
அப்புறமாத் தமிழ்நாட்டின் சிரபுஞ்சியாக எங்க ஊர் ஆயிட்டு இருக்கு. எங்க தெருவைத் தோண்டின அன்னிக்கு ஆரம்பிச்ச மழை நடுவிலே ஒருநாள் நாங்க துளசி வீட்டுக்குப் போறதுக்காக நின்னது. இப்போச் சேர்த்து வச்சுப் பெய்யுது. நேத்திக்குத் தொலைபேசியிலே மாம்பலத்திலே இருக்கும் தம்பிட்டே பேசினப்போ இங்கே மழை பெய்யுதுனு சொன்னா ஹிஹிஹிஹினு சிரிக்கிறார். எல்லாம் நேரம்! நான் வடாம் எதுவும் கூட இந்த வருஷம் போடலை. ஆனால் பாருங்க, பாலைவனப் பகுதிகளிலே இருந்தெல்லாம் எங்களைக் கூப்பிட்டு அழைப்பு வருது. அங்கெல்லாம் மழை பெய்யணுமாம். யாரானும் நாத்து நடணும்னா உடனே வந்து நடலாம். அவ்வளவு ஆழமா உழுதிருக்காங்க. விளையற நெல்லை நாங்களே அறுவடை செய்துக்கறோம். ஏன்னா இனிமே இது காய்ஞ்சு அவங்க ரப்பிஷோ, கல்லோ கொட்டி கிராவல் போட்டு சமன்படுத்தி, அப்புறம் தார் போடணுமே! வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்ச தூரம்தான்! :)))))))))))))))
வாழ்த்துக்கள் தலைவி ;)))
ReplyDeleteவாழ்த்துக்கள் கீதாம்மா.
ReplyDeleteகோபி,
ReplyDeleteமெளலி, இருவருக்கும் நன்றி.