
அசுர சக்தி மேலோங்க, மேலோங்க மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. ஆகவே பயம் போக்கும் துர்கைக்காக முதல் மூன்று நாட்களும், பயம் நீங்கி செல்வம் அடைய லக்ஷ்மியை நினைந்து அடுத்த மூன்று நாட்களும், அறிவையும், ஞானத்தையும் பெறக் கடைசி மூன்று நாட்களையும், முறையே துர்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவில் வைத்துப் பூஜிக்கின்றோம். இந்த நவராத்திரி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அந்த முறைப்படி ஒவ்வொரு வகையாய்க் கொண்டாடப் படுகின்றது. அண்டை மாநிலம் ஆன கேரளாவில் கடைசி 2 நாட்கள் சரஸ்வதி பூஜையும், அதை அடுத்த விஜயதசமியும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. ஆந்திர, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விமரிசையாகக் கொலு வைத்து, பிறரை அழைத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், பரிசுப் பொருட்கள், சுண்டல் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு நாளுக்கும் உகந்த நைவேத்தியமும் பண்ணுவதுண்டு.
ஒரே சக்தியின் வெவ்வேறு விதமான வெளிப்பாடே பிரம்மா, விஷ்ணு, ருத்திரனாய்த் திகழ்கின்றது. சத்வ குணம் காக்கும் விஷ்ணுவாகவும், ரஜோ குணம் படைக்கும் பிரம்மாவாகவும், தமோ குணம் அழிக்கும் ருத்ரனாகவும் காட்சி தருகின்றது. சகலருக்கும் சகல ஐஸ்வரியங்களையும் அழிக்கும் ஸ்ரீமகாலட்சுமியும் இவளே, அனைவருக்கும் கல்வியையும், ஞானத்தையும் தரும் சரஸ்வதி என்பவளும் இவளே! அச்சப்படுவோருக்கு “நான் இருக்கிறேன்! பயமில்லை, ஜெயமுண்டு!” எனச் சொல்லி பயத்தைப் போக்கி வீரத்தை உண்டு பண்ணுபவளும் இவளே. அனைத்துக்கும் மேலான பரப்பிரும்மமும் இவளே.

இப்போதைய சேர்க்கை:
நேற்றுத் திங்கள் அன்றில் இருந்து பொதிகைத் தொலைக்காட்சியில் மாலை 6-30 மணிக்கு வேளுக்குடியின் கீதை உபதேசம் வரும் நேரத்தில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக "பராசக்தியின் பத்து பரிணாமங்கள்" என்ற தலைப்பிலே நிகழ்ச்சித் தொடர் ஆரம்பித்து உள்ளார்கள். கட்டாயமாய்த் தொலைக்காட்சி அந்த நேரம் பார்க்கும் வாய்ப்புடையவர்கள் தவற விடவேண்டாம். அன்னையின் தசமஹா சக்தியைக் குறிப்பிடும் விதமாய் அமைந்த முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணப் பாடல்களும், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றது. பாடல் பாடுபவர் கெளசல்யா சிவகுமார், தோழிகள். விளக்கமும் கெளசல்யாவே கொடுக்கின்றார். மிக அருமையான விளக்கங்கள். நேற்றுக் காலி என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அருமை. காலி என்பதே நாம் காளி என்று சொல்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வடமொழியில் "ள" எழுத்துக் கிடையாது. நாம் தான் காளி என மாற்றிக் கொண்டுள்ளோம்.

போன வருஷ புட்டா? சரி சரி :)
ReplyDeleteபொதிகை பார்க்கும் வாய்ப்பு இல்லையே :( 'காலி' மாதிரி விஷயங்கள அப்பப்ப பதிவுல சேர்த்து விடுங்க :) நன்றி கீதாம்மா.
//படம் திராச சார் உபயம், போன நவராத்திரிக்கு அவர் போட்டது//
ReplyDeleteஅதானே பாத்தேன். என்னடா நீங்க செஞ்ச புட்டு கூட நல்ல நிறமா வந்ருக்கே?னு எனக்கு ஒரே டவுட்டு. :)))
முடிஞ்சா உங்க புட்டையும் போட்டோ புடிச்சு போடுங்க பாப்போம். :p
பத்தில்லாத புட்டு...ஹிஹிஹி :)
ReplyDeleteகவிநயா, ஹிஹிஹி, ஓசிப் புட்டு! காலி மாதிரி விஷயங்கள் என்ன?? மத்ததும் நிறைய வரும். :))))
ReplyDelete@அம்பி, வந்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க, எங்க வீட்டுப் புட்டை! நறநறநறநறநற :P:P:P
@மெளலி, அதே!! மறுநாள் இருந்தாலும் சாப்பிட்டுக்கலாமே! அதனால் தான். :)))))))))))