
மகா கவி பாரதியாரின் கவிதை!
"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல்கலையின் சோதி, வல்லமையென்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு!"
ஸ்வாமி விவேகாநந்தரின் வாக்கு!
"உண்மையில் இருக்கும் ஒரே கடவுளை, நான் நம்புகிற ஒரே கடவுளை, எல்லா ஜீவர்களின் கூட்டுத் தொகையுமான கடவுளை வழிபடுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறந்து ஆயிரமாயிரம் இன்னல்களை அநுபவிப்பேனாக! தீயோர்களாக நிற்கும் என் கடவுளை, துயரமுற்றோராக நிற்கும் என் கடவுளை, உலகம் எங்கும் ஏழைகளாக நிற்கும் என் கடவுளை, வழிபடுவதற்காக நான் திரும்பத் திரும்ப ஜனனமெடுப்பேனாக!"
"கிழிந்த ஆடையைக் களைவது போல் இந்த உடலை எறிந்துவிட்டு வெளிக்கிளம்புவது நல்லதென எனக்குத் தோன்றக்கூடும். ஆனால் உடலுக்கு வெளியே சென்றாலும் நான் சேவை செய்வதை நிறுத்த மாட்டேன். எங்கெங்குமுள்ள மக்களை நான் ஆன்மீகத்தில் தூண்டிக் கொண்டே இருப்பேன். தான் ஆண்டவனோடு ஒன்றுபட்டிருப்பதாக உலகம் அறியும் வரை நான் சேவை செய்வேன்."
சேவை செய்யும் கோடிக்கணக்கான சேவகர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கும் விவேகாநந்தரின் பிறந்த நாளில் விவேகாநந்தரின் வழியைப் பின்பற்றி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"விழிமின்; எழுமின்;செயலாற்றுமின்!" என்று தேசத்தை தட்டி எழுப்பிய
ReplyDeleteஞானஜோதி அவர். உற்சாகமூட்டும் அவரது உரைகள் என்றென்றும் நம் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும்;
சோர்வடையாமல் செயலூக்கம் பெறுவதற்கு உத்வேகமளிப்பவை அவை.
மனசில் புத்துணர்ச்சி பூத்தது. மிக்க நன்றி.
வாங்க ஜீவி சார், உங்கள் வருகைக்கு நன்றி. படிக்கிறீங்கனு தெரிஞ்சாலே சந்தோஷமா இருக்கு.
ReplyDelete