எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 25, 2007

காந்திக்கும் போஸுக்கும் பனிப்போர் ஏன்?

Wற்கெனவே ஆங்கிலேய அரசால் நாடு கடத்தப் பட்டு ஐரோப்பா சென்றிருந்த போஸ் மறுபடி தாய்நாடு திரும்பியதும் ஆங்கிலேய அரசால் சிறையிலும் அடைக்கப் பட்டார். கிட்டத் தட்ட 11 முறை அவர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார். அதிலே உடல்நலமும் பாதிக்கப் பட்டிருக்கிறார். ஆகவே 37-ல் ஆஸ்திரியாவிற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்ற போஸ் அங்கே இருக்கும்போது தான் தான் போட்டியின்றிக் காங்கிரஸ் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிகிறார். அப்போது 1938-ம் ஆண்டு. காந்தி நினைத்தது வேறு. ஆனால் போஸ் அப்போது ஆஸ்திரியாவில் இருந்து இங்கிலாந்து சென்று அங்கே உள்ள முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார். அவர் சந்திப்பில் இடம் பெற்றவர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரபுக்கள் மட்டுமில்லாது, இந்தியாவிடம் அனுதாபம் கொண்டு அதற்குச் சுதந்திரம் கொடுக்க ஆதரவு கொடுத்து வந்த லேபர் கட்சி மட்டும் லிபரல் கட்சிப் பிரமுகர்களும் அடங்குவர். சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸும் அவர் சந்தித்த பிரமுகர்களில் ஒருவர்.

இந்தியா எந்த விதமான நிபந்தனைகளும் இன்றிச் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தன்னுடைய ஆசையை போஸ் இப்போது காங்கிரஸ் தலைவர் ஆனதின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள ஆசைப் பட்டார். தேச சுதந்திர விஷயத்தில் தன்னுடைய இந்த முடிவுக்கு மாற்றுக் கருத்து இருக்காது எனவும் எதிர்பார்த்தார். ஆங்கிலேய அரசுக்கு எதிராய் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் வலுப்படுத்தி, நிபந்தனை அற்ற சுதந்திரம் வேண்டும் எனவும், அதே சமயத்தில் தேசம் முழுதும் ஒரே சமயம் போராட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கிறார். ஆனால் அஹிம்சைக் கொள்கை என்னும் கடலில் மூழ்கிப் போன காந்தீயவாதிகளுக்கு, காந்தி உள்பட போஸ் இப்படி முடிவெடுத்தது பிடிக்கவில்லை. அவர்கள் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயப் பிரதிநிதிகளிடம் ஒருவிதமான புரிதலுடன் இருந்து வந்தார்கள். இருவருக்கும் இடையே understanding சரியான விகிதத்தில் இருக்கவே அவர்களை எதிர்த்து ஏதும் செய்ய இவர்களுக்கு இ்ஷ்டம் இல்லை. போஸ் தாய்நாடு திரும்புகிறார். National Planning Committee ஆரம்பித்து உறுப்பினர்களை நியமித்துத் தொழில் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவேண்டும் எனச் சொல்கிறார். தொழில் துறைகளினால் நாடு முன்னேற வழி இல்லை எனச் சொல்லிக் கொண்டிருந்த காந்தீயக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும், காந்திக்கும் இதில் உடன்பாடு இல்லை. ஆட்சேபிக்கிறார்கள். அதே வரு்ஷம் "மூயூனிக்" நகரில் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின் போஸ் பகிரங்கமாய் அறை கூவல் விடுகிறார் நாடு தழுவிய போராட்டத்துக்கும், நிபந்தனை அற்ற சுதந்திரத்துக்கும், மக்களுக்கு. மக்கள் நடுவில் கிளர்ச்சி ஏற்படத் துவங்குகிறது.

ஆனால் காந்தீயவாதிகளுக்கு இந்தத் தேசம் தழுவிய போராட்டத்தில் துளிக்கூட இஷ்டம் இல்லை என்பதோடு 2-உலகப் போர் நடந்தால் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தயாராய் இருந்தார்கள். சுதந்திரம் சில வருடங்கள் தள்ளிப் போகலாம், தப்பில்லை எனவும் நினைத்தார்கள். காந்திக்கும் போஸுக்கும் நடுவே இடைவெளி அதிகம் ஆகிறது. இந்தச் சமயம் மறு தேர்தல் வருகிறது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு. அப்போதே காங்கிரஸில் இடதுசாரிகள் எனப்படும் ஒரு கூட்டம் காந்தியக் கொள்கைகளில் இருந்து மாறுபட்டு இருந்தார்கள். இவர்கள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். இவர்களைத் தவிர சோஷலிஸ்ட எனப்படுபவர்களும் காங்கிரஸுக்குள்ளேயே இருந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் போஸ் மறுமுறையும் காங்கிரஸ் தலைவராய் வர ஆதரவு தெரிவிக்கக் காந்தியால் அவருடைய சொந்த வேட்பாளராக நியமிக்கப் பட்ட "பட்டாபி சீதாராமையா" தோற்றுப் போனார். இதைத் தன் சொந்தத் தோல்வியாகக் கருதினார் காந்தி. "ஹரிஜன்" பத்திரிகையிலும் இதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் இது காந்தியின் இந்திய அரசியல் வாழ்வில் 1923-24-க்குப் பின் வந்த முதல் தோல்வி என்றே சொல்லலாம்.

இருந்தாலும் காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்வதில் தயங்காமல் போஸ் தன் வேலைகளைத் தொடருகிறார். மூன்றாம் முறையாக காங்கிரஸ் தலைவராய்ப் பொறுப்பேற்றுக் கொள்ளும் போஸ் 1939-ல் இன்னும் ஆறு மாதத்துக்குள்ளே இந்தியா நிபந்தனை அற்ற சுதந்திரம் அடைய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வருகிறார். அதே சமயம் நாடு தழுவிய போராட்டத்துக்கும் மக்களைத் தயாராகுங்கள் என்று கூறுகிறார். காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். உண்மையில் காங்கிரஸில் அப்போது காந்தியவாதிகள் சிறுபான்மையாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் "காந்தி" என்ற ஒரு மனிதரின் தலைமைக்கும், ஆளுமைக்கும் கட்டுப் பட்டு இருந்தனர். அடுத்தது நேரு அவர்கள். இவருக்கும் ஆங்கிலேய அரசிடம் செல்வாக்கு இருந்தது. ஆகவே வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இவர்கள் இருவரையும் மீறி போஸால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்று. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களை காங்கிரஸ் தலைவர்தான் தீர்மானித்து நியமிக்க வேண்டும். ஆனால் போஸால் அதைத் தீர்மானிக்க முடிந்தாலும் நியமிக்க முடியவில்லை. காந்தி ஆதரவாளர்கள் சொல்லுபவர்களை நியமிக்கும்படி நிர்ப்பந்தப் படுத்தப் பட்டார். (இதை போஸே எழுதி இருக்கிறார்.) இப்படித் தன்னிச்சையாக அவர் செயல் படமுடியாமல் எல்லா விதத்திலும் அவருக்கு மறைமுகத் தடை போடப் பட்டது. இந்தச் சமயம் இடது சாரிகள் கொடுத்து வந்த ஆதரவும் சரியாக செயல்படுத்த முடியவில்லை. சோ்ஷலிஸ்ட்டுகளோ இதிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டனர்.ொரு பொம்மைத் தலைவராக ரப்பர் ஸ்டாம்பாக இருக்க விரும்பால் போஸ் தானே விலகி ராஜினாமா கொடுக்கும்படியான சூழ்நிலை உருவாக்கப் பட்டது.

இந்த விவரங்கள் போதுமா? போஸ் பகத்சிங் தூக்கிலிடப் பட்டதற்கு ஆதரவு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அப்போது கல்கத்தா இளைஞர் காங்கிரஸ் தலைவராய் இருந்தாரோன்னு நினைக்கிறேன். எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு "மாண்டலே" சிறையில் இருந்தார். எதுக்கும் ஒருமுறை கூகிளாண்டவர் கிட்டேயும் கேட்டுக்கறேன். போர்க்கொடி, இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

7 comments:

  1. // (இதை போஸே எழுதி இருக்கிறார்.)//

    விபரம் வேண்டும்.

    அப்படியே போஸினை பற்றிய நல்ல புத்தகத்தினையும் பரிந்துரை செய்யவும்...

    ReplyDelete
  2. வரிசையா இம்புட்டு நல்ல போஸ்ட்டா வருதே...இது தலைவி பிளாக்தானானு சந்தேகமா இருக்கு :-)

    ReplyDelete
  3. \\அப்படியே போஸினை பற்றிய நல்ல புத்தகத்தினையும் பரிந்துரை செய்யவும்...\\

    ஆமாம் தலைவி எனக்கும் வேண்டும்....

    ReplyDelete
  4. //வரிசையா இம்புட்டு நல்ல போஸ்ட்டா வருதே...இது தலைவி பிளாக்தானானு சந்தேகமா இருக்கு :-) /

    ஆமாம் ஆமாம்.. நாட்டாமை கூட்டத்த கூட்டுங்க..

    ReplyDelete
  5. podhaadhu podhaadhu! :-)

    edho nalla peru vangattume nu akkaraiya sonna, ennaiye nakkal panringla? irukkatum, paathukaren!

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்.........

    ReplyDelete