kannabiran, RAVI SHANKAR (KRS) said
//சம்பந்தப் பெருமான் மேல் அடியேனுக்கு உங்களை விட பக்தியும் காதலும் அதிகம்!//
கேஆரெஸ், உங்களோடு நான் என்னிக்குப் போட்டி போட்டிருக்கேன்? நான் எனக்குத் தான் பக்தி அதிகம்னு ஒருநாளும் சொன்னதில்லையே??? அப்படித் தெரியும்படி எழுதி இருந்தால் மன்னிச்சுக்குங்க! :((((((((
//என்றும் ஆனதால் "தான்" காரைக்கால் அம்மையாருக்கு இல்வாழ்க்கை "மறுக்கப்பட்டது"-ன்னு!
அது தான் மாபெரும் தவறு!//
எங்கே மறுத்தாங்க?? இல்வாழ்க்கை நடத்தும்போது தானே அவங்களை இறைவன் ஆட்கொண்டு இன்னிக்கு அதைப் பத்திப் பேசறோம். அந்தம்மாவும் சும்மா ஏதோ கல்யாணம் செய்துகிட்டோம், ஏதோ மாம்பழத்தை வரவழைச்சோம், அப்புறம் கணவனோடு குழந்தை, குட்டி பெத்துட்டுச் சும்மா இருக்கலாம்னு இருக்காம அவங்களோட தனித் தன்மையைக் காட்டப் போய் அந்த மனுஷனும் இவங்களோட தெய்வீகத் தன்மையைப் புரிந்து கொண்டு விலகிப் போயிட்டான், குடும்பம் நடத்தி இருந்தாங்கன்னா, குழந்தை, குட்டி பிறந்து இருந்து சாதாரண வாழ்க்கை நடத்தி இருந்தால் இவங்களுக்கு இப்படி ஒண்ணு நடந்ததே தெரிஞ்சிருக்குமா சொல்லுங்க, அதுக்காகவாவது காரைக்கால் அம்மையாருக்கு நன்றி சொல்லுவோமே! ஆனால் இந்த மாதிரி நடந்தப்புறமும் அவங்க கணவன் அவங்களை விட்டு விலகலைனாலோ, இல்லை, இவங்களோடேயே குடித்தனம் செய்தான்னாலோ,, குழந்தை குட்டி பெத்துக்கிட்டிருந்தாலோ அப்போ என்ன சொல்லி இருப்போம்? அப்போவும் அந்தக் கணவன் தான் வாங்கிக் கட்டிக்கணும். எப்படிப் போனாலும் உதைக்குதே?? என்ன செய்யறதுனு புரியலை! அதையும் யோசிக்கணுமோ?
//அதனால் தான் கேட்டேன், அதை விட அற்புதங்கள் புரிந்த சம்பந்தருக்கு ஏன் மறுக்கப்படவில்லை-ன்னு?//
எத்தனை முறை கேட்டாலும் சம்பந்தருக்கு நடந்த திருமணம் கட்டாயத் திருமணம். பெரியோர்களின் வற்புறுத்தலால் நடைபெறும் திருமணம் அக்னியை வலம் வரும்போதே நிறைவும் பெற்று விடுகின்றது.
இதோ சம்பந்தர் திருமணம் பற்றிய தேவாரக் குறிப்புகள்:-
சம்பந்தரிடம், "வேதநெறியை நிலைநாட்டிய தாங்கள் அவ்வேதம் சொல்லும் வேள்விகள் செய்வதற்கு வேதத்தில் விதித்தபடி மணம் செய்துகொள்ளவேண்டும்" எனப் பெரியவர்கள் வேண்டுகிறார்கள்.
சில பெரிய புராணப் பாடல்கள் கீழே.
தேவாரம்நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார் கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென விண்ணப்பம் செய்தார்கள்.
உலகியல் நிலையில், மறைவழிபட்ட ஒழுக்கத்தை ஞானசம்பந்தருக்கும் இசைவித்தலை உள்ளத்தில் கொண்டு, குற்றமில் லாத மறைநெறியில் சொல்லப்படும் செயற்பாடுகளுடன் (சடங்குகளுடன்) கூடிய வேள்விகளைச் செய்வதற்கு, உரிமையைப் பெறும் பொருட்டுத் தாங்கள் ஓர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள்.
குறிப்புரை:
`போனகருக்கும்' என்றவிடத்துவரும் உம்மை அவர் தம் சிறப்புணர நின்றது. ஞானத்தின் திருவுருவாக விளங்கும் ஞானசம்பந்தருக்கு, மறைவழிப்பட்ட செயற்பாடுகளோ, அவற்றைச் செய்தற்கு என ஓர் இல்வாழ்க்கையோ வேண்டுவதின்று என்பது போதர நின்றது.
----------------
இங்ஙனம் கூறிய அவர்களின் சொல்லைக் கேட்டு, மாதவத்தின் கொழுந்தென விளங்கும் ஞானசம்பந்தர், சுற்றங்கள் பொருந்திய பெரிய பாசத் தொடக்கினை, விட்டு நீங்குவதற்காக நிலைமை உடையவராகி, விடைக்கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருவடி ஞானமான உயர்ந்த சிவஞானத்தை முன்னே பெற்றவர் ஆதலால் அவர்களின் மொழிக்கு இசையாமல் `நீங்கள் கூறுவது பொருந்திய மொழியாயினும், அது என்னளவில் வேண்டாத ஒன்றாகும்' எனக் கூறியருள,
-------
அம் மறையவர்கள் மேலும் கைகூப்பித் தொழுது, ஞானசம்பந்தரிடம் அறிவிப்பாராய், பெரிய மண்ணுலகில் மறைவழிவரும் வழக்கினை நீர் உயர்த்தியருளினீர் ஆதலின், அவ் வழிவரும் முறையில் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய அப்பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருளுதற்குத் திருவுள்ளம் கொள்ளல் வேண்டும் என்று கூற,
------
மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக் கம்பெருகும்
துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும்
பிறைவாழுந் திருமுடியில் பெரும்புனலோ டரவணிந்த
கறைவாழுங் கண்டத்தார் தமைத்தொழுது மனங்களித்தார்.
மறைகள் வாழ்வு அடையவும், அந்தணர்களின் மறைவழிப்பட்ட வாய்மையால் வரும் ஒழுக்கம் வாழ்வடையவும், அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள்செய்து, அவர்களின் வேண்டுகோளுக்கு ஞானசம்பந்தர் இசைவு தெரிவிக்கவும், பிறைச் சந்திரன் வாழ்கின்ற திருமுடியில் பெரிய நீர்க் கங்கையுடன் பாம்பையும் அணிந்த நீலகண்டரான இறைவரை வணங்கி, அச்சுற்றத்தார் மகிழ்ந்தனர்.
--------------
இப்போ காரைக்கால் அம்மையாருக்கு நடந்தது பற்றிய ஒரு தொகுப்பும், மூத்த திருப்பதிகம் அவர் எப்போது பாடினார் என்பது பற்றிய ஒரு தெளிவும். திருவாலங்காட்டில் இறைவனைத் தரிசனம் செய்த பின்னரே மூத்த திருப்பதிகம் பாடினார் எனப் பல நூல்களும் சொல்கின்றன.
//மாங்கனியின் மாயம்
அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.
மறுமணம்
இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.
புனிதவதியார் சந்திப்பு
இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.
பேய் வடிவம்
சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,
ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி
இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து
இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்
பரவி நின்றார். (தி.12 காரைக்.49)
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்
(தி.12 காரைக். 50)
எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம் (85)
எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.//
முதலில் அம்மையார் பாடியது அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையுமே ஆகும். அதில் இருந்து சில பாடல்கள்.
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். பாடல் எண் 7/ அற்புதத் திருவந்தாதி
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.
அற்புதத் திருவந்தாதி பாடல் எண் 10
சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.
திரு இரட்டை மணி மாலை பாடல் எண் 6
திருக்கைலை சென்று திரும்பியதும் திருவாலங்காட்டில் இறைவனின் நடனத்தைக் காணும் ஆசையால் வந்தபோது பாடியவையே மூத்த திருப்பதிகம் ஆகும்.
மூத்த திருப்பதிகம் பாடல் எண் 1
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.
மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7
கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே
கேஆரெஸ்ஸுக்கு: மத்தவங்களும் வந்து கருத்துச் சொல்லட்டும்னு சொல்லி இருந்தீங்க, ஆனால் நம்ம பக்கம் யாரும் வர மாட்டாங்கனு தெரியாது போல! :))))) அதான் நானே சொல்லிட்டேன். மத்தபடி இனி உங்கள் கருத்து எதுவோ அப்படியே!