எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 20, 2014

கடவுளே காப்பாத்து! :(

ஒண்ணும் சொல்லத் தோணலை;  எங்கேயோ போயிட்டிருக்கு.  இதெல்லாம் மட்டமான முறையில் பிரபலம் ஆகணும்னு நினைக்கிறாரோனு நம்மை எண்ண வைக்குது! ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா? தெரியலை!  டெல்லியே ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு!  இதெல்லாம் சரியா? அதோட மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தைக் கொண்டாடக் கூடாதுனு வேறே கட்டாயப் படுத்திட்டு இருக்கார்.  இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை சுதந்திரப் போராட்டத்தின் போது கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். வெட்கமாக இருக்கிறது.  எதுவாக இருந்தாலும் முறைப்படி பேசித் தீர்த்துக்கத் தான் முயல வேண்டுமே தவிர இது சரியான வழிமுறை அல்ல. உலக அளவில் டெல்லி முதல் மந்திரியின் பெயர் பிரசித்தி அடையலாம் என்பதைத் தவிர நாட்டுக்கு எவ்வளவு தீமையை கெட்ட பெயரை விளைவிக்கும் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை. 


கடவுளே காப்பாத்து!

20 comments:

  1. எடுத்தவுடனேயே இவரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த சூழ்நிலையைச் சொல்லவேண்டும். அனுபவமின்மை. படிப்படியாக வந்திருந்தாள் கொஞ்சம் தெரியிருப்பாரொ என்னவோ... அப்பவுமே சந்தேகம்தான்!

    ReplyDelete
  2. கடவுள் காப்பாத்துவார்.

    கவலையை விடுங்கோ!

    இன்று நம் ஆத்தில் என்ன டிபன்? அதைச் சொல்லுங்கோ.

    ReplyDelete

  3. I beg to differ.

    !!!! இதில் வெட்கப்பட என்ன இருக்கு? corrupt போலீஸ் officers ஐ நீக்குனு சொல்லறது சரிதானே. AAP வழியே தாரணா சத்யாக்ரஹம் தானே? பேசி தீர்ப்பதா?! என்ன மிசிஸ் சிவம் R U joking . உங்காத்து வாசல்ல குப்பையைக் கொட்டி கூத்தடிச்சவாகிட்ட உங்களால ஞாயமா பேசி தீக்க முடிந்ததா? இந்தியாவிலா? விளையாட்டா? "இதர் பாய் பெஹன் க ரிஷ்தா நஹீ சல்தா பைசா ஹை பைசா. நோட் ஹை தோ ஆஜா. நஹி தோ சுப் சாப் வாபஸ் ஜானு கூசாம சொல்லறது டெல்லி போலிசும் வீட்டு வாரியமும். TN registration ஹை ஏ காடி நு கண்ணு மூக்கு ஒத்தருக்கு ஒத்தர் காட்டிண்டு கூசாம காசு பிடுங்கறது போலிஸ். இந்தியாவை மத்த எல்லா விஷயத்திலும் ரொம்ப உயர்வா நினைக்க வச்சுட்டாளா எல்லாரும் இப்போ அசிங்கப்பட? பிறத்தியார் நம்பளைப் பத்தி என்ன நினைப்பா என்பதை வச்சா வாழ்க்கை ? அது எனக்கு சரியா படல்ல. அப்போ பிறத்தியார் நன்னா நினைக்கணும்னு பூசி மொழுகினா சரியாகுமா ? நமக்காக எப்ப வாழறது? இத்தனை ஊழலும் நம்மை மரியாதைக்குரியவர்களா மதிக்க வச்சுடுத்தா? இத்தனை வருஷம் குடியரசு தினமும் சுதந்திர தினமும் கொண்டாடி ஒரு average Indian க்கு என்ன கிடைச்சது. எழுதிக் கொடுத்த Speech படித்துட்டு சுருட்டரத்தை சுருட்டிண்டு போனது தான் மிச்சம்.பணம் கையில் புழங்கரவாளுக்கு கஷ்டம் இல்லை. குற்றப்பத்திரிக்கை வாய் வாசித்தாலும் காசை தந்து தன வேலையை முடுச்சுக்கறது வழக்கமாயிருக்கு. இல்லாதவன்? ஊருக்கு இளைத்தது ? சட்டீச்கரிலும் ஜார்க்ண்ட் போய் பார்த்தபோது மனசு நொந்து நூடல்ஸ் ஆனது . மானபங்கமாயி கொலை செய்யப்பட பெண்கள், ,அடிமைத்தனம் செய்யப்பட சாதாரண ஜனங்கள். குண்டாயிசம் செய்யற government . அத்தனை அடியையும் வாங்கிண்டு ஏழ்மையில் இருந்தாலும் மனசு நிறைஞ்ச சாதாரண இந்தியன். இன்சானியத் the very soul of India அவன் கிட்ட மட்டும் தான் இருக்குங்கற உண்மை துக்கப்படுத்தினது.

    ReplyDelete
  4. கீதா மேடம்,

    குடியரசு தினம் வேறு வருகிறதே ! அந்தக் கொண்டாட்டங்கள்
    முடிந்த பின் நம் சண்டையை வைத்துக் கொள்ளக் கூடாதா?
    நம்மைப் பற்றி வெளி நாட்டினர் என்ன நினைப்பார்கள் என்கிற கவலை எதுவும் இல்லாமல் என்னென்னமோ அரங்கேறிக் கொண்டிருக்கிறது டெல்லியில். நடப்பதெல்லாம் அவரின் முதிர்ச்சியின்மையை அல்லவா காட்டுகிறது.

    நானும் உங்களுடன் சேர்ந்து கடவுளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. அப்பாதுரை has left a new comment on your post "கடவுளே காப்பாத்து! :(":

    kesari alva paththi athikam theriyaathu. aanaa velinaatula enna ninappaanu kavalaipadarathu is not a reason. velinaatula inthiyaavai paththi eppadi ninaichchaa enna?

    i think this diversion will make the other guy - what's his name tarur - relieved.

    அப்பாதுரையோட லேட்டஸ்ட் கமென்ட் என்ன காரணத்தாலோ வெளியிட முடியலை. ஆகவே காப்பி, பேஸ்ட் செய்திருக்கேன். :))))

    ReplyDelete
  6. யப்பாடி, ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு அப்புறமா இது திறந்திருக்கு!:))))

    வாங்க ஶ்ரீராம், அனுபவம் இல்லாமை மட்டுமில்லை. பொறுப்பற்ற தன்மையும் கூட! :(((

    ReplyDelete
  7. அப்பாதுரை, இப்போப் புரிஞ்சிருக்கு போல!:))))

    ReplyDelete
  8. வைகோ சார், தினமும் சாப்பிட்டுச் சாப்பிட்டு என்னத்தைக் கண்டோம் போங்க! :( அங்கே இருக்கிறவங்க படும் பாட்டைக் கண்டால்!!!!

    ReplyDelete
  9. டிடி, கொடுமையே தான்.

    ReplyDelete
  10. ஜெயஶ்ரீ, உங்களை மாதிரியான படிச்ச மருத்துவர்களே இப்படிச் சொல்லலாமா? ஆச்சரியமா இருக்கு எனக்கு. இன்னிக்கு ஹிந்துவிலும் சிலர் ஆதரிச்சு எழுதி இருக்காங்க. செயல் முக்கியமா, போராட்டம் முக்கியமானு என்னைக் கேட்டால் செயல் தான் முக்கியம், அதுக்குத் தான் முன்னுரிமை. இவர் இன்னும் ஆட்சியை ஒழுங்கா நடத்தவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ளே ஜனதா தர்பார் அது, இதுனு.

    ஏதோ புதுசாப் பண்ணற மாதிரி!

    இதெல்லாம் கர்நாடகாவிலே ராமகிருஷ்ண ஹெக்டே என்னும் சிறந்த முதலமைச்சர் இருக்கிறச்சே நடந்தது தான். கெஜ்ரிவால் ஒண்ணும் புதுசாப் பண்ணலை. :((((

    ReplyDelete
  11. ராமகிருஷ்ண ஹெக்டே எண்பதுகளில் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சரா இருந்தப்போ கர்நாடகாவின் முதலமைச்சரா இருந்தார். இரண்டு முதலமைச்சர்களும் எவ்வித விளம்பரமும் இல்லாமல், கூச்சல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் காவிரிப் பிரச்னையைக் கையாண்டார்கள்.

    ReplyDelete
  12. வாங்க ராஜலக்ஷ்மி, ஏற்கெனவே பல விஷயங்களிலும் பின்னே இருக்கோம். இப்போ இந்த அமர்க்களம் வேறே. சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யாதீங்க, அதுவும் டெல்லியில் வேண்டாம்னு வெளிநாட்டவர் எச்சரிக்கை கொடுக்க எத்தனை நேரம் ஆகும்? நஷ்டம் யாருக்கு? அதோடு தொழில் துறையிலும் இந்தியானா தடங்கல்கள்னு ஏற்கெனவே பெயர் வாங்கியாச்சு. இது வேறே இப்போ! :((

    ReplyDelete
  13. வாங்க அப்பாதுரை, தரூருக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை! :)))))

    ReplyDelete
  14. I always believe, " you get what you deserve"

    ReplyDelete
  15. வா.தி. நேத்திக்கு மத்தவங்களுக்குத் திறந்தது. ஆனா எனக்கு வர முடியலை. :)))) இப்போத் தான் மறுபடி வந்தேன்.

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், உங்க கருத்துக்கு நன்றி.

    ReplyDelete