எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 20, 2014

திரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை? 2000-க்குப் பின்னரா? முன்னரா? பகுதி 5முடிவுரையுடன்


இப்போ அப்படியா வருது? கட்டிப்புடி, கட்டிப்புடிடானு எல்லாம் பாடல்கள்.



இதிலே என்ன அழகோ, நளினமோ இருக்கு? அப்புறமா ஒரு பாட்டு, அதிலே பெண்ணை

பாம், பாம் பெண்ணே னு கூப்பிடறாங்க.. படத்தோட பெயர் பிரியாணியாம். அதுவே சகிக்கலை.  நல்லவேளையா பாட்டைக் கேட்கலை இன்னமும், பிழைச்சேன். இன்னொரு பாட்டைப் பாருங்க, படம் பெயர்  எதிர்நீச்சலாம், ஆனால் பாட்டு! தமிழா அது!

http://www.youtube.com/watch?v=Afn9RCK-KCU

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

இப்படி எல்லாம் ஒரு பாட்டு, அதையும் கேட்டு ரசிக்கிறாங்க அப்பாவித் தனமான இன்றைய இளைஞர்கள்.  அதே நம்ம ஜோடிங்க பாருங்க

http://www.youtube.com/watch?v=UamHWAa6xGk

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
தென்றல் உன்னைச் சொந்தமாய்த் தீண்டுதே

னு பாடிட்டுப் படகிலே போறாங்க. அப்போத் தான் வில்லன் மறுபடி எங்கிருந்தோ வந்துடறான்.  தமிழ் சினிமாவாச்சே!  வில்லன் இங்கே எப்படினு எல்லாம் கேட்கக் கூடாது. அவன் வந்து ஹீரோ, ஹீரோயின் போகும் படகிலே உதவி கேட்கிறாப்போல் கேட்டு மெல்லப் படகில் ஏறிடறான்.  அவங்க

http://www.youtube.com/watch?v=oQVqfLIOis0

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

அப்படினு ஆனந்தமாப் பாடிட்டு இருந்தாங்க.  பாவம், இந்த வில்லன் வந்து பிரிச்சுட்டான். ஹீரோவுக்கு என்ன ஆகும்னு தெரியாமல் ஹீரோயின் அழுகிறாள்.

காதலிலே தோல்வியுற்றாள் கன்னி ஒருத்தி
கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி 

எனப் பாடிக் கொண்டு செல்கிறாள். அவளைத் தேடி வந்த தோழி தாங்கிக் கொண்டு அழைத்துச் செல்கிறாள்.  அவள் அம்மாவிடம் உண்மை நிலையைச் சொல்லிக் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது தான் என்றும் சொல்கிறாள்.  அங்கே நம் நாயகனோ இல்லையே எனக் கதாநாயகி கலங்க, .  ஆனால் நம் கதாநாயகன் ஹீரோ ஆச்சே. அதோடு அவனுக்கு தண்ணீரின் உள்ளே போய் மூச்சை அடக்கிக் கொண்டு பின்னர் மேலே வரத் தெரியும் ஆகையால் வில்லன் செல்லும் வரை காத்திருந்து விட்டுப் பின்னர் மெல்ல மெல்ல மேலேறுகிறான்.

http://www.youtube.com/watch?v=0ZHl4peCi7U

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்

னு பாடிட்டு வரார்.  வரவர் நேரே தன் காதலியைத் தேடிக் கொண்டே அவள் வீட்டுக்கே வந்துவிடுகிறார்.  கிட்டத்தட்ட மயக்கத்தில் இருக்கும் தன் காதலியைப் பார்த்து,

http://www.youtube.com/watch?v=3qF_urHj9zM

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே

என அன்போடு அழைத்து அவளை ஆசுவாசப் படுத்த அவளும் உற்சாகம் அடைகிறாள்.  அதோடு அம்மா வேறே சம்மதம் சொல்லியாச்சே.  உடனே அவளும்

போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே

 அப்போப் பார்த்து அவள் அப்பா வருகிறார்.  இது என்ன கண்டவரோடு நம்ம பொண்ணு பேசிட்டு இருக்காளேனு பார்க்க அவங்க அம்மா எல்லாத்தையும் எடுத்துச் சொல்றாங்க.  அவரும் கதாநாயகனிடம் பேசிப் பார்த்துட்டுக் கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணலாம்னு சொல்லிடறார்.



கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலாமா 

என இருவரும் ஆரம்பிக்க கல்யாணம் வரைக்கும் பொறுங்கனு கதாநாயகியின் அப்பா தடுத்து நிறுத்துகிறார்.

http://www.youtube.com/watch?v=YPkKcvAyE_0

நாளாம், நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் 

னு கடைசியில் அந்த நாளும் வந்துடுது.

அவங்க அப்பா

http://www.youtube.com/watch?v=ZMUfKlNYulM

பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி

னு பாட்டுப் பாடிக் கொண்டே பெண்ணுக்குச் சீரெல்லாம் கொடுத்துக் கல்யாணம் செய்து கொடுக்கிறார்.


எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்கக்
கல்யாணப் பந்தல் போட்டாராம்

னு எல்லாரும் பாட அவங்க கல்யாணமும் நடந்து முடிந்தது.  தோழிகள் எல்லாம்

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ 

அப்படினு பாடினால் கல்யாண மாப்பிள்ளைத் தோழர்கள்

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே,
தங்கச்சி கண்ணே,
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு பெண்ணே

அப்படினு பெண்ணுக்கு புத்திமதிகள் சொல்லி வாழ்த்தறாங்க.

இப்படித் தான் பாருங்க சமய, சந்தர்ப்பங்களுக்குப் பொருந்தறாப்போல் பாடல்கள் அந்தக் காலங்களில் எழுதப்பட்டன.  கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இப்போ வரும் பாடல்களைப் போல் எல்லாம் எழுதலை.  படத்திலேயும் அழுத்தமான கதை அம்சம் இருக்கும், அதுக்கேற்றாற்போன்ற பாடல்களும் இருக்கும்.  இசையும் இனிமையாக இருக்கும்.  பாடல் வரிகளும் அனைவரும் கேட்டு ஆனந்திக்கும்படி சுத்தமாய்ப் புரியும்படி பாடப்பட்டிருக்கும்.

நடுவர் அவர்களே,

திரை இசைக் காதல் பாடல்களில் சிறந்தவை அந்தக் காலப் பாடல்களே என்ற நல்ல தீர்ப்பை வழங்கிப் பொற்கிழியை எங்கள் அணிக்கே தந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இல்லைனாலும் நாளைக்கு நம்மளே அறிவிச்சுக்கலாம்னு சுபா சொல்லிட்டாங்க. :)))


எதிரணிக்கு அளித்த பதில்


பரவாயில்லை பிரசாத்,

நேரமில்லைனாலும் உங்க அணியிலே மத்தவங்களை எழுதச் சொல்லுங்க. ஒண்ணுமே எழுதாம வெற்றி எப்படிக் கிடைக்குமாம்? :)

அந்தக் காலத்துக்காதலர்களிடையே அந்நியோன்னியம் தான் இருந்தது.  அன்னியம் இல்லை.  அதனால் தான் எல்லாத் தடங்கல்களையும் மீறி அவங்க ஜெயிச்சாங்க.  இந்தக் காலத்திலே பாருங்க நீங்களே ஒத்துண்டாப்போல் சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை, சச்சரவு, பேசறதில்லை.  இதிலே அந்நியம் கூட இல்லை. அலட்சியம் தான் தெரியுது. :))))

மரத்தை எல்லாம் சுத்த வேண்டாம்.  கொஞ்சம் கூட நம்பமுடியாதபடிக்கு வெளிநாட்டுக்கெல்லாம் போய் ஏன் பாடணுமாம்? :))) ஹிஹிஹி, காதலியைக் காதலன் பார்த்ததுமே ஐரோப்பா, யுஎஸ், இங்கிலாந்துனு இல்லைபோறாங்க. அப்புறமா ஆங்கில முறைப்படியான நடனம்.  அப்படித் தான் ஆடிட்டு இருக்கோமா? இல்லையே?  கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டாமா?  தமிங்கிலீஷ் வார்த்தைகள், அதிலே பாடல்கள்

இப்போவும் தமிழ் படிக்கிற பிள்ளைகள் இருக்காங்க.  இல்லாட்டியும் நாம் தமிழிலேயே புரியும்படி பேசி எழுதினாத் தானே பிள்ளைகளுக்குத் தமிழ் நல்லாப் புரிய ஆரம்பிக்கும்? தமிங்கிலீஷில் பாடிப் பேசினா எப்படியாம்? தமிழ் வளராட்டியும் வேண்டாம், அடியோடு அழிச்சுடுவாங்க போல இருக்கே! கொடுமை! எ.கொ.இ.ச.????

இரவு, பகல் எந்நேரமும் கேட்கும்படியான இனிமையான பாடல்கள் அந்தக் காலத்துப் பாடல்களே.  இந்தக்காலத்துப் பாடல் ஒண்ணைப் போட்டுட்டு பக்கத்திலே உட்கார்ந்திருப்பவரிடம் ஏதேனும் பேசுங்க பார்க்கலாம்.  நீங்க என்ன பேசறீங்கனே அவங்களுக்குப் புரியாது. ம்? ம்? ம்? னு கேட்டுட்டு இருப்பாங்க.

இந்தக் காலத்துப் பாடகர்கள் பாடுவது மட்டுமில்லாமல் கவிஞர்களும் சூழ்நிலைக்கு ஏத்தாப்போலவா எழுதறாங்க? பாடறாங்க? மெட்டுக்கு இல்லை எழுதிப் பாடறாங்க? :))))))) 

ஆகவே என்றென்றும் மனதில் நிலைத்து நிற்பவை அந்தக்காலப் பாடல்களே, அவை மட்டுமே.

5 comments:

  1. எப்போதும் எங்கேயும் அந்தக் காலப் பாடல்களே மன நிறைவைத் தருகின்றன. இப்போது வரும் சில பாடல்களும் இனிமையே. கடபுடா சத்தம், கொச்சை மொழி இதெல்லாம் இல்லாமல் கவிதையாக வரும் பாடல்கள் என்றும் இனிமை. நல்ல உரை கீதா.

    ReplyDelete
  2. //கட்டிப்புடி கட்டிப்புடிடா...இப்போ அப்படியா வருது//

    இது பரவாயில்லீங்க...'அடிடா அவளை...வெட்றா அவளை'ன்னுல்லாம் பாட்டு...

    //அப்படினு ஆனந்தமாப் பாடிட்டு இருந்தாங்க//

    அந்தாதியாப் பாடிகிட்டு இருந்தாங்க...!

    ReplyDelete
  3. Aunty,

    First of all, sorry for writing in English.

    Disclaimer: This is definitely not to hurt or talk against you. I like songs of all ages. That triggered me to write this. If it hurts you in any way, I am really sorry for that. This is debating session. Isn't it? We are always friends :-)

    ********************************************************************
    I agree most songs which came before 2000 are great but, at the same time, post 2000 songs are not completely bad either. We need to keep in mind about the lifestyle and technology of respective times. I remember when I was young my father used to tease us for liking recent songs of that time. It was early 90's. He used to tell songs which came before 80's are too good. Likewise, younger generation prefers recent songs and it would continue like that. Also, we cannot compare 50 year songs with 15 year songs :-) :-)

    Also, there are many worst songs before 2000 too.

    1. vadi en kappa kizhange
    2. love na love mannena stove.... ullatha kavvu
    3. mukkala mukkabula
    4. otthai rooba tharen.... othukittu vadi
    5. eai, aatha athorama vaariya

    coming to lyrics, listen to this song half of the words are in English (this song came before 2000 only)

    Telephone mani pol siripaval ivala - https://www.youtube.com/watch?v=SfHbknfOOuA

    columbus columbus - https://www.youtube.com/watch?v=Jmi6zkWrMME

    Also, we ourselves are not speaking proper Tamil now-a-days. When we use words like 'mokkai' etc. in our day to day life, we should accept not-so-proper-Tamil songs as well, right? :-):-)

    Coming to songs post 2000, there are some awesome songs.

    1. onra renda asaigal - http://youtu.be/4Nw7spoGqNs

    - thoorathil nee vanthale en manathil
    alai adikkum
    Miga piditha padalgalai udhadugalum munumunukum

    2. nenjam ellam kadhal - http://youtu.be/OE6lgZ4zKs4

    - Pengal Mele Maiyal Undu
    Naan Pitham Kondathu Unnil Mattum
    Nee Mutha Paarvai Paarkum pothu
    En Muthugu Thandil Minnal Vettum

    3. Yaakai thiri - http://youtu.be/82yyC6hQhkU

    - yaakkai thiri kaadhal sudar anbe
    jeevan nadhi kaadhal kadal nenje
    piravi pizhai kaadhal thiruththam nenje
    irudhayam kal kaadhal sirpam anbe
    ....jenmam vidhai kaadhal pazham
    loagam dhvaitham kaadhal advaitham

    4. Munbe vaa... en anbe vaa - http://youtu.be/4UMfBvXr0PY

    -Poo vaithai, Poo vaithai
    Nee Poovaikoar Poo vaithai
    Mana Poo vaithu Poo vvaithu
    Poovaikul Thee Vaithaai

    Thene Nee Mazhayil Aada
    Naan Naan Nanaithu Vaada
    En Naalathil Un Ratham Naadikul Un satham Uyire..

    5. Ennamo etho - http://youtu.be/BO1Wnr4vaWg

    -Muthamitta moochu kaatril, pattu pattu kettu ponen,
    pakkam vanthu irkum podhu, thittamittu etti ponen..
    Nerungadhe penne endhan nenjellam nanjaagum,
    azhaikadhe penne endhan achangal achagum.
    Sirippaal ennai nee sidhaithaai podhum…

    6. Snegithane Snegithane - http://youtu.be/fSDFLpMjGys

    -Poo parikkum Bakthan Pola Medhuvaai
    Naan Thoongumbodhu Viral Nagam Kalaivaai.. saththaminri Thuyilvaai

    As of now I can remember only this much. Rest on hearing from you.

    Disclaimer: This is definitely not to hurt or talk against you. I like songs of all ages. That triggered me to write this. If it hurts you in any way, I am really sorry for that. This is a debating session. Isn't it? We are always friends :-)

    ReplyDelete
  4. நடுவர் தீர்ப்பு சொன்னாரோ இல்லையோ, எனது ஓட்டு பழைய பாடல்களுக்கே.....

    ReplyDelete
  5. எதிரணிக்கு அளித்த பதில் சரி தான்...

    பதிவில் உள்ள அந்தக்காலப் பாடல்கள் அனைத்தும் ரசிக்கத் தக்கவை...

    வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete