எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 14, 2010

அப்புவோட சூலுக்குப் போகப் போறேனே!

பள்ளி நாட்களைப் பத்தி எழுதறதுக்கு வல்லி அழைச்சிருக்காங்க. ஹிஹி, நான் தான் குழந்தையாச்சே, பள்ளிக்கே இனிமேல் தான் போகணும்! அதான் போல, முந்தா நாள் பேசினப்போ அப்பு என்னை அதோட ப்ளே சூலுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இருக்கு. சரினு ஒத்துண்டிருக்கேன். நான் எங்கே ப்ளே சூல் எல்லாம் போனேன்?? :D நான் அதோட அழாமல் வரதுக்கு சாக்லேட் தரேன்னும் சொல்லி இருக்கு. கூடவே வாலண்டைன் கார்டும் கொடுத்திருக்கு. யு.எஸ்ஸில் வாலண்டைன் தினம் என்பது அனைவருமே அன்பைத் தெரிவிக்கும் தினம். அதனால் குழந்தைகள் கூட தங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கூடப் பிறந்தவர்கள் எனக் கொடுக்கிறாங்க. அப்பு சூலுக்குப் போகும்போது தினமும் (birdies)பர்டீஸ் கிட்டே எல்லாம் சொல்லிட்டுப் போகுமாம், இப்போ பனிங்கறதாலே பர்டீஸ் வரதில்லை, ஆனால் அதுக்கு ஆச்சரியமா இருக்கு, பர்டீஸ் ஏன் இல்லைனு?? பர்டீஸுக்கு லீவ் விட்டிருக்குனு சொல்லி வச்சிருக்கா அவ அம்மா!

போயிட்டு வந்துட்டு எழுதறேன் ஓகே??????? :)))))))))))))))))

21 comments:

  1. //அழாமல் வரதுக்கு சாக்லேட் தரேன்னும் சொல்லி இருக்கு. //

    உங்களை எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. பாவம் அப்பு:)!

    ReplyDelete
  2. ஆமாண்டா பட்டு சமத்தா ப்ளே சூல் போய், My mommy னு டீச்சர் எழுதி தந்த பேப்பர்ல குச்சி உடம்பு ல பனங்கா தலையும் 2 பக்கத்திலும் நீட்டிண்டு இருக்கிற ஜடையும், smiley face னு பயங்கரமா பல்லையும் க்ரேயான் ல வரைஞ்சு அதை pegs போட்டு டீச்சர் விட்டத்தில கொடி கட்டி பறக்கவிட்டுருக்கிற அழகை அம்மா பாத்து ( "ங்கே" அம்மா மனசுல )அதி(ர)சய பட வைக்கணும் தங்க முட்டாயி!!

    ReplyDelete
  3. //நான் தான் குழந்தையாச்சே, பள்ளிக்கே இனிமேல் தான் போகணும்//

    இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா சொல்லிபுட்டேன்

    ReplyDelete
  4. வாங்க ரா.ல. மொக்கைனாதான் ஆதரவுனு முடிவு கட்டிட்டீங்க போல!, உங்களை இங்கே வரவழைக்க நான் எப்படி எல்லாம் மொக்கை போடவேண்டி இருக்கு! மீ ஆல்சோ பாவம்! :)))))))))))
    அப்பு அதெல்லாம் சமாளிக்கும்! வேணும்னா மடியிலே போட்டுத் தூங்கக் கூட வைச்சுடும்! :))))))))))

    ReplyDelete
  5. ஹிஹிஹி ஜெயஸ்ரீ ஆண்டி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்ல ஆண்ட்டி!!!:))))))))

    ReplyDelete
  6. எல்கே, 2much???ம்ஹும், அதெல்லாம் இல்லையே??? இன்னும் கொஞ்சம் எழுதினேன், அப்புறம் சின்னக் குழந்தை நிறைய எழுதாதேனு நிறுத்தினேன்! :))))))))))))))))

    ReplyDelete
  7. டைம் மெஷின் கொண்ட தானைத்தலைவி வாளுக!!

    ReplyDelete
  8. கீதாப்பாப்பா......
    ப்ளேசூல்லே....'எல்லாம்' சமத்தாப் போனியோ?:-)

    ReplyDelete
  9. ஆஹா, கீதாக் கண்ணு, தெரியாம சொல்லிட்டேனே.
    நீ ப்ளேசூல் போயிட்டுப் பெரியவளானதும் நாளைக்கு எழுதும்மா:)
    அப்புக் குட்டி,
    பாப்பாவைப் பத்திரமா பார்த்துக்கோ. நிறைய சாக்கலேட் தராதே. பல்லு கொட்டிடும்!!!

    ReplyDelete
  10. மொக்கையின்னு நீங்களே முடிவு கட்டிக்கிட்டா நாங்களா பொறுப்பு:)? உலகமே அன்பைக் கொண்டாடும் தினத்தில் பாசத்தைச் சொல்லும் பதிவு. மிக நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. இ.கொ. என்ன இது தேர்தல் அறிக்கைனு நினைச்சுட்டாப்பல இருக்கு?? :P:P:P:P

    ReplyDelete
  12. ஹை, டீச்சர் வந்துட்டாங்களே, வாங்க வாங்க டீச்சர் வாங்க, அதெல்லாம் சமத்தா இருப்பேன்! :D

    ReplyDelete
  13. ஹிஹிஹி, வல்லி, வாங்க, அப்புவுக்கு வெப்காம் வழியாவே எல்லாத்தையும் கொடுத்துட முடியும்னு ஒரு நினைப்பு! பாவம், எல்லாத்தையும் கொண்டு வந்து காட்டும். ஜெயஸ்ரீ சொன்ன மாதிரியே அது என்னை வரைஞ்சிருக்கு! :)))))))))

    ReplyDelete
  14. வாங்க ரா.ல. பாசத்தைப்பத்திச் சொன்னதைப் புரிஞ்சுண்டதுக்கு நன்னிங்கோ! :)))))))

    ReplyDelete
  15. ரைட்டு...பார்த்து போயிட்டு வாங்க குழந்தை தலைவி ;)

    ReplyDelete
  16. என் பிள்ளைகள் கூட வாலண்டைன் டே கார்ட் செஞ்சு கொடுத்தாங்க. சின்ன நோட்டிச் போர்டை பரிசா கொடுத்தோம்.

    ரொம்ப சந்தோஷம் பசங்களுக்கு. அன்பை வெளிப்படுத்தும் நாள் அதுதான். தம்பி கூட அர்த்தராத்திரி 7.30க்கு(!!) போன் செஞ்சு ஹேப்பி வேலண்டைண்டேக்கான்னு சொல்ல தூக்கத்தை ஏன் தம்பி கெடுக்கறேன்னு திட்டிகிட்டே வாழ்த்து சொன்னேன்.

    சனிக்கிழமை படம் பாத்துட்டு தூங்கும்போது 1 மணிக்கு மேலே :)))

    ReplyDelete
  17. மொக்கையின்னு நீங்களே முடிவு கட்டிக்கிட்டா நாங்களா பொறுப்பு:)?//

    அதானே அதானே, :))

    ReplyDelete
  18. வாங்க கோபி, ரொம்பநாளாச்சு பார்த்து, பிசி போல!

    ஹிஹிஹி, குழந்தைத் தலைவிங்கற பேரும் நல்லாத் தானிருக்கு, கெஜட்ல அறிவிச்சுட்டு பேரை மாத்திக்கலாமானு யோசிக்கிறேன். :)))))))))))))

    ReplyDelete
  19. வாங்க புதுகை, பசங்களோட பாசப் பகிர்வுக்கு வாழ்த்துகள், மொக்கையில்லைனு அறிவிச்சதுக்கு நன்னிங்கோ! :)))))

    இயற்கை, இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தமோ???:))))))

    ReplyDelete
  20. mmmm போனீங்களா இல்லை கட் அடிச்சாச்சா?

    ReplyDelete