எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 28, 2007

சிப்பாய்க் கலகம்-கப்பல் படையில்?

இந்தியாவை ஆளவந்த ஆங்கிலேயர்கள் அரசை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்து வந்த போதிலும் அங்கிருந்து சில ராணுவ அதிகாரிகளும் இந்தியாவில் பணியாற்ற வந்தார்கள். ஏற்கெனவே ஆங்கிலேயர் தாம் கைப்பற்றிய சமஸ்தானங்களின் படைவீரர்களை இங்கிலாந்தில் இருந்த ராணியின் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததோடு அல்லாமல், காலப்போக்கில் தரைப்படையைத் தவிர விமானப்படை, கப்பல்படையையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அப்படி ஏற்பட்ட கப்பல் படையில் ஆங்கிலேயக் கப்பல்படை அதிகாரிகளைத் தவிர, இந்தியர்களும் அதிகாரிகளாயும், மாலுமிகளாயும் இருந்தார்கள். பணியாற்றும் வீரர்களில் இருவரும் இருந்தபோதிலும் ஒரு ஆங்கிலேய மாலுமி தனக்கு மேல் இந்திய உயர் அதிகாரி இருப்பதை விரும்பியதில்லை. அதுபோல் இந்திய அதிகாரிகளை ஆங்கிலேய அதிகாரிகள் கூடச் சம உரிமை கொடுத்து நட்புப் பாராட்டியதில்லை. முதல் உலக யுத்தத்தில் லேசாகக் கனன்று கொண்டிருந்த இந்த நெருப்பானது 2-ம் உலக மகாயுத்தத்தின் பின் அதிகம் ஆனது.

இந்தச் சமயம் தான் திரு சுபாஷ் சந்திர போஸின் வீரதீரச் சாகசங்களால் மனம்கவரப்பட்ட சிப்பாய்களுக்கும் ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த "ராயல் நேவி"யையும் இது கவர்ந்தது. அவர்கள் தக்க சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே "நிறவேற்றுமை" என்னும் கொடுமைக்கு ஆளாகியதோடு அல்லாமல், உணவு, உடை, போண்றவற்றிலும் பாரபட்சம் காட்ட ஆரம்பித்திருந்தது இங்கிலாந்து அரசு. முதலில் சிறு முணுமுணுப்பாக ஆரம்பித்தது இது. சரியான உணவு, உடை வேண்டும், தங்கள் தகுதியைக் குறைக்கக் கூட்டாது என்று மாலுமிகல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கை வெறும் விழலுக்கு இறைத்த நீராகப் போனது. இது மட்டுமா? இந்தியா எங்கள் நாடு என்று அவர்கள் தங்கள் நாட்டின் மீதுள்ள தேசப் பற்றைக் காட்டிக் கொண்டாலோ உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. மொத்தம் 78 கப்பல்கள், 20 கடல் சார்ந்த நிறுவனங்கள், மாலுமிகள் மட்டுமே 20,000 அதைத்தவிர அதிகாரிகள் என ஒரு பெரும்படையே இதை எதிர்த்துப் போரட முடிவு செய்தது. ஆரம்பித்தது வேலை நிறுத்தம். முதலில் பொது வேலை நிறுத்தம் என அறிவித்தனர். மாலுமிகள் தங்களுக்கு மேல் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கண்டதும் வணங்க மறுத்தனர். அப்படி வணங்கினாலும் இடது கையால் "சல்யூட்" கொடுத்தனர். ஆங்கிலேய அதிகாரிகளால் அவமானத்தைப் பொறுக்க முடியவில்லை.

2 comments:

  1. இடது கையால் சல்யூட் ஹா.. ஹா.. ஸூப்பர்.

    ReplyDelete
  2. சிப்பாய் கலகம் படித்தேன்.

    ReplyDelete