எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 21, 2013

உஜ்ஜையினி மஹாகாளி கோயிலில்


நுழைவாயில் இது தான்


மூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை.  மாறாக ரிஷபம் காணப்படுகிறது.  வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர்.  இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார்.  மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.  மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.

கோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம்.  எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம்.  சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது.  ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார்.  இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம்.  கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார்.

இந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது.  விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.
வேதாளமும், சுளுவனும்


மேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.  ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர்.  முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது.  தற்சமயம் இல்லை.  வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது.  சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர்.  இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.

இவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார்.  கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.  இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

சந்தான கிருஷ்ணன்

 வேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார்.  இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை.  விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.

சங்கிலிக் கருப்பு

இவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.

மதுரை வீரன் மனைவியருடன்

அம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர்.  தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம்.  இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது.  நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.


இக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.  நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம்.  கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது.  இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.

12 comments:

  1. விக்கிரமாதித்தன் வேதாளம் எல்லாம் சாமியா?!! ஏதாவது சுவாரசியமா தேறும் போலிருக்கே?

    முக்கியமான கேள்வி... இந்த உஜ்ஜயினி எங்க இருக்கு? :)

    ReplyDelete
  2. உஜ்ஜையினி மஹாகாளி கோயிலை உங்களுடன் வலம் வந்து வணங்கி விட்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  3. வாங்க அப்பாதுரை, சுவாரசியமாத் தேறும் தான். உள்ளூர் மக்களோடு பேசணும். நேரம் இல்லை. :)))

    உஜ்ஜையினி போபாலில் இருந்து மவு(Mouh)என்னும் ஊர் போகும் வழியில் இருக்கு. மத்தியப் பிரதேசம்.நான் போகலை.அந்த வழியா அவர் போயிருக்கார். ஆனால் ஊருக்குள்ளே போகலை.

    ReplyDelete
  4. நன்றி கோமதி அரசு.

    ReplyDelete
  5. அப்பாதுரை, விக்கிரமாதித்தனுக்கு சந்நிதி கிடையாது. வேதாளத்துக்கும், அவன் மந்திரி சுளுவனுக்கும் தான் சந்நிதி! :))))

    ReplyDelete
  6. //வேதாளத்துக்கும், அவன் மந்திரி சுளுவனுக்கும் தான் சந்நிதி!

    இது இன்னும் ஜூப்பர்.

    (வேதாளம் அவனா? ஆ!)

    ReplyDelete
  7. மிகவும் சிறப்பான தகவல்கள்.

    வேதாளம்,குளுவனுக்கு சன்னதிகள் எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. இப்பொழுது நிறைய விஷயங்களை உங்க பதிவிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

    நன்றி மாமி.

    ReplyDelete
  8. ஹாஹா, அப்பாதுரை, விக்கிரமாதித்தன் மந்திரி சுளுவன் என வந்திருக்கணும். அவன் மந்திரி சுளுவன் என்று எழுதியதில் வேதாளத்தின் மந்திரி என்ற கருத்தில் அமைந்து விட்டது. :)))))

    ReplyDelete
  9. ராம்வி, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா. அது சுளுவன். குளுவன் இல்லை.நான் தப்பாய் எழுதிட்டேன் போலிருக்கு. பார்க்கிறேன். :))))))

    ReplyDelete
  10. சுளுவன், வேதாளம் எல்லாம் கிராமத்துத் தெய்வங்கள் போல் இருக்கின்றது. சந்நிதிகள் இருப்பது புது தகவல்.

    ReplyDelete
  11. ஆமாம் மாதேவி, விக்கிரமாதித்தனின் காளியைப் பார்க்கலைனா கிராமத்து தெய்வங்கள் என்றே நினைக்கலாம் தான்.

    ReplyDelete
  12. //சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில்//

    ஐ... எ.கு.தெ.

    எல்லாக் கோவிலிலும் இடப் பக்கம் விநாயகர்...

    அப்படியா? கவனித்ததில்லை.

    மந்திரி சுளுவன் யாரென்று நினைவில்லை. எடுத்து மறுபடிப் படிக்க வேண்டும்!

    ReplyDelete