எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 10, 2009

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி!

திருக்கைலை மலையே லிங்க வடிவாக வழிபடப் படுகின்றது. மேலும் திருவண்ணாமலையும் அக்கினி ஸ்வரூபமாய் லிங்க வடிவிலே இருப்பதாயும் கேள்விப் படுகின்றோம். மேலும்
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே"

என்று சொல்லுகின்றார் மாணிக்கவாசகர். இங்கே ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியாய் நின்றவர் அந்த ஈசனே தான் அல்லவா? விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒரு பெரும் சோதி ரூபமாய் நின்றார் அவர். அந்த உருவமே லிங்கமாய் ஆவிர்ப்பவித்தது. மனிதனை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் வடிவமே லிங்கம் ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்துமே இரண்டிரண்டாய் இருப்பதை அறிவோம் அல்லவா?? பகல்-இரவு, ஒளி-இருட்டு, இன்பம்-துன்பம் என்பது போன்ற இருவகை நிலைகள் இருக்கின்றன அல்லவா?? இதைத் தான் மாயை என்று சொல்கின்றனர். இந்த இருமை வகையான மாயையில் இருந்து நாம் விடுபட்டு இவற்றை எல்லாம் கடந்த நிலையையே லிங்க ஸ்வரூபம் நமக்கு உணர்த்துகின்றது.

ஆன்மீகப் பெரியோர் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்று இது. ஒரு சமயம் விவேகானந்தர் கலந்து கொண்ட ஒரு சமய வரலாற்று மகாநாட்டில் ஒரு ஜெர்மானியத் தத்துவப் பேராசிரியரால் லிங்க வழிபாடு, பாலுணர்வோடு தொடர்பு படுத்திப் பேசப் பட்டது. அப்போது அந்தப் பேரவையில் இருந்த ஸ்வாமி விவேகானந்தர் அதே மேடையில் அதை ஆணித்தரமாய் மறுத்ததோடு அவற்றுக்கு எடுத்துக்காட்டாய் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி எடுத்துரைத்து மறுத்தார். ஆகமவிதிகளின் படி ஆவுடையாரின் வடிவமானது, பத்மபீடம் அல்லது சமவடிவிலான நாற்கோணமாகிய பத்திரபீடம் ஆகும் எனவும் எடுத்துக் காட்டினார். மேலும் பழைய காலங்களிலேயே லிங்க வழிபாடு இருந்திருப்பதோடு அப்போதெல்லாம் பீடங்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார் விவேகானந்தர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வளாகத்திலும், சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் பீடமற்ற லிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகின்றது.

லிங்கம் என்பது சிவலிங்கம் என்ற ஒரே பொருளையும் கொண்டதல்ல. இறைத் தன்மையின் வடிவமே லிங்கம் ஆகும். திருமூலர் சொன்னபடி இவற்றின் உட்பொருளை அறிதல் மிகக் கடினம்.

இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம் தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே. 1712

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. 1752

நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப் பட்ட இந்த லிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும். தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பேராற்றல் படைத்த இந்த லிங்கத்தின் சக்தி அளப்பரியது என அறிவியல் வல்லுநர்களும் கூறுவதாயும் தெரியவருகின்றது. அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் John Stephen என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி SIVALINGAM என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருப்பதாயும் தெரியவருகின்றது.

நம்நாட்டில் மட்டுமில்லாமல் அநேக உலக நாடுகளிலும் அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. எல்லையற்று விரிந்து, பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் அல்லது இறைத் தன்மையின் ஆதிவடிவம் என்று சொன்னாலும் மிகையில்லை. குறிப்பிட்டதொரு சமயத்துக்கும் சொந்தம் எனக் கூறமுடியாது. தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் வைணவத்திருத்தலங்களிலே கூட சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள் எனவும் தெரிய வருகின்றது. அரியலூர், காரமடை, மொண்டிப்பாளையும், திருமருகல் போன்ற தலங்களில் கூம்பு வடிவிலும், செவ்வக வடிவிலும் லிங்கங்கள் உள்ளன எனத் தமிழ்த்தாத்தா குறிப்பிட்டுள்ளார். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயிலில் செவ்வக வடிவில் லிங்கம் உள்ளதாயும் தெரியவருகின்றது.

மாசிமாதத்தில் அந்தக் கோயிலில் நடக்கும் பந்தசேவையின் போது ஏற்றப்படும் தீப்பந்தம் வட்ட வடிவமாய் இருப்பதாயும், அது குண்டலினி சக்தியின் குறியீடு எனவும் சொல்கின்றனர். நம் ஆழ் மனதில் உள்ள குண்டலினி சக்தியையே லிங்கமாய் உருவப் படுத்தி வழிபட்டிருக்கலாம் சித்தர்களால் என்பதும் ஒரு தகவல். மேலும் லிங்க வடிவு நெருப்போடும் தொடர்பு கொண்டதாய்ச் சொல்கின்றனர். ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் உச்சத்தில் இறைத் தன்மையை லிங்க வடிவில் உணர்ந்து வழிபட்டிருக்கலாம் என்பதும் ஓர் ஆய்வின் மூலம் தெரிய வருகின்றது. நெருப்பு ஆற்றலைக் கொடுக்கும். அது போல் மனிதனின் உள் உணர்வுக்கும் நெருப்பின் தொடர்பு என்பது குண்டலினியை எழுப்புவதன் மூலம் ஏற்படும் அல்லவா? ஆற்றலைக் குறிக்கக் கூடிய ஒரு சக்தியே லிங்கம் என்பது சமயச் சான்றோர்களின் கருத்து.இறைவனை அறியாமையை இருள் என்றும் அவனை அறிதலுக்கு ஒளி பெற்றான் என்றும் சொல்லுவதுண்டுஅல்லவா? அத்தகைய பேராற்றல் படைத்த ஒளிவடிவே லிங்கம் ஆகும். இதைத் தம் சுய அனுபவத்தில் கண்டே வள்ளலார் அருட்பெருஞ்சோதி, தனிப்பெரும் கருணை என்று விளக்கியதோடு அல்லாமல் சமரச சன்மார்க்கத்தையும் ஏற்படுத்தினார். இன்றைக்கும் வடலூரில் ஜோதி வழிபாடு என்பது நடந்து வருகின்றது என்பதையும் அறிவோம். லிங்கம் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பிரகாசம், ஒளி வீசுவது என்ற பொருளும், வடமொழிச் சொல்லுக்கு சூக்ஷ்மமான தேகம் என்றும் பொருள் உண்டு. ஆகவே தன்னுள்ளிருந்து ஒளி வீசி சூக்ஷுமமாய் இருக்கும் ஒன்றே லிங்கம் என்று கொள்ளவேண்டும்.

7 comments:

  1. நல்ல பதிவு தலைவி...சரி "அஹம் ப்ரம்மாஸ்மி" என்றால் என்ன??

    நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்

    ReplyDelete
  2. Unrelated to this post, regarding this post and your comments....

    I have told Ramachandran Usha myself first.

    பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?

    அட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்

    அதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....

    //
    Hi Nice Story!

    I reminds me of multiple stories that I have written in my blog over the last 2 months.

    Appreciate your inputs on them!

    Regards
    Ramesh

    4:39 AM//
    அவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.

    //ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//

    நானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.

    அந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன திடீர்ன்னு?...திருவாதிரை ஸ்பெஷலா?.

    ReplyDelete
  4. அஹம் பிரம்மாஸ்மி! சின்ன விஷயம் இல்லை கோபி, ஒரு பதிவிலே எழுதறாப்போலயும் இல்லை, நேரம் வரட்டும், எனக்கே உணர்ந்துக்கணும் முதல்லே! :)))))))

    ReplyDelete
  5. ரமேஷ், ரொம்ப நன்றி, உங்க பதிவுகளையும் பார்த்தேன், பதிலும் வந்தது.

    ReplyDelete
  6. @மெளலி, சிவராத்திரிக்காகத் தயார் பண்ண ஆரம்பிச்சேன், க்ரூப்பில் ஒருத்தர் கேட்டார், அதனால் திருவாதிரைக்கே போட்டுட்டேன்! நேயர் விருப்பம்! :)))))))

    ReplyDelete
  7. மிக அருமையான விளக்கம்

    காஞ்சிபுரத்தில் திருமால் லிங்க வடிவம் பெற்ற தலம்

    click to have:-

    http://www.dinamalar.com/koil/269_thirukachimetrileeswarar_pillayarpalayam.ASP

    ReplyDelete