எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 05, 2014

நான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத்தேன்!

பள்ளிக்குப் போகும் நாட்களிலே திடீர்னு அம்மா தன்னோட பிறந்த வீட்டுக்குத் தங்கை பிரசவத்துக்கு உதவிக்குப் போக நமக்குச் சமையல் வேலை பிடித்துக் கொண்டது. முதல்நாள் சமைக்கிறச்சே அப்பா வெண்கலப்பானைக்குப் போட வேண்டிய அரிசித் திட்டத்தைச் சொல்லிட்டு, வத்தல் குழம்பு வைத்துக் குட்(கொட்டு) ரசம் வைக்கச் சொன்னார்.  எங்க அப்பா வீட்டில் கொட்டு ரசத்தை குட் ரசம் என்றே சொல்லிப்பழக்கம் ஆயிடுச்சு.  மாத்திக்க முடியலை, விட்டுடுங்க!

அந்த வருஷத்திலே இருந்து தான் ஸ்கூல் பஸ்ஸில் ஸ்கூலுக்குப் போகப் பணமும் கட்டி இருந்தது. ஏழரைக்கு, பாம், பாம், பாம் னு பஸ் வந்து குரல் கொடுக்கும்.  அதுக்குள்ளே சமைச்சுட்டுக் கிளம்பணும்.  என்ன?  வயசா? வயசெல்லாம் கேட்காதீங்க!  சின்ன வயசு என்பதால் திருஷ்டிப் பட்டுடும். ஆனால் நான் சமைக்க ஆரம்பிச்சு கோல்டன் ஜூபிளி கொண்டாடிட்டு இருக்கேன் இப்போ.  ஸ்கூலுக்கு லேட்டாவும் போக முடியாது. கிரவுண்டைச் சுத்தி ஓடணும்.  கிரவுண்ட் சும்மா ஒரு 2,3 மைலுக்குள் தான் இருக்கும்.

ஆகவே காலம்பர சீக்கிரமே எழுந்து, {ம்ஹூம், அதெல்லாம் எழுப்பி விடற வேலையெல்லாம் கிடையாது, நாமே தான் எழுந்துக்கணும், இப்போ அதே பழக்கத்தில் தானே முழிச்சுக்க வந்தாச்சு என்றாலும் ஒரு ஆறு மாசமாக் காலம்பர எழுந்துக்க முடியலை.  ஐந்தரை ஆயிடுது பல நாட்கள்! :(} அதை விடுங்க.  சீக்கிரமா எழுந்து பள்ளிப் பாடங்களை முடிச்சுக் கொண்டு குளிச்சுத் துவைச்சு,உலர்த்திட்டு வந்து சமைக்கணும்.  குளியலறை ஒன்றே ஒன்று.  நாலு குடித்தனங்கள்.  ஒரு வீட்டில் குறைந்தது நான்கு நபர்கள்.  எல்லோருக்கும் காலை அவசரம். அதிலே தான் குளிச்சுத் துவைச்சாகணும்.

எல்லாம் முடிச்சுச் சமைக்க வந்தாச்சு.  சாதம் வடிச்சாச்சு ஒரு குமுட்டியிலே. இன்னொரு குமுட்டியிலே ரசமும் வைச்சேன்.  புளி போடுவாங்களானு சந்தேகம்! எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.  அவங்களோட வழிகாட்டுதலின் பேரில் ரசத்துக்கும் புளி உண்டுனு தெரிஞ்சது.  குழம்புக்கும் புளி கரைக்கணுமாமே!  அதையும் கரைச்சு வைச்சாச்சு! ரசம்  சின்னக் குமுட்டியில் ஆகி விட்டது.  அதிலேயே கல்சட்டியைப் போட்டுக் குழம்பு வைக்கணும்.  பெரிய குமுட்டியில் காய் பண்ணியாகணும்.  அதுக்குள்ளே ஸ்கூல் பஸ் பாம் பாமெனக் கத்த, இப்போ வரலை, அடுத்த ட்ரிப்புக்கு வாங்கனு டிரைவர் கிட்டே கூடத்தில் குடி இருந்த மாமியை விட்டுச் சொல்லச் சொல்லிட்டுக் காயைப் பெரிய குமுட்டியில் போட்டுவிட்டு, சின்னக் குமுட்டியில் போட்டிருந்த கல்சட்டியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு தாளிக்க ஆரம்பித்தேன்.

என்னென்ன தாளிப்பாங்க?  சரியாத் தெரியலை.  எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் தாளிப்போம்னுட்டுப் பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கேட்காமலேயே கடுகு, உபருப்பு, கபருப்புனு எல்லாத்தையும் போட்டு சுண்டைக்காய் வத்தலையும் போட்டு நிறைய மிளகாய் வத்தலையும் போட்டுத் தாளிச்சுட்டேன்.  புளிக்கரைசலையும் ஊத்தியாச்சு.  உப்பும் போட்டாச்சு.  ஆனாலும் குழம்பில் நிறம் வரலை.  ஹிஹிஹி, பொடி போடணும்னு தெரியலை.  எங்க வீட்டிலே ரசப்பொடினு தான் பண்ணுவாங்களா.  அது ரசத்துக்கு மட்டும்னு நினைச்சுட்டேன். நிறத்துக்காக மஞ்சள் பொடியைப் போட்டுட்டேன்.  குழம்பும்கொதிச்சது.  கீழே இறக்கிட்டு அவசரம் அவசரமாச் சாப்பிட்டுட்டுப் பள்ளிப் பேருந்தைப் பிடிக்க நேரு பிள்ளையார் சந்திப்பை நோக்கி நடந்தேன்.

பள்ளியிலே குழம்பே நினைவில் இருந்தது.  எப்படி இருந்ததோ என்னமோனு!  சாயந்திரமா வந்தால் ஒரே பாராட்டு மழை.  புளிக்காய்ச்சல் மாதிரி இருந்ததுனு. அப்ப்பாடா!   பெருமூச்சு விட்டுட்டுத் தப்பிச்சுண்டேன். மெதுவாப் பக்கத்துப் போர்ஷன் மாமியிடம் மாமி அம்மா வைக்கிறாப்போல் குழம்பு இல்லையே என்ன காரணம்னு கேட்டால் அவங்க எப்படி வைச்சேனு கேட்டுட்டு அப்புறமாச் சொல்றாங்க பொடி போடணும்னு.  மி,வத்தல் ஒண்ணோ, ரெண்டோ தாளிச்சால் போதுமாம்!  ஹிஹிஹி, அதுக்கப்புறமா என்னதான்குழம்பு வைச்சாலும் அந்த முதல் குழம்பு மாதிரி இல்லைனே அப்பா சொல்லுவார்.  நல்லவேளையாக் கண்டு பிடிக்கலை. அல்லது போனால் போகட்டும்னு விட்டாரோ தெரியலை!  :)))))))

இந்தப் புராணம் இப்போ எதுக்குனு கேட்கிறீங்களா?  நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன்.  நிறைய மிவத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது.  பொடியும் போட்டேன்.  கொஞ்சமாக. 

26 comments:

  1. //நேத்துச் சுண்டைக்காய் வத்தல் குழம்பு வைச்சிருந்தேன். நிறைய மி.வத்தல் போட்டதால் அந்தப் பழைய ருசியில் வந்திருந்தது. //

    ஆஹா, என் நாக்கில் ஜலம் ! ;)

    அந்த முதல் முதலாகச் சமைத்த போதும் சாப்பிட என்னை நீங்கள் அழைக்கவே இல்லை.

    நேற்றும் அழைக்கவில்லை. ;(

    ReplyDelete
  2. ஏதோ ஒன்று செய்யப்போக ஏதோ ஒன்று வந்து அதுவும் நன்றாக அமைந்து விடுவது இங்கும் நடந்தது உண்டு! என்னுடைய 'சேனைக்கிழங்கு கிரேவி' அப்படி வந்ததுதானே!

    ReplyDelete
    Replies
    1. மறுபடி வந்து பார்த்துட்டேன்!

      Delete
    2. ஆனால் இதில் அப்பளத்தைக் காணோம்!

      Delete
  3. //எங்க பகுதி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தால் அடுத்த பகுதி சமையலறையிலே இருக்கும் மாமி பதில் கொடுப்பாங்க.//
    இந்த அன்யோன்யமான பக்கத்து வீட்டுக்காரர்களை நாம் எங்கே தொலைத்தோமோ தெரியவில்லையே. நாமும் அன்யோன்யமாய் இருப்பதில்லை என்பது புரிகிறது. இரண்டுமே ஆதங்கம் தான்.
    உங்கள் குழம்பு வாசனை இங்கு வரை அடிக்கிறதே. சாப்பிடத் தூண்டும் மனம்.

    ReplyDelete
  4. ருசியா இருந்தா போறுமே?

    ReplyDelete
  5. பொடி ஆனாலும் சுவாரஸ்யமான அனுபவம் அம்மா...

    ReplyDelete
  6. மலரும் நினைவுகள் வயசாயிடுத்து!

    ReplyDelete
  7. என் பின்னூட்டம் எங்கே... நேற்றிரவு நானிட்ட பின்னூட்டம் எங்கே?

    ReplyDelete
  8. வாங்க வைகோ சார், உங்க உடல்நிலை, பிசியான வேலைகள் எல்லாத்தையும் மறக்க அடிச்ச சுண்டைக்காய்க் குழம்புக்கு ஜே! :)

    ReplyDelete
  9. ஹிஹிஹி, வாங்க ஶ்ரீராம், நம்ம ரங்க்ஸ் இதைத் திப்பிச வேலைனு சொல்லுவார். இப்படி நிறைய ஸ்டாக் வைச்சிருக்கேன். மெல்ல மெல்ல ஒண்ணொண்ணாச் சொல்றேன். :))))

    ReplyDelete
  10. வாங்க ஸ்கூல் பையர், நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ராஜலக்ஷ்மி, ஆமாம், இப்படி அந்நியோந்நியம் என்பது இப்போ இல்லை. காணக் கிடைப்பதும் இல்லை. :(

    குழம்பு நல்லா இருந்ததா?

    ReplyDelete
  12. ம்ம்ம்ம் வெறும் மிளகாய் மட்டுமே போட்டு அதுக்கப்புறமும்நிறையத் தரம் குழம்பு வைச்சிருக்கேன் அப்பாதுரை! :)))

    ReplyDelete
  13. வாங்க டிடி, இதெல்லாம் பொடி விஷயம் தான் கரெக்டாப் புரிஞ்சுண்டீங்க! :)

    ReplyDelete
  14. வாங்க வா.தி. வத்தக்குழம்பு வராதவங்களை எல்லாம் வர வைச்சிருக்கு!

    வயசாயிடுச்சா?? அடப் பாவமே! உங்களுக்கு வயசாயிடுச்சுனு எனக்கு ஏற்கெனவே தெரியுமே! :P :P :P

    ReplyDelete
  15. ஹிஹிஹி ஶ்ரீராம் ராத்திரிப் பின்னூட்டம் போட்டிருக்கீங்க போல! எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் சரி, வேறே வேலையே இல்லாமல் இருந்தாலும் சரி கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக ஏழு மணிக்கப்புறம் கணினியில் உட்காருவதில்லை என்று ஒரு கட்டுப்பாடு. கூடியவரை கடைப்பிடிக்கிறேன். எப்போவானும் ரங்க்ஸுக்கு ஏதானும் அவசர மெயில் அனுப்பணும்னாலோ, அல்லது பையரோ, பென்ணோ ஏதேனும் மெயில் அனுப்பிப் பார்க்கச் சொன்னாலோ தான் திறப்பேன். இல்லைனா நோ சான்ஸ்! நீங்க காலை வரை பொறுத்திருக்கணும். :)))))

    ReplyDelete
  16. காலம்பரவும் தினம் தினம் வர முடியாது. சில நாட்கள் ஏழு மணிக்குள்ளாக நேரம் கிடைச்சால் வருவேன். இல்லைனா நீங்க பொறுத்திருக்கத் தான் வேண்டும். :))))

    ReplyDelete
  17. அதை குழம்புன்னு பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டவங்களை முதல்ல பாராட்டனும்! ஹாஹா! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  18. ரொம்ப சுவாரஸ்யமான பகிர்வு!.. முதல் சமையல் மாதிரி முதல்ல பக்ஷணம் பண்ண ஆரம்பிச்ச அனுபவத்தையும் முடிஞ்சா பகிர்ந்துக்கங்க.. என் அம்மா, நாக்பூர், பரோடான்னு வேலை பார்த்த என் அண்ணாவுக்கு நடு நடுவுல ரெண்டு மூணு மாசம் சமைச்சுப் போடப் போன வேளைல தான் நானும்சமைக்க ஆரம்பிச்சேன். ஒரே குழம்பை, பருப்புப் போட்டு முதல் நாளும் பருப்புப் போடாம அடுத்த நாளும் பண்ணுவேன் :))))!!..பக்கத்து வீட்டுல அப்பாவோட சித்தப்பா மகன்கள் இருந்ததால, அந்த சமையல்லயும் டவுட் வந்தா இந்த சமையல் கட்டுலருந்து கேள்வி கேட்டு, அந்த சமையல் கட்டுலருந்து சித்திகிட்ட பதில் கேட்டுப்பேன்!..ஹி...ஹி..எனக்கும் கொசுவத்தி சுத்திருச்ச்!

    ReplyDelete
  19. ஹிஹி சுரேஷ், குழம்பு நல்லாவே இருந்ததாக்கும். :)

    ReplyDelete
  20. பார்வதி, முதல்லே உங்க மெயிலைச் செக் பண்ணுங்க. உங்களுக்கு மரபு விக்கி சம்பந்தமா மெயில் அனுப்பி 3 நாளாச்சு! :))))

    பக்ஷணம்னா முதல்லே நான் பண்ணினது போளி தான். :)

    ReplyDelete

  21. தீரடிகலாக எனக்கு சமைக்கத் தெரியும் . திருமணமான புதிதில் தனிக் குடித்தனம் போன பிறகு என் மனைவி சமைக்கப் பட்டபாடு இப்போதும் நினைவுக்கு வருகிறது. எதற்கும் முதல் அடி என்று ஒன்று உண்டுதானே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. திப்பிச வேலை! :)))))

    சுவையான நினைவுகள்!

    ReplyDelete
  23. நல்ல அனுபவம். வெகு சுவை கீதா.
    மி வத்தல் மட்டும் போட்டுக் குழம்பா. வாவ்.

    ReplyDelete