எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 12, 2008

கதை, கதையாம் காரணமாம்,ராமாயணம் பகுதி 73

சீதை திகைக்க, வானரங்களும், அரக்கர்களும், விபீஷணனும், சுக்ரீவனும் நடுங்கினர். லட்சுமணன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. உலகே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலும் காட்சி அளித்தது. ராமரோ மேலும் சொல்கின்றார்:"ராவணனால் தூக்கிச் செல்லப் பட்டபோது அவன் கைகளுக்கிடையே சிக்கியவளும், அவனால் தீய நோக்கத்தோடு பார்க்கப்பட்டவளும் நீயே! இப்படிப் பட்ட உன்னை குலப்பெருமையக் காப்பாற்ற வேண்டிய நான் எவ்வாறு ஏற்க முடியும்?? உன்னை நான் மீட்டதின் காரணமே, என் குலப் பெருமையை நிலைநாட்டவும், எனக்கு இழைக்கப் பட்ட அவமதிப்பு நீங்கவுமே. உனக்கு எங்கே, எவருடன் இருக்க இஷ்டமோ அவர்களோ நீ இருந்து கொள்வாய். இத்தனை பேரழகியான உன்னை, ராவணன் இடத்தில் பதினான்கு மாதங்கள் இருந்த உன்னை, பிரிந்திருப்பதை ராவணன் வெகுகாலம் தாங்கி இருந்திருக்க மாட்டான்." ராமரின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட சீதை, கதறி அழுதாள். பின்னர் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசுகின்றாள்:" ஒரு அற்ப மனிதன், தன் மனைவியிடம் பேசுகின்ற முறையில் தாங்கள் இப்போது என்னிடம் பேசினீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் நடக்கவில்லை என்பது தங்கள் மனதுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒழுக்கமற்ற பெண்கள் இருக்கின்றார்கள் தான். அதை வைத்து அனைத்துப் பெண்களையும் ஒரே மாதிரி எனச் சிந்திக்கக் கூடாது அல்லவா? ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டது என் விருப்பத்தின் பேரில் நடந்த ஒன்றல்லவே? அப்போது நான் எதையும் செய்யமுடியாத நிலையில் அல்லவோ இருந்தேன்? ஆனால் என் உடல் தான் அவனால் தூக்கிச் செல்லப் பட்டதே தவிர, என் உள்ளம் தங்களையே நினைத்துக் கதறிக் கொண்டிருந்தது. தங்கள் தூய அன்பை உணர்ந்த நான் பிறிதொருவரின் அன்பையும் விரும்புவேனோ?

என் இதயம் உங்களை அன்றி மற்றொருவரை நினைக்கவில்லை. தாங்கள் இப்படி ஒரு முடிவுக்குத் தான் வருவதாய் இருந்தால், அனுமனை ஏன் தூது அனுப்பினீர்கள்? ஏன் என்னை ராவணன் தூக்கிச் சென்றதுமே துறக்கவில்லை? அல்லது அனுமனிடம் தூது அனுப்பும்போது சொல்லி இருந்தால், இந்த யுத்தமே செய்திருக்க வேண்டாம் அல்லவா? ஒரு சாதாரண மனிதன் போல் பேசிவிட்டீர்களே? என்னை நன்றாக அறிந்திருக்கும் உங்கள் வாயிலிருந்தா இப்படிப் பட்ட வார்த்தைகள் வருகின்றன? லட்சுமணா, நெருப்பை மூட்டு. பொய்யான இந்த அவதூறுகளைக் கேட்டுக் கொண்டும் நான் உயிர் வாழவேண்டுமா? என் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவதூறாய்ப் பேசும் கணவரால், நான் அக்னிப்ரவேசம் செய்வது ஒன்றே ஒரே வழி." என்று லட்சுமணனைத் தீ மூட்டும்படி சீதை வேண்டுகின்றாள்.
சீதையின் வார்த்தைகளைக் கேட்ட லட்சுமணன், ராமரின் முகத்தைப் பார்க்கின்றான். மிகவும் மனம் நொந்து போன லட்சுமணன், ராமருக்கும் அதில் சம்மதம் என முகக் குறிப்பில் இருந்து அறிகின்றான். ராமரோ, ஊழிக்காலத்து காலருத்திரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்டார். அவர் கோபம் தணிவதாய்த் தெரியவில்லை. யாருக்கும் ராமர் அருகே நெருங்கவும் அச்சமாய் இருந்தது. யாரும் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை, யாரும் யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை. லட்சுமணன் தீ மூட்டினான். சீதை முதலில் ராமரையும் பின்னர் அந்தத் தீயையும், மும்முறை வலம் வந்தாள். அக்னியை நெருங்கினாள். தன் கைகளைக் குவித்த வண்ணம் அக்னியை மட்டுமின்றி, அனைத்துத் தெய்வங்களையும் துதித்த வண்ணம் சீதை சொல்லத் தொடங்கினாள்:

"என் இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!

என் நடத்தை அப்பழுக்கற்றது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!

மனம், வாக்கு, காயம் என்ற உணர்வுகளினால் நான் தூய்மையானவள் தான் என்றால், ஏ அக்னியே என்னைக் காப்பாய்!

ஏ சூரியதேவா, ஏ சந்திர தேவா, ஏ வாயுதேவா,
திக்குகளுக்கு அதிபதிகளே,
வருணா, பூமாதேவியே! உஷத் கால தேவதையே!
பகலுக்கு உரியவளே, சந்தியாகால தேவதையே
இரவுக்கு உரியவளே,
நீங்கள் அனைவருமே நான் தூய்மையானவள், பவித்திரமானவள் என்பதை நன்கு அறிவீர்கள் என்பது உண்மையானால், ஏ அக்னியே நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!"

இவ்வாறு உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டு, சற்றும் அச்சமில்லாமல், குளிர் நீரிலோ, நிலவொளியிலோ பிரயாணம் செய்வதைப் போன்ற எண்ணத்துடன் சீதை அக்னிக்குள் பிரவேசித்தாள். அங்கே குழுமி இருந்தவர்கள் அனைவருமே அலறித் துடித்தனர். ராமர் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது. லட்சுமணன் இந்தக் காட்சியைக் காணச் சகியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். வானரங்களும், அரக்கர்களும் பதறித் துடித்தனர். விண்ணிலிருந்து தேவர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அக்னிப்ரவேசத்தைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தனர். அக்னிக்குள் ப்ரவேசித்த சீதையோ தங்கம் போல் ஒளியுடனே பிரகாசித்தாள்.
*************************************************************************************
இப்போது ராமர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சீதை அக்னிக்குள் ப்ரவேசம் செய்தபோது சொன்ன வார்த்தைகள் கம்பராமாயணத்தில் வேறு மாதிரியாக வருகின்றது. அது பற்றிய விவாதங்கள் இன்னும் முடியவில்லை. சீதை என்ன சொல்கின்றாள், கம்பர் வாயிலாக என்று பார்ப்போமா? அப்புறம் அது பற்றிய தமிழறிஞர் ஒருவரின் கருத்தும், அது பற்றிய அந்தத் தமிழறிஞர் குறிப்பிட்டுச் சொல்லும் ஆங்கில நாடகம் ஒன்றின் குறிப்பும், பார்க்கலாம். கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம்.

குறிப்பிட்ட கட்டுரை, பிரதி எடுக்க முடியவில்லை. ஆகவே அதைக் கீழே தட்டச்சு செய்கின்றேன்.

"நீதிபதி மகாராஜன் அவர்கள் கம்பனைக் கண்டு ஆனந்தித்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கின்றார். என்பதாய்க் கட்டுரை ஆரம்பிக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு, நீதிபதி மகாராஜன் அவர்களால், பேராசிரியரும், இலக்கிய அறிஞரும் ஆன திரு அ.சீனிவாச ராகவன் அவர்களின் இலக்கிய ஆய்வைக் குறித்தது. திரு அ.சீனிவாசராகவன் அவர்கள் சீதை சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வாறு நாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனோ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்கின்றார் என்பதாய்க் கட்டுரை வருகின்றது. இனி கட்டுரையும், சீதை சொன்ன வார்த்தைகளாய்க் கம்பன் சொல்வதும்.

No comments:

Post a Comment