எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 02, 2013

நாங்களும் போடுவோமுல்ல ரயில்வே ஸ்டேஷனை!

இது போன வருஷம் மார்ச் மாசம்,  ஒரு ரயில்வே ஸ்டேஷனில் வண்டிக்குக் காத்திருக்கையில் எடுத்தது.  எங்கள் ப்ளாக் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனைப் போட்டிருக்காங்க.  இதுவும்  ஒரு ரயில்வே ஸ்டேஷன் தான்.  எதுனு கண்டு பிடிங்க.  அங்கே காத்திருக்கும் நேரத்தில் இந்தப் பிள்ளையார் கோயில் குருக்கள் வந்து பிள்ளையாருக்கு அபிஷேஹம், அலங்காரம் எல்லாம் பண்ணினார்.  அதிலிருந்து இந்த இரண்டு படங்கள்.

ஒண்ணு அதிகாலையில் இருட்டாக இருக்கிறச்சே எடுத்தது.  இன்னொண்ணு வெளிச்சம் வந்தப்புறமா எடுத்தது.  எந்த ஊர் ரயில்வே ஸ்டேஷன்னு ஸ்ரீராம், கெளதமன் சார், சூரி சார், ஜீவி சார் ஆகியோர் கண்டு பிடிச்சுடலாம்.  அதிலும் சூரி சார் முதல்லே சொல்லிடுவார். :))))

அதிகாலையில் எடுத்தது.  கருக்கிருட்டிலே எடுத்தேன்.  குருக்களும் அப்போவே வந்துட்டார்.





இது அலங்காரம் பண்ணறச்சே எடுத்தது.  கண்டு பிடிங்க பார்க்கலாம்.


25 comments:

  1. குறிப்பிட்டவர்கள் சீக்கிரம் வந்து சொல்ல வேண்டும்...

    ReplyDelete
  2. ஆமாம்... சீக்கிரம் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  3. //"நாங்களும் போடுவோமுல்ல ரயில்வே ஸ்டேஷனை!// என்று தலைப்பு.

    ஆனால் ரயில் ஒன்றையும் காணவில்லை.

    பிள்ளையார் மட்டுமே இருகிறார்.

    இவரின் ஊர் பெயர் எதுவாக இருந்தால் என்ன?

    ஆனால் இவரின் பெயர் ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர்.

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    கரெக்டா????? ;)))))

    ReplyDelete
  4. எண்ணூருக்கு இரயிலில் சென்ற நாட்களில் வண்ணாரப்பேட்டை / தண்டையார்பேட்டை - ஏதோ ஒரு ஸ்டேஷன் ஒட்டிய மேற்கு திசை பாதையில் வழிப்பிள்ளையார் கோவில் பார்த்த ஞாபகம் உள்ளது. ஆனால் இரயில்வே பிளாட்ஃபார்ம் பிள்ளையார்? பார்த்த ஞாபகம் இல்லையே!

    ReplyDelete
  5. வாங்க டிடி, உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். :))))

    ReplyDelete
  6. ஸ்ரீராம், ஆச்சரியமா இருக்கு!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  7. வைகோ சார், ரயில் ஒண்ணு ப்ளாட்ஃபார்மில் நிக்கிறது. அதை வேணும்னு தான் எடுக்கலை. பிள்ளையாரை மட்டுமே எடுக்கணும்னு எடுத்தேன். ரயில்வே ஸ்டேஷனில் வேலை நடக்குது என்பதையும் கவனிச்சுக்குங்க. இப்போ இந்த ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம் விஸ்தரிப்பு முடிஞ்சிருக்கும். ஆனாலும் பிள்ளையார் அங்கே தான் பல வருஷங்களா இருக்கார். அதனால சுலபமாக் கண்டு பிடிக்கலாம்.

    ReplyDelete
  8. கெளதமன் சார், கட்டாயமாப் பார்த்திருக்கணும். இல்லைனா ரயிலில் போயிருக்க மாட்டீங்க. அதான் தெரியலையோ????

    ReplyDelete
  9. பேசின் பிரிட்ஜ் பிளாட்ஃபார்ம் எண் இரண்டு என்று சொல்கிறான், என்னுடைய அன்றைய பெரம்பூர், இன்றைய ஸ்ரீரங்க வாசி ராகவேந்திரன்.

    ReplyDelete
  10. சென்ட்ரல் ஸ்டேஷன்!

    ReplyDelete
  11. தஞ்சாவூர் இரயில்வே ஸ்டேஷன்!

    நான் பார்த்திருக்கிறேனே. உங்கள் பேசும் பொற்சித்திரப் பதிவில்:)!

    ReplyDelete

  12. படமே சரியாகத் தெரிய்வில்லை. ஒன்று ஒரே கறுப்பு.இருந்தாலும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பிள்ளையார் கோயில் பார்த்ததாக நினைவு. சரியா.?

    ReplyDelete
  13. ரயிலுக்குள்ளயே ஏதாவது கோவில் இருக்கா?

    ReplyDelete
  14. கெளதமன் சார், தப்போ தப்பு! :)))))

    ReplyDelete
  15. ரஞ்சனி, ம்ஹூம், தப்புங்க.

    ReplyDelete
  16. ரா.ல. நீங்க பார்க்கக் கூடாதுனு நினைச்சேனே! நடக்கலையே! ரைட்டோ ரைட்டு! :)))))

    ReplyDelete
  17. ஜிஎம்பி சார், முதல் படம் தான் இருட்டிலேயே எடுத்தேன். இரண்டாம் படம் வெளிச்சமாய்த் தான் இருக்கு. :))) முதல் படத்திலும் பார்க்க முடிகிறது. இது ராமேஸ்வரம் இல்லை. சமீபத்தில் நாங்க ராமேஸ்வரம் போகவில்லை.

    ReplyDelete
  18. அப்பாதுரை, இந்தியாவில் ரயிலில் பயணிக்கிறேன்னு சொல்லுங்க, ரயிலிலேயே கோயில் கட்டிடலாம்.

    ஹிஹிஹி, ரா.ல. தான் சரியான பதில் சொன்னார். :)))))) மத்தவங்க யாரும் பேசும் பொற்சித்திரம் பக்கம் கூடப் போகிறதில்லையா, வசதியா இருந்தது. :)))))ரா.ல. சொல்லிடுவார்னு நினைச்சேன்.

    ReplyDelete
  19. பகிர்ந்த எந்தப் பொற்சித்திரமும் மறப்பதில்லை:)!

    பார்த்தால் சொன்னதுதான். ஆனாலும் பரிசு உண்டா என தெரிஞ்சுக்க வந்தேன்.

    ReplyDelete
  20. நானும் வெள்ளிக்கிழமை கோவை ரயில் நிலையத்தில் உள்ள கோவிலை(பிள்ளையார்)போட்டோ எடுத்தேன் பகிர்ந்து இருக்கலாம் போல் இருக்கே!

    ReplyDelete
  21. என் பதிவில் முதலில் நான் பார்க்கும்போது ஒரு படம்தான் இருட்டில் எதுவும் தெரியாமல் இருந்தது. இராண்டாவது படம் சுத்தமாகத் தெரியவில்லை. பிள்ளையார் கோயில் என்றிருந்ததால் ராமேஸ்வரம் என்று எழுதினேன்....

    ReplyDelete
  22. நானும் பார்த்திருக்கின்றேனே..... பேசும்பொற்சித்திரத்தில்.:)

    ReplyDelete
  23. மாயவரம் ஸ்டேஷன்ல ஒரு பிள்ளையார் பார்த்திருக்கேன் மாமி! அதுவோ என்னமோ?

    ReplyDelete
  24. வாங்க மாதேவி, நீங்களும் பார்த்திருப்பீங்களோனு சந்தேகமா இருந்தது! :))))

    ReplyDelete
  25. யக்காவ்வ்வ்வ்வ்வ், அநன்யா யக்காவ்வ்வ்வ், அதான் ரா.ல. சரியாச் சொல்லி அவங்களுக்குப் பரிசுனும் அறிவிப்பு வந்தாச்சே, தூங்கிட்டே படிச்சீங்களா? ஹிஹிஹிஹி, ஆப்பீச்சிலே அதானே வழக்கம்???? :)))))))

    ReplyDelete