எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 11, 2007

சாலை ஜெயராமனின் பகிர்வுகள் -2 ரசிகனுக்காக

ரசிகன் தங்கள் ஆழமான பார்வைக்கு முதலில் என் பாராட்டுக்கள். தங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க
எனக்குத் தெரிந்தவரை முயற்சி செய்கிறேன். குற்றமிருப்பின் மன்னிக்கவும்.

முதலில் பரிபாஷைகள் பற்றி.........

பரி பாஷைகள் என்பது ஒரு கருத்தை மறைமுகமாகத் தெரிவிப்பது. அதுவும் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக கொண்டே சங்கேத முறையில் பேசிக் கொள்வது அல்லது அறிவிப்பது. இது தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தில் அதிகமாக
கையாளப்பட்டுள்ளது. 'அகத்தியர் குழம்பு' போன்ற நுால் இதற்கு சான்றாகும். மற்றைய மொழிகளில்
இவ்வாறு பரிபாஷைகள் வழக்கில் இருக்கிறதா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். ஒரு
மொழியை சிறப்பித்துக் கூற வரும்போது பிற மொழிகளை குறைத்துக கூறுவது நாகரீகமாகாது. என் நோக்கம் அதுவுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கு ஏற்றவாறு தன் தன் வளமையைக் கொண்டுள்ளது.

ஆனால் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டெனில் அது உயிரியலையும்,
வாழ்வியலையும் ஒருங்கே பெற்று உயிர் மொழியாக இருப்பதுதான்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் மறை பொருளாகிய மெய்ப் பொருள் என்னும் மெய் அருத்தம் ஒன்று உண்டு. இதையே வள்ளுவர் பிரான் 'மெய்ப் பொருள் காண்பதறிவு' எனக் கூறுகிறார்.

இலக்கண நுாலான தொல்காப்பியம் சொல்லின் இலக்கணமாக 'தமிழ்ச் சொற்களில், ஒவ்வொரு சொல்லும் 'ஆறு வீதி'
'பதினெட்டு சந்து' என்று சொல்லப் பெறுகிற லட்சணத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதாவது எந்தஒரு சொல்லையும் பொருள் கொள்ளும் போது இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் அந்தச் சொல்லுக்கு மெய்யருத்தம் காணப் புறப்பட்டால் அது தன் முகத்தைக் காட்டாது. இந்த 'யுனிக் கோடு' அமைப்பு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் கையாளப்பட்டது தமிழுக்கு ஒரு சிறப்பு. எனவே நம் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் புழக்கத்தில் கொள்ளும் அர்த்தத்தை தவிர அந்த சொல்லுக்குரிய மெய்யான பொருள் மறைவாக உள்ளது என்பது செய்தியாகும்.

உதாரணமாக 'படி' என்ற ஒரு பதத்திற்கு பொருள் கூறும் போது படித்தல் என்று வினைச் சொல்லாகவும், பெயர்ச் சொல்லாக வரும்போது அளக்கும் உபகரணமான படி, வாயிற் படி, அடுக்கு என்ற பொருள் பட வரும். இவ்வாறாக பயன் பாட்டுச் சொல்லாக வரும்போது ஆறு வீதி வழியாக அனைவர் பார்வைக்கும் பட நிற்கும்.

மெய்யருத்தம் காணும் முகத்தான் படியைத் தேடினால் 18 சந்து களில் தன்னை மறைத்துக் கொண்டு சத்திய
வழி நடப்பவர்களுக்கு மட்டும் தன் முகத்தைக் காட்டும்.

இதை மேலும் விவரிக்குமிடத்து, ஒரு பெயர்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். ' முயல் ' என்ற ஒரு
சொல்லானது வெளித் தோற்ற வழியாக பொதுவாகச் சொல்லுமிடத்து,ஒரு பிராணியைக் குறித்து வரும்.
இதையே சித்தர்கள் , ஞானிகள் தங்கள் இறை அனுபவங்களைக் கூறுமிடத்து, சாமானியர்களும், துன்
மார்க்கர்களும் தங்கள் நெறி வழிகளை துஷ்பிரயோகம் செய்யாமலிருக்கும் பொருட்டு மெய்ப் பொருளை
மறைத்துக் கூறுவர். முயற்சியுடையோர் ஒரு மெய்யான ஆசான் மூலம் அறிந்து கொள்ளட்டும் என விட்டுவிடுவர்,

முயல் என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால், முயலுதல் என்ற ஒரு செயலுக்கும், அந்த முயலுதல் என்ற
காரியப்படும் போதுமறைந்து நிற்கும் முயலின் அருங் குணங்களைக் கைக் கொண்டால் முயலுதல் வெற்றியைத் தரும். முயலின் குணங்களாவது துாய்மைக்கு உதாரணமாகவும், சுத்தத்திற்கு எடுத்துக் காட்டாகவும் முயல் என்ற பிராணியின். பிறவி அமைப்பு. இதைக் கூர்ந்து நோக்குவோர் மட்டும் அறிந்து
கொள்வர்.

அதிகாலை Dawn என்று சொல்லப் பெறும் பிரம்ம முகூர்த்த காலத்தில் மட்டும் முயலானது நீர் அருந்தும்
அருங்குணம் கொண்டது. அது தரையில் உள்ள னீரை அருந்துவதில்லை. காலை வேளையில் வயல் வெளிகளில் நிறைந்து காணப்படும் புற்களின் மேல் பரவி நிற்கும் துாய்மையான பனி நீரை அருந்தும் குணமுடையது முயல். இந்த குணம் சத்வ குணமானதால் இதை முயற்சி செய்தல் நலம். இதை
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் துாய்மையையும் சத்தியத்தையும் கைக் கொண்டு
நடைமுறையில் முறையான பயிற்சியில் ஒரு ஆசானின் துணையோடு முயல்வோமேயானால் அதுவே
முக்திநிலை. இங்கும் முக்தி னிலை என்பது ஒரு பரிபாஷையே. அதை விவரிக்க தனி பிளாக்கில் எழுத
உள்ளேன். வெறும் சத்வ குணம், ரஜோ குணம், தமச குணம் என்று கூறுவதைக் காட்டிலும், அந்தக்
குணங்களை நாம் தமிழ்வழியில் தேடிக் கண்டடையலாம்.

அடுத்து ஒரு பரி பாஷை பார்ப்போம். குணங்களைப் பற்றிப் பேசும் போது புறங்கூறுதல் என்ற ஒரு
தீமையான குணத்திற்கு அர்த்தம் கொள்ளும் போது, சாமானியர்கள் பார்வையில், ஒருவரைப் பற்றி அவர்
இல்லாத இடத்து அவரைப் பற்றி தவறான கருத்துக்களை மிகச் சாதாரணமாக உபயோகிப்பது என்பது பொருள்.

ஆனால் இதையே ஞானிகள் பார்வையில் வேறாக உள்ளது. வடலுார் வள்ளல் பிரான் திரு ராமலிங்க அடிகள் இதைக் கூறுமிடத்து, 'அகத்தைப் பற்றிப் கூறாத எல்லாமும், எதுவும் புறங்கூறுதலே ஆகும்' என்பார்.
புறம் என்றால் வெளியே / அகம் என்றால் உள்ளே. இயன்றவரை புறத்தினைப் பற்றி சிந்திக்காமல் அகத்துள் உறைந்துள்ள ஈசனை வெளியே தேடாமல் உள்ளேயே சிந்தித்திருப்போமேயானல், தியானம் என்ற தவனிலையை அடையலாம்.

இதையே 'சிவாய நம வென சிந்தித்திருப்போருக்கு' என சைவ ஆகமங்கள் கூறுகிறது.

இதையே வள்ளுவ பிரான் எவ்வாறு கையாண்டுள்ளார்கள் எனக் காண்போம்.

மறைமொழி மாந்தர் தம் பெருமை உலகே அவர்தம் நிறை மொழி காட்டிவிடும்

தக்கார் தகவிலார் என்பார் அவர்தம்
எச்சத்தால் காணப் பெறும்

அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்,

இதில் நிறைமொழி, எச்சம், அடக்கம், ஆரிருள் போன்றவை பரிபாஷைகளாக உள்ளன,

மேலும் இந்தக் குறள்களை (கொரல்களை) நன்கு கூர்ந்து நோக்கின் மெய்யர்த்தம் வேறொன்றாக இருக்கிறது. அது சாமானியர்களுக்கு சாதாரணப் பொருளையும், பரிபாஷை கண்ட நிறை மொழி மாந்தர்க்கு மெய்ப் பொருளான ஒரு மெய்யையும் கொண்டுள்ளது என அறியலாம்.

எனவே கடவுள் என்பது புறத்தில் அதாவது வெளியில் இல்லை. சமஸ்கிருதம், யூதர்க்ளைப் போல்
அல்லாமல், நீங்கள் கூறியது போல் தமிழ் மட்டுமே சொர்க்கத்திற்கு டிக்கட் போடும் வல்லமையைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் 'ஆங்கு+இலம்=ஆங்கிலம்' ஆங்கு (அங்கே) எந்த மொழியாலும் சொர்க்கத்திற்கு வழிகாட்ட முடியாது. ஏனென்றால் சொர்க்கம் என்பது வான வெளியினில் அல்ல. அது நம் அகத்தே உள்ள ஒரு நன்னிலமாகும். எரேபிய மொழியிலிருந்து பைபிளை தமிழாக்கம் செய்யப்பட்டபோது தமிழின் சிறப்பால் புனித பைபிளானது ஒரு மெய்ஞானப் பெட்டகமாக மிளிர்கிறது.

உதாரணமாக பிராமண குலத்து மக்களிடையே புழங்கப்படும் பூணுல் என்ற சொல்லை முப்புரி நுால் என்று
பைபிளில் கையாளப்பட்டுள்ளது மிக ஆச்சிரியத்தைத்தரும். இதை நுால் என்றும் புத்தகம் என்றும் பல
கிருத்துவ அன்பர்கள் கூறக் கேட்டேன். மெய்யான பொருள் மெய்நிலை அடைந்தோருக்கே கிட்டும். பைபிள்
பிரசங்கி (4 12) அதிகாரத்தில் முப்புரி நுால் பற்றி வருகிறது. இதுதான் தமிழின் சிறப்பு,

தமிழின் மற்றொறு சிறப்பையும், இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு செய்தியும் இங்கு தர விரும்புகிறேன்.
நம்முடைய மூச்சுக் காற்றோடு அதாவது உயிரோடு மிகக் கவனமாக இணைக்கப் பட்ட மொழி நமது தமிழ்.
எவ்வாறெனப் பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றானது 21600 முறை என வேலை மெனக்கெட்டு கவனமாக எண்ணப்பட்டது நமது மூதாதையர்களால். அக்ஷ்ரக் கல்வி என்று சொல்லப்படும் நமது தமிழ் மொழியின் உயிர், மெய் எழுத்துக்கள் 216 உடன் 100 சுவாசங்களை ஒரு அட்சரத்திற்கு கொண்டு 21600 சுவாசத்தையும் மொழியோடு இணைத்துள்ளனர். சுவாசப் பயிற்சியெனும் உயர்நிலை யோக நெறி கைவசப்பட்டால் மூச்சோடாத பெரு நிலை தியானத்தைக் கைவசப்படுத்தலாம்.

மூச்சை இழுத்து வெளியே விடும் சுவாசம் பிறந்தவுடன் தொடர்கிறது. 8 அங்குலக் காற்றை உள்ளே இழுத்து

12 அங்குல அசுத்த காற்றை வெளியில் விடுகிறோம். இயல்பாக இது நடைபெறுகிறது. இந்த இயக்கம் நின்று
விட்டால் இறப்புதான். 12 அங்குல காற்று ஒவ்வொரு சுவாசத்திலும் வெளியேற்றப்படுவதால் நரை, திரை,
மூப்பு என்னும் நிலைகளில் சின்னாபின்னப்பட்டு பின் இந்த உடல் வீழ்ந்து விடுகிறது. சராசரியாக 100
வயதிற்குட்படுத்தப்பட்ட நம் வாழ்வு தற் காலங்களில் 50க் குள் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம்.

இயல்பாக விடும் மூச்சுக் காற்றே நம்மை இறப்புக்கு கொண்டு செல்கிறது. இதில் கோபப் பட்டால் 12
அங்குலம், 36 ஆகவும், காமத்தில் போகிக்கும் போது 68 ஆகவும், உறக்கத்தில் ஏறக் குறைய 108 அங்குலம் குறட்டை ரூபத்தில் வெளியேறி சாவின் எல்லை சென்று திரும்புகிறது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 'உறங்குவது போல் சாக்காடு' எனக் கூறுகிறார்.

ஆனால் முயற்சி செய்தால் இந்த 8 அங்குல சுவாசத்தை 4 அங்குலமாக மாற்றி அதையே பின் மூக்கினுள்
மட்டும்சுவாசிக்கும் யோக நிலையை அடைய மனிதனால் மட்டுமே முடியும். இந்த சுவாசம் தான
வெற்றியைத் தரும் விசுவாசம் நம்பிக்கை என்ற பொருளாக மறைந்து உள்ளது. இன்றைய வாழ்க்கைச்
சூழலில் நாம் மிகச் சாதாரணமாக பொருளாதாயத் தேட்டலினால் சுவாசத்தை இழந்து மிகச சிறிய வயதில் பொலிவிழந்து டென்ஷன் டென்ஷன் என நம்மை நாமே இழந்து விடுகிறோம். சைவத் தமிழ் நுால்கள் இந்த ஒப்பற்ற சுவாசம் பழகும் யோக நெறியைப் போதிக்கிறது.

அதைப் போல் 'கண்+நாக்கு = கணக்கு' என்பதில் கணிதம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. கண் நாக்கு
இரண்டினாலும் கவனமான அணுகுமுறைக் கைகொண்டால் மிகச் சிறந்த யோக நெறி வசமாகும். தமிழில் மட்டும்தான் இப்படிப் காரணப் பெயர்கள் அதிகம் உள்ளது,

ஆவல் - அவா அறிவு - ஞானம்

போன்wறசொற்களுக்கு மிக நீண்ட விளக்கம் உள்ளது. போகப் போக சிறிது சிறிதாகப் பார்ப்போம். இவை அனைத்துத் தகவலும் ஆன்மீகத்தோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் தனியாக சாதி மதம் மொழி என்ற பேதமற்று சத்திய மாக கடைப்பிடித்தால் மட்டும் போதும் வையத்துள் வாழ்வாங்கு இனிமையாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல

விரும்பியே இத்தகவல்களைத் தந்துள்ளேன்.

// பொதுவான ஒரு
இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன.//
பக்குவமடையும் வரை இறை கன்செப்ட் மனிதனுக்கு ரொம்ப அவசியம் .அதனால
எழுதப்பட்டவை (இறக்கப்பட்டவையல்ல ) .
ஆனா அதுலயும் நெறய பேதங்கள் காலத்துக்கேற்ப்ப.. இந்து மதம் வர்ணங்கள் சாதிகள்.,ஒரே கடவுள்ன்னு

சொல்லிக்கொள்கின்ற கிருஸ்துவத்தில் கத்தோலிக்,ப்ரொடஸ்ட்ன்னு ஆயிரம் வகைகள் அவர்களுக்குள்ளேயே

சண்டைகள்.இஸ்லாமில் சுன்னி,குர்தீஷ் ந்னு பல பிரிவு அவர்களுக்குள்ளே போர்..//

எழுதுவதற்கும் ஒரு தனித் திறமை வேண்டுமல்லவா. தனிமனிதன் பெயர், புகழுக்காக எழுதுவதற்கும், சான்றோர்கள் பிறர் வாழ எழுதி இறக்கியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 'இறக்கப்பட்டபவை'
என்று ஏன் சொன்னேன் என்றால், இரக்கத்தினால்தான், பெரியோர்கள் வருங்கால சந்ததியினர் பயன்படும் வகையில் எங்கோ இறக்கி வைத்துள்ளனர். அதனால் தான் அச்சுகள், கணிணிகள் இல்லாத காலத்தில் எழுதப்பட்டவை இன்றளவும் நமக்கு கிடைத்து வருகிறது.

சல் முகம்மது நபி பிரானவர்கள் வஹி என்னும் சப்த தொனியால் புனித குரான் இயற்றி இறக்கினார்கள்.

அதை தமிழில் தர்ஜமா என்று தமிழ் உரையில் இஸ்லாம் மார்க்கத்தின் வேத மந்திரமான பிஸ்மில்லா ஹிர்
ரஹ்மான் ஹிர் ரஹீம் என்ற புனித மந்திரத்தின் 24 அட்சரங்களும் ஹிந்து தர்ம்த்தின் மகாமந்திரமான
காயத்ரி மந்ரத்திற்கும் 24 அட்சரங்கள் என்பது வியப்பான செய்தியில்லையா. மனிதன் தன்னை அறியாதவரையில் மதங்களால் மாறுபடுவான் . தன்னை அறிந்தால் எல்லா மதமும் எம்மதமே என்பது புரிய வரும். வேதங்களை இயக்கிய அல்லது எழுதிய செம்மல்கள் ஒரே பொருளைத்தான் பேசியுள்ளார்கள்.

புரியாததால்தான் பேதங்கள். எனவே எல்லா மார்க்கமும் ஒன்றே என்பதை அகத்துள்தான் தேட முடியும்,

பிரிவினைகளை விடுங்கள், அகத்துள் கூடுங்கள், பிறரைப் பார்க்காதீர்கள். பேதங்களும் ஒற்றுமைக்காக ஏற்பட்ட ஒன்றே என்று தர்க்க ரீதியாக சிந்தியுங்கள். இறைவனை மறுத்து பின் இறையோடு ஒன்றுங்கள்.

ஏனெனில் நீங்களே கடவுள். கடவுள் தனியாக எங்கோ ஆகாயத்தில் இல்லை,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்,
உடம்பினுள் உத்தமனைக்காண்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

போன்ற உயிருக்கான பொன் மொழிகள் தமிழைத்தவிர எந்த இலக்கியத்திலும் இல்லை. தமிழ் ஒன்றுதான் இலக்காகிய முக்தி வீடை இயம்பும் மொழி. நமது இலக்கு பொருள் தேடுவது அல்ல. அருளைத் தேடுவதே, அதற்கான உபகாரமே பரோபகாரம். காக்கை குருவி போன்ற பறவையினங்களும், யானை போன்ற பெருவயிறு படைத்த மிருகங்களும் உணவுக்காக யாருடைய உதவியையும் நாடவில்லை. தொண்டு, பணி, உதவி போன்ற
செயல்களெல்லாம் அகங்காரத்திற்கு வழிவகுக்குமே யல்லாது நிஜ உதவியாகாது. ஞானத்திற்கு செய்யும்
உதவியே பேருதவி. அதுவே பயனுக்கு வருவது. கர்வத்தை அழிப்பது. மற்ற உதவியெல்லாம் போலியே.

அனைத்துயிரையும் நம் உயிராகப் பாவிக்கும் போது, தனிப்பட்ட முறையில் உதவி செய்வேண்டியது அவசியம் இல்லை. அதற்காக இரக்கமற்ற பாவியராய் கொடுமை செய்ய வேண்டுமென்பது பொருளல்ல.

எனவே பரிபாஷைகள் அனைத்தும், முறையாக குருவழி அறிந்து கொள்ள வேண்டி முன் வந்த இறையிலார்கள் தங்கள் இறை அனுபவங்களை முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதில் தமிழ் பெரும் பங்கு
வகிக்கிறது என்ற செய்தியோடு தற்சமயம் முடித்துக் கொள்கிறேன்,

தங்களுக்கு மேலும் ஆர்வம் இருக்குமாயின் கலந்துரையாட விருப்பமாயுள்ளேன்.

11 December, 2007

ரசிகனுக்கு ஜெயராமன் கொடுத்த பின்னூட்டத்தை இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன். நான் இன்னும் படிக்கவில்லை. படித்ததும் பின்னூட்டம் வரும்!

8 comments:

  1. ஜெயராமனின் விளக்கத்தில் தமிழுக்கும் மூச்சுக்காற்றுக்கும் உள்ள தொடர்பு பற்றிய செய்தி புதியது...ஆச்சரியப்பட வைத்தது...

    ReplyDelete
  2. மூன்று முறை படிச்சேன் ஜெயராமன், தமிழ் மொழியை எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள், தமிழாலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது. பாசமலர் சொன்னது போல் உண்மையாகவே ஆச்சரியப் பட வைக்கும் விஷயங்கள், பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நன்றி திரு பாசமலர். கருத்துக்களைத் தெரிவிக்கும் போது ரொம்ப மேதாவிலாசம் காட்டக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தாலும், சமயங்களில் சிறிது கர்வம் தலைக்கேறிவிடும். அந்த மாதிரி எதாவது ஒரு செய்தி இருந்தாலும் தாங்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி வெறும் பொழுதுபோக்கும் சாதனமாக மட்டும் கணிணியைப் பயன் படுத்த விரும்பவில்லை. நம் அன்றாட வாழ்விலிருந்து சிறிது விலகி கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்கள் இருக்கின்றது என்பதை அறிவிக்கவிரும்பியே தகவல்கள் தந்திருக்கிறேன். இதில் வரும் எல்லாப் பெருமைகளுக்கும் எம்மான் எனது குருபிரான் சாலை ஆண்டவர்களுக்கே உரித்தாகும்.

    அரிதான இன்னும் பல செய்திகள் தங்களைப் போன்றோருடன் பகிர்ந்து கொள்ளும்போது மட்டுமே என் பிறவியின் பயன் முழுமை பெறும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மீண்டும் தொடர்பு கொள்ளுகிறேன்.

    நன்றியுடன்,

    ReplyDelete
  4. அன்புச் சகோதரி கீதாவிற்கு,

    தங்கள் கருத்துக்கு நன்றி. சரஸ்வதி சபதம் என்னும் திரைப்படத்தில், ஊமையாய் இருந்து கலைவாணியின் அருளால் திடீரென்று பேச்சு வந்து கவிபாடும் ஆற்றல் ஒரு புலவருக்கு வந்ததுபோல, கல்வியறிவில்லாத, ஒரு சாமானியனாக அக்ரஹாரத்தில் இருந்துவந்த இந்தக் கடையேனையும் வாழவைப்பது தமிழ்தான் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

    கருத்துக்களே கடவுள் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றேன்.

    அகமுகமாக திரும்பும் போதுமட்டுமே நல்ல கருத்துக்கள் உள்ளத்தில் ஏற்படும். அப்பேற்பட்ட கருத்துக்களும், சிந்தனைகளாலும் மட்டுமே அறியாமையால் விளைந்த மூடப்பழக்கங்களைக் களைந்து ஒரு நல்ல சமுதாய மாற்றம் ஏற்படுத்த முடியும். ஒரு விவேகானந்தரைப் போல ஒவ்வொரு இளைஞனும் நல்ல கருத்துக்களால் கவரப் பட்டு சமுதாயமாற்றத்திற்கு உதவ முடியுமானால், அன்றுதான் நம் பாரத நாட்டுக்கு மெய்யான சுதந்திரம். அதற்காக ஒரு சிறு முயற்சி எடுப்போமேயானால், அதுதான் நிஜமான தொண்டு, உதவி போன்ற எல்லாம். அந்நியனின் அடிமைத்தளையிலிருந்து விலகி, தன்னுடைய புலன்களுக்கு அடிமையாய்க் கிடக்கும் நம்மவர்களைப் பார்க்கும் போது எது சுதந்திரம் என்ற கேள்வி எழாமலில்லை.

    மீண்டும் ஒரு மெய்யான சுதந்திரம் பெற்றுத்தர ஒரு மஹா புருஷரின் வருகைக்காகப் பிராத்திப்போம்.

    என் கருத்துக்களுக்கு செவிசாய்த்து தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பதிவில் வெளியிட்டமைக்கு மீண்டும் ஒரு முறை என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. ஆஹா.. ஜெயராமன் சார்.. ஏதோ என் மனசுக்கு பட்டதை சொன்னேன்.எனக்கு பதில் சொல்லவே ஒரு பதிவா?..

    நாங்கெல்லாம் பின்னூட்டத்தைத்தேன் பதிவா போடுவோம்.நீங்க பின்னூட்டத்திற்க்கே ஒரு பதிவு போட்டுட்டிங்களே..

    ReplyDelete
  6. என்ன ஒரு சிறப்பான தொகுப்பு...
    தமிழுக்கு இம்புட்டு சிறப்பிருக்குதுன்னு
    பெருமையா தோனுது.இயல்பு தானே.


    இதை நாளைக்கே பத்து பிரிண்ட் எடுத்து "எங்க சில்ரண்ஸ்க்கு டமிலே தெரியாது"ன்னு பீட்டர் விடுற் கொஞ்சம் பேருக்கு கொடுக்க வேண்டியிருக்கு...

    ReplyDelete
  7. நிறைய தெரிஞ்சி வைச்சிருகிங்க..
    கோர்வையா, பொருத்தமான உதாரணங்களோட ஆர்வமூட்டும் வகையில எழுதுவது உங்களுக்கு கைவந்திருக்கு...

    சூப்பர்....

    நெறய எழுதுங்க...

    சிந்தனை பகிர்வு ,கொடுக்குமிடம் குறையாத ஒரு தானம் தான்.

    ReplyDelete
  8. //பக்குவமடையும் வரை இறை கன்செப்ட் மனிதனுக்கு ரொம்ப அவசியம//

    பக்குவம் அடைந்தப்பிறகு வேண்டாமா?

    இஸ்லாமில் முக்கிய பிரிவுகள் சன்னி, சியா இதை தவிர வேறு சிலவும் உள்ளன.

    ReplyDelete