எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 25, 2011

பெயர்க்காரணம்! ஸெளந்தர்ய லஹரி! 3

ஸெளந்தர்ய லஹரி எனப் பெயர் வைத்துவிட்டு ஆசாரியாரின் அவதாரத் தேதிகளிலேயே ஆழ்ந்து போகாமல் கொஞ்சம் லஹரியில் மூழ்குவோமா?? இது சாக்ஷாத் பரமேச்வரனாலேயே அம்பிகையைப் போற்றிப் பாடப்பட்டது என்பார்கள். அந்தக் கைலை சங்கரன் சொன்னதை நம் அவதார சங்கரர் கைலை சென்ற போது நேரிலேயே ஈசனிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் இந்த ஓலைச்சுவடிகளையும் பெற்றுக்கொண்டதாய்ச் சொல்லுவார்கள். லிங்கங்கள் ஈசன் ஸ்வரூபம் எனில் இந்தச் சுவடிகளில் அம்பாளின் மந்த்ரமயமான ரூபஸ்வரூபம். ஆகவே இது உலக மக்களுக்குப் பயன்படவேண்டியே கொடுத்திருக்கின்றனர். இது வசின்யாதி வாக்தேவதைகளே அம்பாள் மேல் பாடியதாகவும் சொல்கின்றனர். ஆனால் லிங்க புராணத்திலோ இது மஹாமேருவில் விநாயகரால் எழுதப்பட்டது என்று இருப்பதாய்த் தெரிய வருகிறது. புஷ்பதந்தர் என்பார் மேருமலையில் இதை எழுதி வைத்ததாயும் ஒரு கூற்று. இன்னொரு கூற்று அவருக்கும் முன்னரே மேரு மலைச்சுவர்களில் இது காணப்பட்டது என்றும், ஸ்ரீ கெளடபாதர் இதைக் கிரஹித்துப்பின் ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாயும் சொல்லப்படுகிறது. காலத்தால் முந்திய சில ஆக்கங்கள் எப்போது எழுதப்பட்டது என்பதை விட்டுவிட்டு அதன் சாரத்திற்குப் போவோம்.


எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம்.


செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும். அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.

8 comments:

  1. //அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது.//

    அழகா சொன்னீங்க அம்மா. நன்றி.

    ReplyDelete
  2. நல்வரவு கவிநயா. ஷெட்யூல் தான் பண்ணி வச்சிருந்தேன். ப்ளாகர் துரோகம் பண்ணி இருக்கு! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  3. பேஷ், பேஷ்.....நடக்கட்டும். :-)

    ReplyDelete
  4. ஒண்ணும் பெரிசா இருக்காது மெளலி. உங்கள் அளவுக்கெல்லாம் எழுத முடியாது. பார்க்கணும்.

    ReplyDelete
  5. //ஒண்ணும் பெரிசா இருக்காது மெளலி. உங்கள் அளவுக்கெல்லாம் எழுத முடியாது. //

    இதென்ன இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்?, உங்கள் நடை, எளிமை எல்லாம் எனக்கு எட்டவே எட்டாது....இந்த ஒப்புமை வேண்டவே வேண்டாம்.உங்கள் ப்ளாகினைப் படிப்பவர்களும் அதிகம். ஆகவே எழுதுங்கள் பலரையும் சென்றடையும், அடையட்டும்.

    ReplyDelete
  6. //ஒண்ணும் பெரிசா இருக்காது மெளலி. உங்கள் அளவுக்கெல்லாம் எழுத முடியாது// தன்னடக்கமாம்...:) வேங்கப்புலி மாதிரி நீங்க எழுதர வேகத்துக்கு முன்னாடி நாங்க யாருமே நிக்க முடியாது மாமி! மெளலியண்ணா சொல்லற மாதிரி உங்களுக்கு ரசிகர்/கை களும் ஜாஸ்தி!

    இந்த நவராத்ரிக்கு நீங்க, மெளலியண்ணா,கிண்டி மாமா & கவினயாக்கா எழுதர்தை மட்டும் வாசிச்சாலே போதும்னு இருக்கேன்.

    ReplyDelete
  7. //மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் //
    இது போன்ற தெரியாத பல விஷயங்களையும் நடு நடுவே கூறவும். உபயோகமாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  8. கீத மாமி,உங்க ஸெளந்தர்யலஹரிய பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியிருக்கேன்.நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

    ReplyDelete