புக் கலவையோடு பச்சையாகக் கொத்துமல்லி விதைகளை ஒன்றிரண்டாக நசுக்கிச் சேர்க்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வேகவிட்டுச் சேர்க்கலாம். ராஜஸ்தான் கசோடி இல்லை, கசோடா. பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாக இருக்கும். உடைத்து நிறுத்துத் தான் தருவார்கள். 100 கிராம் கசோடா வாங்கினாலே தாராளமாக நான்கு நபர்கள் சாப்பிடலாம். காரம் தான் தலைக்கு ஏறும். அதுவும் நாங்க இருந்த நசிராபாத் கன்டோன்மென்டின் வெளியே பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே இந்தக் கடைகள் நடமாடும் வண்டிகளில் நிற்கும். எல்லாக் கடைகளும் கூட்டம் நிரம்பி வழியும். இத்தோடு சேர்த்துச் சாப்பிட மைதாமாவு ஜிலேபி. நெய்யிலேயே பொரித்திருப்பார்கள் என்பதோடு தித்திப்பும் வழியும். அந்தக் காரமும் இந்த இனிப்பும் ஒன்றுக்கொன்று ஒத்தும் போகும். இதையே காலை உணவாகக் கொள்பவர் பலர் உண்டு.

ஆக மொத்தம் சுண்டலும் வீணாகாமல், காலை ஆகாரமாகத் திப்பிசம் செய்து மாத்தியாச்சு. என் பெண் உனக்கு எப்படி அம்மா இப்படி எல்லாம் தோணுது? என்று கேட்பாள். இன்னிக்கு என்னமோ ஒண்ணும் கேட்டுக்கலை. ஹிஹி, நமக்குத் தான் இப்படி எல்லாம் தோணும். ஃபோட்டோ எடுக்கையில் ஆட்கள் வந்துட்டதால்  ஃபோட்டோ சரியாய் வரலை. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் பராத்தா தயிர், எலுமிச்சை ஊறுகாயுடன் ஜூப்பரோ ஜூப்பரு!

1 comment:

  1. நான் முந்தாநாள் புரோட்டா என்று படித்து விட்டேன்...

    இஃஹி.... இஃஹி... இஃஹி...

    ReplyDelete