எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 31, 2008

ராமனின் அரச லட்சணம்!

கொஞ்சநாட்களாய் பயம் காட்டிக் கொண்டிருந்தது உடம்பு, ஞாயிறு அன்றிலிருந்து முடியாமல் போச்சு. அதனாலேயே பதிவுகள் போடமுடியவில்லை. வழக்கம்போல் டாடா இண்டிகாம் தொந்தரவுனு நினைச்சுக்கட்டுமேனு தான் எதுவும் சொல்லவும் இல்லை. அதுவும் தவிர, எல்லாருக்கும் ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்துடன் முடிக்கணும்னும் ஒரு ஆசை இருந்திருக்குனு நினைக்கிறேன். எழுதுகின்றது ஒரு மனிதனின் கதை. அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை உள்ளது உள்ளபடிக்குச் சொல்லவேண்டும் அல்லவா?? ஆகவே உத்தரகாண்டத்தையும் படிப்பதால் எந்தத் தவறும் இல்லை. இந்தச் சாதுர்மாஸ்யத்தில் வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலும் தினந்தோறும் அகண்டநாம பஜனையும், ராமாயணப் ப்ரவசனமும் நடைபெறும். பெரும்பாலும் துளசி ராமாயணமே படிக்கப் பட்டாலும், உத்தரகாண்டம் படிக்காமல் முடிப்பதில்லை. கட்டாயமாய்ப் படிப்பார்கள். சீதைக்கு நேர்ந்தது அநியாயம், என்றும், அக்கிரமம் என்றும் சொன்னாலும், இன்னொரு பக்கம் ராஜ நீதி, ராஜாவின் தர்மம் அங்கே நிலைநாட்டப் படுகின்றது. மனைவியை விட குடிமக்களின் சொல் பெரியதா என்பது தற்காலத்துக்குப் பொருந்தினாலும், அரசனின் பொறுப்பு குடிமக்களுக்கு எந்தவிதக் குறையும் வைக்காமலும், குறை சொல்ல இடம் வைக்காமலும் ஆட்சிபுரிவதே அரசதர்மம் என்பதும் இதன் மூலம் எடுத்துச் சொல்லப் படுகின்றது. சீதையைப் பிரிந்து வாழ்வது ராமருக்கு மட்டும் வருத்தம் இல்லையா? அன்பு மனைவியைப் பிரிந்து வாழ்வது எத்தகைய கடினமான விஷயம் என்பதும், இதன் மூலம் ஒரு அரசனின் தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இது தனக்குத் தானேயும் ராமர் கொடுத்துக் கொண்ட தண்டனை என்றும் சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி ராமர் இன்னும் சில நாட்களில் தன் அருமைத் தம்பி, தனக்கு நிழல் போன்ற லட்சுமணனையும் தியாகம் செய்யப் போகின்றார்.

கே ஆர் எஸ் சீதையை காட்டுக்கு அனுப்பும் ராமர் சீதையின் கூட லட்சுமணனை மட்டும் அனுப்பியதற்கு என்ன குறிப்பிட்ட காரணம் எனக் கேட்கின்றார். குறிப்பிட்ட காரணம் எதுவும் வால்மீகியில் சொல்லப் படவில்லை என்றாலும், லட்சுமணன் ஏற்கெனவே ராமருடனும், சீதையுடனும் காட்டுக்குச் சென்றவன். காட்டில் எங்கே இருந்தால் சீதை சுகமாய் வாழமுடியும் என்பதை அறிந்தவன். மேலும் ராமரே வால்மீகி ஆசிரமத்தில் விடச் சொல்லுகின்றார். காட்டைப் பற்றி நன்கு அறிந்த லட்சுமணன், தானே கூடச் செல்ல முடியும்? மேலும் ராமர் கூடச் சென்றால் அவரால் சீதையைப் பிரிய முடியுமா? சந்தேகமே! சீதைக்கும் ராமர் கூட வந்தால் பிரிய மனம் வராது அல்லவா? பரதனோ, சத்ருக்கனனோ கூட அவ்வாறு செய்யத் தயங்குவார்கள். ஆனால் லட்சுமணன் தன் கடமை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு கடமையைப் பலன் கருதாது செய்து முடிப்பான். அதனாலும் சொல்லி இருக்கலாம். ராமர் மேல் அவதூறு வீசிக் கொண்டே இருப்பார்கள், உண்மைதான், அதில் தான் அவரின் பெருமையே நிற்கின்றது அல்லவா? அத்தனை அவதூற்றையும் தாங்கிக் கொண்டு காதல் மனைவியையும், பெற்ற குழந்தைகளையும் தியாகம் செய்துவிட்டு, ஒரு ராஜ்யத்தை குடிமக்களின் நன்மைக்காகவே ஒரு அரசன் நடத்தவேண்டும் என்றால்??? ராஜ்யத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் நன்றாய் மதிக்கும் ஒரு முதல்குடிமகன் ராமன் தான் இல்லையா??? "மர்யாதா புருஷோத்தமன்" என்ற பெயருக்கு மிகவும் தகுதியானவன் இல்லையா? பெண்களுக்குக் கஷ்டம் வந்தால் வலக்கண்ணும், வலத்தோளும் துடிக்கும் என்பார்கள். அதுவே இன்பம் என்றால் இடக்கண்ணும், இடத்தோளும். இதை வைத்து ஒரு திரைப்படப்பாடலே வந்திருக்கு! எம்.ஜி.ஆர்.&ஜெயலலிதா படம்??? தெரியலை! "என் இடது கண்ணும் துடித்தது, உன்னைக் கண்டேன், இந்நாள் பொன்னாள்!" என்று கதாநாயகி பாடுவதாயும், "என் வலது கண்ணும் துடித்தது!" என்று கதாநாயகனும் பாடுவதாய் வரும்.

மெளலிக்கு பட்டாபிஷேகத்தைக் கணக்குப் பண்ணி 600 பதிவைக் கொண்டு வந்திருக்கலாமே என்ற எண்ணம். நான் கவனிக்கவே இல்லை, அப்புறம் தானே கணக்குப் பண்ண! அன்னிக்கு ஏதோ தற்செயலாய்க் கவனிச்சேன். இதிலேயே ஒருவேளை கணக்கில் வராத ட்ராப்டுகளும் சேர்ந்திருக்கலாம். :D அம்பிக்கு மொக்கை எப்போ போடப் போறேன்னு துடிதுடிப்பு! அதான் ராமாயணத்தை எப்போ முடிக்கப் போறீங்கனு நேரிலும், பின்னூட்டத்திலும் துளைச்சு எடுத்துண்டு இருக்கார். :P மொக்கைக்கு எனத் தனிக்கடை திறந்திருக்கேனே அம்பி, என்றாலும் சிலருக்குக் கடை மாற்றப் பிடிக்காது. கோபிக்கும், அதுவே!. கைப்புள்ள வெளிப்படையாகவே சொல்லிவிட்டார், மொக்கை போட்டுட்டுக் கூப்பிடுங்க, கூப்பிடாமலே வந்து கமெண்டறோம்னு! என்னத்தைச் சொல்றது? இந்தப் பதிவே ஒரு மொக்கையா ஆயிடுச்சே! நிறுத்திக்கிறேன். ராமாயணத்தில் சீதையைத் தவிக்க விட்டு வந்திருக்கோமே!! என்ன ஆச்சுனு பார்க்கலாமா??? மற்றபடி 600 பதிவுகளுக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment