எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 31, 2011

அடுக்குமாடிக்குடியிருப்புக்களும், அடக்க முடியாத் தொல்லைகளும்

இத்தனை கஷ்டங்களைப் பிறருக்கும் கொடுத்துக் கட்டப்படும் கட்டிடங்களில் குடியிருக்க வருவோரின் நிலை பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். பொதுவாக நடுத்தரக் குடிமக்களே தங்களுக்கு என ஒரு சொந்த வீடு வேண்டும் என்று வாங்க நினைக்கின்றனர். இவர்களில் வெகு சிலர் வருமான வரியில் இருந்து தப்பிக்கக் கடன் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டியும் வாங்குகின்றனர். இதிலே முதலில் உள்ளவர்கள் அவர்களே குடியும் வருவார்கள் எனில் பின்னர் சொன்னவர்களோ வாடகைக்கு விட்டுவிடுவார்கள். வீட்டைச் சுற்றி இருக்கும் இடமே இரண்டே இரண்டு அடிதான். இப்போத் தான் தரைத் தளத்தில் கட்டாயமாய்க் கார் பார்க்கிங்கிற்கு இடம் விட்டாகவேண்டும் என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. பத்து வருடங்கள் முன் வரையிலும் அது கட்டாயம் இல்லை. ஆகவே கீழேயும் முழுதும் கட்டுவாங்க. மேலேயும் கட்டுவாங்க. கீழே கார் பார்க்கிங் இடம் விடுவதால் இப்போதெல்லாம் இரண்டு தளங்களுக்கு அநுமதி போலிருக்கு. அந்த இடுக்கிலேயும் கீழே இரண்டு குடியிருப்புக்களாவது கட்டறாங்க. புறாக்கூண்டுகள் தான். பக்கத்து வீடுகளின் சுவர் மறைக்கும் என்பதோடு அந்தக் குடியிருப்புக் கட்டப்படும் இடம் இரு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கமாய் வேறு வரும். அங்கே கட்டிடம் இல்லாமல் தோட்டம் இருந்தால் சரி. இல்லை எனில் வெளிச்சமே வராது. ஒரே இருட்டு. பின் பக்கம் வீடு இருந்தால் அவங்க கழிவறையின் பக்கம் சமையலறை இருக்குமாறு வரலாம். அதோடு அவங்க செப்டிக் டாங்கும் இருக்கலாம். பக்கத்து வீடுகளின் குளியலறை, கழிவறையும் வரலாம். இந்த இடத்திலே தான் அவங்க தலைவாசல் அமையும். அதை உள்பக்கமாய் அமைத்தால் இந்தத் தொந்திரவு இருக்காது. வெளிப்பக்கமாய்த் தான் வைக்கிறாங்க. எல்லா அறைகளும் பத்துக்குப் பத்து, பத்துக்குப்பனிரண்டு இருந்தால் அதிகம். அடுப்பிலிருந்து துடுப்பு வரையிலும், பீரோவில் இருந்து கட்டில் வரையிலும் இருந்தால் பிரச்னை தான்.

பெரும்பாலான குடியிருப்புக்களில் சமையலறையில் ஒருத்தர் மட்டுமே நின்று சமைக்கலாம். பத்துக்கு ஐந்து அல்லது பத்துக்கு ஏழுக்குள் தான் சமையலறை இருக்கிறது. அதிலேயே எல்லா சாமான்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். சாமான் குறைவாக இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் நம் மக்கள் சாமான்களைச் சேர்க்கும் வழக்கம் உள்ளவர்களே! ஹால் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையில் தான் ஒரு பக்கம் தடுத்தோ, தடுக்காமலோ சாப்பாடும் சாப்பிட்டாக வேண்டும். வருபவர்களையும் வரவேற்க வேண்டும். இன்றைய நாட்களில் பெரிய வீடு என்றால் பராமரிப்புக் கஷ்டம் என்றொரு நினைப்பு அனைவருக்கும் உள்ளது. அதனாலேயே குடியிருப்புக்களை விரும்புகின்றனர். அவரவர் தங்கள் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே போதும். ஆனால் இதிலும் எல்லைத் தகராறு வந்து விடுகிறது. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இருப்பதில்லை. மாடிப்படிகள் அனைவருக்குமே பொது என்றாலும் கீழே இருப்பவர்கள் முதல் தளத்தில் இருப்பவர்களும், இரண்டாம் தளத்தில் இருப்பவர்களும் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள், நாம் எப்போவானும் துணி உலர்த்தத் தானே போகிறோம் என நினைக்கிறார்கள். ஆகவே அதைச் சுத்தமாய் வைத்துக்கொள்வதில் போட்டா போட்டி வருகிறது.

இந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்; பெருக்கிச் சுத்தப் படுத்த ஆளை நியமித்துவிடலாம் என எண்ணி ஆளைப் போட்டால், அதற்குப் பராமரிப்புக்கு என மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டும். அதை அனைவரும் உடனுக்குடனே கொடுப்பதில்லை. அவங்களுக்குள் தலைவராக இருப்பவர் பாடு தான் திண்டாட்டம். அவர் கையைவிட்டுக் கொடுத்துட்டுப் பின்னர் வசூல் பண்ண வேண்டியதாய் இருக்கும். ஒரு சிலர் கொடுக்காமலேயே இழுத்தடிப்பார்கள். இன்னும் சிலர் தலைவராய் இருந்தால் கொடுத்தவர்களைக் கொடுக்கலைனும் சொல்லி விடுவதுண்டு. இது எங்க பக்கத்துக் குடியிருப்பில் நடந்த ஒரு விஷயம். ஆகவே இது ஒரு தொல்லை. இத்தோடு போகாது.

பாதாளச் சாக்கடைத் திட்டமே செயல்படுத்தப் படாததால் இங்கே எல்லா வீடுகளிலும் செப்டிக் டாங்க் தான். ஒரு வீடும், அதிலே குறைந்த பக்ஷமாய் ஆறிலிருந்து பத்து நபர்களுக்குள் இருந்த இடத்தில் இப்போது எட்டு வீடுகளும், ஒரு வீட்டுக்குக் குறைந்தது நான்கு நபர்களுமாக முப்பத்திரண்டு நபர்களும் கழிவறை பயன்படுத்துவார்களே! அதற்கு ஏற்றாற்போல் அல்லவா கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதில்லை. செப்டிக் டாங்கில் கழிவறைத் தண்ணீர் அதிகமாய் வழிந்து வெளியே ஓடி வந்து தெருவுக்குப் போகிறது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலே கட்டிய மழை நீர் வடிகால்க் கால்வாயில் அதை விட்டிருக்கிறார்கள். எங்க வீடு தாண்டி இரண்டு வீட்டுக்கு அப்பால் அந்தக் கால்வாய் முற்றுப் பெறாததால் கழிவு நீர் அப்படியே நிற்கிறது. ஆகவே நாங்க எங்க வீட்டுப் பக்கம் முனிசிபல் கமிஷனரிடம் சொல்லிவிட்டுக் கால்வாயை மூடி விட்டோம். பக்கத்திலோ கழிவு நீர் வெளியே போக வழியில்லாமல் அந்தக் கால்வாயில் விட்டு அதுவும் நிரம்பிக் கழிவு நீர் சாலையிலேயும் வரும். மழை பெய்தால் கேட்கவே வேண்டாம். இத்தனைக்கும் கழிவு நீர் ஊர்தி மாதம் ஒரு முறை வந்தது இப்போது மாதம் இரு முறை வந்து எடுத்தாலும் மீண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது.

ஒரு முறைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் அதற்கான செலவு ஆகிறது. அனைத்துக் குடியிருப்புச் சொந்தக்காரர்களும் இந்தப் பணத்தைப் பிரித்துக்கொள்ளவேண்டும். ஆனால் குடித்தனம் வருகின்றவர்களோ வீட்டுக்காரங்க இது குறித்தெல்லாம் சொல்லவே இல்லை; நாங்க தர முடியாது என்று கூறுகிறார்கள். அப்போ இருக்கும் சொந்தக்காரங்க கையிலிருந்து போட்டு அந்தப் பணத்தைக் கட்டிவிட்டுக் கழிவு நீரை இறைக்க வேண்டும். சொந்தக்காரங்க வாடகை வாங்க வரச்சே அந்தப் பணத்தைக் கேட்டு வாங்கணும். சொந்தக்காரங்க சொல்வதோ நாங்க உபயோகிக்காத கழிவறைச் செலவுக்கு நாங்க ஏன் கொடுக்கணும் என்பதே! ஆக மொத்தம் இருவரும் நழுவிக்கொள்ள அந்தப் பணம் அந்தக் குடியிருப்பு வளாகத்தினுள் குடி இருக்கும் சொந்தக்காரர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியதாகிவிடுகிறது.



குடியிருப்போர் தொல்லை தொடரும்.

13 comments:

  1. 'அங்கே' சொன்னதைத்தான் இங்கியும் சொல்லிக்க விரும்பறேன். மேலும், நம்மூர்ல இன்னும் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம் பெரிய அளவுல வேரூன்றலை. மனசளவுல இன்னும் நாம அதே தனிவீட்டுக்காரங்களாத்தான் இருக்கோம். அதனால, அதே லைஃப் ஸ்டைலை இங்கியும் தொடர்கிறோம். அபார்ட்மெண்ட் வாழ்க்கைக்கு நம்மூர் பழக்கப்பட இன்னும் கொஞ்ச காலம் ஆகுமோன்னு இருக்கு கீதாம்மா..

    ReplyDelete
  2. ஜெயஸ்ரீ நீலகண்டன் மெயிலில்

    //Apartments style லிவிங்க் ல தரங்களும் இருக்கு அததுக்கு தக்கன வேறுபடும் . டெல்லி மாதிரி மும்பை மாதிரி ஊர்ல ரொம்ப நாளா ஃப்ளாட் ஸிஸ்டம் . அது பெரும்பாலான middle class க்கு பேருதவி. புறா கூண்டோ எதுவோ . அதுல ஒத்துமையா தன்னைப்போல் பிறத்தியாரையும் மதித்து respect ஓட நடந்து கொண்டு வாழ்ந்த குடும்பங்கள் அனுபவிக்கும் நன்மை ஏராளம் . அது நட்புணர்வு நம்பிக்கை intergrity யை பொருத்தது . DDA flats டெல்லில தனி அனுபவம் தான் . கூட்டு குடும்ப வாழ்க்கை அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது எல்லார் வீட்டு விசேஷமோ கஷ்ட்டமோ சமமாக பகிர்ந்தும் கொள்ளப்படும் . ஜாதி மத இன வேறுபாடு இல்லாத ரம்யமான வாழ்க்கை . ரொம்பவே மிச்ச் பண்ணறேன் . அந்த அன்பு என்னை ரொம்ப நான் டெல்லில இருந்த போது நெகிழ வைத்தது. சென்னைல ரெண்டு விதமான experience . ஒண்ணு நீங்க சொல்லறமாதிரி குடியிருப்புகளில் நெடுநாட்களாய் இருந்து பழம் தின்னு கொட்டை போட்டவர்களின் ஆதிக்கம் அவாளோட கார், ஸ்கூட்டர் பைக் போக மிச்சம் இடம் இருந்த மத்தவாளுக்கு . ரஎன் வீட்டுக்குப்பை உன்வீட்டது ஆனா உன்வீட்டது எந்தில்லை !!!வாச்மென் வேற இவாளுக்கெல்லாம் ஜால்ரா!! இது கீழ் பார்க்கிங்க் இல்லாம கட்டப்பட்ட குடியிருப்பு .நமக்கு வாயைதிறக்க வழியில்லாமல் இருந்தது . இப்ப வாடகைக்காரர் இப்ப சட்டம் பேசி ஜமாய்க்கிறதா சொல்லி சந்தோஷப்பட்டார்L(சரி அவர் சாமர்த்தியம் அது!! அடுத்தது நம்ப இப்ப போனா தங்கற அம்மா அப்பா இருக்கற அபார்ட்மென்ட். பக்கத்துல எதிரில இருக்கறவாளை முகமுழிச்சுண்டா பெரிசு!! பாத்தாலும் BLANK EXPRESSIONLESS FACE !!சிரிச்சா என்ன அது ஃப்ரீ தானே இல்லை எனக்குத்தான் தெரியல்லையா. ஆங்கிலத்தில் தான் பேசிக்கறதும் !!எங்கம்மா சொல்லற மாதிரி இங்க எவனாவது வந்து கழுத்தை நெறிச்சு கொன்னாலும் ஒத்தரும் வர மாட்டானு L(( .எல்லாம் ஒரு அனுபவம் தான் . மனைவி அமைவதுதான் இறைவன் கொடுத்த வரம்னு இல்லை அண்டை வீட்டுக்காரருமேனு நினைச்சுப்பேன் J


    :)))))))))//

    ReplyDelete
  3. ஹாஹா, என்னையும் விரட்டிடுச்சு முதல்லே, அப்புறமா என்னமோ போனாப் போறதுனு அலோ பண்ணி இருக்கு.cookie value is null அப்படினு சொல்லிச்சு. :P

    ReplyDelete
  4. மனசளவுல இன்னும் நாம அதே தனிவீட்டுக்காரங்களாத்தான் இருக்கோம். //

    அய்யோ என்னன்னு சொல்வேன். பக்கத்து வீட்டுக்கு ஒருத்தங்க வாடகைக்கு வந்திருக்காங்க. அவங்க பண்ணுற அட்டூழியம் தாங்க முடியலை. சின்ன வயசுதான். ஆனாலும் அவங்கதான் பூஜை,மடி எல்லாத்திலயும் சிறப்புன்னு உதார் விடுவாங்க.

    உறவுல ஒருத்தர் தவறிட்டாங்கன்னு வாய்தவறி சொல்லிட்டேன். நாங்க அப்படி இப்படின்னு சொல்லி டார்ச்சர் கொடுக்கறாங்க. பசங்களைத் தொட்டுட்டான்னு கேக்கறாங்க.

    கோவம் பத்திகிட்டு வருது. நானும் எல்லாம் கடைபிடிப்பவள்தான்னாலும் அடுத்தவங்களை இம்சிக்க மாட்டேன். என் கொள்கை என்னளவில்னு இருப்பேன். இவங்க என்ன சொல்றாங்கன்னா, வெளியில போனா எல்லாம் கலக்கும் தான்/ அது தெரியாதது? இது தெரிஞ்சது.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    மனைவி அமைவதுதான் இறைவன் கொடுத்த வரம்னு இல்லை அண்டை வீட்டுக்காரருமேனு நினைச்சுப்பேன் J //

    சேம் ப்ளட் :(

    ReplyDelete
  5. இதே அபார்ட்மெண்ட் வளாகங்கள் நல்ல படியாகவும் இயங்குகின்றன.

    சாரல் சொல்கிற மாதிரி எல்லாம் சரியானபழக்கத்துக்கு வரவேண்டும்.

    மும்பையில் நாங்கள் சிறிது காலம் ஈருந்தபொது நல்ல பக்கத்துவீட்டுக்காரகள்.
    சப்பாத்தி எல்லாம் கொண்டுவந்து கொடுக்கும் குஜராத்தி அம்மா.
    சென்னையில் சிரமம்தான்.

    ReplyDelete
  6. அபார்ட்மென்ட் வாழ்க்கையில் இவ்வளோ விஷயங்கள் இருக்கா
    என்று ஆட்சிரிய பட வைக்கும் பதிவு

    ReplyDelete
  7. வாங்க அமைதி. அபார்ட்மெண்ட் கலாசாரம் வேரூன்றவில்லை என்பது சரியே. ஆனால் மற்றக் கலாசாரங்களை வேகமாய்க் கத்துக்கும் நம் மக்கள் இதில் மட்டும் மெத்தனம் காட்டுவது அவங்க வசதிக்காகவே என்பது என் கருத்து. :((( தனி வீட்டுக்காரங்களாய் இருந்தாலும் நம் வீட்டுக்குப்பையை மற்ற வீட்டு வாசலில் போட முடியுமா?? சொல்லுங்க! முதல்லே இந்த மாதிரிப் பக்கத்துவீடுகளில் குப்பை கொட்டும் பழக்கத்தைவிட ஆரம்பிக்கணும்.

    ReplyDelete
  8. அதோடு எல்லாருமே தனி வீடுகளில் இருக்கிறவங்களும் இல்லையே. பெரும்பாலும் தூரத்தில் குடியிருந்து எங்கேயும் செல்ல முடியாமல் கஷ்டப் படறவங்க தான், வீட்டுக்காரர்கள் கஷ்டம் பொறுக்க முடியாமல் அல்லது குழந்தைகள் படிப்பு, மருத்துவ வசதினு கிடைக்க வேண்டி அருகாமையிலும், வசதியாகவும் வீடுகள் வேண்டுமெனில் அடுக்கு மாடிதான் வசதி எனத் தேர்ந்தெடுக்கின்றனர். இது நான் பார்த்தவரைக்கும்.

    ReplyDelete
  9. ஜெயஸ்ரீ, டெல்லி, மும்பையில் எல்லாம் சின்ன அபார்ட்மெண்டாக இருந்தாலும் காற்றோட்டமாயும், சுற்றிலும் இடம் விட்டும் கட்டறாங்க. இப்படிக் கட்டறதில்லை. நீங்க சொல்றாப்போல் அங்கெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டில் விசேஷம்னா அந்த வளாகம் முழுதும் விழாக்கோலம் தான். அது மாதிரி எல்லாம் இங்கே நடக்கிறதில்லை. வெகு அபூர்வமாய்ச் சில இடங்களில் நடந்தால் பெரிய விஷயம்.

    ReplyDelete
  10. உங்கம்மா சொல்றாப்போல் தான் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள். :(((

    ReplyDelete
  11. வாங்க புதுகை, அண்டைவீட்டுக்காரங்க அமைவதும் இறைவன் கொடுக்கும் வரம் தான். சந்தேகமே இல்லை. அநுபவபூர்வமாய் உணர்ந்து கொண்டிருக்கிறேன். :))))

    ReplyDelete
  12. வாங்க வல்லி, குஜராத்திலோ, ராஜஸ்தானிலோ, ஊட்டி, ஹைதராபாத் போன்ற இடங்களில் எல்லாம் நாங்க இருந்த க்வார்டர்ஸ் எல்லாமும் பங்களாக்கள் தான். ஆனாலும் அக்கம்பக்கம் பங்களாக்காரர்கள் கதவைப் பூட்டிக்கொண்டு வந்து விருந்துபசாரம் பண்ணுவாங்க. மனம் இருந்தால் போதுமே. மாற்றலாகிப் போனால் ஒரு வாரத்துக்குச் சமைக்க வேண்டாம். அதே மாதிரி மாற்றலாகிக்கிளம்புகையிலும் ஒரு வாரம் சமைக்க வேண்டாம். கையிலும் சாப்பாடு கட்டி மாலை, மரியாதையோடும், கண்ணீருடனும் வழி அனுப்பி வைப்பாங்க.

    ReplyDelete
  13. வாங்க ப்ரியா, சொன்னது கொஞ்சமே, சொல்லாதது நிறைய. :D

    ReplyDelete