எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 25, 2010

ரயிலோ, பேருந்தோ, பயணம்னாலே பயமா இருக்கு!

எப்போவுமே முதல்வகுப்பு அல்லது ஏ.சி. இரண்டாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வதாலும், பேருந்துகளிலும் ஏ.சி.யிலேயே போவதாலும்/அல்லது வண்டி ஏற்பாடு செய்து கொண்டு போவதாலும் நமக்குத் தான் இப்படி எல்லாம் தெரிகிறதோ என்று நினைக்கவும் இடம் இல்லை. ஏனெனில் அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்குப் போவது என்று முடிவானபின்னால் திடீர் திடீர்னு கிளம்புவதால் எந்த வகுப்பில் முன்பதிவு கிடைத்தாலும் போயிட்டுத் தான் இருந்தோம். மேலும் அடிக்கடி மாற்றல் வரும் கணவரின் அலுவல் வேலையில் மாற்றலாய்ப் போகும் சமயங்களில் பலமுறைகள் தொடர்ந்து செல்லவேண்டிய ரயில்களைப் பிடிக்கமுடியாமல்,முதல் வகுப்புக்கோ அல்லது ஏசிக்கோ முன்பதிவுப் பயணச் சீட்டு இருந்தும், மாற்று வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஒண்டிக்கொண்டு சென்ற அநுபவங்களும் நிறைய. ஆகவே இது இப்போது தோன்றி இருக்கும் ஒரு மோசமான கலாசாரம் என்பதில் சந்தேகமே இல்லை. இதுக்கு முடிவோ, விடிவோ வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் முன்பதிவு செய்துட்டுப் போகும் நம்மைவிட பதிவு செய்யாமலே போகிறவர்களுக்கே அங்கே இருந்த மக்கள் பெரும்பாலோர் மறைமுகமாக உதவினார்கள், யாருமே அவர்களை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. இந்த அலட்சிய மநோபாவம் இருக்கும் மக்கள் எப்படித் திருந்துவார்கள்.??? எப்படியோ திருச்சி வரை போய்ச் சேர்ந்தோம். அங்கே திரும்ப முன்பதிவு செய்யலாம்னு நினைச்சா மாயவரம் போகும் வண்டி தயார் நிலையில் நின்னுட்டு இருந்தது. சரினு கிளம்பி அந்த வண்டியில் ஏறிடலாம்னு நினைச்சா, எங்க வண்டியிலே இருந்து நாங்க இறங்கி அது நிற்கும் நடைமேடைக்குப்போறதுக்குள்ளே வண்டி கிளம்பிவிட்டது.

முன்பதிவும் கிடைக்கவில்லை. ஆகையால் கும்பகோணம் செல்லும் பேருந்தைப் பிடிச்சோம். தேசீய நெடுஞ்சாலையான இந்தச் சாலை எனக்குத் தெரிஞ்சு பத்தாண்டுகளாய்,சீரமைப்பு நடந்தும் முடிவடையாமல் அப்படியே இருக்கிறது. விரிவாக்கம் முடிந்து சாலையை உடைத்து சமன் செய்து, கற்களும், ஜல்லிகளும், கிராவலும் அடித்த நிலையிலேயே இந்தச் சாலையைத் தொடர்ந்து சில ஆண்டுகளாய்ப் பார்க்கிறேன். இன்னும் சாலைப் பணி முடிந்தபாடில்லை. எப்போது முடியும் என்று நிச்சயமாயும் யாராலும் சொல்லமுடியவில்லை. பேருந்து சில சமயம் அப்படியே ஒருபக்கமாய்ச் சாயும்போது அடி வயித்தைக் கலக்கும். சாலை போடுவதில் நம் நாட்டினருக்கு என்ன சுறுசுறுப்பு என்று தோன்றியதோடல்லாமல், வேந்தரை இந்தச் சாலையில் பயணிக்கச் சொல்லவேண்டும் என்ற விபரீத ஆசையும் தோன்றியது. இல்லாட்டி, கும்பகோணம்-சென்னை பேருந்துப் பாதையில் பயணிக்கச் செய்துவிட்டு, சேத்தியாத் தோப்பில் அணைக்கரைப்பாலத்துக்கருகே இறங்கி நடக்க வைக்கிறாங்களே? அது மாதிரி ஒருமுறையாவது நடந்து வரவேண்டும் வேந்தர். மூட்டை, முடிச்சைத் தூக்கிண்டு பயணிகள் நடப்பதைப் பார்த்தாலே கஷ்டமாய் இருக்கும். ஆனாலும் அந்தப் பாலத்துக்கும் எங்க தெரு மாதிரியான ஜாதகம் போல. இன்னும் விடிவு வரவில்லை. அந்தப் பாலத்திலும் வேந்தர் ஒருமுறையாவது பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு இறங்கி நடந்து பாலத்துக்கு இந்தண்டை வரவேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. தமிழ்நாட்டைப் போல முன்னேறிய மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்றவங்க எல்லாருமே வந்து ஒருமுறையாவது இந்த அவதியைப் படவேண்டும். நல்லவேளையா அந்தப் பக்கமாய்ப் போக நேர்ந்தப்போ எல்லாம் காரிலேயே பயணித்ததால் கஷ்டப்படவில்லை. ஆனாலும் வரிசையாய்க் கார்கள் நின்றிருப்பதைப் பார்த்தால் அந்த இடுக்கான பாலத்தில் எப்படிக் கடக்கப் போகிறது என்று திக் திக்கென்றிருக்கும். பாலம் உடைந்திருக்கும் இடத்தினருகே வந்ததும் சொல்லி வைச்சாப்போல் இரண்டு பக்கமும் வண்டிகள் சற்று நேரம் நின்றுவிடும். கனம் தாங்காமல் கீழே விழுந்துவிடப் போகிறோம் எனக் கலவரமாய் இருக்கும். அந்தச் சில நிமிடங்கள்! வண்டி அந்த இடத்தைக் கடந்து பாலத்துக்கு அந்தப் பக்கம் போனதும் தான் அப்பாடா! நிம்மதியாய் மூச்சு வரும்.

ஒருமாதிரியாத் திருச்சியிலே இருந்து கும்பகோணத்துக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்து வெகு சீக்கிரமாய் :P கும்பகோணத்தை அடைந்தோம். அங்கே அறை ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்னை இல்லை. அறைக்குப் போய் சாமான்களை வைத்துவிட்டு, சுத்தம் செய்துகொண்டு கும்பகோணம் ராமசாமி கோயிலுக்குப் போனோம். ராமசாமி கோயில் பற்றிய விபரங்களை ஆன்மீகப் பயணம் பக்கத்தில் காணலாம். இங்கே பிரயாண அனுபவங்கள் மட்டுமே.

5 comments:

  1. Kumbakonam mayavaram pakkaththula thaan nammoada best kovilkal ellam. Aana angathaan padu mosamaana paathai road ellam:((. engalai 2 varusham munbu kootikkondu poana oattunar sonnaar. intha mani sundaram enbavar oattu mattum vaanga vanthuvittu eppadi thirumbavae illai jeyichcha udan enru varuththappattaar. angange kandathu ellam thahanam panna siru maedaikal than avar peyar pottu. manasaatchi vaendaama makkalukku. Romba vaethanai thaan. Kadaisiyil kashtappadarathu makkal than. Perumpaanmiyinarukku padipparivum illaai. Oru 2000 panaththukkum,tv kkum, 10 kilo arisikkum thannoda valuable oattai tharoam enru makkalukku puriyavum illai . Puriyavidatha pana muthalaikalum. ithukku enga oor moasam illai. seythaalum velissaththukku vanthudum seekkiram.

    ReplyDelete
  2. Kumbakonam mayavaram pakkaththula thaan nammoada best kovilkal ellam. Aana angathaan padu mosamaana paathai road ellam:((. engalai 2 varusham munbu kootikkondu poana oattunar sonnaar. intha mani sundaram enbavar oattu mattum vaanga vanthuvittu eppadi thirumbavae illai jeyichcha udan enru varuththappattaar. angange kandathu ellam thahanam panna siru maedaikal than avar peyar pottu. manasaatchi vaendaama makkalukku. Romba vaethanai thaan. Kadaisiyil kashtappadarathu makkal than. Perumpaanmiyinarukku padipparivum illaai. Oru 2000 panaththukkum,tv kkum, 10 kilo arisikkum thannoda valuable oattai tharoam enru makkalukku puriyavum illai . Puriyavidatha pana muthalaikalum. ithukku enga oor moasam illai. seythaalum velissaththukku vanthudum seekkiram.

    ReplyDelete
  3. இந்தச் சாலை எனக்குத் தெரிஞ்சு பத்தாண்டுகளாய்,சீரமைப்பு நடந்தும் முடிவடையாமல் அப்படியே இருக்கிறது
    10 வ‌ருட‌ம் ரொம்ப‌ க‌ம்மியாக‌ இருக்கே!!
    :-(

    ReplyDelete
  4. வாங்க ஜெயஸ்ரீ, இப்போதைய ஒரே நம்பிக்கை கடவுள் மட்டுமே! :((((((

    ReplyDelete
  5. வடுவூர், பல வருடங்களாய்னு தான் போட்டிருக்கணும், இல்லையா??? :((((((((

    ReplyDelete