எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 13, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்!

துவாரகை நகரின் நிர்மாணம் மிகவும் வியப்புக்கு உரியதாகும். ஏற்கெனவே சொன்னபடிக்குக் கடலரசனை வேண்டிக் கொண்டு நிலம் பெறப் பட்டதாய் ஐதீகம். செளராஷ்டிர மேற்குக் கடலில் இருந்து, கடல் விலகிச் சென்ற நிலத்தைப் பெற்றுக் கொண்டு, நகரம் ஒரு அற்புதமான திட்டமிடலுடம் கட்டப் பட்டது. முக்கிய நதி கோமதி ஆகும். த்வாரமதி, த்வாரவதி, குஷஸ்தலை எனவும் அழைக்கப் பட்டது இந்த நகரம். அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறையப் பெற்றதாயும், நீர்வளம் கொண்ட பகுதிகளில் குடி இருப்புகள், வியாபாரத் தலங்கள், அகன்ற சாலைகள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான, சாலைகள், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் பொது அரங்கங்கள், அதில் ஒன்று "சுதர்ம சபா" என அழைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிரவும் பெரிய துறைமுகம் ஒன்றும் அங்கே இருந்துள்ளதாய், திரு எஸ்.ஆர்.ராவ் தெரிவிக்கின்றார். http://www.vedamsbooks.com/no14243.htm"பார்க்கவும். "http://video.google.com/videosearch?hl=en&q=The+Lost+City+of+Dwaraka&umவீடியோ காட்சிகளைக் காணலாம்.

மஹாபாரத யுத்தம் நடந்து முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் துவாரகையைக் கடல் கொண்டது. ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்கி விலகிச் சென்று நிலத்தை அளித்த கடலரசன், துர்வாசரின் சாபத்தால் மீண்டும் அந்த நிலத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டான். இதை முன் கூட்டியே அறிந்த ஸ்ரீகிருஷ்ண வாசுதேவன், யாதவர்களைக் காக்க எண்ணி ப்ரபாஸ க்ஷேத்திரத்துக்கு (சோம்நாத்) அழைத்துச் செல்ல, விதியை வெல்ல முடியாத யாதவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு அடியோடு அழிந்து போக, ஸ்ரீகிருஷ்ணனும், வேடன் ஒருவனின் அம்பால், குதிகாலில் அடிபட்டுத் தன்னுயிரை இழந்தார். விராவல் என்னும் ஊரில் அடிபட்ட கிருஷ்ணனை, அர்ஜுனனும், பலராமனும், மெல்ல, மெல்ல சோம்நாத்துக்குக் கொண்டு வந்ததாயும், அங்கே பலராமன் தன் சுய உருவை அடைந்து ஆதிசேஷனாய் பாதாளம் வழியே வைகுந்தம் சென்றதாயும், ஸ்ரீகிருஷ்ணர் அங்கேயே அப்படியே ஆழ்ந்த மயக்கத்தில் ஆழ்ந்து தன் இன்னுயிரைத் தானே போக்கிக் கொண்டதாயும், அர்ஜுனன் கலங்கிப் போய்த் திரும்பியதாயும் சொல்கின்றனர். இதை மஹாபாரதம் அர்ஜுனன் மூலம் எவ்விதம் வர்ணிக்கிறதெனில்:

"அன்று வரையிலும் ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணனுக்குப் பணிந்து அடங்கி, ஒடுங்கி இருந்த கடலரசன், தன் அலைக்கரங்களால், அந்தப் பூமியைத் தொட்டுத் தொட்டுச் சென்று கொண்டிருந்தான். ஊறு ஏதும் விளைவிக்காமல் இருந்த கடலரசன், திடீரென வேகம் கொண்டு, பெரும் ஆவேசத்துடனேயே, துவாரகை நகருக்குள்ளே புகுந்தான். அவன் வேகம் தாங்க மாட்டாமல் அந்த அழகிய நகரின் மூலை, முடுக்குகள் எல்லாம் கடல் நீரால் நிறைந்தது. அர்ஜுனன் பார்த்துக் கொண்டு இருந்த போதே, மாட, மாளிகைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. ஸ்ரீகிருஷ்ணரின் அழகிய மாளிகை நீருக்குள் மூழ்கிப் போய், விரைவில் கண்மூடித் திறக்கும் முன்னர் துவாரகை என்பது ஓர் அழகிய முன் ஜன்மத்துக் கனவாகிப் போனது. கரையைத் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் அப்படியே அங்கேயே தங்கி ஒரு பெரிய ஏரி போல் ஆகி, துவாரகை என்னும் நகரும், அதன் நிகழ்வுகளும், வெறும் நினைவில் மட்டுமே தங்கும் ஓர் பெயராகிப் போனது.

ஹைதராபாத்தில் உள்ள பிர்லா ம்யூசியத்தில் கடல் அகழ்வாராய்ச்சியினர் மேற்கொண்ட தேடுதலில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஒரு மாதிரி துவாரகை நகரை உருவாக்கி அங்கே காட்சிப் பொருளாக வைத்திருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணரின் காலத்தில் துவாரகை நகர் இப்படித் தான் இருந்திருக்கும் என அதன் மூலம் அனுமானிக்கின்றனர். மத்திய ப்ரதேசத்தில் விதிஷா என்னும் இடத்தில் உள்ள பெட்ஸா என்னும் பகுதியில் மேற்கொண்ட ஒரு அகழ்வாராய்ச்சியில் கி.மு. 300-ம் ஆண்டுக் காலத்து கிருஷ்ணர், பலராமர், கிருஷ்ணர் மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரின் சிலைகளைக் கொண்ட ஒரு கோயில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. யாதவர் தலைவன் சாத்யகி என்பவனின் விக்ரஹமும் கிடைத்துள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது.

கி.மு.113-ம் ஆண்டு வாக்கில் கிரேக்க நாட்டுத் தூதுவர் ஒருவரான ஹீலியோபிஸ் என்பவர் விகஸிலா என்று அப்போது அழைக்கப் பட்ட, இப்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் இணைந்த பகுதியில் இருந்து செளராஷ்டிராவுக்கு வந்தார். கிருஷ்ணனைப் பற்றி நன்கு அறிந்த அவர் ஸ்ரீகிருஷ்ணனின் அடியாராகி கிருஷ்ணனின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு ஸ்தூபியை எழுப்பியுள்ளார். அது இன்றும் துவாரகையில் காணக் கிடைக்கின்றது. இந்தியக் கடல் அகழ்வாராய்ச்சிக் கழகத்தினர் கடல் கொண்ட துவாரகையின் நினைவுச் சின்னங்களைக் கடலுக்கு அடியிலேயே போய்ப் பார்க்கும் வண்ணம் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருவதாய்ப் பல ஆண்டுகளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் இந்தத் திட்டம் நிறைவேறியதாய்த் தெரியவில்லை. இத்துடன் துவாரகைப் பயணம் நிறைவு பெற்றது. இனி கண்ணன் வந்துடுவான், கதை சொல்ல. அப்பாடானு கவிநயா கொஞ்சம் சந்தோஷப் பட்டுக்கலாம். :)))))))

4 comments:

  1. லிங்க் சரியா வேலை செய்யலை போலிருக்கே, யாரங்கே தொழில் நுட்ப ஆலோசகர், வந்து கொஞ்சம் என்னனு பாருங்கப்பா! :P:P:P

    ReplyDelete
  2. லிங்க் என்னமோ சரியாப் போகலை இன்னிக்கு, அப்படியே கொடுத்துட்டேன், மன்னிக்கவும். :((((( ப்ளாகர் வேதாளம் முருங்கை மரம் ஏறி இருக்கு, எப்போ இறங்குமோ தெரியலை! :P

    ReplyDelete
  3. கிடைத்ததைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. உள்ளேன் தலைவி ;)

    ReplyDelete