எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 30, 2010

கண்ணன் எங்கே? கண்ணன் எங்கே எனத் தேடுபவர்களுக்கு

கண்ணன் இங்கே கண்ணன் இங்கே. போய்ப் பார்க்கவும். நன்றி. தனிமடலில் கேட்டவர்களுக்கும், பின்னூட்டங்களில் கேட்டவர்களுக்கும் ரொம்ப நன்றி.
கண்ணனுக்காக

Sunday, August 29, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! முடிவு!

வித்யா கேட்ட எதற்கும் பதில் சொல்லவே இல்லை ரமேஷ். மெளனமாய்க் காரை ஓட்டினான்.

"எங்கே போகிறோம் ரமேஷ்?" வித்யா கேட்டாள்.

"நம் வீட்டிற்கு! போய்க் குழந்தையை எப்படித் திரும்ப அழைப்பது என்று பார்க்கலாம்!" என்றான் ரமேஷ்.
"ரமேஷ், உள்ளே என்ன நடந்தது??? அதைச் சொல்லுங்கள் முதலில்!"

"ஒன்றுமில்லை, உன்னிடம் சொல்லவேண்டாம் என நினைத்தேன். தெரிந்தால் ரொம்ப வருந்துவாய்!'

"ரமேஷ்!"" வித்யா முகத்தில் கலக்கம் குமிழியிட்டது.

"வித்யா, உன் தோழி சுபா இருக்கிறாளே, அவள் நல்லவள் இல்லை. எனக்கு..... எனக்கு...... சொல்லவே கஷ்டமா இருக்கு. அவளுக்கு யாரோ ஆண் நண்பர் இருக்கிறான் போல! இன்றைக்கு இரவு அவனை வீட்டுக்கு வரச் சொல்லி இருந்திருக்கிறாள். நம்மை மிரட்டினானே வில்லன் அவன் யார்னு நினைக்கிறே?? சுபாவின் கணவன் அரவிந்தன். அவனுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து போய் அவளை மிரட்டுவதற்காக இந்த நாடகம் நடத்தி இருக்கிறான்."

"ஓ, அப்படியா?? அப்போ நம்மை எதுக்குப் பாடாய்ப் படுத்தணும்?? நாம என்ன செய்தோம்? எந்த வகையிலே நமக்கும் அவங்களுக்கும் சம்பந்தம்??" வித்யா விடவில்லை. கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டாள்.

"ஓஓஓ, அந்த ஆள் நானோ என நினைத்திருக்கிறான். நான் இல்லைனு தெரிஞ்சதும் விட்டுட்டான். அடுத்து அவன் யாருனு தேடுவான் போல!" என்றான் ரமேஷ்.

வித்யா பதில் பேசவில்லை. அதற்குள் வீடு வந்துவிட்டது. ரமேஷுக்கு அவசரம். "வித்யா, முதல்லே குழந்தையைத் தேடும் வழியைப் பார்க்கணுமே, அந்தப் பழைய வேலைக்காரியின் விலாசம் தெரியுமா உனக்கு? அவள் மூலம் தான் இன்னிக்கு வந்தாளே அவளைக் கண்டு பிடிக்கணும். போலீஸில் சொல்லிடுவோமா?" ரமேஷ் பரபரத்தான். வித்யா காரைவிட்டு இறங்கவே இல்லை. அசையாமல் உட்கார்ந்திருந்தாள். ரமேஷ் யோசனையோடு அவளைப் பார்த்துக்கொண்டே கீழே இறங்கினான். வீட்டுப் படிகளில் காலை வைத்து அழைப்பு மணியை அழுத்தினாலும் யார் வரப் போகிறார்கள் என எண்ணியவாறே, தன் பையில் இருந்த மாற்றுச் சாவியைத் தேடினான். கதவு திறந்தது.

"வித்யா, என்ன அங்கேயே உட்கார்ந்திருக்கே?? சீக்கிரம் உள்ளே வா! வீட்டுக்குள்ளே யாருனு தெரியலையே? கதவு திறக்குதே!" ரமேஷ் சத்தம் போட, "வீட்டில் அந்த வேலைக்காரப் பெண் தான் ரமேஷ் இருப்பாள். வேறே யாரும் இல்லை!" வித்யா உட்கார்ந்த இடத்தில் இருந்தே சொன்னாள். தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. வித்யாவைப் பார்த்தவன் வீட்டுக்குள்ளே பார்த்தான். குழந்தையைப் பார்த்துக்க வந்த புதுப் பெண் தான் நின்றிருந்தாள். ரமேஷுக்கு ஆத்திரம் பொங்கியது. "ஏய், எங்க குழந்தையை என்ன செய்தே? எங்கே குழந்தை?" ரமேஷ் கையை ஓங்கிக் கொண்டு பாய, வித்யா காரிலிருந்து மெல்லக் கீழே இறங்கி உள்ளே வந்தாள். ரமேஷின் ஓங்கிய கையைப் பிடித்துக் கொண்டாள்.

"பாவம் ரமேஷ், இவள் அப்பாவி, இவளுக்கு ஒன்றும் தெரியாது. இவளை விட்டு விடுங்க, வீட்டுக்குப் போகட்டும்!" என்றாள்.

"வித்யா, வித்யா, என் விதுக்குட்டி, என்ன சொல்றே நீ? நம்ம குழந்தையை இவள்........"

"மேலே போய்ப் பாருங்க ரமேஷ், குழந்தை எங்கேயும் போகலை. இருந்த இடத்தை விட்டுக் குழந்தை நகரவும் இல்லை. இந்தப் பெண்ணும் இங்கேயே தான் இருந்தாள். குழந்தை தூங்குவாள் அவளோட அறையில். நீங்க போய்ப் பார்த்துக்குங்க. அதுக்குள்ளே நான் இவளை செட்டில் பண்ணி அனுப்பிடறேன்."

குழப்பம் நீங்காதவனாய் ரமேஷ் மேலே சென்றான். குழந்தையின் அறையில் மெல்லிய ரீங்காரத்தோடு ஏசி இதமான குளிரில் ஓடிக் கொண்டிருக்கத் தன் பிரியமான பொம்மையை அணைத்த வண்ணம் உறங்கிக்கொண்டிருந்தாள் குழந்தை. முகத்தில் சிரிப்பு. ஏதோ கனவு போலும், ரமேஷின் நெஞ்சை உலுக்கியது அந்தக் காட்சி. ஆஹா, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? மனதைத் தான் இழந்தவைகளின் நினைவுகள் உலுக்க, அதை உதறிக்கொண்டு குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் தொடுகையில் கண் விழித்த குழந்தை, "அப்பா" என்று சிரித்துவிட்டு மீண்டும் தூங்கிப் போனது.

மெல்ல யோசனையுடன் தங்கள் அறைக்கு வந்த ரமேஷ் அங்கே வித்யா இல்லை என்று கண்டதும் ஆச்சரியத்துடன் கீழே இறங்கினான். ஹாலிலேயே சோபாவில் அமர்ந்திருந்த வித்யாவின் கண்களில் கண்ணீர். ரமேஷ் அவளை அணைத்துத் தேற்ற முயன்றான். "போனால் போகிறது வித்யா, பணம், காசு, நகை நட்டுத்தானே? அதான் நான் இருக்கிறேனே? உன் வேலை என்னமோ அப்படியே இருக்கிறது! என் வேலைதானே? நான் சீக்கிரமாய் ஒரு வேலை தேடிக் கொள்கிறேன். எல்லாத்தையும் சம்பாதிச்சுக்கலாம்." என்றான்.

"ரமேஷ், ஆனால், ஆனால் நான் இழக்க இருந்தது உங்களை அல்லவோ?? அந்த இழப்பு வேண்டாம் என்பதால் தானே இந்தப் பாடு பட்டேன்? பட்டோம்??"

ரமேஷுக்கு இப்போது உண்மையிலேயே தூக்கிவாரிப் போட்டது! "வித்யா!" அவனுக்குப் பேச நா எழவில்லை. வித்யாதான் பேசினாள். மடை திறந்தாற்போல் பேசினாள். சுபாவுடன் அந்தரங்கமாய்ப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருநாள் தூக்கத்தில் அவன் சுபாவின் பெயரைச் சொல்லி இருக்கிறான். அப்போது வித்யா கொஞ்சம் சந்தேகப் பட்டுக் கேட்டபோது சுமியின் பெயரைத் தப்பாக அவள் காதில் வாங்கிக் கொண்டதாய்ச் சொல்லி அவளைக் கேலி செய்திருக்கிறான். இன்று அதை நினைவு படுத்திய வித்யா, அதன் பின்னரும் பலநாட்கள் அவன் தூக்கத்தில் சுபாவின் பெயரும், அவளைச் சந்தித்த இடங்களைப் பற்றியும், சுபாவின் அழகைப் பற்றியும் அவன் வர்ணித்ததையும் கூறினாள். ரமேஷுக்கு அவமானமும், வெட்கமும் பிடுங்கித் தின்றன. இப்படியா பலகீனமாய் இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கூசிக் குறுகிப் போனான். கடைசியில் அவர்கள் சந்திப்பு தனியாக நடைபெறப் போவதை அவனுக்கு சுபாவிடமிருந்து வந்த எஸ் எம் எஸ் ஒன்றின் மூலம் தற்செயலாகத் தெரிந்து கொண்டதைச் சொன்னாள் வித்யா. அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்குச் சென்றதையும், அங்கே அவள் இல்லை என்றும், அப்போது தான் அவள் கணவனைச் சந்தித்ததையும், அவள் கணவனுக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது என்றும் சொன்னாள். அவர் அவர்கள் இருவரையும் ரெஸ்டாரண்டுகளிலும், சினிமா தியேட்டர்களிலும் நெருக்கமாய்ப் பார்த்திருந்தார் என்றும் அதைச் சொல்லி வருந்தியதாகவும் கூறினாள். அவருக்கும் அவர் மனைவியின் மேல் அளவற்ற காதல் என்பதையும் சொல்லி, மனைவிக்கும் புரிய வைக்கவேண்டும், அதே சமயம் உன் கணவனும் திருந்த வேண்டும் என்று சொல்லவே நாங்கள் இருவருமாய் இந்தத் திட்டத்தைப் போட்டோம் என்று சொல்லிக் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.

ரமேஷ் திக்பிரமை பிடித்து நின்றான். "வித்யா, வித்யா, இப்போ இந்த விஷயம் தெரிந்து போனதுக்கப்புறமும் நீ என்னிடம் அதே பிரியத்தோடு இருப்பாயா? தப்பு வித்யா, தப்பு. இவ்வளவு அருமையான மனைவியைப் புரிஞ்சுக்காமல் ஒரு கண நேர சுகத்தை எண்ணித் தப்புப் பண்ணிப் படுகுழியில் விழ இருந்தேனே. அப்படி மட்டும் நடந்திருந்தால் நம்மிருவர் வாழ்க்கை மட்டுமில்லாமல் சுபாவின் குடும்பமும் சீரழிந்து போயிருக்குமே! வித்யா, நீ எவ்வளவு புத்திசாலி, எத்தனை நல்லவள், எப்படிச் சாதுரியமாக என்னை ஒரு கேள்வி கூடக் கேட்காமல் இதிலிருந்து மீட்டுவிட்டாய்? ஆனால், ஆனால் நான் இதற்குத் தகுதியானவனா? என்னோடு இனியும் நீ சேர்ந்து வாழ்வாயா??"

ரமேஷ் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான். வித்யா பதிலே பேசவில்லை. "உண்மைதான் ரமேஷ். ஒரு கட்டத்தில் எனக்கு உங்களை விட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது தான். அப்புறமாய் நிதானமாய் உட்கார்ந்து யோசித்தேன். நானும் மனித வள மேம்பாட்டில் மக்கள் நலத்துறையில் இருந்து கொண்டு என் குடும்பத்தை நானே அழித்துக் கொள்வதால் என்ன லாபம்? நான் செய்யும் வேலைகளுக்கு என்ன அர்த்தத்தை அவை கொடுக்கும் என்று யோசித்தேன். அப்புறம் தான் அரவிந்தன் அவர்கள் இந்த வழியைக் காட்டினார். முள் மீது விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்க வேண்டும் என்றே முயன்றோம். ஆனாலும் சில இடங்களில் கொஞ்சம் கிழிந்து தான் போனது. அஜாக்கிரதையால் அல்ல. வேறு வழியில்லாமல் முள் ஆழமாகப்பதிந்திருந்ததே! அதனால்! ஆனாலும் கூடியவரையிலும் எடுத்துவிட்டோம்." என்றாள். மேலும்,"இன்னும் சில நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்குமே!" என்றும் சொன்னாள்.

"அப்படியானால், அப்படியானால், வித்யா, நீ என்னுடன் இருப்பாயல்லவா?? போகிறது, பணம் காசு போனால் போகிறது. நீ மட்டும் இருந்தால் போதும்!"

"ரமேஷ், என்னை இவ்வளவு நேசிக்கும் நீங்களா அப்படி ஒரு காரியத்துக்கு உடன்பட்டீர்கள்?" வித்யா கேட்க, "தெரியலை வித்யா, எனக்கே புரியலை, ஒருவேளை நாம் ஆண்மகன் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததோ? அல்லது சுபாவின் ஏதோ ஒரு செயலால் கவரப் பட்டேனோ? என்னனு புரியலை. ஆனால் இப்போ யோசிச்சுப் பார்த்தால் எவ்வளவு அபத்தம் என்று தெரிகிறது."

வித்யாவின் கைகளைப் பற்றினான் ரமேஷ். "வித்யா, இதைக் கேட்கக் கூட எனக்குத் தகுதியில்லை. ஆனாலும் நீ என்னை மன்னிப்பாயா?" அவள் கைகளைப் பற்றித் தன் கண்களில் வைத்துக்கொண்டான். அவன் கண்ணீரால் அவள் உள்ளங்கைகள் நனைந்தன. அப்படியே அந்தக் கைகளைத் தன்னைச் சுற்றிப் பிணைத்துக்கொண்ட வித்யா, "நான் மட்டும் இல்லை ரமேஷ், இழந்த பணமும் கிடைக்கும், நகைகளும் லாக்கரிலேயே பத்திரமாய் இருக்கு. குழந்தை எப்படி இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லையோ, அது போலப் பணமும் எல்லாமும் எடுக்கப் படவில்லை. மேலே மட்டும் பணக் கட்டு ஒன்றை வைத்துவிட்டு உள்ளே பேப்பர்தான் என்றும் நகைகளுக்குப் பதிலாக அது வெறும் பை என்றும், சும்மா நகை வைக்கும் பெட்டிகள், பைகளை அதிலே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

"ஓஓ,அதுவும் அப்படியா?? ஆனால் என்னோட வேலை?? அது போனது போனதுதானே!" ரமேஷின் முகம் கூம்பியது. வித்யா, "இல்லை ரமேஷ், அப்படி எல்லாம் உங்களைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் வேலையைச் செய்வேனா நான்? அந்த ஹோட்டலில் என்னிடம் கவரை வாங்கிக் கொள்ள வந்தவர் திரு அரவிந்தனின் பிசினசில் சம்பந்தப் பட்டவர். அரவிந்தன் என்னிடம் கொடுத்த கவரிலும் அவருடைய சொந்த பிசினஸ் சம்பந்தப் பட்ட தேவையான விபரங்களே இருந்தன."

ரமேஷுக்கு விம்மி விம்மி அழவேண்டும்போல் இருந்தது. வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் வித்யாவை இறுக அணைத்துக்கொண்டான். " செத்துப்போனால் தவிர மற்றபடி இனி உன்னை நான் பிரியமாட்டேன். எனக்குப் புரிந்துவிட்டது. என் பொக்கிஷம் நீ! ஆனால் ஏன் இப்படிச் செய்தாய் வித்யா? என்னை ஏன் இப்படிப் பரிதவிக்க விட்டாய்?? நேரிலேயே கேட்டிருக்கலாமே?"

"ரமேஷ், உங்களைப் பொறுத்தவரை என்னை ஒரு உயிருள்ள பொம்மையாகவே நடத்தி வந்தீர்கள். இன்னும் சொல்லப் போனால் சிறு பையன்கள் பட்டாம்பூச்சியைப் பிடித்து சோப்புப் பெட்டிக்குள் வைத்து அதை மற்றச் சிறுவர்களிடம் காட்டி, வண்ணாத்திப் பூச்சி டான்ஸ் ஆடுது பார், என்று சொல்லி அது துடிக்கிறதை வேறு மாதிரியாக அர்த்தம் பண்ணிக் காட்டிப் பெருமை அடித்துக்கொள்வார்கள். கிட்டத் தட்ட அதுபோல, நீங்கள் என்னை விடமாட்டீர்கள், ஆனாலும் உங்கள் கெளரவத்துக்கு ஒரு கிரீடம் போலவே என்னை நினைக்கிறீர்கள், எனக்கும் சொந்தமாக உணர்வுகள், கோப, தாபங்கள் உண்டு என நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையே? அதான் உங்கள் உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் என் உணர்வுகளையும் காட்டினேன். உங்கள் ஆசையும், பாசமும் இன்னொரு பெண்ணிடம் போவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க முடியுமா என்னால்?? சோப்புப் பெட்டியில் இருந்து பறக்கத் துடிக்கும் பட்டாம்பூச்சிபோலவே நானும் உங்களை, உங்கள் அன்பை மீட்டு எடுக்கத் துடித்தேன். "

ரமேஷுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வித்யாவின் அழுத முகத்தில் ஆழமாக முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான். அன்பு உள்ளங்கள் இணைந்ததும் அங்கே பேச்சுக்கு இடமில்லை. நாமளும் போவோம். அவங்களைக் கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டு!
*************************

எல்லாரும் என்னை மன்னிக்கணும். இது நான் சொந்தமாய் எழுதின கதையே இல்லை. சவான் சீகல்ஸ் நடிச்ச ஒரு படத்தைச் சில நாட்கள்/மாதங்கள் முன் பார்த்தேன். அப்போ இருந்து இந்தக் கதையும் அதன் கருத்தும் மனதைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. இதை நான் நான்காவது அத்தியாயம் எழுதும்போதே ரசிகன் ஸ்ரீதர் கண்டு பிடிச்சுட்டுக் கேட்டார். அதனால் அவரோட பின்னூட்டத்தை நிறுத்தி வைச்சேன். நேற்றைய பதிவில் ஜீவி சாரும் மறைமுகமாத் தெரிஞ்சோ தெரியாமலோ சினிமாக்கதைனு சொல்லிட்டார். நான் செய்தது இந்தக் கதையை இந்திய, அதுவும் தமிழ்நாட்டுக்கு ஏற்றவாறு ஒரு சில மாற்றங்களைச் செய்தது மட்டுமே. மற்றபடி புகழோ, கதையின் சுவாரசியம் குறையாமல் இருந்ததோ அதன் மூலகர்த்தாவையே சாரும். புகழ்ந்து பாராட்டினவர்கள் அனைவரும் கதையின் மூலத்தை எழுதினவரைப் பாராட்டவும். நன்றி.

Saturday, August 28, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 8

ரமேஷ் அங்கே இங்கே நகரவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான். காரை அங்கிருந்து கிளப்பவும் முயன்றான். இப்போது அவன் பிடரியிலும் ஒரு துப்பாக்கி. எங்கிருந்தோ இன்னொரு துப்பாக்கி வித்யாவின் கழுத்திலும் பதிந்தது. "திரும்பாதே, ரமேஷ்! ஏதானும் பேசினாய் என்றால் முதலில் உன் மனைவியின் பின்னங்கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து முன்னால் வெளியே வரும். நீ அதைப் பார்த்து ரசித்துவிட்டே போவாய்! எப்படி ஆனாலும் உன்னை முதலில் அனுப்ப மாட்டேன். நீ குடும்பத்தில் பற்றுள்ளவன் ஆச்சே?? உன் மனைவிக்கப்புறம் உன் குழந்தை. முதலில் கால்??? ம்ஹும், வேண்டாமா? சரி அப்போ கை விரல்??" என்று கேட்டான். "பாவி, பாவி" ரமேஷ் தன்னை மறந்து அவன் மேல் பாய்ந்தான். வித்யா அலறினாள். "அவன் சொன்னமாதிரி செய்துடுங்க!" என்றாள். "என்ன சொல்றே நீ? யாருன்னே தெரியாது. கொல்லச் சொல்றான். கொன்னுட்டு அப்புறம் பாடியை என்ன செய்யறது? அப்புறம் போலீஸுக்கும் இவனே சொல்லிடுவான். இல்லைனாலும் அவங்க சொந்தக் காரங்க தேட மாட்டாங்களா? எப்படி இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவாங்க வித்யா. அப்புறம் நான் வெளியே நடமாட முடியாது. ஆயுள் தண்டனையோ, தூக்குக் கயிறோ!" ரமேஷ் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

எதுக்கும் அசரவில்லை வில்லன். "போகிறாயா இல்லையா?" என்று கேட்டான் மீண்டும். வித்யா கெஞ்சினாள். உள்ளே போய் அங்கே இருக்கிறவங்க கையிலே, காலிலே விழுந்து இவனைப் பத்திச் சொல்லித் தப்பிக்கலாமோ என்ற நப்பாசை பிறந்தது ரமேஷுக்கு. என்றாலும் வேண்டா வெறுப்பாக எழுந்தான். "ம்ம்ம்ம், இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்!" என்ற வண்ணமே அவன் கையில் வில்லன் துப்பாக்கியைக் கொடுக்க, அதனாலேயே அவனைச் சுட்டுவிடலாமோ என்று ஒரு கணம் நினைத்தான் ரமேஷ். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன் போல, வில்லன் சிரித்தான். "நீ என்னைச் சுடுவதற்கு முன்னர் உன் மனைவி போய்விடுவாள். கொஞ்சம் என் பக்கம் நீ அசைந்தாலும் சரி, இன்னும் துப்பாக்கி அவள் கழுத்தில் தான் வைத்திருக்கிறேன்." என்றான். பல்லைக் கடித்துக்கொண்டு அந்த வீட்டை நோக்கி நகர்ந்தான் ரமேஷ். வித்யாவைத் தனியே விட மனமே இல்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றான். வீடு திறந்தே இருந்தது. பெரிய ஹால். சோபாக்கள். "ப" வரிசையில் போடப் பட்டிருந்தன. அங்கேயே தொலைக்காட்சிப் பெட்டியும் வைக்கப் பட்டிருந்தது.

சற்றுத் தள்ளி இடப்பக்கமாய் மாடிக்குச் செல்லும் படிகள் ஹாலில் இருந்தே கிளம்பின. வலப்பக்கமாய் ஒரு அறையின் கதவு மூடியபடி தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். ஹாலின் நடுவே இருந்து உள்ளே செல்ல வழி இருந்தது. அந்தப் பக்கம் தான் சாப்பாடு சாப்பிடும் அறை, சமையலறை இருக்கவேண்டும். அப்போது மாடியில் யாரோ பாடிக்கொண்டே கீழே இறங்கும் சத்தம் கேட்டது. பெண் குரல்! கடவுளே, ஒரு பெண்ணையா கொல்லவேண்டும்?? அவள் என்னைப் பார்த்ததும் சத்தம் போடப் போகிறாளே? முதலில் ஒளிஞ்சுக்கணும். ஒளிஞ்சுண்ட இடத்தில் இருந்து குறி பார்த்துச் சுட முடியுதானும் பார்க்கணும். சுற்றிச் சுற்றிப் பார்த்த ரமேஷ் அங்கே இருந்த காஷ்மீரத் தடுப்புப் போட்டிருந்ததற்குப் பின்னர் சென்று மறைந்தான். ஹாலையே காஷ்மீரத் தடுப்புப் போட்டு அலுவல் அறையாக மாற்றி உள்ளனர். மெல்ல எட்டிப் பார்த்தான். படிகளில் ஒரு பெண் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் போட்டிருந்த செண்டின் மணம் மூக்கைத் துளைத்தது. பழகிய செண்ட் மணம். இந்த செண்டை யார் போடுவார்கள்? ஆவலில் இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்தான். ஆஹா!! ரமேஷின் மனம் துள்ளியது. இது வேறு யாருமே இல்லை. சுபா தான்!

ரமேஷுக்கு சந்தோஷத்தில் என்ன செய்யறதுனு புரியலை! வெளியே வந்தான். திடீரென எங்கிருந்தோ முளைத்த அவனைப் பார்த்த சுபாவும் ஒரு கணம் திகைத்தாலும் பின்னர் மகிழ்ச்சியோடு, "ஹாய், டியர்! இந்த இடம் எப்படி உனக்குத் தெரிந்தது?? இப்போத் தான் உனக்கு ஃபோன் பண்ண இருந்தேன். இதுதான் சமயம்,சீக்கிரம் வானு சொல்ல நினைச்சேன்." என்றாள். ரமேஷ் எதுவுமே பேசாமல் அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டான். அவளும் அவனை உரசிய வண்ணம் வந்து அமர்ந்தாள். ரமேஷின் முகத்தைப் பார்த்த அவள் ஏதோ பிரச்னை எனப் புரிந்து கொண்டு, "என்ன விஷயம்?? ஆளே பத்து நாட்கள் சாப்பிடாத மாதிரி இருக்கிறாயே? எங்கிருந்து வருகிறாய்?? வித்யா போய்விட்டாளா? அவள் காரை எடுத்துண்டு போயிருக்கணுமே? நீ எதிலே வந்தே?" சரமாரியாகக் கேட்டாள் சுபா.

"சுபா, உனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாது இல்லையா? எங்கள் பெண்ணை........." ஆரம்பித்த அவன் குரல் சட்டென நின்றது. இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன்? சட்டென்று எழுந்தான். அந்த ஹாலில் இருந்த ஷோகேஸில் வைக்கப் பட்டு இருந்த படத்தைக் கவனித்தான். அதே பையன். வழியில் அவர்களைச் சந்தித்துப் பேசிய அதே பையன் அந்த போட்டோவில் இருந்தான். "யாரு இந்தப் பையன்??" கேட்டுக் கொண்டே அந்தப் படத்தைக் கையில் எடுத்தான். "ஏன், என் பையன் தான், சொன்னேனே உன்னிடம், எனக்கு ஒரு பையன் இருக்கான் என்று!" என்ற சுபா அவன் முகம் மாறியதைக் கண்டு திடுக்கிட்டாள். அந்த போட்டோவின் இருபக்கங்களிலும் படங்களை வைக்கலாம் அது மாதிரியான அமைப்பு அது. அதன் மறுபக்கம் சுபாவும், அவன் பெண்ணைக் கடத்தி வைத்திருக்கும் வில்லனும் சிரித்த வண்ணம் காட்சி அளித்தனர். ஒரு கணம் வேறு யோசனை வந்தாலும், சுபாவிடமே கேட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டு, அந்த போட்டோவைக் காட்டினான் ரமேஷ்.

"ஓஓ, பயந்துட்டியா ரமேஷ்??? அது தான் என் கணவன். இப்போ வர மாட்டார். திங்கள் மாலை தான் வருவார். பிசினஸ் டூர். திங்களன்று முக்கியமான மீட்டிங் இருக்காம். அது முடிந்து விமானத்தைப் பிடிச்சு வீட்டுக்கு வர இரவு பனிரண்டு ஆகிடும். பையனும் ஏதோ நண்பர்களோடு சேர்ந்து படிக்கணும்னு போயிருக்கான். திங்கள் கிழமை அப்படியே ஸ்கூலுக்குப் போயிடுவான். சாயந்திரம் தான் வருவான். அதுவரை நீயும், நானும் தான்!" என்று சொல்லிக் கொண்டே அவனை அணைக்க வந்தாள். அவள் கைகளைத் தட்டி விட்டான் ரமேஷ்.

"அப்போ, அப்போ, உன் கணவனுக்கு நம் விஷயம் தெரிந்திருக்கிறது!" என்றான்.

"என்ன சொல்றே ரமேஷ்?" சுபாவுக்குப் பதட்டம் வந்தது.

"இங்கே வந்து உன்னைக் கொல்லும்படி என்னை அனுப்பியதே இதோ இந்த ஃபோட்டோவில் இருக்கும் உன் கணவர் என்று சொல்கிறாயே, இந்த ஆள் தான்."

சுபா தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார, "ஏன் அதிர்ச்சியாக இருக்கிறதா?? ரமேஷ், இன்னுமா நான் சொன்னதைச் செய்யவில்லை?? சுடு அவளை! முதல்லே அவளைச் சுடு. இல்லாட்டி உன்னை நான் சுட்டுடுவேன்." என்ற குரல் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தால் அங்கே அந்த வில்லன் நின்று கொண்டிருந்தான். ஆனாலும் அவன் முகத்தில் அதே ஏளனமான சிரிப்பு. அது மட்டும் மாறவே இல்லை.

"வேண்டாம்!" அலறினாள் சுபா.

"ரமேஷ், இப்போ இவளை நீ சுடவில்லை என்றால் உன்னைச் சுட்டுவிட்டு, உன் பெண்ணை அநாதை ஆசிரமத்தில் கொண்டு விடும்படி அந்தப் பெண்ணிடம் சொல்லிடுவேன். அப்புறம் காரில் இருக்கும் உன் மனைவியை நான் என்ன செய்வேன் என்று உனக்குச் சொல்லவேண்டியதில்லை. சுடு இவளை! சுட்டால் நீ பிழைப்பாய்!"

ரமேஷ் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்தான். கைகள் நடுங்கின. "இப்படி எல்லாம் இருந்தால் சுட முடியாது. பக்கத்திலே போ! அவள் கழுத்திலே துப்பாக்கியை வை. சுடு!" என்று சொல்லிக் கொடுத்தான் வில்லன்.

ரமேஷ் அவள் அருகே போய்க் கைகள் நடுங்கத் துப்பாக்கியை அவள் கழுத்தில் வைக்க முயல, அவள் மாடிக்கு ஓடித் தப்ப முயல அதற்குள் அங்கே துப்பாக்கியை ஏந்திய வண்ணம் வில்லன் நின்று கொண்டான். வாசல் பக்கம் ஓடித் தப்பலாம் என்று பார்த்தவளுக்கு, "நீங்க இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தப்போ எல்லா ஜன்னலையும் மூடிட்டு, வாசல் கதவையும் உள்பக்கம் பூட்டிட்டுச் சாவியை இதோ இங்கே வைச்சிருக்கேன். சமையலறைப்பக்கமும் போக முடியாது. எல்லாக் கதவையும் சார்த்திட்டேன். இந்த ஒரு அறை தான் உனக்கு இப்போ தப்பிக்க ஒரே வழி! முடிஞ்சால் தப்பிச்சுக்கோ. நீ விழுந்து விழுந்து காதலிக்கிறதா நினைச்ச இந்த ரமேஷ் தான் இப்போத் தான் தப்பிக்கணும், தன் குடும்பம் பிழைக்கணும்னதும் உன்னைக் கொல்ல முயன்றான். இவனை நம்பி நீ காதலிச்சதோட அல்லாம, நான் இல்லாத சமயம் வீட்டுக்கும் வர வைத்திருக்கிறாய்."

"உங்க ரெண்டு பேரோட காதல் ரெஸ்டாரண்டில் காபி, டிபன் சாப்பிடுவதும் டிஸ்கோவில் ஆடுவதுமோடு இருந்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். இன்னிக்கு நீங்க இரண்டு பேரும் எனக்குத் துரோகம் செய்ய நினைச்சு ஏற்பாடுகள் செய்து கொண்டதும் சரியா? அதற்குத் தண்டனை தர வேண்டாமா? சுடு ரமேஷ்! சுடு!"

ஓஓஓவென்று அலறிக்கொண்டே சுபா வில்லன் காலடியில் விழுந்தாள். ரமேஷ் செய்வதறியாது திகைத்தவன், இதுதான் சமயம் என்று வில்லன் கையில் இருந்த சாவியைப் பிடுங்கிக் கொண்டு வாசல் கதவைத் திறந்து ஓடினான். பின்னால் சிரிப்புச் சத்தம் கேட்டது. ரமேஷ் திரும்பிப் பார்த்தான். "நீ தப்பத் தான் சாவியைக் கையிலே வைத்திருந்தேன்!" என்ற வில்லனின் குரல் ரமேஷைத் துரத்த, வேகமாய் ஓடிக் காரில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

வித்யா ரமேஷின் முகத்தைப் பார்த்துவிட்டுத் திகைத்தாள், "என்ன நடந்தது?" என்று கேட்டாள்.

ரமேஷால் பேச முடியவில்லை.


டிஸ்கி:-
அடுத்த பகுதியிலே முடிச்சுடுவேன். :D

Friday, August 27, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு! 7

ரமேஷ் தொலைபேசியை எடுத்துக் கடைசியாக வில்லன் பேசிய எண்ணுக்கு அழுத்திவிட்டு, "327" என்றான். மறுமுனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை, ரமேஷின் முகம் மிகப்பிரகாசமாக இருந்தது. "எப்படி வழி?" என்று கேட்டான். பின்னர் தொலைபேசியை வைத்துவிட்டு வித்யாவிடம், "அது ஒரு ஓட்டல் அறை எண். ஓட்டல் பெயர் ப்ரின்ஸி ஸ்டார் என்பதாகும். இங்கே தான் பக்கத்திலே அடுத்த தெருவிலே இருக்காம். " என்றான். உடனே ஒரு எண்ணம் தோன்ற வித்யாவை, "நீ இங்கே இரு. அவன் வந்தால் எப்படியாவது சொல்லிச் சமாளி. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்." என்று கிளம்பினான். வித்யாவோ அவனைத் தனியாக அனுப்பப் பயந்தாள். "அதெல்லாம் முடியாது ரமேஷ், நானும் வருவேன்." என்று சொல்லிய வண்ணம் கூடவே வந்தாள். ரமேஷ் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. "ஒருவேளை அங்கே குழந்தை இருந்தாளென்றால்?? நான் அவளைப் பார்க்கணும்." இப்போது மறுக்க முடியவில்லை அவனால். இருவரும் சென்றனர். ரிசப்ஷனில் அறை எண் 327 பற்றிக் கேட்டனர்.

பின்னர் அங்கிருந்த லிப்டில் ஏறி மூன்றாம் மாடிக்குச் சென்று, அறையையும் கண்டு பிடித்துவிட்டனர். உள்ளே நுழையணும். ஆனால் பூட்டி இருக்குமோ? தள்ளிப் பார்த்தார்கள். ஆம் பூட்டித் தான் இருந்தது. ரமேஷ் மட்டும் மறுபடி கவுண்டருக்குப் போய், "327, சாவியை உள்ளேயே வைச்சுட்டேன் போல, மாஸ்டர் கீயைக் கொடுங்க!" என்று கேட்க, மும்முரமாகக் கணக்கு எழுதிக் கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் அவனைச் சரியாகப் பார்க்காமலேயே சாவியைக் கொடுத்தான். இதயம் படபடவென அடித்துக்கொள்ள மெல்ல மெல்ல சத்தமே இல்லாமல் அறையைத் திறந்தார்கள். உள்ளேயும் நுழைந்தனர். விருந்தினர் வந்தால் பேசுவதற்கென போடப் பட்டிருந்த சோபாக்களைத் தாண்டி அறையின் மையப் பகுதிக்கு வந்தாயிற்று. அடுத்துக் குளியலறை ஒரு பக்கம் இருந்தது. பெரிய வார்ட்ரோப் இன்னொரு பக்கம். குளியலறையை ரமேஷ் மெல்லத் திறந்து பார்த்தான். இது வரை யாரையும் காணவே இல்லையே? என்றால்? குழந்தை எங்கே?? அந்தப் பெண் எங்கே? அதற்குள்ளாக வார்ட்ரோபைத் திறந்த வித்யா, "வீல்" என அலறினாள்.

" அமைதி, அமைதி, அமைதி, திருமதி ரமேஷ் அவர்களே! என்னைத் தான் தாங்கள் கடந்த நாலு மணி நேரமாய்ப் பார்க்கிறீர்கள். இப்படிப் பயந்தால் எப்படி??" ரமேஷ் ஆத்திரத்துடன் திரும்ப அந்தப் பெரிய வார்ட்ரோபில் ஒரு பக்கம் சட்டைகள், பாண்ட்கள் மாட்டப் படும் இடத்தில் ஒளிந்து கொண்டிருந்த வில்லன் வெளியே வந்தான். "நினைச்சேன், இரண்டு பேரும் இங்கே தான் வருவீங்க என்று. உங்க குழந்தையை இடம் மாத்தியாச்சு!" என்றான் சற்றும் இரக்கமில்லாமல். "இப்போ எங்கே எங்க குழந்தை? என்று வித்யா கேட்க, அவன் அசட்டையாக வித்யாவை ஒரு பக்கமாய்த் தள்ளி விட்டான். அவன் கையில் நவநாகரீக உடை ஒன்று. அதை வித்யாவிடம் கொடுத்தான். வித்யா கேள்விக்குறியோடு பார்க்க, "உனக்குத் தான், இதை அணிந்து கொண்டு வா. நாம் ராயல் மெரிடீயன் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோவுக்குப் போகிறோம். இது டிஸ்கோவுக்கு ஏற்ற உடைதானே?" வித்யா அந்த உடையைத் தூக்கி வீசி எறிந்தாள். "பளார்!" இரு கன்னத்தையும் பிடித்துக்கொண்டு வித்யா அங்கே இருந்த கட்டிலில் விழுந்தாள். ரமேஷ் அவன் மீது ஆத்திரத்தோடு பாய, அவன் ரமேஷையும் அடிக்க, பதறிய வித்யா தடுக்க அவளுக்கு மேலும் அடிகள் விழுந்தன. ரமேஷால் பொறுக்க முடியவில்லை. ஏதேனும் ஆயுதம் கிடைத்தால் ஒரே போடாகப் போட்டுவிட்டு ஜெயிலுக்குப்போய்விடலாமா என்று கூட எண்ணினான்.

ஆனால் அதற்குள் வித்யா, அந்த உடையைப் பொறுக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு மேலே ஒரு துண்டால் போர்த்திக்கொண்டு வந்தாள். அவளுக்கு என்னதான் படித்து வேலை பார்த்தாலும் கண்ணியமான ஆடைகளே பழக்கம். இப்படி எல்லாம் அங்கங்கள் தெரியும்படி உடுத்திப் பழக்கம் இல்லை. ஆனால் வில்லனோ, கடுமையாக, "அந்தத் துண்டை எடு! வா என்னுடன்! திருவாளர் ரமேஷ் அவர்களே! ஒரு மணி நேரம் டிஸ்கோவில் இருப்போம். இப்போ நேரம் சரியாக பத்து மணி ஆகிறது. பதினொரு மணிக்கு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிடுவோம். ஆகவே இன்னும் ஒரு மணிநேரத்துக்குள்ளாக அங்கே வந்தாயானால் உன் மனைவியை நீ அழைத்துச் செல்ல முடியும். நானே கொண்டு விட்டாலும் விடுவேன். ஆனால் ஒரு செகண்ட் பிந்தினாலும் உன் மனைவி உனக்குச் சொந்தம் அல்ல." என்றான். ரமேஷ் ஆத்திரத்தோடு, "ஒரு மணி நேரம் என்ன? உனக்கு முன்னாலேயே நான் போய்க் காத்திருப்பேன்." என்று சொல்ல, 'ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? இல்லை தம்பி, இல்லை! நீ உன்னுடைய காரிலே வரும் எண்ணம் இருந்தால் அதை விட்டு விடு. உன் மனைவி அந்தக் காரில் என்னோடு வருகிறாள். இரு, இரு, சட்டைப் பையில் ஏதானும் பணம் வைத்திருக்கிறாயா எனக்குத் தெரியாமல்?? " ஒரு கையால் வித்யாவைத் துப்பாக்கியைக் கொண்டு பயமுறுத்திக்கொண்டே இன்னொரு கையால் ரமேஷை சோதனைபோட்டான். அவன் கையில் பயன்படுத்த முடியாத க்ரெடிட் கார்டுகளைத் தவிர வேறேதுவும் இல்லை என்று கண்டதும் சிரித்தான். "இது! இது தான் நல்ல பையனுக்கு அடையாளம்! ஒரு மணி நேரம், ஒரு மணி நேரத்திலே வந்துடு தம்பி!" தர தரவென்று வித்யாவை இழுத்துக்கொண்டு சென்றான் அவன்.

ரமேஷ் அங்கிருந்து கிளம்பி ராயல் மெரிடியன் ஓட்டலை நோக்கி நடந்தான். கால்கள் கெஞ்சின. மணி பார்க்கலாம் என்றாலும் அதுவும் இயலவில்லை. உத்தேசமாய் மணியைத் தெரிந்து கொண்டு நடந்தான். ஒரு வழியாய் ஓட்டலை அடைந்து விட்டான். ஓட்டல் லவுஞ்சில் மணி பதினொன்று ஆகி ஐந்து நிமிடம் ஆகப் போகிறது. ரமேஷ் பதறினான். டிஸ்கோ நடக்கும் இடம் கேட்டுக் கொண்டு ஓடினான். அங்கே யாரும் இல்லை. ஹாலே காலி! ஒவ்வொரு இடமாய்த் தேடினான். திரும்ப கார்கள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்து, தங்கள் காரைத் தேடினான். அப்போது தான் அவன் கார் பாதாளத்தில் இருந்த பார்க்கிங் ஏரியாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. ரமேஷ் ஓட்டமாய் ஓடினான்.

கார் ரமேஷைப் பார்த்ததும் நின்றது. கதவைத் திறந்த வித்யாவைப் பார்த்த ரமேஷ் பின்னால் இருந்த வில்லனிடம், "நான் அப்போவே வந்துவிட்டேன். விடு என்னையும், என் மனைவியையும். இதோடு போகட்டும்." என்று சொன்னான். "உன் மனைவியைக் கேள். அவளை நான் எவ்வளவு மரியாதையோடு நடத்தினேன் என்று." என்றான் வில்லன். ரமேஷ் வித்யாவைப் பார்க்க அவளும் ஆமோதித்தாள். இப்போது அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த வில்லன், "சரி, காரில் ஏறி உட்கார். நீ உன் குடும்பத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வாய் அல்லவா?" மீண்டும் கேட்டான்.

"என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்??? ஏற்கெனவே நான் சம்பாதித்த பணம், நகைகள், சேமிப்புப் பத்திரங்கள் எல்லாம் போயாச்சு. எல்லாவற்றுக்கும் மேலே என்னோட வேலை அதுக்கே உலை வைத்துவிட்டாய்! என் மனைவியையும் அபகரிக்கப் பார்த்தாய்! இன்னும் என்ன செய்தால் எங்களை விடுவாய்??"

கலகலவெனச் சிரித்த வில்லன், " காரை நீயே ஓட்டு ரமேஷ். நான் வழி சொல்கிறேன்." என்றான். அவன் வழி சொல்லக் கார் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறந்தது. சற்று நேரத்தில் ஒரு பண்ணை வீடு வந்தது. மிகவும் அழகான பண்ணை வீடு. யார் அந்த வீட்டில் இருக்கக் கொடுத்து வைத்திருக்காங்களோ என்ற எண்ணம் ரமேஷின் மனதில் உதயம் ஆயிற்று. அடுத்த கணம் காரை அந்தப் பண்ணை வீட்டில் நிறுத்தச் சொன்ன வில்லன். ரமேஷின் கையில் தன் துப்பாக்கியைக் கொடுத்தான். "இதோ பார்! இதில் குண்டுகள் இருக்கின்றன. உனக்கு எதிரேயே நிரப்பி இருக்கிறேன். பார்த்திருப்பாய் அல்லவா? நீ இந்த வீட்டுக்குள் சென்று இந்த வீட்டில் தற்சமயம் இருக்கும் ஒரு நபரைச் சுட்டுக் கொல்ல வேண்டும். அவ்வளவே!" என்றான்.

தூக்கி வாரிப் போட்டது ரமேஷுக்கு. என்னமோ அல்வா சாப்பிடு என்கிறாப்போல் அல்லவா சொல்கிறான்?? என்ன இது? ஏதோ சிக்கலில் மேலும் மாட்டிவிடப் போகிறான் போல் தெரிகிறதே? ரமேஷ் உறுதியாக மறுத்தான். என்ன ஆனாலும் சரி, நான் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று நினைத்த வண்ணம் திட்டவட்டமாய் மறுத்தான்.

Wednesday, August 25, 2010

பட்டாம்பூச்சிக்கும் உணர்வு உண்டு. 6

"ஓகே. இப்போ எனக்குப் பசி, பயங்கரமாப் பசி, சாப்பிடப் போகலாமா?" என்றான். வித்யாவும், ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஒரு பைசாக் கூட இல்லை என்றால் சத்தியமாக இல்லை. சாப்பிடக் கூப்பிடறானே? ஆனால் அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாதவனாக ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் முன் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டுத் தானும் கீழே இறங்கி அவர்களையும் இறங்கச் சொல்லி வற்புறுத்தினான். அவன் சொல்லை மீறினால் என்ன நடக்குமோ எனப் பயந்து அவர்கள் இருவரும் கீழே இறங்கினார்கள். உள்ளே சென்றனர் மூவரும். அங்கே காத்திருந்த பணியாளர் ஒரு இடத்தை அவர்களுக்கெனக் காட்டி அமர உதவி செய்ய மூவரும் அமர்ந்தனர். உணவுக்காக ஏற்பாடுகள் செய்யும் பணியாளர் வந்து"என்ன உணவு?" என்று விசாரிக்க, பசி இருந்தாலும், ரமேஷும், வித்யாவும் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வில்லன் சிரித்துக் கொண்டே, பணியாளரிடம் தனக்கென உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான். பின்னர் இருவரையும் பார்த்துக் குறிப்பாக, ரமேஷிடம், "உனக்கு உன் குடும்பம் முக்கியம் இல்லையா? குடும்பத்துக்கும், குழந்தைக்கும் எதுவேண்டுமானாலும் செய்வாயா?" என்று கேட்க, ரமேஷ் விரக்தியோடு, "அதான் மொத்த சேமிப்பு, நகை எல்லாத்தையும் இழந்துவிட்டு உட்கார்ந்திருக்கேனே. வேலையும் என்ன கதினு நாளைக்குப் போனால் தான் தெரியும்." என்று சொன்னான்.

"ஓகே,ஓகே, இப்போ நீ அதிகமா ஒண்ணும் செய்யவேண்டாம். என் பர்சிலே பணமே இல்லை. இதோ பார்!" என்று திறந்து காட்டினான். க்ரெடிட் கார்டெல்லாம் நான் வச்சுக்கறதில்லை. உங்க க்ரெடிட் கார்டையும் பயன்படுத்த முடியாது. அக்கவுண்டிலே பணமே இல்லையே! அதனாலே இரண்டு பேரும் இப்போச் சேர்ந்து போய் எங்கே இருந்தாவது பணம் புரட்டிக் கொண்டு வாங்க. அதுவும் அரை மணி நேரத்துக்குள்ளே." என்றான். "இந்த நேரம் எந்தக் கடையும் திறந்திருக்காது. எங்கே போய்ப் பணம் கேட்போம்? பிச்சை எடுத்தாலும் கிடைக்காது." என்று ரமேஷ் ஆத்திரத்துடன் சொல்ல, வித்யா ஆமோதித்தாள். "அது உங்க பிரச்னை!' கையை விரித்துவிட்டான் வில்லன். இருவரும் வேறு வழியில்லாமல் எழுந்தனர்.

சற்று நேரம் எங்கே செல்வது, எப்படிப் பணத்துக்கு ஏற்பாடு செய்வது எனப்புரியாமல் விழித்தனர் இருவரும். பின்னர் இப்போதே ஐந்து நிமிடம் போயிடுச்சே என்ற கவலையில் நடந்தனர். கொஞ்ச தூரம் போய்ப் பார்த்தார்கள் இருவரும். எல்லா இடங்களிலும் கடைகளை மூடிக் கொண்டிருந்தனர். திறந்திருந்தாலும் யாரிடம் போய்ப் பணம் கேட்பது?? சுற்றிச் சுற்றி வந்த இருவரின் காதுகளிலும், "ஹே ராம்!' என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தனர் இருவரும். அங்கே ஒரு அடகுக் கடை. அதன் முதலாளியான வட இந்திய சேட் தான் அப்படிக் கூறி இருக்கிறார். கடையை மூடுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர் வேலை செய்யும் ஆட்கள்.

ரமேஷின் மூளையில் பளிச்சிட்டது. உடனே வித்யாவின் கைகளைப் பார்த்தான். ஒரு மோதிரம் மட்டுமே இருந்தது. அவள் அதிகம் தங்க நகைகளை தினசரி அணிவதில்லை. இந்த மோதிரமும் ரமேஷ் அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தில் பரிசாக அளித்தது. அதைக் கழட்டச் சொன்னான். தன்னுடைய வாட்சையும் கழட்டினான். மனசே இல்லாமல் கழட்டினார்கள் இருவரும். அந்த நகைக்கடையில் போய் அதை அடகு வைத்துப் பணம் கேட்டார்கள். கடை மூடும் சமயம் எனப் பணம் தர மறுத்தார் வட இந்திய சேட். கெஞ்சிக் கூத்தாடி அவரை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்து அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வளவு என எண்ணிக் கூடப் பார்க்காமல் ஓடி வந்தனர் இருவரும்.

அரை மணி நேரத்துக்கு இன்னும் ஐந்து நிமிஷங்களே இருந்தன. ஓட்டமாய் ஓடோடி வந்து பார்த்தால் அவன் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் இல்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டுக் கழிவறையில் இருந்து அவன் வெளியே வருவதைக் கண்டனர் இருவரும். "என்ன பயந்துட்டீங்களா? அப்படியே நான் போயிருந்தால் என்ன? உங்களுக்கு நல்லது தானே?" என்றான் அவன். "நல்லது தான். ஆனால் எங்க பொண்ணு இருக்கிற இடம் தெரியணுமே! நீ போயிட்டியானா உன்னை எப்படிக் கண்டு பிடிக்கிறது?" பல்லைக் கடித்தான் ரமேஷ்.

"ஓஓ அதுவும் அப்படியா?? ஆமாம், ஆமாம், உனக்கு மனைவி, குழந்தை மேல் பாசம் அதிகமாச்சே!' என்று ஏளனம் தொனிக்கக் கூறினான் அவன். ரமேஷ் அவனை அடிக்கப்பாய, ஒரு கையால் தடுத்துக் கொண்டே இன்னொரு கையால் ரமேஷைக் காருக்குப் போ எனத் தள்ளினான். சற்றே யோசித்தவன் போலக் "கொஞ்ச நேரம் காருக்கு வெளியே காத்திருங்க. இதோ வரேன்." என்று சொல்லிவிட்டு எங்கேயோ போனான். கொஞ்ச நேரம் எந்தப்பிடுங்கலும் இல்லாமல் தனித்து விடப்பட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ரமேஷ் வித்யாவைக் கோபமாய்ப் பார்த்தான். வித்யா ஏதோ சொல்ல ஆரம்பித்த போது, "பேசாதே! நீ எப்படி அந்தக் கவரைக் கொண்டு போய் எங்க ஆபீஸோட போட்டி ஆட்களிடம் கொடுப்பாய்? கொடுத்த கவரைப் பிரிச்சுப் பார்க்கணும்னு தோணலையா?" என்று ஆத்திரம் பொங்கக் கேட்டான்.

"எனக்கு எப்படித் தெரியும் ரமேஷ்?? நானும் உங்களைப் போலதானே?" என்று வித்யா கேட்க, "அவன் நம்மை ஏதோ சிக்கலில் மாட்டிவிட வலை விரிக்கிறான் என்பது கூடப் புரியாதபடிக்கு நீ என்ன மனித வள மேம்பாட்டுத் துறையிலே வேலை செய்யறே?? மனிதர்களோட எண்ணங்களையோ, எண்ண ஓட்டத்தையோ புரிஞ்சுக்காம என்னத்தை வெட்டி முறிக்கிறே?"

"ரமேஷ், ரமேஷ், வேண்டாம், தயவு செய்து வேண்டாம். இது நம் வீடு இல்லை. மேலும் இப்போ நாம இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு சிக்கலில் இருக்கோம். அதைத் தீர்க்கும் வழியைப் பார்க்கலாம்." என்றாள் வித்யா.

ரமேஷோ கோபம் அடங்காமல், "ஒருவழியா என்னோட எதிர்காலத்தை நாசம் பண்ணியாச்சு! போச்சு, போச்சு, என்னோட ப்ரமோஷனும் போச்சு, அதோட வேலைக்கே உலையும் வைச்சாச்சு!" என்று பல்லைக் கடித்துக்கொண்டே வித்யாவிடம் சொல்ல கண்ணீரோடு முகத்தைத் திருப்பிக் கொண்ட வித்யா, திடீரென, "ரமேஷ், அங்கே பாருங்க, அவன் கைபேசியை காருக்குள்ளே வைச்சுட்டுப் போயிருக்கான்." என்று காட்டினாள். ரமேஷ் சட்டெனக் கோபம் அடங்கியவனாய்த் திரும்பிப் பார்த்தான். காரைத் திறந்து அந்தக் கைபேசியை எடுத்துக் கடைசியாய் அவன் பேசிய தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்தான். வில்லன் கூப்பிடும்போது, "327" என்று கூப்பிட்டது நினைவில் வரவே, அவனும் அவ்வாறே கூப்பிட்டான்.

சோதனைப் பதிவு

சோதனை!

Tuesday, August 24, 2010

வெகு பொருத்தமான சாம்பாரு, இதுவே எனக்கு ஜோரு!

ரொம்ப நாட்கள் கழித்துத் தாய்மொழியிலே இன்னிக்குத் திரைப்படம் பார்த்தேன். ஹிஹிஹி, இப்போல்லாம் தாய்மொழிப் படங்களே பார்க்கிறதில்லை. இன்னிக்கு என்னமோ அதிசயமா நம்ம வீட்டிலே வேலை செய்யற பொண்ணு காலம்பர ஐந்தரை மணிக்கே வந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டுப்போனாளா?? ஐந்து நாட்களா அவ தினமும் லீவ் போடாமல் வரதுக்கே மழை கொட்டித் தீர்க்குது. இன்னிக்குச் சீக்கிரம் வந்ததுக்குக்கேட்கணுமா? மழை ஆரம்பிச்சுடுச்சு. வேர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சதை எல்லாம் அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணவேண்டியதையும் பண்ணியாச்சு. திடீர்னு கணினியிலே உட்கார போரடிச்சது. குழுமங்களிலேயும் யாரையும் காணோம்.

சரினு தொலைக்காட்சியிலே ஏதாவதுபடம் பார்க்கலாம்னு ஒவ்வொரு சானலாத் திருப்பிட்டு வந்தா, "ஆஹா, இன்ப நிலாவினிலே" னு கண்டசாலா பாடிட்டு இருந்தார். என்னடா இது ஆச்ச்ச்சரியம்னு பார்த்தா ஜெமினியும், சாவித்திரியும் படகிலே டூயட் பாடிட்டுப் போனாங்க. நல்லவேளையா அப்போ நான் துள்ளிக் குதிச்சதைப் பார்க்க அங்கே யாருமே இல்லை. ரங்க்ஸுக்கு உண்ட மயக்கம். போய்ப் படுத்துட்டார். நானே தான் ரசிச்சுக்க வேண்டி இருந்தது. நம்ம படமாச்சே. இந்தப் படம் எப்போ வந்ததுனு தெரியாது. ஆனால் இந்தப் படத்துக்கும், "ராம பக்த ஹனுமான்" படத்துக்கும் அப்பா தியேட்டருக்குக் கூட்டிப் போய்க் காட்டியது நினைவில் வந்தது. தம்பி அப்போ குழந்தை???? சரியாத் தெரியலை. ஆனால் அப்புறமா மூன்று மணிக்கு எழுந்து வந்த ரங்க்ஸ் இந்தப் படம் 1955-56-ல் வந்ததாகவும், அவர் சிதம்பரத்திலே படிக்கும்போது பார்த்ததாயும் சொன்னார். ஆனால் நான் விபரம் தெரிஞ்சு தான் பார்த்திருக்கேன்.

அதுக்கப்புறமா இந்தப் படத்தை ஒவ்வொரு வருஷமும் திருப்பாவை வகுப்பு நடத்தி வந்த ராஜம்மாள் சுந்தர ராஜன் குழுவினர் பக்தி கலா நிகழ்ச்சி ஒண்ணும் நடத்துவாங்க, பொங்கலுக்கு முன்னாடி. அப்போ முதல் நாள் ஒரு பக்திப் படம் இலவசமாப் போட்டுக் காட்டுவாங்க. வருஷா வருஷம் அது என்னமோ தெரியாது இந்தப் படம் தான் காட்டுவாங்க. அநேகமா அந்தப் பிரிண்டே கிழிஞ்சு சுக்குச் சுக்காப் போயிருக்கும். அவ்வளவு முறை காட்டி இருக்காங்க. அவ்வளவு முறை நானும் பார்த்திருக்கேன். முதல்லே எல்லாம் தம்பியைக் குழந்தைனு சொல்லிக் கூடவே கூட்டிப் போவேன். அப்புறமா பாய்ஸ் நாட் அலவ்ட் னு சொல்லிட்டாங்க. ஆக நான் தனியாவே நாலைந்து தரம் பார்த்திருப்பேனா?? என்றாலும் கடந்த பல வருஷங்களில் என் குழந்தைகளிடம் இந்தப் படத்தைப் பற்றியும், ரங்காராவ் நடிப்பைப் பற்றியும், "கல்யாண சமையல் சாதம்" பாடலைப் பற்றியும் சொல்லி இருக்கேன். இந்தியாவிலே பார்க்க முடியாத எங்க பையர் அமெரிக்காவிலே போய்ப் பார்த்தேன்னு சொன்னார். :P

படத்தை நல்லா ரசிச்சுப் பார்த்தேன். நல்லதொரு நகைச்சுவைப் படம். அதுவும் அந்த ஜோசியர்கள்/புரோகிதர்களுக்கு வெற்றிலைத் தட்டு நகருவதும், கீழே விரித்திருக்கும் கம்பளம் சுருட்டிக்கறதும், கட்டில் கால் மண்டையிலே அடிக்கிறதும், சுத்தோ சுத்துனு சுத்தறதும் கடோத்கஜனோ ஆட்கள், "ஆஹூ தலைவா, இஹூ தலைவா, ஊஹூ தலைவா" னு சொல்றதும், பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை. கொஞ்சம் இல்லை நிறைய விட்டலாசார்யா டைப்தான். என்றாலும் மனம் லயித்து, மனம் விட்டுச் சிரிச்சுப் பார்த்தேன். ரங்காராவை விடவும், சாவித்திரி ஆண்மகன் என்று தன்னை வித்தியாசப் படுத்தும் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். மணமகனாக தங்கவேலு. அவருக்கு மணமகள் கருங்குரங்காயும், புலியாயும், ராக்ஷசியாவும் தெரியறதும் நல்லா இருந்தது. குழந்தைகள் படம்னு ரங்க்ஸோட தீர்ப்பு. ஆனாலும் அவரும் உட்கார்ந்து முடிவு வரை பார்த்தார். நானும் குழந்தைதானே? பார்த்தால் என்ன? இது என்னோட தீர்ப்பு! இன்னொரு முறை வந்தாலும் பார்த்துட்டு எழுதறேன். ஓகேயா?